ரவுடி பேபி ரகளை… மாரி2 விமர்சனம்

ரவுடி பேபி ரகளை… மாரி2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: தனுஷ், கிருஷ்ணா, சாய்பல்லவி, வரலட்சுமி, ரோபோ சங்கர், வினோத், டோமினோ தாமஸ், அறந்தாங்கி நிஷா, வித்யா பிரதீப், வின்சென்ட் அசோகன், சங்கிலி முருகன் மற்றும் பலர்
இயக்கம் – பாலாஜி மோகன்
ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ்
இசை – யுவன் சங்கர் ராஜா
எடிட்டர் – பிரசன்னா ஜிகே
தயாரிப்பு – தனுஷ்
பிஆர்ஓ – ரியாஸ் கே அஹ்மத்

கதைக்களம்…

மாரி முதல் பாகத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டும் அராஜகம் செய்துக் கொண்டும் புறா பந்தயத்தில் கலந்துக கொண்டும் அலப்பறை செய்தவர் மாரி.

2ஆம் பாகத்தில் புறா பந்தயம் இல்லை. மற்றபடி அதே அராஜகம், புதிய வில்லன், நியூ ப்ரெண்ட், காதலி, குடும்பம், ஜீனியர் மாரி என கலந்துக் அடித்திருக்கிறார் தனுஷ்.

முதல் பார்ட்டில் வரும் சண்முகராஜன் இறந்துவிடுவார். எனவே அவரின் மகனாக கிருஷ்ணா வருகிறார். மாரியும் கிருஷ்ணாவும் நண்பர்கள்.

மாரியையும் கலையையும் (கிருஷ்ணா) கொலை செய்துவிட்டு ஒட்டுமொத்த ஏரியாவையும் தனது கன்ட்ரோலுக்குக் கொண்டு வர நினைக்கிறது எதிர் அணி.

இதனிடையில் சிறையில் இருக்கும் பீஜா (டோவினோ தாமஸ்) முன் பகையின் காரணமாக மாரியைக் கொல்ல திட்டமிடுகிறான்.

ஒரு சூழ்நிலையில் சென்னையை விட்டு மாரி வெளியேறுகிறார்.

கிட்டதட்ட 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாரி அவதாரம் எடுத்து எதிரிகளை தீர்த்து கட்டுகிறார்.

இடையில் என்ன ஆனது? மாரி எங்கே போனார்? என்பதே கதை.

கேரக்டர்கள்…

தனுஷ் சொன்னதுபோலவே அவருக்கு ஜாலியான கேரக்டர்தான் இந்த மாரி. வழக்கமான ஸ்டைல், கெத்து டயலாக் என வலம் வருகிறார். செஞ்சிருவேன் என்ற டயலாக்கை மாற்றி இந்த படத்தில் உறிச்சிடுவேன் என்கிறார்.

கிருஷ்ணாவின் முறுக்கு மீசை, தாடி, நீண்ட தலை முடி என கெட்டப் அப் அசத்தலாக இருக்கிறது. நடிப்பிலும் குறையில்லை.

இதில் அராத்து ஆனந்தியாக வரும் சாய்பல்லவியுடன் டூயட் பாடுகிறார். ரவுடி பேபி பாடல் இளைஞர்களின் காலர் ட்யூனாக நிச்சயமாக மாறியிருக்கும்.

அராத்து ஆனந்தியாக அதிரடி காட்டியிருக்கிறார் சாய்பல்லவி. ஆட்டோவும் இவரது ஆட்டமும் செம ஸ்பீடு. ஆனால் மேக்கப் அப்பில் இன்னும் கவனம் செலுத்துவது நல்லது.

வரலட்சுமி கேரக்டரில் வலுவில்லை. பயங்கர எதிர்பார்ப்பு இருந்தாலும் டம்மியாக்கிவிட்டார் டைரக்டர்.

தனுஷுக்கு அடியாளாக ரோபோ ஷங்கர் மற்றும் கல்லூரி வினோத். அங்கங்கே சின்ன சின்ன சிரிப்பு வெடிகளை போடுகின்றனர்.

வில்லன் டோவினோ தாமஸ் மலையாள நடிகர். செம ஸ்மார்ட்டா இருக்கிறார். முதலில் கொடூர மேக்அப்பிலும் பின்னர் அரசியல்வாதியாகவும் கவர்கிறார்.

