சத்யா விமர்சனம்

சத்யா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ், சதீஷ், ஷெரின் (பேபி), யோகிபாபு, நிழல்கள்ரவி மற்றும் பலர்.
இயக்கம் : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
இசை : சைமன் கிங்
ஒளிப்பதிவு: அருண்மணிபழனி
எடிட்டிங்: கௌதம் ரவிச்சந்திரன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: சத்யராஜ் நாதம்பாள் பிலிம்ஸ்

sathya yogi babu

கதைக்களம்…

தெலுங்கில் ஹிட்டான ‘க்‌ஷணம்’ படத்தின் ரீமேக்தான் இப்படம். தெலுங்கு படத்தில் கல்லூரி இருக்கும். ஆனால் இதில் ஐ.டி நிறுவனம் என மாற்றம் செய்திருக்கிறார்கள்.

சிபிராஜின் முன்னாள் காதலி ரம்யா நம்பீசன். சிபிராஜ் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது நண்பர் யோகிபாபு.

ஒரு நாள் சிபிக்கு போன் செய்து என் மகளை கடத்திவிட்டார்கள். நீதான் அவளை காப்பாற்ற வேண்டும் என உதவி கேட்கிறார் ரம்யாநம்பீசன்.

இதனால் இந்தியாவுக்கு வருகிறார் சிபிராஜ்.

அவர் கண்டுபிடிக்க செல்ல இதில் பல பிரச்சினைகள் இருப்பது தெரிய வருகிறது.

அப்படி ஒரு குழந்தையே இல்லை, ரம்யா நம்பீசனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என அவளது கணவர் உட்பட பலரும் சொல்கின்றனர்.

இதனால் குழம்பி நிற்கிறார் சிபி.

ஆனால் தன்னை நினைவில் வைத்துக் கொள்ளும் அவளுக்கு நிச்சயம் குழந்தையும் நினைவில் இருக்கும் என தேடுதல் வேட்டையில் களம் இறங்குகிறார்.

அதன்பின் என்ன ஆனது? குழந்தை உண்மையில் இருந்ததா? மற்றவர்கள் அதை மறைக்க காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.

sathya movie still

கேரக்டர்கள்…

நாய்கள் ஜாக்கிரதையில் நாய், ஜாக்சன் துரையில் பேய்யை நம்பிய சிபிராஜ் இதில் கதையை நம்பி இறங்கியிருக்கிறார். இந்த சத்யா மூலம் சிபிராஜ் சிக்ஸரும் அடித்துள்ளார்.

கதைக்கு எது தேவையோ? அதை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் ரம்யா போன்ற ஒரு அழகான நாயகி இருந்தும் இவருக்கு ரொமான்ஸ்தான் வரமறுக்கிறது.

ரம்யா மற்றும் வரலட்சுமி இரு நாயகிகள். ரம்யா அழகு என்றால் வரலட்சுமி திமிர் அழகு. க்ளைமாக்ஸ் காட்சியில் வரலட்சுமி ஸ்கோர் செய்கிறார்.

இதில் காமெடி நாயகன் சதீஷ் சீரியஸ் நாயகனாக மாறியிருக்கிறார்.

காமெடியும் மிரட்டலும் கலந்த போலீஸ் ஆனந்த்ராஜ்.

யோகிபாபு சில காட்சிகளில் வந்தாலும் நம்மை நிச்சயம் சிரிக்க வைக்கிறார்.

பேபி ரியா அழகு குட்டி. ஆனால் இவர் காணாமல் போனபிறகு பேச்சுக்கு ஒரு வார்த்தை கூட அம்மாவை (ரம்யா) கூப்பிடவில்லையே அது ஏன்..?

sathya varalaxmi and team

தொழில்நுட்ப கலைஞர்கள்..

