DD RETURNS விமர்சனம் 4.25/5.; SS RETURNS (SMILE SANTHANAM)

DD RETURNS விமர்சனம் 4.25/5.; SS RETURNS (SMILE SANTHANAM)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேய் படங்கள் என்றாலே ஒரு கதை தொடங்கும்.. அதில் பேய் வந்து பழி வாங்கும்.. பின்னர் அந்த பேய்க்கு ஒரு பிளாஷ் பேக் காட்சி இருக்கும்.. ஆனால் இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியுடன் தான் படம் தொடங்குகிறது.

கதைக்களம்…

1965 ஆண்டில் பாண்டிச்சேரியில் ஒரு சூதாட்ட குடும்பம் மக்களை வரவழைத்து ஒரு கேம் விளையாடுகிறது. அந்த விளையாட்டில் வென்றால் லட்சங்களில் சம்பாதிக்கலாம். இல்லையென்றால் அந்த மனிதர்களை கொன்று விடுவது அந்த குடும்பத்தின் வாடிக்கை.

இதையறிந்த அந்த மக்கள் ஒரு கட்டத்தில் அந்த குடும்பத்தை தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர்.

தற்போது 2023 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது…

இரண்டு திருட்டு கும்பல் இருக்கிறது.. ஒரு கும்பலிடம் இருந்து மற்றொரு கும்பல் பணம் பறிக்கிறது. அந்த பணம் தவறுதலாக சந்தானத்திடம் வந்து சேர்கிறது.

தனது காதலியின் கடனை அடைக்க சந்தானம் அந்த பணத்தை கொடுக்க காதலி சுரபி அந்த பணத்தை ஒரு கும்பலிடம் கொடுக்கிறார். அப்போதுதான் அந்த கும்பலின் பணம் தான் அது என்பது அவர்களுக்கே தெரிய வருகிறது.

இதனையடுத்து காதலி சுரபியை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகின்றனர். தன்னுடைய காதலை காப்பாற்ற மீதி பணத்தை தேடி செல்கிறார் சந்தானம்.

சந்தானத்தின் நண்பர்களோ அதை ஒரு பங்களாவில் ஒளித்து வைப்பதை அறிந்து அங்கு செல்கின்றனர்.

அதன் பின்னர்தான் அது பேய் பங்களா என அவர்களுக்கு தெரிய வருகிறது.

பேய் பங்களாவிலிருந்து பணத்தை எடுத்தார்களா.? அந்த பேய்கள் என்ன செய்தது.? காதலின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சமீபத்தில் வந்த குலுகுலு உள்ளிட்ட படங்கள் சந்தானத்திற்கு படுதோல்வியை கொடுத்தன. எனவே மீண்டும் தன்னுடைய பழைய காமெடி டிராக்க்கு வந்து சிக்ஸர் அடித்துள்ளார் சந்தானம்.

தனது ஒன்லைன் காமெடி பன்ச்களை போகிற போக்கில் தூவி விட்டு நம்மை சிரிக்க சிரிக்க கதற விட்டுள்ளார்.

ஒரு நிமிட சிரிப்பு முடிவதற்கு அடுத்த நிமிட சிரிப்பு வந்து விடுவதால் நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியாமல் போகிறது.

நாயகி சுரபிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளார்.

எப்போதுமே படு மிரட்டலாக வரும் பெப்சி விஜயன் இதில் டெட் டேய்..டேய்.. டேட் என சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.

படம் முழுவதும் காமெடியை அள்ளி தெறிக்க விட்டிருந்தாலும் ஒரு சில காமெடிகள் உச்சத்தை தொடுகின்றன.

கட்டிலுக்கு அடியே தெரியும் பேய் கால்கள்… இரண்டு கதவுகளுக்கு மேல் நிற்கும் மொட்ட ராஜேந்திரன் கால்கள்.. ஒரே பங்களாவிற்குள் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல் அவதிப்படும் கும்பல் என அனைத்துமே சிரிப்புக்கு கேரண்டி.

இதில் கூல் சுரேஷ் சந்தானத்துடன் இணைந்துள்ளார்.. பிளாக் ஜட்டி ஒயிட் ஜட்டி காமெடி செய்து நம்மை கலகலப்பூட்டி செல்கிறார்.

