தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
பழங்குடி இன மக்களுக்காக அரசையும் அதிகாரத்தையும் எதிர்த்து நீதி பெற்று தந்த வக்கீல் சந்துருவின் சாதனை கதை.
1990களில் கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தில் நடந்த ஓர் உண்மைக் கதையின் பதிவு இது. இந்த வழக்கிற்காக வாதாடியவர் சந்துரு. அவர் மனித உரிமை வழக்குகளுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் வாதாடி ஜெயித்தவர்.
கதைக்களம்…
ரேஷன் கார்டு கூட இல்லாமல் இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள் பழங்குடியின மக்கள். போலீசுக்கு குற்றவாளிகள் கிடைக்காவிட்டால் இந்த மக்கள் மீது வீண்பழி சுமத்தி கைது செய்து வழக்கை முடித்துவிடுவது வழக்கம்.
ராசாக்கண்ணு செங்கனி தம்பதிகள். இவர்களுக்கு ஒரு 5 வயது மகள். செங்கனி இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் காலகட்டம் அது.
இந்த சூழ்நிலையில் ஆளுக்கட்சி கவுன்சிலர் வீட்டில் நகைகள் திருடப்படுகிறது. யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா? என போலீஸ் கேட்க… ராஜாக்கண்ணு மீது சந்தேகம் உள்ளதாக அந்த கவுன்சிலர் வாய்போக்கில் சொல்ல அதையே வாக்காக எடுத்துக் கொண்டு விசாரணைக்காக ராஜாக்கண்ணு மற்றும் அவரது உறவினர்கள் சிலரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் போலீஸ்.
திருடியதை ஒப்புக் கொள்ள போலீஸ் அடித்து துவைக்கிறது. செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளமாட்டேன் என நேர்மையாக இருக்கிறார் ராஜாக்கண்ணு. போலீஸ் ட்ரீட்மெண்ட்டுக்கு பிறகும் கடைசி வரை உண்மையாக இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து அந்த மூவரும் தப்பித்துவிட்டார்கள் என சொல்கிறது காவல்துறை.
ஒரு குடும்பத்தில் ஒரு நபர் காணாமல் போனால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால் காவல் நிலையத்திலேயே அவர் காணாமல் போனால்? எனவே வக்கீல் சந்துருவை நாடுகிறார் செங்கனி.
அதன்பின்னர் என்ன ஆனது? ராஜாக்கண்ணு நிஜமாகவே காணமால் போனாரா? எப்படி எங்கே போனார்? செங்கனிக்கு ராஜாக்கண்ணு கிடைத்தாரா? வக்கீல் சந்துரு செங்கனிக்கு நீதிமன்றத்தில் நீதி பெற்று தந்தாரா? என்பதே கதை.
கேரக்டர்கள்…
தமிழ் சினிமாவில் ஒரு சில கேரக்டர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும். அன்புச் செல்வன், சஞ்சய் ராமசாமி, துரை சிங்கம் ஆகிய கேரக்டர்கள் வரிசையில் சூர்யாவுக்கு சந்துரு என்ற பெயரும் இனி இணைந்துவிடும். அப்படியொரு பவர்ஃபுல் கேரக்டர் லாயர் சந்துரு. சபாஷ் சந்துரு.
வசனங்களில் தெளிவு… தொழிலில் கண்ணியம்… பார்வையில் பஃயர் என அசத்தியிருக்கிறார். சூர்யாவின் சிகை அலங்காரமும் சிறப்பு.
நேர்மையான போலீஸ் பெருமாள் சாமியாக பிரகாஷ்ராஜ். அலட்டிக் கொள்ளாத நடிப்பு. தன் துறையில் கருப்புக் ஆடுகள் இருந்தாலும் சட்டத்தை மதித்து இவர் காட்டும் நடவடிக்கைகள் அசத்தல்.
செங்கனியாக லிஜா மோல்.,, ராசாகண்ணுவாக மணிகண்டன். அப்படியொரு நடிப்பு. இவர்களுக்கு விருதுகள் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.
சட்டத்திற்கு பயந்து போலீஸ் பணத்தை தர ரெடியாக இருந்தாலும் அதை வாங்காமல் செங்கனி பேசும் அந்த பேச்சுகள்.. யப்ப்பா… செம அள்ளு. கொலைக்கார பாவிகளின் பணத்தில் நான் வாழமாட்டேன் என வீம்பு பிடிக்கும்போதும்.. போலீஸ் ஜீப்பே தன் பின்னால் வரும்போதும் அலட்சியமாக நடக்கும்போதும் அடடா..
போலீஸ் ஸ்டேஷனில் ராஜாக்கண்ணுக்கு ஏற்படும் நிலையை பார்த்து உங்கள் கண்கள் கலங்கினால் அதுவே அவர் நடிப்புக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை எனலாம்.
