நம்மை காப்பான்.. காப்பான் விமர்சனம் 3.25/5

நம்மை காப்பான்.. காப்பான் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தஞ்சாவர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இயற்கை விவசாயம் பார்க்கிறார் சூர்யா. இவரின் பெயரும் கதிர் என்பது ஹைலைட். இவருக்கு பின்னணியில் சில விசயங்கள் நடக்கிறது.

அதன்பின்னர் மிலிட்டரி இன்டலிஜன்ஸ் பிரிவிலிருந்து பிரதமர் மோகன்லாலுக்கு பெர்சனல் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் சூர்யா.

100 உயிரை காக்க ஒரு உயிர் போனாலும் தவறில்லை நினைப்பவர் பிரதமர். அத்துடன் பாகிஸ்தான் மக்களும் நன்றாக இருக்க வேண்டும என நினைப்பவர் ஒரு முறை காஷ்மீர் சென்றபோது அங்கு தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார்.

எனவே சூர்யா வேலையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.

அதன் பின்னர் சூர்யா என்ன செய்தார்? கொன்றவர்களை என்ன செய்தார்? தீவிரவாதிகளின் நோக்கம் என்ன? அடுத்த பிரதமர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கலைஞர்கள் எப்படி..?

தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே தோல்வியால் துவண்ட சூர்யா இந்த காப்பானை பெரிதும் நம்பியிருக்கிறார். எனவே தன் நடிப்பை அர்ப்பணிப்பை கொடுத்திருக்கிறார். அதில் ஒன்றும் குறையில்லை.

பாதுகாப்பு அதிகாரிக்கே உரிய மிடுக்கு, கம்பீரம், ஸ்மார்ட்னெஸ் என வெரைட்டி காட்டியிருக்கிறார். அதனால் ரொமான்ஸ கூட அடக்கியே வாசித்திருக்கிறார்.

ஒருவேளை சாயிஷா நிஜ கணவர் ஆர்யா அருகில் இருப்பதால் அந்த நடிப்போ? என்ற சந்தேகமும் வருகிறது.

கம்ப்ளீட் ஆக்டர் மோகன்லால் தன் நடிப்பில் கச்சிதம். இந்திய நாட்டு மக்கள் மீது அவர் காட்டும் அன்பு, கார்ப்பரேட் முதலாளிகளிடம் காட்டும் கோபம், பாகிஸ்தான் மக்களிடம் காட்டும் பாசம் என அசத்தியிருக்கிறார் பிரதமர். இப்படி ஒரு பிரதமர் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணமும் எழுகிறது.

முதல் பாதியில் ஆர்யாவுக்கு பெரிதாக வேலையில்லை. டபுள் மீனிங் காமெடி செய்திருக்கிறார். சில நேரங்களில் நோட்டா பட ஹீரோவை நினைவுப்படுத்துகிறார். க்ளைமாக்ஸில் அவர் எடுக்கும் முடிவுகள் சபாஷ்.

காஷ்மீர் ஆப்பிள் போல ஜில்லென்ஸ் இருக்கிறார் சாயிஷா. நடிப்பிலும் பாஸ் மார்க் பெறுகிறார். சமுத்திரக்கனி இதுவரை ஏற்காத கேரக்டர்.

ஆனால் அவருக்கும் பூர்ணாவுக்கும் உள்ள காதல் காட்சிகள் படத்தின் நீளத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

பிரேம் தலைவாசல் விஜய், சுவாமிநாதன் என்ற நட்சத்திர பட்டியலும் கூடவே உள்ளது.

கார்ப்பரேட் டானாக பொம்மன் இரானி. எதையும் நிதானமான செய்து இவர் நிகழ்த்தும் நகர்வுகள் நம்மை பயமுறுத்துகின்றன. இவரைப் போன்றவர்கள் நம் பிரதமரையே இப்படித்தான் ஆட்டி வைக்கிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துக்கிறது.

அமைச்சராக நடித்துள்ள நாகிநீடு. ‘அசாசின்’ வேலைகளைச் செய்பவராக சிராக் ஜானி ஆகியோரின் நடிப்பு பேசும்படியாக உள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கிராமத்து பாடல் சிறுக்கீ சீனு, ஹே அமீகோ பாடல் ஓகே ரகம். ஆனால் மற்ற பாடல்கள் படத்தின் நீளத்தை அதிகரிக்கிறது.

