தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் கிஷோர் (கறாரான வனத்துறை அதிகாரியாக..) நாயகியாக சப்தமி கவுடா நடித்துள்ளார்.
KGF படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .
நில அரசியல்.. அரசு நிர்வாகம்.. பழங்குடியின மக்கள் என முக்கோண கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. பண்ணையாருக்கும் பழங்குடியின மக்களுக்குமான நிலப் பிரச்சினையை தோலுரிக்கும் படம்.
ரிஷப் ஷெட்டி நடித்து அவரது இயக்கத்தில் உருவான ‘காந்தாரா’ படம் கடந்த வாரம் வெளியானது. இன்று அக்டோபர் 15ல் தமிழில் டப்பிங் வெர்சன் வெளியாகி உள்ளது.
அண்மையில் வெளியாகி கன்னடர்களை மட்டுமல்லாமல் இந்திய மக்களை கவர்ந்த படங்கள் ‘கேஜி எஃப்’ மற்றும் ‘சார்லி 777’.. அந்த வரிசையில் இந்த ‘காந்தாரா’ படமும் நிச்சயம் இணைந்து விட்டது.
கதைக்களம்…
1880களில் பெரும் செல்வாக்கு கொண்ட அரசர் நிம்மதி தேடி அலைகிறார். அப்போது பழங்குடியின மக்கள் வழிபடும் கடவுளை தனக்கு தருமாறு கேட்கிறார்.
காரணம் அந்த கடவுளை பார்த்த அடுத்த கனமே அவருக்கு முழு சந்தோஷம் நிம்மதி கிடைக்கிறது. கடவுளை கொடுத்தால் அதற்கு பதிலாக ‘தன் நிலங்களை உங்களுக்கு தருகிறேன்” என்கிறார்.
சில 100 ஆண்டுகளுக்குப் பிறகு அரசர் பரம்பரையில் வந்தவர்கள் தங்களுக்கு நிலத்தை தருமாறு பழங்குடியின மக்களிடம் சண்டை போடுகின்றனர். இந்த மோதல் தொடர்பான கதைக்களமே இந்த படம்.
கேரக்டர்கள்….
‘ஆடுகளம்’ படத்தில் அசத்திய கிஷோர் இதில் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக நம்மை கவர்ந்திருக்கிறார். அபாரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
அரசரின் வாரிசாக அச்யுத் குமார் செம அசத்தல்.. க்ளைமாக்சில் இவரின் வில்லத்தனம் வேற லெவல் (ரஜினி முருகன் படத்தில் கீர்த்தியின் அப்பாவாக வருவாரே அவரே தான்).
ரிஷப் செட்டியின் நண்பர்களாக வரும் இருவரும் கலகலப்புக்கு உதவியுள்ளனர். அவர்களின் சாரல் மழை போன்ற காமெடிகள் நம்மை கண்டிப்பாக சிரிக்க வைக்கும்.
நாயகனின் அம்மாவாக வருபவரும் கண்டிப்பாக பொறுப்பான அம்மாவாக வாழ்ந்திருக்கிறார்.
நாயகி சப்தமி கவுடாவின் நடிப்பை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். நம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு கூட இது போன்ற கேரக்டர்கள் கிடைப்பது இல்லை. அதே சமயத்தில் சில காட்சிகளில் சூடு ஏற்றவும் தவறவில்லை.
நாயகன் & டைரக்டர்..
நாயகனே படத்தை இயக்கி நடித்து இருப்பதால் அவரால் தன் கேரக்டரை முழுவதுமாக உணர்ந்து நமக்கு காந்தாரா என்ற காந்த விருந்தை வழங்கியிருக்கிறார். நம்மை ஒவ்வொரு காட்சியிலும் காந்தம் போல இழுத்து கட்டிப்போட்டு விட்டார்.
முக்கியமாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இதுபோன்ற ஒரு அசுரத்தன நடிப்பை எவரிடமும் பார்க்க இயலாது.
சில வருடங்களுக்கு முன்பு வெளியான புலி முருகன் & புஷ்பா போன்ற காடுகளே இதன் களம் என்றாலும் ஒரு வித்தியாசமான உணர்வுபூர்வமான விருந்து அளித்திருக்கிறார்.
படத்தில் நாயகன் முழுவதும் லுங்கி தான் கட்டி நடித்திருக்கிறார். ஆனால் நம் தமிழ் ஹீரோக்கள் லுங்கி கட்டி நடிப்பதையே விரும்புவதில்லை. ஏதோ ஓரிரு காட்சிகள் மட்டுமே லுங்கியுடன் வருவார்கள்.
ஆனால் படம் முழுவதும் ஒரு மாசான அதிரடியான அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார் ரிஷப்.
சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. ஒரு சண்டைக் காட்சியில் மழை பெய்து கொண்டிருக்கும் போது நெருப்பு வைத்துக் கொண்டு சண்டை போடுவது வித்தியாசமான கற்பனை. மழையும் நெருப்பும் ஒத்து வராத வெவ்வேறு பொருட்களாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு அந்த சண்டை வடிவமைத்து இருப்பது சூப்பரோ சூப்பர்.
டெக்னீஷியன்கள்…
ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், படத் தொகுப்பாளர் பிரகாஷ், பிரதீக் ஷெட்டி, அரங்க அமைப்பாளர் தரணி கங்கே புத்ரா, ஆடை வடிவமைப்பாளர் பிரகதி ரிஷாப் ஷெட்டி ஆகிய அனைவருமே 100% உழைப்பை கொடுத்துள்ளனர்.
100 வருடங்களுக்கு முன்பு.. 50 வருடங்களுக்கு முன்பு… 30 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கையை என அனைத்தையும் அற்புதமாக காட்டியுள்ளனர்.
ஆக இந்த காந்தாரா… கன்னட சினிமாவினர் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்..
Kantara movie review and rating in tamil