‘லொள்ளு சபா’ மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, பெப்சி விஜயன் மகனாக வரும் கிங்ஸ்லி, அவர் அடியாளாக வரும் தீனா, முனீஷ் காந்த் காமெடியில் வெளுத்து வாங்குகிறார்கள்.

அதுபோல பேய்களாக வந்து ரகளை செய்யும் பிரதீப் ராவத், பேபி மானஸ்வி, மசூம் சர்க்கார், ரீட்டா ஆகியோரின் பங்களிப்பு அல்டிமேட்..

எப்போதும் அழகு குட்டி பாப்பாவாக நாம் பார்த்த மானஸ்வி்இதில் கொஞ்சம் குட்டி பேயாக மிரட்டல் செய்திருக்கிறார்.

டெக்னீசியன்கள்….

ஏ.ஆர்.மோகனின் கலை இயக்கம் பாராட்டத்தக்கது. அந்த பேய் பங்களா செட்டுகளை அவர் எப்படி போட்டார்? பேய் விளையாட்டுக்கு தகுந்தார் போல WIN RUN என காட்சி அமைப்புகளை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

ஆர்.ஹரிஹர சுதன் உருவாக்கிய வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் குழந்தைகளை சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும்.

ஒளிப்பதிவு பின்னணி இசை எடிட்டிங் அனைத்து பணிகளும் சிறப்பு.. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சந்தானத்துடன் பணிபுரிந்த தன்னுடைய நண்பர் பிரேம் ஆனந்த் என்பவரை இயக்குனராக்கி அழகு பார்த்து இருக்கிறார் சந்தானம்.

தன் மேல் வைத்த நம்பிக்கையை கொஞ்சம் கூட குறை வைக்காமல் சிக்ஸர் அடித்து சந்தானத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார் பிரேம் ஆனந்த்.

எந்த லாஜிக்கும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக டிடி ரிட்டன்ஸ் படத்தை பார்க்கலாம்.

ஆக.. டிடி ரிட்டர்ன்ஸ்.. சந்தானத்தின் ஸ்மைல் ரிட்டன்ஸ்

DD RETURNS movie review and rating in tamil

LGM எல்ஜிஎம் விமர்சனம் 3/5.; மாமியாருக்கு மார்க் போடும் மருமகள்

LGM எல்ஜிஎம் விமர்சனம் 3/5.; மாமியாருக்கு மார்க் போடும் மருமகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்யாணத்திற்கு முன்பு மாமியாருடன் பழக ஆசைப்படும் மருமகள் போடும் விசித்திர நிபந்தனை.

கதைக்களம்…

நாயகன் (கௌதம்) ஹரிஷ் கல்யாண் – நாயகி (மீரா) இவானா இருவரும் ஒரே அலுவலகத்தில் பணி புரிகின்றனர். இவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இரண்டு வருடத்திற்கு பின் திருமணத்தைப் பற்றி பேசவே வீட்டிற்கு சென்று பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது.

அப்போதுதான் இவானா.. “நான் உன்னுடன் வாழ்வதைப் பற்றி யோசித்தேன். ஆனால் உன் அம்மாவுடன் வாழ்வதை பற்றி யோசிக்க வில்லை” என்கிறார்.

இதனால் காதலர்களுக்கு பிரச்சனை வெடிக்கிறது. எனவே நாம் அனைவரும் ஒரு சுற்றுலா செல்வோம் அப்போது உன் அம்மாவுடன் உன் குடும்பத்தாருடனும் நான் பழக வாய்ப்பு உள்ளது.

அப்போது பிரச்சினை இல்லை என்றால் நான் உன்னை மணக்கிறேன். பிரச்சனை வந்தால் நாம் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்கிறார் இவானா.

காதலியின் நிபந்தனையை அம்மாவுக்கு தெரியப்படுத்தாமல் இரு குடும்பத்தாரும் சுற்றுலா செல்கின்றனர்.

அதன் பிறகு என்ன நடந்தது.? இவானாவை ஏற்றுக் கொள்ள சம்மதித்தாரா நதியா.? மாமியார் – மருமகள் உறவு தொடங்கியதா.? காதலர்கள் ஒன்றிணைந்தார்களா.? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சாக்லேட் பாயாக ஹரிஷ் கல்யாண் காணப்பட்டாலும் அவருக்கு இந்த படத்தில் பெரிதாக ரொமான்ஸ் சீன்ஸ் எதுவும் இல்லை. மாறாக வழக்கம் போல பக்கத்து வீட்டு பையனாக வந்து செல்கிறார்.

