கடிகார மனிதர்கள் விமர்சனம்

கடிகார மனிதர்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கிஷோர், லதாராவ், கருணாகரன், செரிலின் பில்லக்கள், பாலாசிங், சிசர் மனோகர் மற்றும் பலர்.
இயக்கம் – வைகறை பாலன்
ஒளிப்பதிவு – சங்கர் நாராயணன்
இசை – சாம் சி.எஸ்
தயாரிப்பு : பிரவீஸ் பிரதீப்ஜோஸ்

கதைக்களம்…

பேக்கரியில் பெறும் கேக், பிஸ்கட்டுகளை ஒவ்வொரு கடையாக சென்று போடும் வேலை செய்துவருகிறார் கிஷோர்.

இவரது மனைவி லதாராவ். இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தை.

சென்னையில் வாடகை வீடு தேடுகிறார்கள். புரோக்கர் சிசர் மனோகர் குறைந்த வாடகையில் இவருக்கு வீடு பார்த்துச் சொல்லும்போது 2 குழந்தைகள் என சொல்லிவிடுகிறார்.

இதனால் வீட்டு ஓனர் பாலாசிங்கிடம் தன் 1 குழந்தையை மறைத்து மறைத்து வாழ்கிறார்.

இதே காம்பவுண்டில் பாலாசிங்கின் மகள் செரிலினை கரெக்ட் செய்ய குடியேறுகிறார் கருணாகரன். அவர்களுக்குள் காதலும் மலர்கிறது.

இதனால் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார் செரிலின்.

இதனிடையில் கிஷோரின் மகனை மறைக்கும் விஷயமும் ஓனருக்கு தெரிய வருகிறது.

அதன் பின்னர் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒரு நடுத்தர குடும்பம், வாடகை வீடு என பல பிரச்சினைகளை அப்படியே பிரதிபலிக்கிறார்கள் கிஷோர் மற்றும் லதா ராவ் தம்பதிகள். உண்மையை சொல்லிவிடலாமா? என இவர்கள் தவிக்கும் காட்சிகள் அருமை.

கருணாகரன் செரிலின் காட்சிகளில் ரொமான்ஸ சுத்தமாக இல்லை. இதில் கருணாகரனுக்கு காமெடியும் இல்லாமல் போய்விட்டது வருத்தம்தான்.

மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாக லதா ராவ். நடுத்தர பெண்ணாக கணவரின் நிலை உணர்ந்து நடித்திருக்கிறார். வீடு தேலையும் அலையும் காட்சிகளில் கூட அசதியாக காணப்படுவது யதார்த்தம்.

சினிமாவில் சான்ஸ்க்கு அலையும் அந்த மலையாளி நடிகரும் கவர்கிறார். சரக்கு கொடுத்துவிட்டு பின்பே அவரே அதை வாங்கிச் செல்வது செம.

வீட்டு உரிமையாளர் பாலாசிங் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அவரின் பார்வையே மிரட்டலாக உள்ளது.

புரோக்கராக வரும் சிசர் மனோகர் கச்சிதம். போனில் பேசிக்கொண்டே அவர் செய்யும் காரியங்கள் ரசிக்க வைக்கிறது. இங்க நல்லவங்களா வாழ முடியாது என அவர் கூறுவதும் செய்வதும் ரசிக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

உமா சங்கரின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்-ன் இசையும் ரசிக்கும் ரகமே. ஆனால் ஒரு பாடல் பிட்டு பிட்டாக அடிக்கடி வந்து நம்மை சோதிக்கிறது.

வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை என்பார்கள். ஆனால் சென்னையில் வசிக்கும் மக்களுக்கே அதன் கஷ்டங்கள் தெரியும்.

வாடகை வீடு, அதிகபட்ச கரண்ட் யுனிட், இயந்திர வாழ்க்கை என பலவற்றை கூறிக் கொண்டே போகலாம்.

ஹவுஸ் ஓனர் போடும் நிபந்தனைகள் அதற்கு பயந்து வாழும் சென்னை வாசிகள் என அனைத்தையும் மிக யதார்த்தமாக சொல்லியுள்ளார் டைரக்டர்.

