தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்திவாசு, வடிவேலு, ஊர்வசி, பானுப்ரியா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் : பி வாசு
இசை : தமன்
ஒளிப்பதிவாளர் : சர்வேஸ் முரளி
எடிட்டர்: சுரேஷ் அர்ஸ்
பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்
தயாரிப்பு : ரவீந்திரன்
கதைக்களம்…
முதல்காட்சியில் சக்திவேல்வாசு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்யப்படுகிறார்.
அவர் வளர்க்கும் ஒரு புறா மட்டுமே அந்த கொலைக்கு சாட்சியாகிறது.
இந்த வழக்கு சிபிசிஐடியான சிவலிங்கேஸ்வரன் லாரன்ஸ் விசாரிக்கிறார். இதனிடையில் ரித்திகா சிங்குடன் காதல் திருமணம் நடக்கிறது.
இறந்துபோன சக்தி, ஆவியாக வந்து ரித்திகாவின் உடலில் புகுந்து கொள்கிறது.
ஆனால் தன்னை யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பதை அறியாமல் அலைகிறது அந்த ஆன்மா.
எந்த ஆதாரமும் இல்லாத இந்த கொலையை எப்படி கண்டுபிடிக்கிறார்? புறா எப்படி சாட்சி ஆனது? அந்த ஆன்மா சாந்தி அடைந்ததா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இப்படத்தின் க்ளைமாக்ஸ் பதில் சொல்லும்.
கேரக்டர்கள்..
முறைப்பான போலீஸ் அதிகாரி போல் இல்லாமல், கமர்ஷியல் போலீசாக ஜொலிக்கிறார் லாரன்ஸ்.
அவரின் டான்ஸ் மற்றும் ஸ்டைல் எதிலும் பஞ்சமில்லை. இதில் சின்ன கபாலி நான் என்று பாடி காட்டுகிறார்.
பேய்க்கும் தனக்கும் எப்பவும் எல்லா அம்சமும் பொருந்தும் என்று இதிலும் கலக்கியிருக்கிறார்.
இறுதிச்சுற்று பாக்ஸர் ரித்திகா இதில் ரங்குரக்கரா என குத்தாட்டம் போட்டு இருக்கிறார். பேய் பிடித்தவளாகவும் மிரட்டியிருக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சக்திவேல் வாசு. நடிப்பில் நல்ல தேர்ச்சி. இதையே கன்டின்யூ பன்னுங்க பாஸ். ரஹீம் கேரக்டரில் பிரியாணி போல மணக்கிறார்.
வடிவேலுக்கு சரியான ரீஎண்ட்ரி இப்படம். அவரது காட்சிகளை இன்னும் நீட்டி இருக்கலாம். காமெடி கைகொடுத்திருக்கிறது.
சக்தியின் லவ்வராக வரும் ஷாரா சிறப்பான தேர்வு. நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.
இவர்களுடன் ஊர்வசி, பானுப்ரியா, ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் உண்டு.
தொழில்நுட்ப கலைஞர்கள்.
தமனின் பின்னணி இசை தாறுமாறு. ஹாரர் படத்திற்கு ஏற்ற ஆர்ஆர் ரசிக்க வைக்கிறது.
ரங்குரக்கர மற்றும் சின்ன கபாலி பாடல்கள் ஆட்டம் போட வைக்கும். சிவலிங்கா பாடலும் ரசிக்க வைக்கிறது.
சர்வேஸ் முரளியின் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம்.
ஆனால் முதல்பாதியில் வரும் ஊர்வசி காட்சிகளை வெட்டி, இரண்டாம் பாதியை குறைத்திருக்கலாம்.
இடைவேளைக்கு பின்னர்தான் படமே என்கிற அளவுக்கு அவ்வளவு காட்சிகளை வைத்துள்ளார் டைரக்டர் பி.வாசு.
ஒரு விசாரணை, ஒரு சிபிசிஐடி என இருந்தாலும் அதில் கமர்ஷியல், பேய் என அனைத்தையும் கலந்து கொடுத்துள்ளார் பி வாசு.
பொதுவாக இதுபோன்ற படத்தில் ஆவி எதற்காக, யாரால்? கொல்லப்பட்டது என்பது தெரிந்திருக்கும். ஆனால் இதில், யார்? தன்னை கொன்றார்கள்? என சக்தியின் ஆன்மா அலைவது ட்விஸ்ட்.
ஏ கிளாஸ் ஆடியன்ஸை விட பி அண்ட் சி சென்டரில் சில்லரைகளை அள்ளுவான் சிவலிங்கா
சிவலிங்கா.. த்ரில்-லிங்கா