இவானா அழகு நிறைந்த மீராவாக ஜொலிக்கிறார். டீன் ஏஜ் பெண்களுக்கு உரித்தான கண்டிஷன்கள் போடும்போது முரட்டு சிங்கிள்ஸ் மனம் கொஞ்சம் குளிரலாம்.. (இதுக்கு தான்யா நாங்க கல்யாணம் பண்ணிக்கவே இல்ல என்பார்கள்)

யோகி பாபு வந்தபின் டூர் போலவே காமெடியும் களை கட்டுகிறது. அது போல டூரில்.. டிரைவர் யோகி பாபுவிடம் சுகர் பேஷண்ட் சிறுநீர் கழிக்க ஒவ்வொரு முறையும் வண்டியை நிறுத்த சொல்லும் காமெடி செம.

ஹரீஷின் நண்பனாக வரும் ஆர் ஜே விஜய் தன் பங்களிப்பை பக்காவாக செய்துள்ளார். டூர் போகும் போது.. “செமையாக இருக்குல்ல.. என்று ஒரு பெண்ணிடம் கடலை போடுகிறார். சென்னை பூந்தமல்லி கூட தாண்டல அதுக்குள்ள இப்படியா என கலாய்ப்பது செம.

விடிவி கணேஷ் வந்து கொஞ்சம் கலகலப்புக்கு கை கொடுக்கிறார்.

வி டிவி கணேஷ் ஒருமுறை ஹரீஷிடம் நதியா – இவானா இருவரையும் பார்த்து இதில் யார் உங்கள் அம்மா? என்று சொல்லும் போதே நதியாவின் இளமை ரசிகர்களுக்கு புரியும். என்றும் நதியா அழகுதான்.

இவானாவை பெண் பார்க்கும் காட்சியில் பிரச்சனை வெடிக்க ஹரிஷ் வெளியே புறப்படும்போது.. “நான் பியூட்டி பார்லர் போயிட்டு வந்தேன்.. கொஞ்ச நேரம் இருக்கலாம் என்பதுபோல நதியா கேட்கும் காட்சிகள் சிரிப்பலை.

இவர்களுடன் தீபா அக்கா, வினோதினி உள்ளிட்டோரின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. தங்கள் பங்குக்கு கொஞ்சம் கலகலப்பூட்டி செல்கின்றனர்.

டெக்னீசியன்கள்…

படத்தின் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசை நன்றாகவே கை கொடுத்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தி. கோவாவின் அழகையும் சிறப்பாக கையாண்டு உள்ளார்.

படத்தொகுப்பாளர் இரண்டாம் பாதியை கொஞ்சம் எடிட்டிங் செய்திருக்கலாம். பாரஸ்ட் காட்சிகள் பஜனை காட்சிகள் சற்று சோர்வை தருகின்றன.

ரமேஷ் தமிழ்மணி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தன் மனைவி சாட்சியுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.

கோவாவில் நதியா மற்றும் இவானா ஆகியோருக்கான சீன்கள் மூலம் தலைமுறை இடைவெளியை அழகாக சித்தரித்து இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.

அது போல நதியா மீது ஆசைப்படும் ஒரு ஆங்கிலேயரின் காட்சிகள் ஏன்.? என்று தெரியாவிட்டாலும் அது ஆண்களின் மனநிலையை காட்டுகிறது.

பாரஸ்ட் சீன்கள் பெரிதாக கவரவில்லை. அதிலும் முக்கியமாக சாண்டி மாஸ்டர் வந்து ஆட்டம் போடும் அந்த பஜனை காட்சிகளும் எதற்கு என்றே புரியவில்லை.

இந்த சுற்றுலாவின் நோக்கமே மாமியாருக்கும் மருமகளுக்கும் உறவு எப்படி இருக்கப் போகிறது என்பதுதான். ஆனால் அதற்கான விளக்கம் கொஞ்சம் கூட கிளைமாக்ஸில் இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நாயகி ஜெனிலியாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் குடும்பத்தாருடன் பழகச் சொல்வார் ஜெயம் ரவி. இதில் கொஞ்சம் மாறுதலாக அனைவரும் சுற்றுலா சென்று இருக்கின்றனர்.