சென்னைக்கு வேலைத் தேடி வரும் நபர்களுக்கு இந்த படம் ஒரு பாடம். சில காட்சிகள் சோர்வை தந்தாலும் யதார்த்தம் மீறாமல் படத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.

கடிகார மனிதர்கள்… வாடகை வீடு மனிதர்கள்

Kadikara Manithargal Movie Review and rating

மணியார் குடும்பம் விமர்சனம்

மணியார் குடும்பம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: தம்பி ராமையா, உமாபதி, மிருதுளா முரளி, பவன், ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ரதாராவி, விஜய்டிவி புகழ் ராமர், பழனி, தங்கத்துரை, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி மற்றும் பலர்.
இயக்கம் – தம்பி ராமையா
ஒளிப்பதிவு – விகே. வர்மா
இசை – தம்பி ராமையா
தயாரிப்பு : தேன்மொழி

கதைக்களம்…

வேலைக்கு செல்லாமல் வீட்டில் அமர்ந்து அதிகாரம் செய்யும் ஒரு தந்தையின் அடாவடித்தனம்தான் இந்த மணியார் குடும்பம்.

தன் தாத்தா, அப்பா சேர்த்த சொத்துக்களை விற்று சாப்பிடும் அப்பா (தம்பி ராமையா) அவரை தாங்கும் மனைவி, அம்மா, மனைவியுடன் ஒட்டிக் கொண்ட தம்பி (மச்சான்), தம்பிராமையாவின் மகன் உமாபதி என ஒரே குடும்பமாக வாழ்கின்றனர்.

உமாபதிக்கு உறவுக்கார பெண் மிருதுளாவை கேட்கின்றனர். வேலை வெட்டியில்லாத பையனுக்கு பெண் தர மறுக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

எனவே காற்றாலை (வின்ட் மில்) தொழில் தொடங்க நினைக்கின்றனர். அதன்படி ஊரில் உள்ளவர்களை பங்குதாரர்களாக சேர்க்க, எல்லாரிடமும் பணம் வாங்குகின்றனர்.

ஆனால் அந்த பணம் கொள்ளை போகிறது. இதனால் ஊரே இந்த மணியார் குடும்பத்திற்கு எதிராக திரும்புகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? பணத்தை யார் கொள்ளையடித்தார்? காற்றாலை நிறுவனம் என்ன ஆனது? உறவுக்கார பெண்ணை மணந்தாரா உமாபதி? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நடிப்பு, பாடல், இசை, இயக்கம் என பல பொறுப்புகளை தாங்கியிருக்கிறார் தம்பிராமையா.

அவருக்கே உரித்தான அப்பாவித்தனத்தில் கலக்கியிருக்கிறார் தம்பி ராமையா. இசையில் நம்மை அறியாமல் தாளம் போட வைக்கிறார்.

இவர் திடீரென திருந்துவதாக காட்சிகள் நம்பும் படியாக இல்லை. அதில் பல தத்துவங்களை பேசுகிறார்.

நாயகன் உமாபதி நடனத்தில் அவரது உயரத்திற்கு ஏற்ப உச்சம் தொடுகிறார். வளைந்து வளைந்து ஆடி நடன பிரியர்களை கவர்கிறார்.

பொறுப்பான மாமன் மகளாக மிருதுளா முரளி மிளிர்கிறார். காதலனுக்கான இவர் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்ட வைக்கிறது.

அப்பாவி கணவருக்கு மனைவியாக ஸ்ரீரஞ்சனி கச்சிதம்.

நடிகர் பவன் காட்சிகளில் இன்னும் பலம் சேர்த்திருக்கலாம். மிரட்டல் வில்லனாக இவரையே கடைசி வரை காட்டியிருந்தால் பக்காவாக இருந்திருக்கும்.

படத்தில் பல கலைஞர்களின் நடிப்பு வீணடிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ரதாராவி, விஜய்டிவி புகழ் ராமர், பழனி, தங்கத்துரை, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி ஆகியோரின் கேரக்டர்கள்தான்.