ஒளிப்பதிவும் (எம்ஸ். பிரபு) சண்டை காட்சிகளையும் பாராட்டியே ஆக வேண்டும். அற்புதமான வேலை. காஷ்மீரில் சண்டை காட்சி, ட்ரெயின் பைட் என அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்து.

விவசாயிகள் போராட்டம், மீடியா, பிரதமர் வருகை, பாதுகாப்பு என படம் முழுவதும் ஷங்கர் பட பிரம்மாண்டம் போல உள்ளது.

படத்தின் நீளம் நமக்கு சோர்வை தருகிறது. நிறைய காட்சிளை வெட்டியிருந்தால் நல்லது. (எடிட்டர் ஆண்டனி)

இயக்கம் பற்றிய அலசல்…

மண் மலடு ஆனால் மனித மலம் தான் மண்ணின் உரம் என்ற வசனங்கள் ரசிக்க வைக்கிறது.

மிலிட்டரி போல விவசாயமும் நாட்டிற்கு தேவையான ஒன்று என்ற வசனமும் ரசிக்க வைத்தாலும் வேறு ஒரு படத்தில் கேட்ட உணர்வை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் தற்போது விவாதப் பொருளாக உள்ள அனைத்தையும் படத்தில் சேர்த்திருக்கிறார் டைரக்டர் கேவி ஆனந்த்.

விவசாயிகள் போராட்டம், தண்ணீர் பிரச்சினை, இயற்கை விவசாயம், ஸ்டெர்லைட் ஆலை, பூச்சிக் கொல்லி மருந்து உரங்கள் என அனைத்தையும் அலசியிருக்கிறார்.

இத்தனை பாதுகாப்புகள் இருந்தும் பிரதமர் வீடு அலுவலகத்தில் ஒட்டு கேட்கும் கருவிகளையும் வைப்பதெல்லாம் நம்ப முடியவில்லை.

பிரதமர் ஆர்யா தண்ணி அடிப்பது, மாறுவேஷம் போடுவது எல்லாம் தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் அதெல்லாம் ஓவர்.

ஆண்டி என்றால் 40+ தானே என சைஸ் மற்றும் வயசை சொல்வது எல்லாம் பெண்களை அவமதிப்பதாக உள்ளது. அதிலும் மோகன்லால் முதல் சமுத்திரக்கனி வரை டபுள் மீனிங் பேசுவது வரம்பு மீறுவது போல உள்ளது.

பொதுவாக பிரதமர் என்றால் அவரின் அலுவலகத்தை காட்டியிருப்பார்கள். ஆனால் இதில் வீடு, அவரின் ஜாலியான பேச்சுகள் என காட்டியிருப்பது அவரும் மனிதன் தானே என்பதை உணர்த்துகிறது.

மற்றபடி என்ன தான் பிரதமரே என்றாலும் எல்லாம் இடத்திலும் பாதுகாப்பு ஓட்டைகள் இருப்பதை பக்காவாக காட்டியிருக்கிறார்கள்.

ஏனென்றால் பிரதமராக இருந்த இந்திராகாந்தி முதல் ராஜீவ் காந்தி வரை கொல்லப்பட்டதும் அப்படி தானே. எனவே அதனையும் நம்பிதான் ஆக வேண்டும்.

பிரதமர் மோகன்லால் லண்டன் முதலீட்டாளர்கள் மாநாட்டில் காதலி, அம்மா உறவுகள் பற்றியும் அதில் நம் தாய்நாட்டை பேசியிருப்பதும் சூப்பர்.

பிரதமர் ஆர்யா பிரஸ் மீட் ஜாலியாக இருந்தாலும் லாஜிக் இல்லை.

காஷ்மீர் முதல் எங்கு சென்றாலும் எல்லாரும் தமிழ் பேசுவது நம்பும்படியாக இல்லை. ஒருவேளை இதுதான் பொதுமொழியா?