யவ்வனா’ பாடல் ரசிக்க வைக்கிறது. சைமன் கிங் அவர்களின் பின்னணி இசை பெரிதாக பேசப்படும். இதுபோன்ற த்ரில்லர் படங்களுக்கு இசைதான் பலம். அதை சரியாக செய்திருக்கிறார்.

அதுபோல் அருள்மணியின் ஒளிப்பதிவில் ஐடி கம்பெனி, குழந்தை கடத்தல், போலீஸ் என ரசிக்கும்படி காட்சிகளை கொடுத்திருக்கிறார்.

தெலுங்கு ரீமேக் என்றாலும் அதில் சில மாற்றம் செய்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தப்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நிறைய ட்விஸ்ட்டுக்கள் இருப்பதால் சொன்னால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்)

ஆனால் கிளைமாக்ஸில் அந்த குழந்தை யாருடையது? அதற்கு ஆனந்த்ராஜ்ம் சிரித்துக் கொண்டே துணை போவது எல்லாம் ரொம்ப ஓவர்.

சத்யா… ரசிக்க தகுந்தவன்

திருட்டுப் பயலே2 விமர்சனம்

திருட்டுப் பயலே2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலாபால், எம்ஸ். பாஸ்கர், பிரதீப் கே விஜயன் (சேட்ஜீ), முத்துராமன் மற்றும் பலர்.
இயக்கம் : சுசி கணேசன்
இசை : வித்யாசாகர்
ஒளிப்பதிவு: பி. செல்லத்துரை
எடிட்டிங்: ராஜா முகம்மது
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு: ஏஜிஎஸ் நிறுவனம்

கதைக்களம்…

பாபி சிம்ஹாவும் அமலாபாலும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள்.

அமலா பால் ஒரு பேஸ்புக் பைத்தியம். போட்டோ போட்டு லைக்ஸ் பெறுவதே இவரது வேலை. இதனால் பல ஆண்களுடன் நட்புடன் பழகி வருகிறார்.

விஐபி.களின் செல்போன் மற்றும் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கும் போலீஸ் வேலை பார்க்கிறார் பாபி சிம்ஹா. பாபி மீது உள்ள நம்பிக்கையால் அவருக்கு ஒரு புதிய ப்ராஜக்ட்டை கொடுக்கிறார் முத்துராமன்.

ஆனால் ஒட்டுக்கேட்டு சில ரகசியங்களை தெரிந்துக் கொண்டு அதிகாரிகளுக்கு தெரியாமல் பல கோடிகளை சுருட்டுகிறார் பாபி.

பேஸ்புக் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் பல பெண்களை தன் வலையில் விழவைத்து வாழ்க்கையை அனுபவிக்கிறார் பிரசன்னா.

ஒருநாள் பாபி மற்றவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்கும்போது தன் மனைவி அமலாபால் பிரசன்னாவுடன் பேசுவது தெரிகிறது.

அதை பிரசன்னாவிடம் கேட்கப் போகும்போது நீ என்ன யோக்கியனா? நீயும் கோடிகளை சுருட்டும் திருட்டுப்பயல்தானே.

நீ என்னை போட்டுக் கொடுத்தால், உன் மனைவி பேச்சை, படங்களை லீக்காகிவிடுவேன் என்கிறார்.

இந்த இரண்டு திருட்டுப்பயலுகளுக்கும் நடக்கும் யுத்தமே படத்தின் க்ளைமாக்ஸ்.

 

DP8QyOnUEAApBRT

கேரக்டர்கள்…

யார் வில்லன்? யார் ஹீரோ என தெரியாத அளவுக்கு பிரசன்னா மற்றும் பாபி சிம்ஹா இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

இதில் ரொமான்ஸ் ஸ்மார்ட், மிரட்டல் என அதிகம் ஸ்கோர் செய்திருக்கிறார் பிரசன்னா. கண் முன்னால் நிகழும் மரணத்தை அசால்ட்டாக பார்த்தபடி பீட்சா சுவைப்பது என ரசிக்க வைக்கிறார்.