ஆனால் அதை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாகவே இருந்திருக்கும்.

ஆக இந்த எல் ஜி எம்.. மாமியாருக்கு மார்க் போடும் மருமகள்

LGM movie review and rating in tamil

LOVE லவ் விமர்சனம் 2/5..; TORTURE-ன்னு வச்சி இருக்கலாமே

LOVE லவ் விமர்சனம் 2/5..; TORTURE-ன்னு வச்சி இருக்கலாமே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புலி முருகன்’ உள்ளிட்ட பல படங்கள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வர வசனங்களை எழுதியவர் ஆர் பி பாலா. தற்போது இவரே இயக்குனராக மாறி தயாரித்துள்ள படம் ‘லவ்’.

இது சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான ‘லவ்’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, டேனியல், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இது பரத்தின் 50வது படம்.. விமர்சனம் இதோ

கதைக்களம்…

தன் தந்தை ராதாரவி சொன்னதன் பேரில் தான் கட்டிக்க போகும் மாப்பிள்ளை பரத்தை காண ஒரு ஹோட்டலுக்கு செல்கிறார் வாணி போஜன்.

முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் கருத்து மோதல் உருவாகிறது. ஆனாலும் பரத்தின் வெளிப்படையான பேச்சை கண்டு அவரை மணக்க சம்மதிக்கிறார் வாணி போஜன்.

இவர்கள் திருமணமான ஒரு வருடத்திற்குள்ளே பல பிரச்சினைகள் வெடிக்கிறது. பிசினஸ் நஷ்டத்தால் மனம் உடைந்து போகும் பரத் வீட்டிலேயே சரக்கு அடிக்கிறார். வாணி போஜன் வேலைக்கு சென்று பொறுப்புடன் இருக்கிறார்.

ஒருநாள் பிரச்சனை அதிகமாகவே இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொள்ள வாணியை அடித்து விடுகிறார் பரத்.

அப்போது எதிர்பாரா விதமாக வாணி போஜன் மரணம் அடைகிறார்.

அந்த சமயத்தில் சரக்கடிக்க பரத்தின் நண்பர் விவேக் பிரசன்னா வருகிறார்.

சிறிது நேரத்தில்.. திருமணமான மற்றொரு நண்பன் டேனியல் வேறொரு பெண்ணை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு மேட்டர் செய்ய வருகிறார்.

அதேசமயம் அவர்கள் வசிக்கும் அப்பார்ட்மெண்டுக்கு போலீஸ் ஜீப் வருகிறது.

அதன்பின்னர் என்னாச்சு.? நண்பர்களிடம் தான் செய்த கொலையை சொன்னாரா பரத்.? தப்பித்தாரா.? என்ன நடந்தது என்பது தான் மீதிக்கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

கதை கேட்பதற்கு சொல்வதற்கும் அழகாகவும் எளிதாகவும் இருந்தாலும் இதன் பின்னர் நடக்கும் குழப்பங்களும் தடுமாற்றமான திரைக்கதையும் ரசிகர்களை வெறுப்படையச் செய்கிறது.

பரத் வாணி போஜன் விவேக் பிரசன்னா டேனியல் ராதாரவி என கிட்டத்தட்ட 8-10 நபர்களே படத்தில் நடித்துள்ளனர்.

அவர்கள் அனைவருமே வீட்டிற்குள் நடக்கும் கதையை சுற்றி சுற்றி வருவதால் எந்தவிதமான ஓர் உணர்வும் நமக்கு ஏற்படவில்லை. அவர்களும் பெரும்பாலும் பெருமளவில் முயற்சிகளை எடுத்து நடிக்கவில்லை.

சீரியஸான முகத்துடனே பரத் காட்சியளிக்கிறார். ஒரே ஒரு பாடலில் மட்டும் பரத்தும் வாணி போஜனும் கொஞ்சம் ரொமான்ஸ் செய்கின்றனர். மற்றபடி அவர்களுக்குள் ஒரு துளி கூட காதல் இருப்பதாக காட்சிகள் இல்லை.

அப்படி இருக்கையில் ஏன் லவ் என்று டைட்டில் வைத்தார்கள் என்பதுதே கேள்வி. விவேக் பிரசன்னா அவரது மனைவியை சந்தேகப்படுவதும் டேனியல் அவரது மனைவியை சந்தேகப்படுவதும் இப்படியாகவே காட்சிகள் நகர்கின்றன.