பயோ வார் சார்ந்த விஷயங்களை காட்டியிருப்பது அருமை.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிலிபிரா என்ற பூச்சி இனத்தையும் அவை விவசாய நிலத்தை அழிப்பதையும், அதிலும் ஆண் பெண் பூச்சிகள் பற்றி பேசியிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த பூச்சிகள் தொடர்பான காட்சிகளை படமாக்கப்பட்ட விதம் சூப்பர்.

விவசாயம் தான் ஒவ்வொரு தேசத்தின் முதுகெலும்பு என்ற கருத்தைச் சொன்னதற்காக காப்பானைப் காப்பாற்றலாம்.

ஆக காப்பான்.. நம்மை காப்பான்..

Suriya Kaappaan review rating

ஜாம்பியே செத்துடும்.; சிக்கனே சாப்பிடமாட்டீங்க.. ஜாம்பி விமர்சனம் (1/5)

ஜாம்பியே செத்துடும்.; சிக்கனே சாப்பிடமாட்டீங்க.. ஜாம்பி விமர்சனம் (1/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜாம்பி என்றால் என்ன..? தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்.. மிருதன் படத்தில் பாத்து இருப்பீங்க. வைரஸ் தாக்கிய அந்த நோய் தான்.

யோகிபாபு ஒரு கேங் லீடர். இவர் தன் செல்போனை தொலைத்துவிடுகிறார். அது பிஜிலி ரமேஷிடம் இருக்கிறது. அவரை தேடி ரிசார்ட்டுக்கு வருகிறார்.

அங்கு ஏற்கெனவே சரக்கு அடித்துவிட்டு ரூம் போட்டுள்ளனர் கோபி, சுதாகர், அன்புதாசன், கார்த்திக் & பிஜிலி ரமேஷ்.

அதுபோல் யாஷிகா ஆனந்த் மற்றும் சக மாணவிகள் ஆகியோரும் அந்த ரிசார்ட்டுக்கு பார்ட்டி வருகின்றனர்.

கூவம் ஆறுகளில் செத்துக் கிடக்கும் கோழிகளை எடுத்து சுத்தம் செய்து, ஸ்டார் ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர்.

அந்த சிக்கன்களை சாப்பிடும் சில பெண்களுக்கு அந்த வைரஸ் தாக்குகிறது.

இந்த ஜாம்பிகளிடம் இருந்து படத்தின் நாயகர்கள் மற்றும் நாயகி எப்படி தப்பிக்கின்றனர் என்பது தான் கதை.

கலைஞர்கள்..

அட.. கதை நல்லாயிருக்கே என்று நீங்கள் நினைக்கலாம். அது சரி தான். ஆனால் படமாக்கியிருக்கும் விதம் இருக்கே.. கூவத்தில் கிடந்த சிக்கனை நாம் சாப்பிட்டால் வாந்தி வருமே. அதுதான் படத்தின் ரிசல்ட்.

யோகிபாபு அண்ட் யாஷிகா இருப்பதால் படத்தை கொஞ்சம் பார்க்க முடிகிறது. அரை குரை ஆடைகளில் நம்மை கிறங்கடித்து விட்டு செல்கிறார் யாஷிகா.

யோகிபாபு காமெடி ரசிக்க வைக்கிறது. இவருடன் வரும் அடியாட்கள் ஓகே.

படத்தின் க்ளைமாக்ஸில் யோகிபாபுவிடம் ஒரு கேள்வியை நண்பர்கள் கேட்கின்றனர்.

நீங்க ஏன்னே கல்யாணம் பண்ணிக்கலன்னு… சினிமாக்காரனுக்கு வீடே தர மாட்டுறாங்க. இதுல எங்கடா பெண் தருவாங்க? என்கிறார். ஆனால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கள்ளஉறவு (பொதுமக்களை) தான் காட்டுறாங்க என நக்கல் அடிக்கிறார். இவர் இந்த சினிமாவை பொறுத்தவரை டான் தானே.. பின் ஏன் இந்த தேவையில்லாத டயலாக்.?

பிஜிலி ரமேஷ் தீவிர ரஜினி வெறியர். அதற்காக எப்போதும் அவரைப் போல செய்வது ரஜினி ரசிகர்களையே சலிப்படைய வைக்கிறது.