தான் ஒரு போலீஸாக இருந்தபோதிலும் எதையும் செய்ய முடியாமல் மனதுக்குள் தவிக்கும் தவிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார் பாபி.

அமலாபால்.. அழகான அருமையான பாலாக பளிச்சிடுகிறார். பிரச்சினையை கணவனிடம் சொல்லமுடியாமல் தவிப்பதும், பேஸ்புக் பொழுதை கழிப்பதும், அதன்பின் வரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் திணறுவதும் என கைத்தட்டல் பெறுகிறார்.

கிளாமர், ஹோம்லி என இரண்டிலும் அசத்துகிறார் அமலாபால். வெல்கம் பேக்.

எம்ஸ். பாஸ்கர், பிரதீப் கே விஜயன் (சேட்ஜீ), முத்துராமன் ஆகியோர் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
இவர்களுடன் சுசி கணேசனும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.

ஆனால் அவரது காட்சிகளை இன்னும் மெருக்கேற்றியிருக்கலாம்.

DP9CFpOVAAEl8Y2

 

தொழில்நுட்ப கலைஞர்கள்..

ஒரு நேரத்தில் அருமையான பாடல்களை தந்தவர் வித்யாசாகர். இதில் பாடல்கள் சுவாரஸ்யம் இல்லை. ஸ்மைலி பாடல் கேட்கலாம்.
பின்னணி இசை கைகொடுக்கிறது.

செல்லத்துரையின் ஒளிப்பதிவில் காட்சிகள் கச்சிதம்.
அமலாபாலை ரசித்து படம் பிடித்திருப்பார் போல.
அதுபோல் கலை இயக்குனரின் கைவண்ணத்தில் அமலா வீடு, அந்த பாரீன் கெஸ்ட் ஹவுஸ் என அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

இயக்கம் பற்றிய அலசல்…
இந்த ஊழல் நிறைந்த தொழில்நுட்ப நாட்டில் எவனும் தவறை தட்டிக் கேட்க தகுதியற்றவன் ஆகிறான். எனவே நாம்தான் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.
அதுவும் கேமரா, மொபைல் மற்றும் சோஷியல் நெட்வொர்க் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி ஜெயிக்கிறார் சுசி கணேசன்.
திருட்டுப்பயலே.. இணைய திருடன்.

அண்ணாதுரை விமர்சனம்

அண்ணாதுரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்ஆண்டனி, டயானா சம்பிகா, ராதாரவி, காளிவெங்கட், நளினிகாந்த், செந்தில்குமரன், மஹிமா மற்றும் பலர்.
இயக்கம் : சீனிவாசன்
இசை : விஜய்ஆண்டனி
ஒளிப்பதிவு: தில்ராஜ்
எடிட்டிங்: விஜய்ஆண்டனி
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்த்ரா
தயாரிப்பு: ராதிகா சரத்குமார் மற்றும் விஜய்ஆண்டனி

annadurai movie set

கதைக்களம்…

அண்ணாதுரை மற்றும் தம்பிதுரை இருவரும் இரட்டை குழந்தைகள். அண்ணாதுரை அப்பாவுடன் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

தம்பி தம்பிதுரை ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

ஒரு நாள் தற்செயலாக போதை பழக்கத்தால் ஒரு கொலைக்கு காரணமாகி விடுகிறார் அண்ணாதுரை.

அதன்பின் அந்த குடும்பமே பல பிரச்சினைகளை சந்திக்கிறது. தம்பிக்கு வேலை போகிறது. ரவுடி ஒருவன் மிரட்டலால் ஜவுளிக் கடையும் போகிறது.

இதனால் தம்பியின் வாழ்க்கையும் பறிபோகிறது. அதன்பின் அண்ணாதுரை என்ன செய்தார்? குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

annadurai stills

கேரக்டர்கள்…

படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர், நடிகர் என நான்கு தூண்களாய் படத்தை தாங்கி நிற்கிறார் விஜய்ஆண்டனி.

