தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
தஞ்சாவர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இயற்கை விவசாயம் பார்க்கிறார் சூர்யா. இவரின் பெயரும் கதிர் என்பது ஹைலைட். இவருக்கு பின்னணியில் சில விசயங்கள் நடக்கிறது.
அதன்பின்னர் மிலிட்டரி இன்டலிஜன்ஸ் பிரிவிலிருந்து பிரதமர் மோகன்லாலுக்கு பெர்சனல் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் சூர்யா.
100 உயிரை காக்க ஒரு உயிர் போனாலும் தவறில்லை நினைப்பவர் பிரதமர். அத்துடன் பாகிஸ்தான் மக்களும் நன்றாக இருக்க வேண்டும என நினைப்பவர் ஒரு முறை காஷ்மீர் சென்றபோது அங்கு தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார்.
எனவே சூர்யா வேலையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.
அதன் பின்னர் சூர்யா என்ன செய்தார்? கொன்றவர்களை என்ன செய்தார்? தீவிரவாதிகளின் நோக்கம் என்ன? அடுத்த பிரதமர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கலைஞர்கள் எப்படி..?
தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே தோல்வியால் துவண்ட சூர்யா இந்த காப்பானை பெரிதும் நம்பியிருக்கிறார். எனவே தன் நடிப்பை அர்ப்பணிப்பை கொடுத்திருக்கிறார். அதில் ஒன்றும் குறையில்லை.
பாதுகாப்பு அதிகாரிக்கே உரிய மிடுக்கு, கம்பீரம், ஸ்மார்ட்னெஸ் என வெரைட்டி காட்டியிருக்கிறார். அதனால் ரொமான்ஸ கூட அடக்கியே வாசித்திருக்கிறார்.
ஒருவேளை சாயிஷா நிஜ கணவர் ஆர்யா அருகில் இருப்பதால் அந்த நடிப்போ? என்ற சந்தேகமும் வருகிறது.
கம்ப்ளீட் ஆக்டர் மோகன்லால் தன் நடிப்பில் கச்சிதம். இந்திய நாட்டு மக்கள் மீது அவர் காட்டும் அன்பு, கார்ப்பரேட் முதலாளிகளிடம் காட்டும் கோபம், பாகிஸ்தான் மக்களிடம் காட்டும் பாசம் என அசத்தியிருக்கிறார் பிரதமர். இப்படி ஒரு பிரதமர் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணமும் எழுகிறது.
முதல் பாதியில் ஆர்யாவுக்கு பெரிதாக வேலையில்லை. டபுள் மீனிங் காமெடி செய்திருக்கிறார். சில நேரங்களில் நோட்டா பட ஹீரோவை நினைவுப்படுத்துகிறார். க்ளைமாக்ஸில் அவர் எடுக்கும் முடிவுகள் சபாஷ்.
காஷ்மீர் ஆப்பிள் போல ஜில்லென்ஸ் இருக்கிறார் சாயிஷா. நடிப்பிலும் பாஸ் மார்க் பெறுகிறார். சமுத்திரக்கனி இதுவரை ஏற்காத கேரக்டர்.
ஆனால் அவருக்கும் பூர்ணாவுக்கும் உள்ள காதல் காட்சிகள் படத்தின் நீளத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
பிரேம் தலைவாசல் விஜய், சுவாமிநாதன் என்ற நட்சத்திர பட்டியலும் கூடவே உள்ளது.
கார்ப்பரேட் டானாக பொம்மன் இரானி. எதையும் நிதானமான செய்து இவர் நிகழ்த்தும் நகர்வுகள் நம்மை பயமுறுத்துகின்றன. இவரைப் போன்றவர்கள் நம் பிரதமரையே இப்படித்தான் ஆட்டி வைக்கிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துக்கிறது.
அமைச்சராக நடித்துள்ள நாகிநீடு. ‘அசாசின்’ வேலைகளைச் செய்பவராக சிராக் ஜானி ஆகியோரின் நடிப்பு பேசும்படியாக உள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கிராமத்து பாடல் சிறுக்கீ சீனு, ஹே அமீகோ பாடல் ஓகே ரகம். ஆனால் மற்ற பாடல்கள் படத்தின் நீளத்தை அதிகரிக்கிறது.
ஒளிப்பதிவும் (எம்ஸ். பிரபு) சண்டை காட்சிகளையும் பாராட்டியே ஆக வேண்டும். அற்புதமான வேலை. காஷ்மீரில் சண்டை காட்சி, ட்ரெயின் பைட் என அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்து.