யூடிப்பில் கலக்கிய பரிதாபங்கள் புகழ் கோபி & சுதாகர் இதில் நடித்துள்ளனர். இனி சினிமா பரிதாபம் என்கிற அளவுக்கு நம்மை சோதிக்கின்றனர்.

வில்லன் ஜான்விஜய் பாவம். அன்புதாசன் யாஷிகாவுடன் சுத்துகிறார். அதை எல்லாம் பார்க்க கூட முடியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நடிகர் பிரேம்ஜி தான் இப்படத்தின் இசையமைப்பாளர். ஒவ்வொரு படத்திற்கும் தன் அடைமொழியை மாற்றிக் கொள்கிறார். இதற்காக இசை காட்டேரி என வைத்துள்ளார். அதற்கு ஏற்ப இசையை கொடூரமாக கொடுத்துள்ளார்.

பேட்ட முதல் விக்ரம் வேதா வரை உள்ள மியூசிக்கை ஓட விட்டுள்ளார். ஆர் யூ ஓகே பேபி பாடல் கூட இரைச்சலாக உள்ளது.

படத்தில் ஒரே ஆறுதல்.. ஒளிப்பதிவாளர் விஷ்னுஸ்ரீ மற்றும் மேக்அப் மாரியப்பன் தான். அவர்கள் நியாயமாக உழைத்துள்ளனர். ஜாம்பி மேக் அப் ஓகே.

ஆனால் ஜாம்பியை போல சுதாகர், கோபி, அன்புதாசன் நடிப்பது மரண கொடூரம்.

புவன் நலன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பார்த்தால் ஜாம்பியே செத்துடும். மக்களின் நிலை என்னவாகும்? யோசித்து பாருங்கள்.

ஹாட்ஸ் ஆஃப் ஆர்யா… மகாமுனி விமர்சனம் (3.75/5)

ஹாட்ஸ் ஆஃப் ஆர்யா… மகாமுனி விமர்சனம் (3.75/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் 8 வருடங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் மகாமுனி. இதில் ஆர்யா இரு வேடங்களில் நடித்துள்ளர்.

மகாதேவன் & முனிராஜ் இருவரும் இரட்டையர்கள். சிறுவயதிலேயே தாயை இழந்தவர்கள் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.

மகா என்ற ஆர்யா அரசியல்வாதிகளின் கொலை திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுப்பவர். இவரின் மனைவிதான் இந்துஜா. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

மற்றொரு முனி என்ற ஆர்யா மிகவும் சாது. விவேகானந்தர் வழியில் பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிக்க நினைப்பவர். பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்துகிறார். இவரின் அம்மா ரோகினி.

இந்த ஆர்யாவை ஒன் சைட்டாக லவ் செய்கிறார் மகிமா நம்பியார்.

ஒரு கட்டத்தில் இரு ஆர்யாவும் மகாமுனியாய் மாறுவதுதான் படத்தின் பலம். அது என்ன? என்பதுதான் கதை.

கலைஞர்கள்..

நான் கடவுள், அவன் இவன் படத்திற்கு பிறகு அருமையான நடிப்பை கொடுத்துள்ளார் ஆர்யா. கண்களில் கோபம், பாசம், திட்டம், செயல், சாந்தம் என அனைத்தும் கொடுத்துள்ளார். நிச்சயம் பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.

இதுவரை நாம் பார்க்காத மகிமா, இந்துஜாவை இந்த படத்தில் பார்க்கலாம். ஜாலியாக இருக்கும் போது ஒன்று, சோகமாக இருக்கும் போது ஒன்று என வெரைட்டி காட்டியிருக்கிறார் இந்துஜா.

மகிமா.. மெகா மா.. என்ற வகையில் வெளுத்து கட்டியிருக்கிறார். ஆர்யாவை கொல்ல திட்டமிட்ட தன் அப்பாவை கண்டிக்கும் காட்சிகளிலும் பெண் பார்க்க வந்தவனை திட்டும் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார்.

இவர்களுடன் இளவரசு இவரின் மனைவியாக தீபா அக்கா, ஜெயபிரகாஷ், ரோகிணி, அருள்தாஸ், மதன்குமார், காளிவெங்கட், GM சுந்தர், கலக்கப்போவது யாரு யோகி என அனைவரும் கச்சிதம்.