முதலில் நடிப்பை பற்றி சொல்லிவிடுகிறோம். ஆக்சன் என்றால் விஜய் ஆண்டனிக்கு அல்வா சாப்பிடுவது போல. வெளுத்து கட்டியிருக்கிறார்.

ஆனால் இருவேடத்தை ஏற்றிருப்பதால் இன்னும் அதிக வித்தியாசம் காட்டியிருக்கலாம். தாடியை தவிர வேறு வித்தியாசங்கள் இல்லை.

ஹீரோயின் சாம்பிகா நல்லா Chubbya வருகிறார். டயானா சாம்பிகா உடன் ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக உள்ளது. சாம்பிகாவும் காதல் மொழியை கண்களால் பேசி வசீகரிக்கிறார்.

மற்ற இரண்டு நாயகிகள் இருந்தாலும் அது படத்தின் நீளத்தை அதிகரிக்கிறது.

காளிவெங்கட் இதில் குணச்சித்திர நடிகராக ஜொலிக்கிறார். ஆனால் இவர் சைட் அடிக்கும் பெண் நண்பனின் காதலி என காட்சி நீளுகிறது.

நாயகியின் அப்பாவாக வரும் செந்தில்குமரன் சினிமாவுக்கு கிடைத்த புதிய குணசித்திர நடிகர்.

நாயகனின் அப்பா நளினி காந்த், அம்மா, அரசியல் தலைவர் ராதாரவி, ஜவுளிக்கடையை அபகரிக்கும் வில்லன் சேரன்ராஜ், மொட்டை வில்லன் ஆகியோரும் கவனம் ஈர்க்கின்றனர்.
annadurai stills 1

தொழில்நுட்ப கலைஞர்கள்..

வழக்கம்போல இசையமைப்பாளராக ஸ்கோர் செய்து விடுகிறார் விஜய் ஆண்டனி.

அண்ணாதுரையின் புகழ் பாடும் ‘தங்கமா வைரமா…’, பாடலும் ‘இஎம்ஐய போல வந்து என்ன செய்யுற..’ பாடல்களும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. விஷுவல் எஃபெக்ட்ஸும் நன்றாக உள்ளது.

நிறைவான ஒளிப்பதிவை கொடுத்து படத்துடன் ஒன்றாக வைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர் தில் ராஜ். ஆனால் எடிட்டர் விஜய் ஆண்டனி இன்னும் காட்சிகளை கட் செய்திருக்கலாம். இரண்டாம் பாதி, அந்த பெண் ஈஸ்வரி கேரக்டர் எதற்கு எனத் தெரியவில்லை?.

annadurai team live

இயக்கம் பற்றிய அலசல்…

இரட்டையர்கள், ஆள் மாறாட்டம் என்ற கலவையை கொஞ்சம் புதுப்பித்து கொடுத்திருக்கிறார்.

ஆனால் சில காட்சிகள் புதிராக உள்ளது. ஒரு காட்சியில் அண்ணன் கேரக்டர் தம்பியைப் பற்றி சொல்லும்போது ’அவன் சின்னப் பையண்டா. இன்னும் அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலை’ என்கிறார். ட்வின்ஸ் பிரதர்ஸ்தானே அதற்கு ஏன் இந்த டயலாக்?

அண்ணாதுரை..  ரசிக்கலாம்

வீரையன் விமர்சனம்

வீரையன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : இனிகோ பிரபாகர், ஷைனி, ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா மற்றும் பலர்.
சை: S.N.அருணகிரி,

ஒளிப்பதிவு: P.V.முருகேஷா

படத்தொகுப்பு: ராஜா முகமது,

பாடல்கள்: யுகபாரதி,

நடனம்: சரவண ராஜா,

சண்டைக்காட்சி: ராக் பிரபு

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்: S. பரீத்
பி.ஆர்.ஓ. : குமரேசன்

