தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : தனுஷ், கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி, விவேக், சரண்யா பொன்வண்ணன், ரைசா, சரவண சுப்பையா, பாலாஜிமோகன் மற்றும் பலர்.
இயக்கம் : சௌந்தர்யா ரஜினிகாந்த்
இசை : ஷான் ரோல்டான்
ஒளிப்பதிவாளர் : சமீர் தஹிர்
எடிட்டர்: பிரசன்னா ஜிகே
பி.ஆர்.ஓ. : ரியாஸ் அஹ்மது மற்றும் டைமண்ட் பாபு
தயாரிப்பு : கலைப்புலி எஸ் தாணு மற்றும் தனுஷ்
கதைக்களம்…
படத்தின் கதை ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் (இஞ்ஜினியரிங்) விருது விழாவில் தொடங்குவது போல் காட்சியை அமைத்துள்ளார் சௌந்தர்யா.
அந்த விருது விழாவில் எல்லா விருதுகளும் வசுந்திரா (கஜோல்) நிறுவனத்திற்கு கிடைக்கிறது.
ஆனால் பெஸ்ட் இன்ஜினியர் விருது மட்டும் ரகுவரனுக்கு (தனுஷ்) கிடைக்கிறது.
எனவே அவரை பயன்படுத்திக் கொள்ள, தன் கம்பெனியில் வேலைக்கு சேர அழைக்கிறார் கஜோல்.
ஆனால் அந்த வாய்ப்பை மறுக்கும் சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருக்க விரும்புகிறேன் என பன்ச் பேசி திரும்பி வருகிறார்.
அதன்பின்னர் இவர்களுக்குள் நடக்கும் இன்ஜினியரிங் இடுபாடுகளே படத்தின் முழுக்கதை,
கேரக்டர்கள்…
தனக்கே உரித்தான அந்த வெட்டி பையன், நக்கல், மிடுக்கு, பன்ச் என அசத்தலாக வருகிறார் தனுஷ்.
லவ் பன்னும்போதும் இப்படிதான் பாத்தா, ஆனா அப்போ ரொமான்ஸ் தெரிஞ்சது, இப்போ கடுப்பா இருக்கே என கூறும்போது இன்றைய நவீன கணவன்மார்களை நிருபிக்கிறார்.
பாடல் மற்றும் ரொமான்ஸ்க்கு அதிக இடம் தராமல் பொறுப்பான சமூக கருத்துக்களை சொல்ல முயற்சித்துள்ளார் தனுஷ்.
நிறைய திருக்குறள்களை அடிக்கடி சொல்லி இளைஞர்களுக்கு நியாபகப்படுத்திய அவருக்கு நன்றி.
குடிச்சியா? ஊதி காட்டு, நான் இங்க பேசிகிட்டே இருக்கேன். நீங்க என்ன பண்றீங்க? என கடுகடுப்பாக அமலாபால் பேசினாலும் அழகாக வருகிறார்.
தனி ட்ராக் இல்லாமல் கதைக்கு தேவையான காமெடி செய்கிறார் விவேக். ஆனால் காமெடியில் இன்னும் கலக்கியிருந்தால் ரசித்திருக்கலாம்.
பொறுப்பான அப்பாவாக சமுத்திரக்கனி. ஆனால் வெறும் அட்வைஸ் செய்ய மட்டுமே வருகிறார்.
கணவன் கண்னுக்கு தெரியாத சரண்யா, தனுஷ்க்கு மட்டும் நேரில் வந்து வழிகாட்டுகிறார்.
திமிருக்கு ஏற்ற அழகு, அழகுக்கு ஏற்ற நடிப்பு என கஜோல் கலக்கல்.
மழையின் போது உள்ள சண்டைக் காட்சியிலும் அனல் பறக்கிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் ஜெயச்சந்திரன் ஒரே காட்சியில் வந்தாலும் மாணவர்கள் சக்திக்கு பயப்படுவது ஜல்லிக்கட்டு போரட்டத்தை நினைவுப்படுத்துகிறார்.
இயக்குனர்கள் பாலாஜிமோகன், சரவண சுப்பையா காட்சிகள் செயற்கையாக உள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இறைவன் தந்த இறைவி பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது. ஆனால் ஷான் ரோல்டன் பின்னணி இசை எதிர்பார்த்த அளவு இல்லை.
பன்ச் பேசுவதற்காக சில காட்சிகளில் பின்னணி இசையை ஒலித்தாலும், அது பொருந்தவில்லை.
ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
பிரசன்னா ஜிகே சரியாக கத்திரி போட்டிருந்தாலும், இன்னும் சில காட்சிகளை வெட்டியிருக்கலாமோ என் கேட்க வைக்கிறார்.
இயக்கம் பற்றிய அலசல்…
விளையாட்டுத்தனமான கணவன், கண்டிக்கும் மனைவி என காட்சிகளை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.
அம்மா இல்லையென்றாலும் பொறுப்பான அப்பா, வழிநடத்துவது என அழகான குடும்பத்தை காட்டியிருப்பது சரி.
ஆனால் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் அது சம்பந்தமான காட்சிகளின் வேகத்தை குறைத்திருக்கலாம்.
ஷேர் கான்ட்ராக், ஷேர் கேன்சல் திடீர் திடீரென எல்லாம் நடப்பது காட்சிகளில் ஒன்ற வைக்க மறுக்கிறது.
சென்னை வெள்ளம் போல ஒரு காட்சியை வைத்து, வெள்ளம் வந்தால், இங்கே எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என பன்ச் பேசி முடிக்கிறார் வசனகர்த்தா தனுஷ்.
முதல் பாக விஐபியில் யதார்த்தம், எளிமை இதில்லை.
விஐபி2… ஒரே பார்முலா வேற ரூட்