மனைவியை கொல்லவே அனைவரும் திட்டமிடுகின்றனர். அப்படி இருக்கையில் இந்த படத்திற்கு டவுட் அல்லது டார்ச்சர் என்று பெயர் வைத்திருக்கலாம்.

இடைவேளைக்குப் பிறகு விவேக் யார்.? டேனியல் யார்? என பெரிய ட்விஸ்ட் வைத்துள்ளார்கள். ஆனால் அதில் கொஞ்சம் கூட ஈர்ப்பே இல்லை

*என் மகளை அடிக்கும் உரிமை உனக்கு இருந்தால்.. உன்னை அடிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது என ராதாரவி பேசும் வசனம் மருமகன்களுக்கு மாமனார் கொடுக்கும் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்*

‘லவ்’ படத்திற்கு மிகப்பெரிய ஆறுதல் படத்தின் ஒளிப்பதிவாளர் பி ஜி முத்தையா தான். கண்ணாடி ஜார் உடைவது முதல் வீட்டில் இருக்கும் அலங்கார பொருட்கள் என ஒவ்வொன்றையும் அழகாக படம் பிடித்து நம்மை ரசிக்க வைக்கிறார்.

பாடல் பின்னணி இசை கொஞ்சம் படத்திற்கு கை கொடுத்துள்ளது.

ஆர்பி பாலா இந்த படத்தை மலையாள பாணியில் இயக்கி இருக்கிறார். மற்றபடி தமிழுக்கு ஏற்றபடி சில மாற்றங்களை செய்து இருந்தால் ரசிகர்களை கவர்ந்திருக்கலாம்.

காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர் நிச்சயத்த திருமணமாக இருந்தாலும் மனதளவில் ஒற்றுமை இருந்தால் மட்டுமே தம்பதிகள் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் பாலா.

ஆனால் அதற்காக அவர் அமைத்துக் கொண்ட திரைக்கதை தான் ரசிகர்களை குழப்பம் படியாக அமைந்து விட்டது.

ஆக பரத்தின் 50 வது படம் அவருக்கு கை கொடுக்கவில்லை என்று அடித்துக் கூறலாம்..

இது லவ் இல்ல…

Love review and rating in tamil

இராக்கதன் விமர்சனம்.; பெண்களின் காம வலையில் மாடலிங் மச்சான்

இராக்கதன் விமர்சனம்.; பெண்களின் காம வலையில் மாடலிங் மச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தினேஷ் கலைச்செல்வன் இயக்கிய ‘இராக்கதன்’. சென்னை, திருச்சி, காரைக்கால், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

‘இராக்கதன் என்றால் அரக்கன் என்று பொருள். இரா என்பது இரவையும், கதன் என்பது ஒரு ஆணையும் குறிக்கிறது. இது இரவு நேர ஆண் என்ற மற்றொரு பொருளையும் உள்ளடக்கியது.

கதைக்களம்…

படத்தின் நாயகன் விக்னேஷ் ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் மாடலிங் துறையில் சிறந்து விளங்க ஆசைப்படுகிறார். இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தாலும் மாடலிங் மட்டுமே தனது லட்சியம் என அதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மாடலிங் மாட்டவே இல்லை.

ஒரு கட்டத்தில் ரியாஸ்கானின் பார்வை விக்னேஷ் மீது படவே மாடலிங் துறைக்கு அழைத்து பணக்கார பெண்களுக்கு ஆண் விபச்சாரனாக செயல்பட வைக்கிறார்.

ஒரு பக்கம் பணம் கொட்ட கொட்ட பெண்களின் பழக்கமும் அதிகரிக்கிறது. அதன் பிறகு விக்னேஷ் வாழ்க்கையில் என்ன நடந்தது.? விக்னேஷ் ஏங்கிய மாடல் இதுதானா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நடிகர்கள் : வம்சி கிருஷ்ணா, ரியாஸ்கான், தினேஷ் கலைச்செல்வன், விக்னேஷ் பாஸ்கர், காயத்ரி ரெமா, சாம்ஸ், நிழல்கள் ரவி, சஞ்சனா சிங், ஆல்பிரெட் நடித்துள்ளனர்.