கதைக்களம்…

தன் மகனை நன்றாக படிக்க வைத்து இந்த ஜில்லாவிலே முதல் மாணவனாக வர வைப்பேன் என தன் தம்பிகளிடம் சவால் விடுகிறார் ஆடுகளம் நரேன்.
இது ஒருபுறமிருக்க, கவுன்சிலர் வேல ராமமூர்த்தியின் மகளை அவர் வீட்டில் டிரைவராக வேலைப் பார்க்கும் ஒருவன் காதலிக்கிறார்.
இவர்கள் இல்லாமல் வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வருகிறார் இனிகோ பிரபாகர் மற்றும் அவரது 2 நண்பர்கள் (ஒருவர் திருநங்கை).
இனிகோவுக்கும் அந்த டிரைவருக்கும் சில பிரச்சினைகள் எழ, ஆடுகளம் நரேனின் மகன் அதில் சிக்கிக் கொள்கிறார்.
இதனால் அவனது படிப்பு பிரச்சினை எழுகிறது.
எனவே இனிகோ அவனது படிப்பை தொடர வைக்க நினைக்கிறார். அதன் பின் நடந்தது என்ன? நரேனின் ஆசையை அவரது மகன் நிறைவேற்றினாரா? அந்த காதல் ஜோடி என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

DPdhvwcVwAABLqw

கேரக்டர்கள்…

வேலையில்லாமல் தனது நண்பர்களுடன் சேட்டை செய்யும் இளைஞனாக இனிகோ பிரபாகர் வருகிறார். கிராமத்து இளைஞனாக பளிச்சிடுகிறார்.
ஆனால் தொடர்ந்து பல படங்களில் இதே கேரக்டர்களில் வருவது சலிப்பை தட்டுகிறது. இனிகோ ரூட்டை மாத்துனா ரசிகர்களுக்கு இனிக்கும்.
நாயகியாக நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார் ஷைனி. ஆனால் குடிகாரன் சொன்ன பேச்சை கேட்டு காதல் வருவது எல்லாம் ரொம்ப ஓவர்.
வேலராமமூர்த்தி மகளாக வருபவர் அழகாக இருக்கிறார். ஆனால் பாதியில் அவரை சாகடித்து ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்.
ஆடுகளம் நரேன் தன் முதிர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். பிள்ளைகளை படிக்க வைக்க ஏழை அப்பாக்கள் படும் பாட்டை அருமையாக கொடுத்துள்ளார்.
இவர்களுடன் வேல ராமமூர்த்தி, தென்னவன் துரைசாமி, சஞ்சரி விஜய் உள்ளிட்டவர்களும், நரேனின் மகனாக வரும் அந்த சிறுவன், ‘கயல்’ வின்சென்ட், திருநங்கை ப்ரீத்திகா ஆகியோரும் நல்ல தேர்வு.
DOrFvmrUEAA5_lt

தொழில்நுட்ப கலைஞர்கள்…
எஸ்.என்.அருணகிரியின் பின்னணி இசை ஓகே. பாடல்கள் படத்திற்கு பலவீனம்.
பி.வி.முருகேசின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
பல கோணங்களில் கதை சொன்ன இயக்குனர், எதையும் முழுமையாக சொல்லாமல் விட்டுவிட்டார். மேலும் படத்தின் நீளத்தை குறைத்து ட்விஸ்ட் வைத்து சொல்லியிருக்கலாம்.
படத்தின் ஆரம்பத்தில் கோழி பிடிக்கும் காட்சி, அதனை அடுத்து வரும் பாடல் இது எல்லாம் தேவையா? என கேட்க தோன்றுகிறது.