ஆனால் படத்தில் நிறைய பேசிக் கொண்டே இருப்பது போரடிக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவன் இசையில் ஓரிரு பாடல்கள் மட்டுமே கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை நன்றாக இருந்தாலும் மாரி பர்ஸ்ட் பார்ட் போல இல்லையே என்பதே பல திசைகளிலும் இருந்தும் குரலாக ஒலிக்கிறது.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்களில் பணிகளில் கச்சிதம்.

டைரக்டர் பாலாஜி மோகன் வெறுமனே மாஸ் மட்டும் கொடுக்காமல் குடும்பம், சென்டிமெண்ட் என இரண்டையும் கலந்துக் கொடுத்திருக்கிறார்.

எனவே ஒரு முறை பார்க்கலாம்.

மொத்தத்தில் ரவுடி பேபியின் ரகளை தான் இந்த மாரி 2

Maari2 review rating

First on Net அடங்காத அப்பாவி… அடங்க மறு விமர்சனம்

First on Net அடங்காத அப்பாவி… அடங்க மறு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜெயம் ரவி, ராஷிகண்ணா, பாபு ஆண்டனி, பொன் வண்ணன், முனிஷ்காந்த் (ராமதாஸ்), சம்பத்ராஜ், அழகம் பெருமாள், மைம் கோபி, பூர்ணா மற்றும் பலர்
இயக்கம் – கார்த்திக் தங்கவேல்
எடிட்டர் – ரூபன்
ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன்
இசை – சாம் சி.எஸ்,
தயாரிப்பு – சுஜாதா விஜயகுமார் (ஹோம் மூவி மேக்கர்ஸ்)
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

க்ரைம் ப்ரான்ச் எஸ்.ஐ. ஜெயம் ரவி. அழகான குடும்பம், அண்ணன் குழந்தைகள், காதலி, கில்மா என போலீஸாக வாழ்கிறார்.

குற்றவாளிகளை பிடித்து கொடுத்து நேர்மையான போலீஸாக இவர் வாழ விரும்பினாலும் உயர் அதிகாரிகளால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார்.

குற்றவாளிகளை கைது செய்ய இவர் நெருங்கும் போது வேறு வழக்கினை இவருக்கு கொடுப்பது வாடிக்கையாகிறது.

அப்படியிருந்தும் ஒரு சூழ்நிலையில் பாலியல் குற்றத்திற்காக பணக்கார முதலாளிகளின் பையன்களை அடித்து துவைத்து கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

சில நிமிடங்களிலேயே வெளியே வரும் அந்த குற்றவாளிகள் இவரது குடும்பத்தையே கொல்கின்றனர்.

எனவே காவல்துறைக்கும் அந்த குற்றவாளிகளுக்கும் ஒரு சவால் விடுகிறார்.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், நான் அவர்களின் தந்தைகளை வைத்தே அந்த குற்றவாளிகளை கொல்கிறேன் என சேலஞ்ச் செய்கிறார்.

அதன் பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஜெயம் ரவியின் போலீஸ் கேரக்டர்களில் மற்றொரு ஸ்டார் இந்த படம். இதில் போலீஸ் உடையில் வராமல் தன் பங்கை நிறுத்தி நிதானமாக செய்திருக்கிறார்.

அழகம் பெருமாள், முனிஷ்காந்த் ஆகியோர் பாத்திரங்கள் நிறைவை தருகின்றன.

வழக்கமாக நாயகிகள் வரும் சில காட்சிகளில் வந்து செல்கிறார் ராஷி கண்ணா. ஒரு டூயட்டும் உண்டு.

நிதானமாக ஸ்கெட்ச் போடும் வில்லன்கள் 4 பேர். அவர்களுக்கு விலை போகும் போலீஸ் அதிகாரிகள் மைம் கோபி மற்றும் சம்பத் ஆகியோரும் தங்கள் முத்திரையை பதித்து உள்ளனர்.

பொன் வண்ணன் மற்றும் சுபு பஞ்சு அருணாச்சலம் ஆகியோரும் உண்டு. ஆனால் அவர்களது கேரக்டர்களில் வலுவில்லை.

