தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
தனுஷ் TWINS (இரட்டை பிறவி). இதில் ஒருவர் வில்லன். ஒருவர் ஹீரோ. சிறு வயதில் பிரியும் இவர்கள் ஒரு அமானுஷ்ய சக்தியால் இணைகின்றனர் என்பதே ஒன்லைன்.
கதைக்களம்…
கதிர் & பிரபு இருவரும் இரட்டை குழந்தைகள். இதில் கதிர் ஒரு முரடன்.
தன் சிறு வயதிலேயே ஒரு பிரச்சனையால் தன் தந்தையை கொன்று விட அவனை விட்டு விட்டு பிரபு உடன் பிரிந்து செல்கிறார் இவர்களின் அம்மா.
பிரபு (தனுஷ்) பெரியவனாகி இந்துஜாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு மகள்.
ஒரு கட்டத்தில் அந்த சிறுமிக்குள் ஒரு அமானுஷ்ய சக்தி நுழைகிறது. அதனை கண்டுபிடித்தாரா பிரபு? அந்த அமானுஷ்ய சக்தியின் நோக்கம் என்ன? கதிர் என்ன ஆனார்? பிரிந்த சிறுவர்கள் இணைந்தார்களா? என்பதே மீதிக் கதை.
கேரக்டர்கள்…
இதுவரை ஏற்காத வில்லன் மற்றும் ஹீரோ இரு வேடங்களில் வித்தியாசமான நடிப்பை கொடுத்துள்ளார் தனுஷ். ஒருவர் சாதுவாகவும் ஒருவர் முரடனாகவும் நடிப்பை வேறுபடுத்தி தன் அசுரன் நடிப்பில் கவர்ந்திருக்கிறார் தனுஷ்.
ஒரு சிறுமிக்கு தாயாக இந்துஜா நடித்துள்ளது பாராட்டுக்குரியது.
இவர்களுடன் யோகி பாபு இளைய திலகம் பிரபு நடித்திருக்கின்றனர். இவர்களுக்கு பெரிதாக வேலை இல்லை.
செல்வராகவன் சின்ன வேடத்தில் நடித்துள்ளார். அவர் ஏன் வருகிறார்? அவரின் நோக்கம் என்ன என்பதே புரியவில்லை.
இதில் எல்லி அர்வம் நாயகி அவருக்கும் பெரிதாக வேலை இல்லை.
இவையில்லாமல் அமானுஷ்ய சக்தியை கண்டுபிடிக்க நான்கு ஐந்து கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள். அது செம காமெடி.
ஆனால் படத்தில் சிறுவர்களாக நடித்திருக்கும் இரட்டையர்கள் நால்வருமே நல்லதொரு நடிப்பை கொடுத்துள்ளனர்.
அதுபோல தனுஷ் இந்துஜாவின் மகளாக வரும் அந்த பெண்ணும் பித்து பிடித்தவள் போல நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.
ஆனால் தந்தையே டாடி என்பதற்கு பதிலாக டாடா என்று சொல்வது ஏதோ தேவையில்லாத ஒன்று போல தோன்றுகிறது.
டெக்னீஷியன்கள்..
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு சிறப்பு. படத்தை இரண்டே மணி நேரத்தில் முடித்துள்ளது கூடுதல் தகவல். படத்தில் மொத்தம் 15 பேரை வைத்து முடித்து விட்டார்கள். கச்சிதமாக கேரக்டரை கொடுத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது யுவன் சங்கர் ராஜாவின் இசை.. தீரா சூரா பாடல் தீப்பொறியாக இருக்கிறது. பின்னணி இசையில் தன் வழக்கம் போல மிரட்டி இருக்கிறார்.
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்று சொல்லலாம். இடைவேளை காட்சியில் கொடுத்த பில்டப் சூப்பர்.
கிளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். ஒருவேளை பார்ட் 2 படத்திற்காக அப்படி முடித்து விட்டாரோ என்னவோ?
ஆக நானே வருவேன்… செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த படம் கொடுத்துள்ளது.