தக்காளி பழமே பாடலில் வந்து ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார் யாஷிகா ஆனந்த்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தனது டைரக்சனை தொடங்கியுள்ளார் தம்பி ராமையா. அதில் தனது மகனை ஆடவைத்திருக்கிறார். நடிப்பில் இன்னும் முயற்சிகள் தேவை. செயற்கையாக இருக்கிறது.

பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தம்பி ராமையா கவர்கிறார். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

பாட்டி கதை ஞாயிறு… இந்த காட்சிகளை எல்லாம் நம்மை சோதிக்கிறது.

மணியார் குடும்பம்… இயக்குனர் தம்பி ராமையா தடுமாற்றம்

Maniyar Kudumbam review and rating

கஜினிகாந்த் விமர்சனம்

கஜினிகாந்த் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஆர்யா, சாயிஷா, சதீஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், சம்பத், நீலிமா ராணி மற்றும் பலர்.
இயக்கம் – சந்தோஷ் பி ஜெயக்குமார்
ஒளிப்பதிவு – பல்லு
இசை – பாலமுரளி பாலு
தயாரிப்பு : ஞானவேல்ராஜா

கதைக்களம்…

ஆர்யாவின் அப்பா ஆடுகளம் நரேன். அவர் ஒரு ரஜினி வெறியர். தனது மனைவியுடன் தர்மத்தின் தலைவன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தியேட்டரில் மனைவிக்கு பிரசவம் ஆகிறது.

ஆர்யா பிறக்கிறார். எனவே அவருக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைக்கிறார்.

ஆர்யா வளர வளர, அவருடன் தர்மத்தின் தலைவன் ரஜினியை போல் மறதி நோயும் அவருடனே வளர்கிறது.

ஒரு வேலையில் ஆர்யா இருக்கும்போது மற்றொருவர் பேசினாலோ அல்லது மற்ற வேலையில் அவர் ஈடுப்பட்டாலோ முதலில் செய்த வேலையை மறந்துவிடுவார்.

அவருக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். பெண் பார்க்கும் வரும் நேரத்தில் ஏதாவது வேலை வந்தால் அந்த விசேஷத்தை மறந்துவிடுகிறார்.
இதனால் அவருக்கு திருமணம் நடைபெறாமல் இருக்கிறது.

இதனால் அவரை எல்லாரும் சார்ட் டேர்ம் மெமரி லாஸ் கஜினியை சேர்த்து கஜினிகாந்த் என அழைக்கின்றனர்.
ஒரு முறை சாயிஷாவின் அப்பா சம்பத்தை சந்திக்கிறார். இவரின் ஞாபக மறதியால் ஆர்யாவை வெறுக்க ஆரம்பிக்கிறார் சம்பத்.

இதனிடையில் சாயிஷாவை சந்திக்கிறார் ஆர்யா. இருவரும் காதல் கொள்கின்றனர்.

அதன் பின்னர் என்ன நடந்தது? காதல் கை கூடியதா? சம்பத் என்ன செய்தார்? ஆர்யாவின் மறதிக்கு விடை கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் ஆர்யா ஸ்கோர் செய்கிறார். மறந்துவிடுவதும் அதனால் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை நினைத்து அழுவதும் என ரசிக்க வைக்கிறார்.

சாயிஷாவுடன் காதல் கொண்டாலும் பாடல் காட்சிகளில் மட்டுமே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது.

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த லேட்டஸ்ட் லூசுப்பெண் சாயிஷா. எதை சொன்னாலும் நம்பி விடுகிறார். கொஞ்சி பேசும் போது கொள்ளை அழகு.

வில்லனாக மிரட்டிய ஆடுகளம் நரேன் இதில் காமெடி அதகளம் செய்திருக்கிறார். இனி இவரும் மன்சூர் அலிகான் ஆனந்த்ராஜ் போல் வந்துடுவார்.

சதீஷ் மற்றும் கருணாகரன் காமெடி சில இடங்களில் மட்டுமே ஒர்க்அவுட் ஆகிறது.

உமா பத்மநாபன், சம்பத் காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் ரசிக்க வைத்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாலமுரளி பாலு இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். பல்லு ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. ரசிக்க வைக்கிறது.