பூர்ணா வக்கீலாக வருகிறார். ஆனால் ஏன் வருகிறார்? என்ன செய்தார்? என்பதே தெரியவில்லை. 2 டயலாக்குகளை ஜெயம் ரவிக்கு ஆதரவாக பேசிவிட்டு செல்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சாயாலி மற்றும் பச்சை துரோகங்கள் பாடல் வரிகள் நிச்சயம் ரசிகர்களை கவரும். படத்தை சீரியஸாக கொண்டு சென்றதால் டூயட்டில் சரியான கெமிஸ்ட்ரி கூட ஒர்க் அவுட ஆகவில்லை.

பாடல்களை விட பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதுவும் டான்…டண்டன்ன… என்ற தீம் மியூசிக் படம் முழுவதும் வந்து ஹைப் ஏற்றுகிறது.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் மற்றும் எடிட்டர் ரூபன் இருவரும் தங்கள் பணிகளில் சிறப்பான காட்சிகளை கொடுத்துள்ளனர்.

ஆனால் பார்த்து பழகிப்போன பழிவாங்கல் கதையை நீளமாக சொல்லியிருப்பதால் 2ஆம் பாதியில் சோர்வை தருகிறது.

கார்த்திக் தங்கவேல் என்பவர் இயக்கியிருக்கிறார்.

ஒரு காட்சியில் நான் கொல்லமாட்டேன் ஆனால் குற்றவாளிகளின் தந்தையே அவர்களை கொல்வார்கள் என ஜெயம் ரவி பேசும்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறுகிறது.

க்ரைம் ப்ரான்ச் எஸ்.ஐ. என்பதால் ஜெயம் ரவியை தாடியுடன் அலைய விட்டுள்ளார்கள். அவரும் மிக சோகமாக முதல் பாதியிலும் வருவது பாவமாக இருக்கிறது.

பொதுமக்களின் வேலைக்காரன் தான் இந்த போலீஸ் என்பதை ஆணித்தரமாக சொன்ன ஜெயம் ரவிக்கும் டைரக்டர் கார்த்திக்கும் வாழ்த்துக்கள்.

ஜெயம் ரவி போலீஸ் விசாரணையில் இருக்கும்போது…

என் கையில் 2 எறும்புகள் இருக்கிறது. அது உயிரோட இருக்கா? இறந்துட்டா கேட்டா? நீ என்ன சொல்லுவ?

இறந்துட்டு சொன்னா அதை நான் உயிரோட காட்டுவேன். உயிரோடு இருக்கு சொன்னா நான் நசுக்கி சாகடிச்சிட்டு காட்டுவேன் என்ற வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

பாலியல் குற்றங்களை கண்டு அடங்கமறுக்கும் ஒருவனின் கதை தான் என்றாலும் அதை தனிப்பட்ட பழிவாங்கல் கதையாக சொல்லாமல் இருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

அடங்கமறு… அடங்காத அப்பாவி

சிரிக்க சிரிக்க சிறப்பு … சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சிரிக்க சிரிக்க சிறப்பு … சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஷ்ணு விஷால், ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், ஓவியா, சிங்கமுத்து, சௌந்தர் ராஜா, வடிவுக்கரசி, மாரிமுத்து, லிவிங்ஸ்டன் மற்றும் பலர்
இயக்கம் – செல்ல அய்யாவு
ஒளிப்பதிவு – ஜே. லட்சுமண்
இசை – லியோன் ஜேம்ஸ்
எடிட்டர் – ரூபன்
தயாரிப்பு – விஷ்ணு விஷால்
பிஆர்ஓ – நிகில் முருகன்

கதைக்களம்…

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற காமெடி ஹிட் படத்தை தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தையும் தயாரித்து நடித்துள்ளார் விஷ்ணு விஷால்.

அந்த சிரிப்பு கெமிஸ்ட்ரி இதிலும் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

வடிவுக்கரசியின் பேரன் விஷ்ணு விஷால். தன் பேரன் ஒரு போலீஸ் என்றாலும் அவன் ஒரு வீரனாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

ஆனால் விஷ்ணுவோ சரியான பயந்தாங்கொள்ளி. ரவுடிகளை பார்த்தால் கையை கட்டிக் கொண்டு இருப்பாரே தவித கைது செய்ய மாட்டார்.

உயர் அதிகாரிகளுக்கு டிபன், சாப்பாடு வாங்கி கொடுப்பது அந்த கேப்பில் தான் விரும்பும் ஆபாயிலை ருசித்து பார்ப்பது இதுதான் இவரது வேலை.