அதுபோல் இன்ஸ்பெக்டராக ஆசைப்படும் தமிழ் என்பவரின் கேரக்டர் வேற லெவல். நீங்கள் படத்தை பார்த்து இவரை திட்டாமல் இருக்க மாட்டீர்கள்.. திட்டு வாங்குவதே இவருக்கு நீங்கள் கொடுக்கும் பாராட்டு.
இவருடன் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோரும் உண்டு. ராஜாக்கண்ணுவின் மகளாக வருபவர் கடைசியில் சூர்யாவுடன் அமரும் காட்சி மாஸ் சீன்.
இவர்கள் எல்லாம் போலீஸா? ச்சே… திருடன்களை விட மகாபாவிகள் என திட்டுமளவுக்கு காவல்துறையின் அசிங்கத்தை போட்டு உடைத்துள்ளனர்.
டீச்சராக வரும் கர்ணன் நாயகி ரஜிஷா விஜயனும் தன் பங்கை நிறைவாக செய்துள்ளார். இவர்களுடன் குரு சோமசுந்தரம், எம்எஸ் பாஸ்கர் ஆகியோரின் கேரக்டர்களும் நிறைவை தருகின்றன.
டெக்னீஷியன்கள்..
ஷான் ரோல்டன் இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பு.. பவர் சாங்… தல கோதும்… போன்ற பாடல்கள் செம. அதுபோல் சூர்யாவுக்கு வழக்கில் ஒரு ஐடியா கிடைக்கும்போதெல்லாம் ஒலிக்கும் இசை சூப்பரோ சூப்பர்.
படத்திற்கு ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர். அடடா என்ன அழகு என வியக்க வைக்கிறார். போலீஸ் ஸ்டேசன் விசாரணை காட்சிகள் நம்மை நிச்சயம் அழவைக்கும். காட்டுமிராண்டி காவலர்கள் என நிச்சயம் திட்ட வைக்கும்.
இந்த படம் ஓடிடியில் ரிலீசானாலும் எங்கும் பார்வேர்ட் செய்து பார்க்காத அளவுக்கு எடிட்டிங் செய்துள்ளார் ஃபிலோமின்ராஜா. அப்படியொரு நேர்த்தி.
அதுபோல கலை இயக்குநர் கதிரும் தன் பணியில் சிறப்பு. 1990களில் உள்ள டேர் ரிக்கார்டர் முதல் வீடியோ கேசட் என அனைத்தையும் கண்முன் கொண்டு வந்துள்ளார்.
இயக்கம் பற்றிய அலசல்…
க்ரைம் த்ரில்லர் படங்களில் நிறைய ட்விஸ்ட்டுகள் இருப்பதை பார்த்திருப்போம். இந்த வழக்கு விசாரணையில் இத்தனை ட்விஸ்ட்டுகளா? என கற்பனை செய்யாத முடியாத அளவுக்கு கொடுத்து நம்மை சீட் நுனியில் உட்கார வைத்து இயக்குனர் ஞானவேல்.
இந்த காட்சி அந்த காட்சி போரடிக்கிறது என சொல்லிவிடாத அளவுக்கு காட்சிக்கு காட்சி கவனம் எடுத்து திரைக்கதை அமைத்து நம்மை கவர்ந்துள்ளார் இயக்குனர்.
லிஜா மோல், மணிகண்டன், ரஜிஷா, போலீஸ் ஏட்டு, விசாரணை கைதிகள், இளவரசு, கவுன்சிலர், எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் வரை அனைவரையும் சிறப்பாக கேரக்டரில் வாழ வைத்துள்ளார் எனலாம்.
எந்த ஒரு நபரும் தன் தொழிலை காட்டி அடுத்தவடிர மிரட்ட மாட்டான். ஆனால் போலீஸ் மட்டும் அப்படி செய்வார்கள்…. ஹேய்.. யார்கிட்ட வச்சிக்கிற? நான் போலீஸ் என அதிகாரம் காட்டுபவர்கள் போலீஸ்.
அந்த அதிகார திமிரில் அவர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே.. அதை அப்படியே தோலுரித்திக் காட்டியிருக்கிறார்கள். கற்பனை செய்யாத முடியாத அளவுக்கு ஒரு குற்றத்தை போலீஸ் ஜோடிக்கும் விதங்கள் நம்மை வியக்க வைக்கும்.
போலீஸ் லாயர் இருவரும் பாம்பு கீரி மாதிரிதான் என்றாலும் இருவரையும் இணைத்து ஒரு வழக்கை நியாயமாக முடித்து சிறப்பு சேர்த்துள்ளார். இந்த இரண்டு துறையால் மட்டுமே சமூகத்தை சிறப்பாக வாழ வைக்க முடியும் என்பதையும் ஆணித்தரமாக சொல்லியுள்ளார்.
ஆக.. இந்த ஜெய் பீம்.. கேடுகெட்ட போலீஸ்.. கெட்டிக்காரர் சந்TRUE எனலாம்.
Jai Bhim movie review and rating in Tamil