தனது முதல் இரண்டு அடல்ட் காமெடி படங்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்தவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

இந்த முறை குடும்பங்களை கவர முயற்சித்துள்ளார். இது எப்படியிருந்தாலும் இந்த படம் ஓடலேன்னா மறுபடியும் அடல்ட் பக்கம் சென்றுவிடுவார். எனவே ரசிகர்கள் கையில்தான் இப்படம் உள்ளது.

நீலிமாவுக்கு பிரசவம் வேகத்தடை காட்சிகள் எல்லாம் ரொம்ப பழசு. சம்பத்திடம் வேலை தேடி செல்லும் காட்சிகள் எல்லாம் போரடிக்கிறது.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் ஆள் மாறாட்டம் காட்சியில் கார்த்திக் கவுண்டமணி கலக்கியிருப்பார்கள்.

இதில் ஆர்யா சதீஷ்க்கு அனுபவம் போதவில்லை. ஏதோ முயற்சி செய்துள்ளனர்.

சில இடங்களில் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ஞாபக மறதியை வைத்து இந்த படத்தை இன்னும் நகைக்சுவையாக கொடுத்திருக்கலாம். ஒருவேளை இரட்டை அர்த்த காமெடியில்தான் டைரக்டர் கலக்குவாரோ? எனத் தெரியவில்லை.

கஜினிகாந்த்… ரஜினி-கஜினி பெயரை கெடுக்க ஒரு முயற்சி

ஜுங்கா விமர்சனம்

ஜுங்கா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய்சேதுபதி, சாயிஷா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், மடோனா, சுரேஷ் மேனன் மற்றும் பலர்.

இயக்கம் – கோகுல்
ஒளிப்பதிவு – டட்லி
இசை – சித்தார்த் விபின்.
தயாரிப்பு : விஜய்சேதுபதி

கதைக்களம்…

படத்தின் ஒன்லைன் சொல்ல வேண்டுமென்றால் மாணிக்கம் இதில் பாட்ஷாவாக மாறுகிறார்.

ஜுங்கா விஜய்சேதுபதியின் தன் குடும்ப வரலாறு தெரியாமல் வளர்கிறார். அவரை அப்படி வளர்க்கிறார்கள் அம்மா சரண்யா, ஜுங்கா பாட்டி.

தான் ஒரு டான் பேமிலி வம்சத்தில் இருந்து வந்தவர் என்பதால் தானும் டானாக மாற ஆசைப்படுகிறார்.

அதற்காக தன் சொத்தை அபகரித்த வில்லன் சுரேஷ் மேனனின் மகள் சாயிஷாவை கடத்த நினைக்கிறார்.

அதன்பின்னர் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

DjFJdARUcAAgaACaa

கேரக்டர்கள்…

விஜய்சேதுபதி தன் வழக்கமான பேச்சால் ரசிகர்களை ஈர்க்கிறார். ஆனால் அதுவே வினையாகிவிடுகிறது.

யோகிபாபு இல்லையென்றால் படம் மோசமான நிலையை எட்டியிருக்கும். ஜுங்காவிற்கு பலமே அவர்தான். இவருடன் டான் அம்மா மற்றும் டான் பாட்டி கவர்கிறார்கள்.

ப்ரிட்ஜில் வைத்த திராட்சையாக சாயிஷா ரசிக்க வைக்கிறார்.

படத்தின் ப்ளஸ்…

யோகிபாபு

டான் அம்மா

டான் பாட்டி

படத்தின் மைனஸ்…

விஜய்சேதுபதியின் ஓவர் பேச்சு

தேவையில்லாத பாடல்கள்

மடோனா கேரக்டர்

ராதா ரவி, சுரேஷ் மேனன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரனும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. ஆனால் பின்னணி இசை ஓகே.

டுட்லியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு.

சண்டைக் காட்சிகளில் கேமரா விளையாடியிருக்கிறது.