ஒரு முறை போலீசாரால் தேடப்படும் (மாறுவேடத்தில் வந்திருக்கும்) ரவுடியை ஆபாயில் பிரச்சினைக்காக அறைந்து அவரை சிறையில் அடைத்து விடுகிறார்.

இதனால் ஹீரோ சந்திக்கும் பிரச்சினைகளை காமெடியாக சொல்லி படத்தை நிறைவு செய்திருக்கிறார் டைரக்டர் செல்லா அய்யாவு.

கேரக்டர்கள்…

ராட்சசன் படத்தில் கம்பீரமாக மிரட்டிய விஷ்ணு விஷால் இதில் காமெடியில் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

இவருடன் கருணாகரன், யோகிபாபு, ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், சிங்கமுத்து, சௌந்தர் ராஜா என அனைவரும் நம்மை சிரிக்க வைத்தே நம்மை ஒரு வழியாக்கிவிடுவார்கள்.

யோகிபாபு தக்காளி சாதம் வாங்கி கொடுக்கும் அந்த சீன் முதலே பட்டைய கிளப்புகிறார். இவருக்கு போட்டியாக ஆனந்த் ராஜ், சிங்க முத்து கலக்கியிருக்கிறார்கள்.

இறுதியாக பாம்பே டான் பாட்ஷா ரஜினியுடன் படத்தை முடித்து ரஜினி ரசிகர்களையும் சந்தோஷப்படுத்திவிட்டார்கள்.

காமெடிக்கு இந்த கூட்டிணி ஃபுல் கியாரண்டி என்றால் கவர்ச்சிக்கு நாங்க இருக்கோம்ல என ரெஜினா, ஓவியா இருவரும் ஸ்கோர் செய்கிறார்கள்.

நமக்கு இப்படியொரு அழகான டீச்சர் இல்லையே என ஏங்க வைக்கிறார் ரெஜினா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். வெறும் குத்தாட்டம் என்று நினைத்தாலும் சில காட்சிகளிலும் வந்து ரசிகர்களை அதே பிக்பாஸ் மேஜிக் உடன் ஈர்க்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

லியோன் ஜேம்ஸ் இசையில் 3 பாடல்கள் நம் கவனம் ஈர்க்கின்றன. ஜே. லட்சுமண் கச்சிதமான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.

வாழ்க்கை, வேலை ரொம்ப போரடிக்குது. ஜாலியாக ஒரு படம் பார்க்கனும் என நீங்கள் நினைத்தால் இந்த சிலுக்குவார்பட்டி சிங்கத்தை நிச்சயம் சிரித்து சிரித்து ரசிக்கலாம் என கியாரண்டி தந்திருக்கிறார் டைரக்டர் செல்ல அய்யாவு.

சிலுக்குவார்பட்டி சிங்கம் … சிரிக்க சிரிக்க சிறப்பு…

First On Net விவசாய விக்கெட்… கனா திரை விமர்சனம்

First On Net விவசாய விக்கெட்… கனா திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன், சிவகார்த்திகேயன், இளவரசு மற்றும் பலர்
இயக்கம் – அருண் ராஜா காமராஜ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
இசை – திபு நினான் தாமஸ்
எடிட்டர் – ரூபன்
தயாரிப்பு – சிவகார்த்திகேயன்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் நேர்மையான மனிதர் சத்யராஜ் (முருகேசன்). கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆர்வம் இவருக்கு.

இவரைப் பார்த்து வளரும் மகள் கௌசல்யாவுக்கும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) அப்பாவை போல் கிரிக்கெட் ஆர்வம் அதிகரிக்கிறது. இந்தியளவில் சாதித்து அப்பாவை பெருமைப்படுத்த நினைக்கிறார்.

இவருக்கு சில ஆண் நண்பர்கள் உதவ, நன்றாக விளையாடி சாதிக்க புறப்படுகிறார்.

ஆனால் அம்மாவுக்கோ கிரிக்கெட் மீது துளியளவு கூட ஆர்வம் இல்லை.

இந்நிலையில் பல எதிர்ப்புகளை மீறி இந்திய கிரிக்கெட் பயிற்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் பயிற்சி தோல்வியில் முடிகிறது.

மற்றொரு புறம் தண்ணீர் இல்லாத பிரச்சினையால் விவசாயமும் பாதிக்கிறது. இதனால் விவசாய கடனை கட்ட முடியாமல் தவிக்கிறார் சத்யராஜ்.