விசாரணை அதிகாரியாக வம்சி கிருஷ்ணா. ஆனால் இவர் போலீஸ் போலவே இல்லை. நீண்ட தாடி தலைமுடி வைத்து மாடலிங் மேனாகவே காட்சியளிக்கிறார்.

ரியாஸ்கானுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் தனக்கான கேரக்டரில் ரியாஸ்கான் ரிச் கான்.

சிக்ஸ் பேக் உடன் வருகிறார் விக்னேஷ். ஆனால் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கலாம். எப்போதும் ஏதோ சிந்தனையில் இருப்பதாகவே அவரது முகம் இருக்கிறது.

ஆண்களுக்கு அலையும் பணக்கார சபல பெண்ணாக சஞ்சனா சிங். காயத்ரி ரெமா ஓரிரு காட்சிகளில் நாயகி என்ற பெயரில் வருகிறார்.

டெக்னீஷியன்கள்…

இப்பட பாடல்களை சைந்தவி, ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளனர். பாபு கிறிஸ்டியன், தினேஷ் கலைச்செல்வன் பாடல்கள் எழுதியுள்ளனர்.

மானஸ் பாபு ஒளிப்பதிவு செய்ய, ஏ.பிரவீன் குமார் இசை அமைத்துள்ளார்.

மருதம் புரொடக்‌ஷனுக்காக ராணி ஹென்றி சாமுவேலுடன் இணைந்து காரைக்கால் எம்.ஏ.ஜி.பாஸ்கர் தயாரித்துள்ளார்.

இந்த சமூகத்தில் கலாச்சார சீரழிவு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும்தான் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன். இவரும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.

பொதுவாகவே பெண்கள் விபச்சாரத்தை பற்றி பேசும் லட்சக்கணக்கான படங்களில் மாடலிங் துறையில் சிறந்து விளங்கும் ஆண்களுக்கு விரிக்கப்படும் பணக்கார பெண்களின் காம வலை தான் இந்த இராக்கதன்.

ராக்கத்தன் என்ற வார்த்தை ஒலித்து கொஞ்சம் இரைச்சலையும் கொடுத்துள்ளது. இன்னும் கூடுதலாக மெனக்கெட்டு திரைக்கதையை அமைத்து இருந்தால் இந்த ராக்கதன் ராட்சசன் ஆக வளர்ந்து நின்று இருப்பான்.

ஆக.. பெண்களின் காம வலையில் மாடலிங் மச்சான்.

Raakadhan movie review and rating in tamil

எக்கோ ECHO விமர்சனம்.; KARMA RETURNS

எக்கோ ECHO விமர்சனம்.; KARMA RETURNS

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஐடி துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் ஸ்ரீகாந்த். இந்த நிறுவனம் அவரது மாமனார் நிறுவனமாகும். இவரது மனைவி பூஜா ஜாவேரி.

சில தினங்களில் இரவு நேரத்தில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியால் ஸ்ரீகாந்துக்கு பிரச்சினை வருகிறது. இதனால் பயந்து நடுங்கும் இவரை கண்டு பதற்றம் அடைகிறார் மனைவி பூஜா.

ஆபிஸ் வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் ஸ்ரீகாந்த் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த பொறுப்பில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என மாமனார் விரட்டி விடுகிறார்.

இதனால் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் ஸ்ரீகாந்த் தனக்கு உள்ள பிரச்சனையை பேய் ஓட்டுபவரான ஆசிஷ் வித்யார்த்தியிடம் கூறுகிறார். ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வரும் ஆஷிஷ் வித்யார்த்தி உங்கள் வீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.. நீங்கள் நடந்ததை கூறினால் மட்டுமே என்னால் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முடியும் என்கிறார்.

அப்போது தான் மறைத்து வைத்த பல ரகசியங்களை சொல்கிறார் ஸ்ரீகாந்த்.

அந்த ரகசியம் என்ன.? ஸ்ரீகாந்தை பேய் துரத்துவதன் நோக்கம் என்ன.? என்ன செய்தார் ஸ்ரீகாந்த்.? இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்தாரா.? என்பதுதான் எக்கோ படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இதற்கு முன் பேய் படங்களில் நடித்திருந்தாலும் ஸ்ரீகாந்த் இந்த படத்தில் கொஞ்சம் மாறுபட்ட கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். இவர் சொல்லும் ரகசியம் எதிர்பாராத ஒன்று. முதல் மனைவி இரண்டாவது மனைவி என இவர் போடும் நாடகம் செம ட்விஸ்ட்.