ஜுங்கா… நீ டான் அழவே கூடாது

ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: டிவைன் ஜான்சன், நீவ் காம்ப்பெல், கோரெஸ் போத்தா மற்றும் பலர்.
இயக்கம் – ராஷன் மார்சல் டர்பர்
ஒளிப்பதிவு – ராபர்ட் எல்ஸ்விட்
இசை – ஸ்டீவ் ஜப்லான்ஸ்கை

கதைக்களம்…

டிவைன் ஜான்சன் ஒரு குண்டு வெடிப்பில் தன்னுடைய ஒரு காலை இழக்கிறார். இதனால் நல்ல வேலையில் இருந்த இவர் செக்யூரிட்டியாக வேலை பார்க்க நேரிடுகிறது.

வேலை செய்யும் ஒரு அப்பார்ட்மெண்டில் அவர் குடும்பத்துடன் குடியேறுகிறார்.

செக்யூரிட்டி என்பதால் எல்லா மாடிகளுக்கும் செல்லக் கூடிய ஆக்சஸ் கார்டு அவருக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வில்லன் கோரெஸ் போத்தா அந்த கட்டிடத்தில் புகுந்து, 96வது தளத்தில் தீ வைக்கிறான். மேலும் அந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் நிறுத்திவிடுகிறான்.

அந்த கட்டிடத்தின் தீயை நம்ம ஹீரோ டிவைன் ஜான்சன் எப்படி அணைத்தார்?. தன்னுடைய குடும்பத்தையும் அங்குள்ளவர்களையும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

டிவைன் ஜான்சனை சோலோ ஹீரோவாக்கியுள்ளனர். அவரும் கிடைத்த கேப்பில் எல்லாம் ரசிகர்களை உற்சாகப்படுத்த அதிரடி காட்டியுள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். தீ பிடித்த கட்டிடத்தில் டிவைன் ஜான்சன், செய்யும் சாகசங்கள் ரசிகர்களுக்கு செம விருந்து.

பல ஆடியன்ஸ் சீட்டின் நுனிக்கே வந்துவிடுவார்கள்.

தமிழ் டப்பிங்கை தமிழர்களுக்கு பிடிக்கும் வகையில் ரசிக்கும் படி கொடுத்திருப்பது கூடுதல் சுவை.

ஸ்டீவ் ஜப்லான்ஸ்கை பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ராபர்ட் எல்ஸ்விட்டின் ஒளிப்பதிவு படத்தின் மீதான பிரம்மாண்டத்தை அதிகரித்துள்ளது.

கிராபிக்ஸ் காட்சிகளா? இது என்பதை தெரியாத அளவுக்கு விருந்து படைத்துள்ளார் டைரக்டர் ராஷன் மார்சல் டர்பர்

‘ஸ்கை ஸ்கிராப்பர்’… நிச்சயம் ரசிக்கலாம்.

போத விமர்சனம்

போத விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விக்கி, மிப்பு, உதயபானு (ராகுல் தாத்தா), வினோத், ஈஸ்வர், சண்முகசுந்தரம், வீர ராஜன் மற்றும் பலர்.
இயக்கம் – சுரேஷ் ஜி
ஒளிப்பதிவு – ரத்னகுமார்
இசை – சித்தார்த் விபின்
எடிட்டர் – தியாகராஜன்

கதைக்களம்…

ஆண் விபச்சாரன் என்ற புதிய கதைக்களத்துடன் இறங்கியுள்ளார் இப்பட இயக்குனர் சுரேஷ்.

சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார் நாயகன் விக்கி. அதற்கு முதலில் குறும்படத்தில் நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்.

ஆனால் அதற்கே அவரிடம் பணமில்லை. எனவே ஒரு ஏஜெண்ட் மூலம் ஈஸ்வர் அறிமுகம் கிடைக்கிறது.

இந்த ஈஸ்வர் தான் சென்னை சிட்டி ஆண்களுக்கு அலையும் ஆண்டிகளுக்கு ஆண் விபச்சாரன்களை சப்ளை செய்கிறார். இதை போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத் உதவியுடன் செய்து வருகிறார்.

விக்கிக்கு ஈஸ்வர் அறிமுகம் கிடைக்கவே, நிறைய ஆண்டிகளுடன் செக்ஸ் வைத்து கொள்கிறார். அதன் மூலம் பணம் கிடைக்கிறது.