சத்யா போலீஸ், இளவரசு, ஜெயப்பிரகாஷ் அடியாள்களின் கேரக்டர்களும் செம.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எஸ் எஸ் தமனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. அதிலும் இடைவேளை காட்சிகளில் இசை மிரட்டல்.

அருள் பத்மநாபனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். இது இவரது முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

சாபு ஜோசப்பின் எடிட்டிங் ஓகே. 2ஆம் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டியிருக்கலாம்.

கலை – ரெம்போம் பால்ராஜ். ஆக்‌ஷன் பிரகாஷின் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் பேசும்படி உள்ளது.

இயக்கம் பற்றிய அலசல்…

படத்தின் பலமும் பலவீனமும் மெதுவாக நகரும் காட்சிகளே. இந்த படத்திற்கு இதுபோன்ற திரைக்கதைதான் வேண்டுமென்றாலும் சில காட்சிகளில் அதுவே சோதிக்கிறது. ஆனால் படத்தின் க்ளைமாக்ஸ் வரை நம்மை ஒருவித பதட்டத்துடனேயே பயணிக்க வைத்துள்ளார் டைரக்டர் சாந்தகுமார். சபாஷ் சார்.

படத்தின் வசனங்கள் ப்ளஸ். அதில்…

நிஜ ரவுடி தன்னை காண்பிச்சுக்க மாட்டான். வெத்து வேட்டுக்கள் தான் தன்னை அடையாளப்படுத்த கத்தி கொண்டே இருப்பார்கள்..

கடவுள் இருக்காரா? இல்லையா? என்பதற்கான விளக்கம் சூப்பர்.

இளவரசு, அருள்தாஸ், போலீஸ் ஆகியோர் குடித்துவிட்டு பேசும் அந்த காட்சிள் கைத்தட்டலை அள்ளும்.

அதுபோல் டாக்டர் காளி வெங்கட் காட்சிகள், போலீஸ் திட்டம் போடும் காட்சிகள், ஜெயப்பிரகாஷ் காட்சிகள் என அனைத்தும் ரசிக்கும் ரகம்.

இரட்டையர் கதை என்றாலும் அதில் காதல், குடும்பம், பாசம், போலி டாக்டர் அரசியல், சாதி வன்மம், திராவிட அரசியல், அடிதடி வெட்டுக்குத்து என்று சமாச்சாரங்களைக் கலந்து கொடுத்திருப்பது சாந்தகுமாரின் சமார்த்தியம்.

ஆக மகாமுனி… ஹாட்ஸ் ஆஃப் ஆர்யா

Magamuni review rating

சிரிப்பு… சிறப்பு… சிக்சர் விமர்சனம்

சிரிப்பு… சிறப்பு… சிக்சர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்தம்பி படத்தில் மாலை கண் நோய் உள்ளவராக நடித்திருப்பார் கவுண்டமணி.

அந்த நோய் உள்ளவராக படம் முழுவதும் நடித்திருக்கிறார் வைபவ்.

ஒரு நாள் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தபேராசிரியை விமலா ராணியை கைது செய்யக்கூறி போராட்டம் நடைபெறுகிறது.

அப்போது எதிர்பாரா விதமாக பைவர் இருக்கும் இடத்தில் போராட்டம் தொடரவே, இவருதான் அதன் காரணமானவர் என மீடியா செய்திகளை வெளியிடுகிறது.

இதனால் இவருக்கும் அரசியல்வாதி என்.ஆர்.மனோகருக்கும் பகை முட்டுகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்..

ஆக்சன், காமெடி என கலந்தடிக்கிறார் வைபவ். தன் மாலை கண் பிரச்சினையை இவர் சமாளிக்கும் காட்சிகள் சிரிப்பு மழை.

இவருக்கும் பாலக் லவ்வாணிக்கும் ரொமான்ஸ் பெரிதாக இல்லை. பாலக் லவ்வாணி ஓரளவுக்கு நடிப்பிலும் அழகிலும் பாஸ் மார் பெறுகிறார்

படத்தில் முக்கியமாக சதீஷ், ராதாவி, ஸ்ரீரஞ்சனி, இளவரசு நல்ல தேர்வு. இவர்களின் காமெடியும் நன்றாக ஒர்க் அவுக் ஆகியுள்ளது.