கிராமத்தில் வளர்ந்து நகரத்தில் மாட்டிக் கொண்ட அப்பாவி பெண்ணாக வித்யா பிரதீப். கணவரின் அன்புக்காக ஏங்குவதும் பின்னர் பேய்க்கு பயந்தும் அவரின் முடிவு துரதிர்ஷ்டமானது.

கொஞ்ச நேரமே வந்தாலும் பூஜா இளசுகளை சூடேற்றுகிறார். முக்கியமாக பாடல் காட்சியில் கொஞ்சம் தூக்கலாகவே கவர்ச்சி வழங்கி இருக்கிறார்.

டிவி சீரியல் புகழ் மலையாள நடிகை பிரவீனா அம்மாவாக நடித்துள்ளார். அழகும் அன்பும் நிறைந்த நிறைந்தவராக பிரதிபலிக்கிறார் பிரவீனா.

டெல்லி கணேஷ் ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார். கோயில் பூசாரியாக வரும் காளி வெங்கட்.. ‘வித்யா பிரதீப்பை பார்த்து பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்கிறார். அதற்கான எந்த விளக்கமும் படத்தில் இல்லை. அது ஏன்.?

ஆஷிஷ் வித்யார்த்தி வரும் காட்சிகளில் கொஞ்சம் கூடுதல் எதிர்பார்ப்பை கொடுத்திருக்கலாம்.. ஸ்ரீகாந்த் எந்த நேரம் ஓடி சென்றாலும் அவர் ரெடியாகவே உட்கார்ந்து இருக்கிறார். அவருக்கு இதுதான் வேலை என்றாலும் அவர் இரவு நேரங்களில் கூட தூங்கவே மாட்டாரா.?

டெக்னீஷியன்கள்…

வழக்கமான பேய் கதையை சொல்லாமல் இந்த எக்கோ படத்தை வித்தியாசமாக காட்ட முயற்சித்துள்ளார் நவீன்.

நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும் கதைக்கு ஏற்ப வந்துள்ளது.

பொதுவாக பேய் படங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதை குறைவாகவே கொடுத்து கூடுதல் பயத்தை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத்.

ஆக இந்த ECHO படத்தின் கதைக்களம் என்னவென்றால்.. “நீ ஒருவருக்கு தீங்கு செய்தால் அதுவே உனக்கு எக்கோ போல திரும்பி வரும்.

எனவே நன்மை செய்து பழகுங்கள் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர் நவீன் கணேஷ்.

ஆக ECHO… KARMA RETURNS

ECHO movie review and rating in tamil

சத்திய சோதனை விமர்சனம்..; நேர்மைக்கு சோதனை

சத்திய சோதனை விமர்சனம்..; நேர்மைக்கு சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்….

அடர்ந்த ஒரு காட்டுப் பகுதியில் நிறைய நகைகள் அணிந்து சென்ற ஒரு செல்வந்தரை 4 பேர் கொண்ட கும்பல் போட்டு தள்ளுகிறது. அவர்களே ஒரு போலீஸ் நிலையத்திலும் சரண் அடைந்து விடுகிறார்கள்.

மறுநாள் காலை அவ்வழியே செல்லும் பிரேம்ஜி பிணம் கிடப்பதை பார்த்து அதை ஓரமாக மரத்தடி நிழலில் போட்டுவிட்டு பிணத்தின் செல்போன் வாட்ச்சை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்.

அதன் பின்னர் தான் போலீசுக்கு மற்றொரு பிரச்சினை உருவாகிறது. கொலை செய்யப்பட்ட இடம் ஒரு இடம்.. பிரேம்ஜி பிணத்தை தள்ளி வைத்ததால் அது மற்றொரு காவல் எல்லையில் உட்பட்டது என இரு போலீசுக்கும் பிரச்சனை உருவாகிறது.

அவர்களுக்கு அந்த பிணத்தின் மேல் கிடந்த லட்சக்கணக்கான நகைகள் எங்கே சென்றது? நமக்கு கிடைத்தால் நாம் பங்கு போட்டுக் கொள்ளலாமே என போலீஸ் தரப்பில் மோதல் வெடிக்கிறது.