விவசாயிகள் போராட்டம், மீடியா, பிரதமர் வருகை, பாதுகாப்பு என படம் முழுவதும் ஷங்கர் பட பிரம்மாண்டம் போல உள்ளது.
படத்தின் நீளம் நமக்கு சோர்வை தருகிறது. நிறைய காட்சிளை வெட்டியிருந்தால் நல்லது. (எடிட்டர் ஆண்டனி)
இயக்கம் பற்றிய அலசல்…
மண் மலடு ஆனால் மனித மலம் தான் மண்ணின் உரம் என்ற வசனங்கள் ரசிக்க வைக்கிறது.
மிலிட்டரி போல விவசாயமும் நாட்டிற்கு தேவையான ஒன்று என்ற வசனமும் ரசிக்க வைத்தாலும் வேறு ஒரு படத்தில் கேட்ட உணர்வை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் தற்போது விவாதப் பொருளாக உள்ள அனைத்தையும் படத்தில் சேர்த்திருக்கிறார் டைரக்டர் கேவி ஆனந்த்.
விவசாயிகள் போராட்டம், தண்ணீர் பிரச்சினை, இயற்கை விவசாயம், ஸ்டெர்லைட் ஆலை, பூச்சிக் கொல்லி மருந்து உரங்கள் என அனைத்தையும் அலசியிருக்கிறார்.
இத்தனை பாதுகாப்புகள் இருந்தும் பிரதமர் வீடு அலுவலகத்தில் ஒட்டு கேட்கும் கருவிகளையும் வைப்பதெல்லாம் நம்ப முடியவில்லை.
பிரதமர் ஆர்யா தண்ணி அடிப்பது, மாறுவேஷம் போடுவது எல்லாம் தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் அதெல்லாம் ஓவர்.
ஆண்டி என்றால் 40+ தானே என சைஸ் மற்றும் வயசை சொல்வது எல்லாம் பெண்களை அவமதிப்பதாக உள்ளது. அதிலும் மோகன்லால் முதல் சமுத்திரக்கனி வரை டபுள் மீனிங் பேசுவது வரம்பு மீறுவது போல உள்ளது.
பொதுவாக பிரதமர் என்றால் அவரின் அலுவலகத்தை காட்டியிருப்பார்கள். ஆனால் இதில் வீடு, அவரின் ஜாலியான பேச்சுகள் என காட்டியிருப்பது அவரும் மனிதன் தானே என்பதை உணர்த்துகிறது.
மற்றபடி என்ன தான் பிரதமரே என்றாலும் எல்லாம் இடத்திலும் பாதுகாப்பு ஓட்டைகள் இருப்பதை பக்காவாக காட்டியிருக்கிறார்கள்.
ஏனென்றால் பிரதமராக இருந்த இந்திராகாந்தி முதல் ராஜீவ் காந்தி வரை கொல்லப்பட்டதும் அப்படி தானே. எனவே அதனையும் நம்பிதான் ஆக வேண்டும்.
பிரதமர் மோகன்லால் லண்டன் முதலீட்டாளர்கள் மாநாட்டில் காதலி, அம்மா உறவுகள் பற்றியும் அதில் நம் தாய்நாட்டை பேசியிருப்பதும் சூப்பர்.
பிரதமர் ஆர்யா பிரஸ் மீட் ஜாலியாக இருந்தாலும் லாஜிக் இல்லை.
காஷ்மீர் முதல் எங்கு சென்றாலும் எல்லாரும் தமிழ் பேசுவது நம்பும்படியாக இல்லை. ஒருவேளை இதுதான் பொதுமொழியா?
பயோ வார் சார்ந்த விஷயங்களை காட்டியிருப்பது அருமை.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிலிபிரா என்ற பூச்சி இனத்தையும் அவை விவசாய நிலத்தை அழிப்பதையும், அதிலும் ஆண் பெண் பூச்சிகள் பற்றி பேசியிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த பூச்சிகள் தொடர்பான காட்சிகளை படமாக்கப்பட்ட விதம் சூப்பர்.
விவசாயம் தான் ஒவ்வொரு தேசத்தின் முதுகெலும்பு என்ற கருத்தைச் சொன்னதற்காக காப்பானைப் காப்பாற்றலாம்.
ஆக காப்பான்.. நம்மை காப்பான்..
Suriya Kaappaan review rating