வீட்டை ஜப்தி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார் சத்யராஜ்.

மகளின் கனவும் வீணாகியது. விவசாயமும் பாதிக்கிறது. அதன்பின்னர் தந்தையும் மகளும் இணைந்து என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கௌசல்யா முருகேசன் என்ற கேரக்டரை தன் உணர்வில் கலந்துக் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை கேரக்டர்கள் வரிசையில் இந்த படம் இவரது நடிப்புக்காகவே நிச்சயம் பேசப்படும். தமிழ் சினிமாவுக்கு ஒரு தமிழச்சியே சிறந்த நடிகையாக கிடைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கிரிக்கெட் ஆர்வம், விளையாட்டுத்தனம், பிடிவாதம், தோல்வி, வெற்றி என ஒவ்வொரு காட்சியிலும் பந்து போடாமலே சிக்ஸர் அடித்துள்ளார். அதற்கு ஏற்ப பின்னணி இசையும் பலம் சேர்த்திருக்கிறது.

இவருடன் சத்யராஜ்ம் தன் பங்குக்கு அதிகம் ஸ்கோர் செய்துள்ளார். விவசாயி முருகேசனாக அந்த கேரக்டரை முறுக்கேற்றியிருக்கிறார்.

சத்யராஜின் மனைவி, அவரின் நண்பர் இளவரசன், ஹீரோ தர்ஷன், அவரின் நண்பர்கள் சச்சின் மற்றும் டெண்டுல்கர் என அனைவரும் மனதில் நிறைகின்றனர்.

கௌசிக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுக்கும் அத்தனை அண்ணன்மார்களும் அருமை.

சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோல் என்றாலும் அவரின் காட்சிகளும் வசனங்களும் படத்தை வெற லெவலுக்கு எடுத்துச் செல்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒரு நிஜ கிரிக்கெட் போட்டியை திரையில் காட்டி நம்மை சீட்டின் நுனிக்கே வரவைத்துவிட்டார் அருண்ராஜா காமராஜ். ஒவ்வொரு பந்தும் நம் கண்களை விட்டு அகலாது நிற்கிறது.

படத்தின் வசனங்களே செஞ்சுரி அடிக்கிறது. உதாரணத்திற்கு

லஞ்சம் கொடுத்தவருக்கு ஏன் மரியாதை கொடுக்க வேண்டும் என்று பேசிவிட்டு அவன் இவன் என சத்யராஜ் பேசுவது செம.

11 பேர் சேர்ந்து நம்ம கிரிக்கெட் டீமை காப்பாத்திட்டோம். ஆனால் விவசாயத்தை நம்பியிருக்கும் இந்தியர்கள் அதை காப்பாத்தல என ஐஸ்வர்யா பேசும்போது குற்ற உணர்வு நம்மை ஆட்கொள்கிறது.

ஜெயிச்சவங்க சொல்றதத்தான் இந்த நாடு கேட்கும். நீ எது பேசினாலும் ஜெயிச்சிட்டு வந்து பேசு.

உன்னால முடியாதுன்னு சொன்னா நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல. உன்ன… என்ற டயலாக்குகள் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

விவசாயம் கிரிக்கெட் என இரண்டையும் பேட்டிங், பீல்டிங் போல கலந்து கொடுத்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

திபு நினான் தாமஸ் இசையில் வாயாடி பெத்த புள்ள… கண்ணே என் கண்ணழகே… சவால் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கிரிக்கெட் பாடல் உத்வேகத்தை கொடுக்கும்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், எடிட்டர் ரூபன் இருவரும் அருமையான பணியை செய்துள்ளனர்.

க்ளைமாக்ஸில் வரும் அந்த கிரிக்கெட் மேட்ச் பைனல் காட்சிகளும் அந்த மேக்கிங்கும் அருண்ராஜா அவர்கள் அருமைராஜா ஆக மாறியிருக்கிறார்.

மொத்தத்தில் கனா… விவசாய விக்கெட்!