இதனிடையில் பிரேம்ஜியை துன்புறுத்தி நகைகள் எங்கே.? என்று விசாரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்செல்லும் பிரேம்ஜி வாக்கி டாக்கியை எடுத்துச் செல்கிறார். இதனால் போலீசுக்கு மேலும் பிரச்சினை உருவாகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது.? வழக்கு கோர்ட்டுக்கு செல்கிறது. நீதிபதி என்ன தீர்ப்பளித்தார்.? பிரேம்ஜியை போலீஸ் கண்டுபிடித்தார்களா? நகையை எடுத்தது யார் ? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது இந்த சத்திய சோதனை.

கேரக்டர்கள்…

பிரேம்ஜி இதில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஒரு கிராமத்து இளைஞன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லாமல் தன்னுடைய வழக்கமான நடிப்பை அவர் செய்திருப்பது தான் நமக்கு வந்த சத்திய சோதனை. ஒரு நாயகன் வேடம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தியிருக்கலாமே பிரேம்ஜி.?!

படத்தில் கதாநாயகி ஒருவர் ஏன் வந்தார் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்?

‘சுப்ரமணியபுரம்’ படத்தில் சித்தனாக நடித்தவர் கே.ஜி.மோகன். இதில் விரைவில் ரிட்டையர்டு ஆகப்போகும் காவல்துறை அதிகாரி குபேரனாக நடித்துள்ளார். அப்பாவி போலீசாக இவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் சிரிப்பலை. இவருக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்று தரும்.

நேர்மையான நீதிபதியாக பேச்சாளர் கு. ஞானசம்பந்தன். போலீசை இவர் கிடுக்கி புடி போட்டும் கேட்கும் கேள்விகள் கைத்தட்டல் ரகம்.

பொய் பேசும் போலீஸ்.. நகைக்கு ஆசைப்படும் போலீஸ்.. என அனைத்தையும் நீதிமன்றம் கண்டிப்பதை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா.

படத்தில் பிரேம்ஜியின் அக்கா மாமாவாக வரும் கருணா ராஜா மற்றும் ரேஷ்மா ஆகியோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. அதிலும் தன் மனைவியின் தம்பிக்காக கருணா ராஜா பரிந்து பேசும் காட்சிகள் மச்சான் உறவு முறையை அழகாக சொல்கிறது.

லந்து செய்யும் பாட்டி… போலீஸ் இன்பார்மர் குள்ளன் ஆகியோர் படத்தில் அதிகமாக கவனம் பெறுகின்றனர்

டெக்னீஷியன்கள்…

படத்தொகுப்பாளர் – வெங்கட் ராஜன்.

இயக்குநர் – சுரேஷ் சங்கையா.

ஒளிப்பதிவாளர் – ஆர்.வி சரண்.

பாடல் இசையமைப்பாளர் – ரகுராம்.

பின்னணி இசை – தீபன் சக்கரவர்த்தி

கலை இயக்குநர் – வாசுதேவன்.

ஐயப்ப சாமி பாடலும், கங்கை அமரன் குரலில் வரும் பாடலும் ரசிக்க வைக்கின்றன.

படத்தில் —-யோலி என்ற வார்த்தைகள் அடிக்கடி இடம் பெறுகிறது. சத்திய சோதனை என்ற இந்த படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகள் தேவையா.? அது கிராமத்தில் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளாக இருந்தாலுமே அதை தவிர்த்து இருக்கலாம்.

ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை கொடுத்த சுரேஷ் சங்கையா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். திறமையற்ற போலீசால் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் என்பதை தன்னுடைய திரை கதையால் சொல்லி இருக்கிறார்.

இந்த காலத்தில் நேர்மையாக இருக்கும் ஒருவனுக்கு ஏற்படும் அவஸ்தைகளையும் சொல்லி இருக்கிறார்.

அதே சமயத்தில் நல்லவர்களிடம் மட்டும் நல்லவிதமாக நடந்து கொள். கெட்டவர்களிடம் அவர்கள் போக்கிலேயே சென்றுவிடு என்பதையும் அந்த பாட்டி மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஆக சத்திய சோதனை.. நேர்மைக்கு வந்த சோதனை

Sathiya Sothanai movie review and rating in tamil

More Articles
Follows