வீரையன்… வீராப்பு குறைவு

இந்திரஜித் விமர்சனம்

இந்திரஜித் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கௌதம் கார்த்திக், சோனாரிக்கா, அர்ஷிதா, சச்சின் கட்கர், சுதன்சு பாண்டே, எம்எஸ். பாஸ்கர் மற்றும் பலர்.
இயக்கம் : கலாபிரபு
இசை : கேபி
ஒளிப்பதிவு: ராசாமதி
எடிட்டிங்: விடி. விஜயன் கணேஷ்பாபு
பி.ஆர்.ஓ. : டைமண்ட்பாபு
தயாரிப்பு: கலைப்புலி எஸ் தாணு

indrajith-gautham-karthik-poster

கதைக்களம்…

தமிழ் சினிமாவில் அட்வென்ஜர்ஸ் கதைகளை காண்பது அரிது.

ஹாலிவுட் சினிமாவில் புதையலை தேடும் இண்டியானா ஜோன்ஸ் கதைகள் உள்ளன. அந்த வகையான கதைதான் இது.

சில ஆயிரம் வருடங்களுக்கு முன் சூரியனில் இருந்து விழும் ஒரு கல் பூமியில் விழுந்து வெடித்து சிதறுகிறது.

அந்த அரிய வகை கல்லால் வறண்ட நிலம் என்றால் கூட செழிப்பாகிறது.

மேலும் அந்த கல்லுக்கு உரிய அற்புத சக்தி என்னவென்றால், அந்த கல்லை பயன்படுத்தினால் நோய் நோடியில்லாமல் 400 வருடங்கள் கூட மனிதனால் வாழமுடியுமாம்.

சித்தர்கள் அந்த கல்லை எங்கோ புதைத்து வைக்க, நாளடைவில் அந்த குறிப்பு மறைந்து போகிறது.

அந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் கௌதம், அவரது ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அந்த கல்லைத் தேடி அலைக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அந்தப் பொருளைத் தேடுகிறார்.

இறுதியில் அந்த அற்புத கல்லை யார் அடைந்தனர்? அந்த கல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? என பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸ் விடை சொல்லும்.

indrajith
கேரக்டர்கள்…

சாக்லேட் பாய் போன்று இருக்கும் கவுதம் இதில் ஆக்சன் செய்துள்ளார். ஆனாலும் அவரது முக பாவனைகளும் லிப்ஸிட்டிக் போட்ட உதடுகளும் ஆக்சனை பிரதிபலிக்கவில்லை.

இவருக்கு சோனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி என இரண்டு ஜோடிகள். இருந்தும் படத்தில் ரொமான்ஸ் இல்லை.

சோனாரிகா படத்தின் ஆரம்ப காட்சிகளிலும், அஷ்ரிதா இரண்டாம் பாதியிலும் வருகின்றனர்.

இவர்களுடன் சச்சின் கட்கர், சுதன்சு பாண்டே ஆகியோரும் உண்டு. ஆனால் இவர்களுக்கான கேரக்டர்களில் வலுவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மலையும் அருவிகளும் சார்ந்த காட்சிகளை பார்த்தால், வாழ்வில் ஒருமுறையாவது அங்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ராசாமதி.

கே.பி. இசையில் பாடல்களை விட பின்னணி இசை பேசப்படும்.
1511503306_gautham-karthiks-indrajith

இயக்கம் பற்றிய அலசல்…

ஆக்சன் அட்வென்சர் கதைகள் இளைஞர்களுக்கு பிடிக்கும். ஆனால் இதில் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் எம்ஸ் பாஸ்கர், நாய்குட்டி என காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் கலாபிரபு.

புதையல் தேடும் கதையை பேன்டஸி கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.

சென்னையில் இருந்து வடநாட்டுக்கு செல்லும்போது வெறுமனே டிரெய்னை காட்டாமல் அதில் கிராபிக்ஸ் கலந்து ரூட்டு போட்டிருப்பது சூப்பர்.

இண்டர்வெல் ப்ளாக்கில் ப்ளைட் வெடித்து அதிலிருந்து வரும் எழுத்துக்கள் நல்ல கற்பனை.