ராதாரவியின் குடிகார காமெடி சூப்பர். படத்தின் ஹைலைட்டே அதுதான்.

என்.ஆர்.மனோகர் தேவையான அளவுக்கு வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஏ.ஜே. நடிப்பு கச்சிதம்.

டிவி புகழ் ராமரின் காமெடியும் படத்தின் ப்ளஸ் ஆக அமைந்துள்ளது.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே ரகம்.

பி.ஜி.முத்தையாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.

சாக்சி என்ற புதுமுக இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். லாஜிக் இல்லாமல் படத்தை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

ஏதாவது ட்விஸ்ட் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும். பார்த்த கதை மற்றும் கேட்ட ஜோக்குகள் படத்தின் பலவீனம்

ஆக சிக்சர்… சிரிப்பு.. சிறப்பு

மயூரன் திரை விமர்சனம்

மயூரன் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பாலாவின் பட்டறையைச் சேர்ந்தவர் நந்தன் சுப்பராயன். இவரது இயக்கத்தில் வந்துள்ள படம் மயூரன்.

ஒரு கல்லூரியில் இணையும் மூவர் நண்பர்களாகிறார்கள். ஜான் என்கிற ஜானகிராமன். எதற்காகவும் துணிந்து போராடும் சேகுவரா. இவர்களுடன் விஜய் டிவி புகழ் அமுதவாணன்.

ஒரு நாள் ஜானகிராமன் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார். அப்போது கேன்சர் நோயாளியின் மெடிக்கல் ரிப்போர்ட் இவருக்கு வந்துவிடுகிறது.

இதனால் இவருக்கு நோய் என நினைக்கிறார். மேலும் ஒரு பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு போதை பொருளை விற்க முற்படுகிறார்.

தன் நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லாமல் போதை பொருளை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்.

அதன்பின்னர் இவர் எங்கு சென்றார்? என யாருக்கும் தெரியவில்லை. எங்கே சென்றார்? என்ன ஆனார்? நண்பர்கள் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

மயூரன்

கலைஞர்கள்…

அஞ்சன், ஆனந்த்சாமி, அமுதவாணன் 3 பேரும் நண்பர்கள். இதில் ஆனந்த்சாமி அப்பாவியாக நடித்திருக்கிறார்.

அஞ்சன் இன்னும் நிறைய உழைக்க வேண்டியிருக்கும். சில காட்சிகளில் பாஸ் மார்க் பெறுகிறார்.

நாயகி அஸ்மிதாவுக்கு பெரிதாக வேலையில்லை. கடைசியில் இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதும் தெரியவில்லை.

கிராமத்து ஆள் போல கம்பீரம் காட்டி நடித்திருக்கிறார் பெரியவர் வேல.ராமமூர்த்தி. இவரின் நடிப்பும் இவரின் அடியாள் ஜான் நடிப்பும் நச்.

பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. அதுபோல் பின்னணி இசையும் ஏனோ தானே என இருக்கிறது. ஒளிப்பதிவு சில காட்சிகளில் மட்டுமே ஓகே.

mayuran movie

பாலாவின் சீடர் என்று படத்திற்கு சென்றால் நம்மை ஏமாற்றியிருக்கிறார் நந்தன்.

ஏழை குடும்பம், படிப்பு, போதை கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் மாணவர்கள், நண்பனுக்காக போராடும் காட்சி என அருமையாக கதைக்களத்தை கொண்டு செல்ல முடியாமல் தடுமாறியிருக்கிறார் டைரக்டர்.

க்ளைமாக்ஸ் நன்றாக இருந்தாலும் அது திடீரென சட்டென முடிவது சரியில்லை.