ஒருநாள் ஒரு ஆண்டிக்கு வீட்டுக்கு போகும்போது, அந்த சமயம் பார்த்து யாரோ வீட்டிற்கு வர ஒளிந்துக் கொள்கிறார்.

அப்போது அந்த ஆண்ட்டி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். எனவே இந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துச் செல்ல நினைக்கும் போது, அந்த ஆண்டியின் புருசன் இவரை பார்த்து விடுகிறார்.

அவன்தான் தன் மனைவியை கொலை செய்த கொலைக்காரன் என போலீசில் புகார் கொடுக்கிறார்.

அடுத்து நாயகன் என்ன செய்தார்? தான் கொலை செய்யவில்லை என்பதை நிரூபித்தாரா? ஆண்ட்டியை கொன்றது யார்? எதற்காக கொன்றார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மதன் என்ற கேரக்டரில் அறிமுக நாயகன் விக்கி. தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

போலீசிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளில் இன்னும் தவிப்பை கூட்டியிருக்கலாம். மற்றபடி முதல் படம் என்பதால் பாராட்டலாம்.

ஆக்சன் ரொமான்ஸ் இல்லாத காரணத்தினால் ஏதோ ஒரு குறை தெரிகிறது.

இவரின் நண்பராக வரும் மிப்பு அண்ட் ராகுல் தாத்தா இருவரும் கச்சிதம். அதிலும் ராகுல் தாத்தா இதில் அதிகப்படியான ட்விஸ்ட் கொடுத்து கதையின் நாயகனாக மாறிவிட்டார்.

இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் ஆண் விபச்சார புரோக்கர் சொப்பன கிருஷ்ணன் (ஈஸ்வர்) இருவரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்.

பிச்சைக்காரன் படத்தில் கலக்கிய ஈஸ்வரும் மற்றொருவரும் ரசிக்க வைக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கரகாட்டக்காரன் புகழ் சண்முக சுந்தரம். ஆனால் அவருக்கு வேறு யாரோ? டப்பிங் கொடுத்துவிட்டார்கள் போல. அதை பழைய வாய்ஸ் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்கள் கை கொடுக்கவில்லை என்றாலும் போத படத்திற்கு பின்னணி இசையில் போதை ஏற்றி விடுகிறார் சித்தார்த் விபின்.

படத்தின் ஒளிப்பதிவில் குறையில்லை. ஆனால் எடிட்டர் தன் பங்கை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். முதல் பாதியில் விறுவிறுப்பு இல்லை.

யார் கொலை செய்தார்? என்ற விறுவிறுப்பான நேரத்தில் தேவையில்லாத குத்து பாடல் … அட என்னய்யா? இது என கேட்கத் தோன்றுகிறது.

கொலைக்காரன் யார்? என்றே ஆடியன்சுக்கு தெரிவிக்காமல் படத்தை முடித்துவிட்டு, பின்னர் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பது செம.

அதுவும் இவர்தான் அந்த கொலைக்காரனா? என தெரிய வரும்போது… செம.

படம் ஆரம்பிக்கும்போது கூகுள் ஸ்டைலில்… Gigolos என போட்டுவிட்டு நாயகன், நாயகன் நண்பர் என ஒவ்வொருவராக டைட்டில் கார்டூ போடுவது புதிய முயற்சி. அந்த கற்பனையை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால் என்னாகும்? நம் போனில் நம் உரையாடல்களை ரெக்கார்ட் செய்து வைத்தால் என்ன பிரச்சினையாகும்? என்பதை பக்காவாக சொல்லிவிட்டார் விக்கி.

படம் ஆண் விபச்சாரனை பற்றிய படம் என்பதால் நாயகி வேண்டாம் என முடிவி செய்துவிட்டாரோ?

ஆம்பள ஐட்டம் என சொன்னாலும் ஒரு காட்சியில் கூட ஆபாசம் இல்லை. மேலும் இதில் த்ரில்லர் கொடுத்திருப்பது சிறப்பு.

ஆனால் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் இந்த போத இன்னும் எகிறியிருக்கும். கிக் ஏறவில்லை.

போத… ஆம்பள ஐட்டம்

Bodha aka Botha tamil movie review rating

More Articles
Follows