தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : விஜய்சேதுபதி, லெட்சுமி மேனன், கிஷோர், சதீஷ், கபீர் துகான் சிங், ஹரிஷ் உத்தமன், கேஎஸ் ரவிக்குமார், நாசர், ஸ்ரீரஞசனி மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்,
படத்தொகுப்பு : பிரவீன் கேஎல்
இயக்கம் : ரத்தினசிவா
பிஆர்ஓ : கோபிநாதன்
தயாரிப்பாளர் : காமன்மேன் ஆர்ட்ஸ் கணேஷ்
கதைக்களம்…
உண்மையான காதலர்களை எந்த எதிர்ப்பு வந்தாலும், சேர்த்து வைக்கிறார் ரத்தினத்தின் மகன் சிவா. (இப்போ டைரக்டர் பேரு வந்துடுச்சா..?)
ரத்தினம் (கே.எஸ்.ரவிக்குமாரின்) மகன்தான் சிவா (விஜய்சேதுபதி)
ஒரு சூழ்நிலையில், வில்லன் ஹரீஷ் உத்தமன் கட்டிக்க போகும், பெண்னை கடத்தி விடுகிறார். இதனால் இருவருக்கும் பிரச்சினை எழுகிறது.
சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது, தான் பிரச்சினை செய்யாமல் இருக்க, மினிஸ்டர் பெண் லட்சுமி மேனனை கடத்த சொல்கிறார் ஹரீஷ் உத்தமன்.
எனவே இவரும் அவரை கடத்த, என்ன என்ன பிரச்சினைகள் நடக்கிறது. என்பதே இந்த றெக்க.
கதாபாத்திரங்கள்…
இதுவரை மற்ற ஹீரோக்களை தான் நாம் இப்படி பார்த்திருக்கிறோம். முதன்முறையாக விஜய்சேதுபதியை அனல் பறக்க காட்டியிருக்கிறார் டைரக்டர்.
லட்சுமி மேனன் இடைவேளை சமயத்திலே வருகிறார். ஆடை வடிவைமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மினிஸ்டர் மகள் என்றாலும் அதிலும் பெரிய வசதி தெரியவில்லை.
ஓவர் டைட்டாக ஆடைகள் அணிந்து பெரிய பெண் போல் வருகிறார். உடம்பை ஸ்லிம் ஆக்க முயற்சி செய்தால் நல்லது.
கிஷோர் மற்றும் விஜய்சேதுபதி அக்கா நல்ல தேர்வு. ஆனாலும் அவர் அக்கா போல் முதிர்ச்சியில்லை. அக்கா வேடத்துக்கு ஆள் கிடைக்கலையா?
சதீஷ் சீரியஸாக நடிக்க முயற்சித்து காமெடியை மிஸ் செய்துவிட்டார்.
கே.எஸ்.ரவிக்குமார் ஒரு நல்ல ப்ரெண்ட்லி அப்பாக இருந்துக் கொண்டு, சைட் அடிப்பதும், பின்னர் மகனை திட்டுவதும் என ரசிக்க வைக்கிறார்.
வில்லன் ஹரீஷ் உத்தமன், கபீர் துகான் சிங், இருவரும் பொருத்தமான தேர்வு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இன்றைய தமிழ் சினிமாவின் மெலோடி கிங் இமான்தான். கண்ண காட்டு போதும்.. கண்ணம்மா ஆகிய பாடல்களே போதும்.
ஸ்ரேயா கோஷலின் குரல் பாடல் காட்சியை விட அழகாகவே இருக்கிறது.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மதுரை, கும்பகோணம் காட்சிகளில் பளிச்சிடுகிறது.
இயக்குனர் பற்றி….
கமர்ஷியல் மசாலா என்றாலும், ஹரி படத்தில் உள்ள போல குடும்ப காட்சிகளையும் விட்டு வைக்கவில்லை.
மேலும் ரன் படத்தில் உள்ள தேரோடும் வீதி பாடலை நினைவுப்படுத்துகிறது விர்..விர்ரு… பாடல்.
நீர் தேங்கி இருப்பதால் பள்ளிக் குழந்தைகள் 5 கிலோ மீட்டர் சுற்றுவதாக பேப்பரில் செய்தி வருகிறது. ஓகே. வெறும் கால் வரை இருக்கும் தண்ணீருக்காக அவர்கள் அத்தனை கிமீ. சுற்றுகிறார்கள்?
அதில் கரண்ட் வயர் இருந்தாலும், அட்லீஸ்ட் பள்ளி செல்லும் போதாவது கரண்டை கட் செய்து இருக்கலாமே. சேதுபதி அவ்ளோ அசல்ட் வருகிறாரே?
விஜய்சேதுபதியை வைத்து ஒரு கமர்ஷியல் மாஸ் கொடுத்து தனக்கும் வெற்றியை தக்கவைத்து கொண்டிருக்கிறார்.
றெக்க கட்டி பறக்குது…