கெத்து கிளப்.. கென்னடி கிளப் திரைவிமர்சனம் (3/5)

கெத்து கிளப்.. கென்னடி கிளப் திரைவிமர்சனம் (3/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

எத்தனையோ கபடி விளையாட்டு படங்களை பார்த்திருப்போம். இதில் கபாடி போட்டியை பெண்களை மையப்படுத்தி எடுத்துள்ளார் சுசீந்திரன். ஆனால் அந்த பெண்களுக்கு பயிற்சியாளர்கள் ஆண்கள் தான்.

வழக்கமான விளையாட்டு போட்டி.. அதில் நடக்கும் அரசியல் விளையாட்டு இதுதான் படத்தின் கதைக்களம்.
கென்னடி கிளப்பை நடத்தும் பாரதிராஜா பெண்கள் அணிக்கு பயிற்சி கொடுக்கிறார். இவருக்கு உதவியாக ரெயில்வேயில் வேலை பார்க்கும் சசிகுமாரும் வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து பயிற்சி கொடுக்கின்றனர்.

ஒரு நல்ல வீராங்கனை இந்திய அணிக்கு தேர்வாகும்போது ரூ. 30 லட்சம் பணத்தை லஞ்சமாக கேட்கிறார் ஆபிசர்.
இதனால் அந்த பெண் தற்கொலை செய்கிறார். அதன்பின்னர் அந்த அணி என்னானது.? பாரதிராஜா மற்றும் சசிகுமார் என்ன செய்தார்கள்? என்பதை படத்தின் கதை.

கலைஞர்கள் பணி..?

பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் மெச்சுரியாட்டியான நடிப்பை கொடுத்துள்ளனர். தலைமுடியை ஒட்ட வெட்டி சசிகுமார் ஸ்மார் குமாராக வருகிறார்.

தன் பண்பட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிடுவார் பாரதிராஜா.

சசிகுமாருக்கு நாயகி இருந்தாலும் முருகா முருகா என கூப்பிடுவதோடு அவரது வேலை முடிகிறது. அடிக்கடி க்ளோசப் ஷாட்டில் வருகிறார்.

ஆனால் இவரை தவிர அந்த இரட்டை வீராங்கனைகள் ரசிகர்களை கவர்கிறார்கள். இதில் நடித்த அனைவரும் நிஜ விளையாட்டு வீராங்கனைகள் என்பது பெரும் ஆறுதல். நடிகைகளாக தெரியாமல் கேரக்டர்களாக தெரிகிறார்கள்.

சுசீந்திரனின் நன்றிக் கடனுக்காக சூரி இந்த படத்தில் நடித்துள்ளார் என நன்றாகவேத் தெரிகிறது. ஆபிசர் கேரக்டர் வரும் வில்லன் நல்ல பெர்மான்ஸ்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் பின்னணி இசை மிரட்டல். கபடியை விட இவரது இசை பெரிதாக பேசப்படும். பாடலும் சரி பாடல் வரிகளும் சூப்பர். பொம்பள சடுகுடு… வீரத்தமிழன் கபடி என்ற வரிகள் எனர்ஜியாக உள்ளது.

ஆர் பி குருதேவ் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபடி காட்சிகள் அருமை. க்ளைமாக்ஸ் காட்சி நிச்சயம் சீட் நுனியில்தான் படத்தை பார்ப்பீர்கள். செம கலக்கலான காட்சி.

பாரதிராஜா பயிற்சியில் ஆண்களுடன் பெண்கள் மோதும் கபடி போட்டியை தெறிக்க விட்டுள்ளனர். ஆனால் பெண்கள் தொட்டவுடன் ஆண்கள் பறந்து செல்வது எல்லாம் ரொம்பவே ஓவர்.

பெண்கள் கபடியை மையப்படுத்தி இதுவரை எந்த படமும் வரவில்லை. அரைக்கால் சட்டை போட்டு வந்தால் பெண்களை தவறாக நினைப்பார்கள் என்பதை எல்லாம் தாண்டி வசனங்களும் கைகொடுத்துள்ளது.

பாரதிராஜா சசிகுமார் மோதிக் கொள்ளும் காட்சியில் ட்விஸ்ட் வைத்திருந்தால் ஏதாவது சுவாரசியம் இருந்திருக்கும். அதுவும் இல்லாமல் போச்சு.

ஆக மொத்தம்.. கென்னடி கிளப்… கெத்து கிளப்

More Articles
Follows