மலை, அருவி, காடு என அனைத்தையும் கடந்து கஷ்டப்பட்டு குகை உள்ளே செல்லும் கவுதம் வெளியே வரும்போதும் படு ப்ரெஸ்ஸாகவே இருக்கிறார். (ரங்கூன் படத்தில் வந்த கவுதம் போல மேக்அப் போட்டு இருக்கலாமே)

இவ்வளவு இருந்தும் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பும், ட்விஸ்டுகளும் வைத்திருந்தால் இந்திரஜித் இன்னும் ஈர்த்திருப்பான்.

இந்திரஜித்.. குழந்தைகளை ஈர்ப்பான்

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கார்த்தி, ரகுல்ப்ரித்தி சிங், போஸ் வெங்கட், சத்யன், மனோபாலா, வர்கீஸ் மேத்யூ, ரோகித் பதாக், சுரேந்தர் தகூர், நரசீனிவாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : வினோத்
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்
எடிட்டிங்: சிவநந்தீஸ்வரன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: எஸ்ஆர்.பிரபு (ட்ரீம் வாரியர்ஸ்)

கதைக்களம்…

தீரன் திருமாறன் என்ற கார்த்திக் ஒரு டி.எஸ்.பி. போலீஸ் டிரெய்னிங் சமயத்திலேயே அவரது பேட்சிசில் முதல் மாணவனாக வந்தவர்.

தன் எதிர் வீட்டில் இருக்கும் பிரியா (ரகுல் பிரித்தீ சிங்)வை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்.

சிறுவயதிலேயே தன் போலீஸ் தந்தையை இழந்தவர் தீரன். தன் தந்தையை போல் தானும் உத்யோகத்தில் இருக்கும்போதே தன் உயிரே போனாலும் பரவாயில்லை என நேர்மையாக பணியாற்றி வருகிறார்.

இதனால் அடிக்கடி உயர் அதிகாரிகளால் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.

ஒரு சூழ்நிலையில் ஊர் எல்லையில் ஒதுக்கு புறமாக இருக்கும் வீடுகளை குறிவைத்து அந்த குடும்பத்தினரை கொடூரமாக கொன்று ஒரு கும்பல் கொள்ளையடிக்கின்றனர்.

இது அடிக்கடி தமிழகத்தில் தொடர்கிறது. ஆனால் ஒரு தடயமும் இல்லாமல் அந்த கும்பல் கொள்ளையடிப்பதால் போலீஸ் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.

ஆனால் அங்குள்ள பான்பராக், நாட்டு வெடிக்குண்டு மற்றும் இதர பொருட்களால் அவர்கள் வடநாட்டை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது.

இதனையடுத்து வட இந்தியாவுக்கு தன் அணியுடன் செல்கிறார் தீரன். அதன்பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.

வட இந்தியாவுக்கு சென்ற அவர் அந்த கும்பலை பிடித்தாரா? அவர்கள் யார்? எப்படி கண்டுபிடித்தார்? என்பதே இந்த தீரனின் தீவிர வேட்டை.

theeran stills

கேரக்டர்கள்…

இதில் கார்த்திக் நடித்திருக்கிறார் என்பதை தீரனாக உருமாறியிருக்கிறார் என்றே சொல்லலாம். காஸ்ட்யூம், கடமை, கம்பீரம், கட்டுடல் என அனைத்திலும் கவனம் செலுத்தியிருக்கிறார் கார்த்தி.

பருத்தி வீரன் கார்த்தி என்ற பெயர் இனி தீரன் கார்த்தி என்று மாறினாலும் ஆச்சரியமில்லை.

ராஜஸ்தான் சென்று, அங்கு கஷ்டப்படும் போலீஸ் டீம் என தன் முழு உழைப்பை கொடுத்திருக்கிறார். காக்கியில் மட்டுமல்ல காதலிலும் அடி பின்னியிருக்கிறார். ரகுல்பிரித்தியிடம் செமயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இதுநாள் வரை ச்சும்மா ஹீரோயின் என்று வந்த ரகுல் பிரித்தி சிங் இதில் கதைக்கு ஏற்ற நாயகியாக வாழ்ந்திருக்கிறார்.

இவரது கன்னத்தில் கார்த்தி விரல் வைத்து சாப்பாட்டு சுவையை சொல்லும் போது அவர் காட்டும் முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. இனி இவருக்கான வாய்ப்புகள் வந்து குவியும்.

மனோபாலா இதில் சீரியஸான அப்பாவாக வந்து நன்றாக நடித்திருக்கிறார்.

சத்யன் ஒரு சில காட்சிகள் மட்டுமே வருகிறார். இந்த சீரியஸான சப்ஜெட்டுக்கு காமெடி தேவையில்லை என்பதை சரியாக செய்திருக்கிறார் இயக்குனர் வினோத்.

போஸ்வெங்கட் உள்ளிட்ட அந்த காவலர்கள் அனைவரும் கம்பீரம். தீரன் போன்ற போலீஸை பார்த்தால் நம்மை அறியாமல் நாமே சல்யூட் அடிப்போம்.

நிஜத்தில் கணவன் – மனைவியான போஸ் வெங்கட் – சோனியா இருவரும், படத்திலும் கணவன் – மனைவியாக நடித்துள்ளனர்.

வட இந்திய வில்லன்களாக வரும் அனைவரும் செம டெரர்ர் லுக். வர்கீஸ் மேத்யூ, ரோகித் பதாக், சுரேந்தர் தகூர், நரசீனிவாஸ் ஆகியோர் கொள்ளையர்களாகவே வந்து நம் மனதையும் நடிப்பால் கொள்ளையடிக்கிறார்கள்.

அவர்கள் பகுதியில் கார்த்தி சென்று மாட்டிக் கொள்ளும் அந்த காட்சி கைத்தட்டலை அள்ளும்.

Theeran597 new

தொழில்நுட்ப கலைஞர்கள்…

செவத்த புள்ள பாடல் ரொமான்டிக் என்றால் தீரன் டா பாடல் அதிரடி. ஜிப்ரானின் இசையில் பின்னணி இசை பெரிதாக பேசப்படும்.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், வடஇந்தியாவின் அந்த அழுக்கான புழுதிக்காட்டையும் அப்படியே பதிவு செய்துள்ளது.

வறண்டு போன வட இந்தியாவை ஒரு சினிமா டிக்கெட்டில் பார்த்த முழு திருப்தி கிடைக்கும் அளவுக்கு கொடுத்திருக்கிறார்.

படத்தில் கத்திரிக்கு வேலையே இல்லை. எடிட்டர் கச்சிதம்.

theeran stills 1

இயக்கம் பற்றிய அலசல்…

வினோத்.. கார்த்தி வினோத் வெற்றிக்கூட்டணி அமைத்துள்ளனர். இனியும் இந்த கூட்டணி தொடர வாழ்த்துக்கள்.

வெறுமனே போலீஸ் ஸ்டோரி என்று சொல்லாமல் அதற்கு சில 100 ஆண்டுகள் பின்னோக்கி சென்று அந்த கொள்ளையடிக்கும் கும்பல் யார்? அவர்களின் பலம் என்ன? என்பதை ஆராய்ந்து ஒரு டாக்டரேட் பட்டம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் டைரக்டர்.

இண்டர்வெல் மற்றும் க்ளைமாக்ஸ் சீன் தமிழ் சினிமா பார்க்காத ஒன்று.

நேர்மையாக வாழும் போலீஸ் அதிகாரிகளின் கடைசி கால நிலைமை என்னவாக இருக்கும்? என்பதையும் யதார்த்தமாக சொல்லி மனதை கலங்கவைக்கிறார் வினோத்.

தீரன் காக்கி சட்டைக்காரர்கள் இனி காலரை நேர்மையாக தூக்கிவிட்டு கொள்ளலாம்

More Articles
Follows