செத்தும் கொடுத்தான்… சீதக்காதி திரை விமர்சனம்

செத்தும் கொடுத்தான்… சீதக்காதி திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய்சேதுபதி, அர்ச்சனா, ராஜ்குமார், வைபவ் அண்ணன் சுனில், பக்ஸ், மௌலி, பார்வதி நாயர், பாரதிராஜா, ரம்யா நம்பீசன், காயத்ரி மற்றும் பலர்
இயக்கம் – பாலாஜி தரணிதரன்
ஒளிப்பதிவு – சரஸ்காந்த்
இசை – கோவிந்த வசந்த்,
எடிட்டர் – ஆர். கோவிந்தராஜ்
தயாரிப்பு – சுதன், உமேஷ், அருண் வைத்யநாதன், பேஷன் ஸ்டூடீயோஸ்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

செத்தும் கொடுத்தான் சீதக்காதி.. என்பதை கான்செப்ட்டாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் டைரக்டர்.

பழம்பெரும் நாடக நடிகர் அய்யா ஆதிமூலம். இவரின் நாடகத்திற்கு தமிழகமே ரசிகர். நாளடைவில் நாடக மோகம் குறைந்து, சினிமா வளர்ச்சி காண்கிறது.

இதனால் இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வருகிறது. ஆனாலும் நாடகமே தன் உயிர் மூச்சு என வாழ்கிறார்.

இந்நிலையில் இவரின் பேரனுக்கு ஆப்ரேசன் செய்ய பணம் தேவைப்படுகிறது. ஆனால் பெரும் தொகை தேவைப்படுவதால் செய்வது அறியாமல் தவிக்கிறார்.

அதன் பின்னர் ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கிறது. (அதை சொன்னால் கதை வெளியே தெரிந்து விடும் என்பதால் அதை சொல்ல முடியாது. படக்குழுவினர் கேட்டுக் கொண்டதால் அதை தவிர்க்கிறோம்.)

அதன் பின்னர் என்ன செய்தார்? சினிமாவில் நடித்தாரா? ஆப்ரேசன் நடந்ததா? அய்யா ரசிகர்கள் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மாறுபட்ட கதைக்களத்தில் விஜய்சேதுபதியும் பாலாஜி தரணி தரனும் மீண்டும் இணைந்துள்ளனர்.

ஒரு காட்சியில் நாடக நடிகராக ஒரே டேக்கில் நடித்து அசத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. தன் உடல் மொழியை கூட வயதான தோற்றத்திற்கு ஏற்ப மாற்றியிருக்கிறார். 75 வயதான ஆதி மூலமாக நடிப்பில் மிளிர்கிறார்.

ஆனால் மேக் அப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்தியன் தாத்தாவிடம் பார்த்த அந்த மேக்அப் இதில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இவருக்கு இணையாக வில்லன் சுனிலும், ராஜ்குமாரும் ஸ்கோர் செய்கின்றனர்.

ராஜ்குமார் ரொமான்ஸ் காட்சியில் டேக் வாங்கும்போது ரசிகர்களின் சிரிப்பலையை அடக்க முடியாது.

வைபவ்வின் அண்ணன் சுனில் வில்லனாக நடித்துள்ளார். இனி இவருக்கு பல வாய்ப்புகள் வந்துக் கொண்டே இருக்கும். மார்க்கில் நின்னு நடிங்க சார் என்று டைரக்டர் கெஞ்சும் காட்சிகளில் உங்கள் சிரிப்பை அடக்கவே முடியாது.

இறுதியில் அந்த கோர்ட் சீன் நம்பும் படியாக இல்லை. கருணாகரன், மகேந்திரன் ஆகியோருக்கு அதிகப்படியான காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

காயத்ரி மற்றும் ரம்யா நம்பீசனுக்கு காட்சிகளே இல்லை. பாவம் அவர்கள் விஜய்சேதுபதிக்காக நடித்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

அர்ச்சனா, டைரக்டர் மௌலி ஆகியோர் நடிப்பில் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இதில் தன் இசையால் சீதக்காதிக்கு உணர்வூட்டியிருக்கிறர்.

நாடகம் முதல் சினிமா வரை காலத்திற்கு ஏற்ப இசையை மாற்றிக் கொடுத்திருப்பது ரசிக்கும் ரகம். அதிலும் நடிக்கும் ஹீரோக்கள் பல்பு வாங்கும்போது இவர் கொடுக்கும் இசை உச்சக்கட்டம்.

ஒளிப்பதிவாளரும் தன் பணியை கச்சிதமாக செய்துள்ளார். நாடகம் சினிமா என வெரைட்டி காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது.

ஆனால் எடிட்டர் தான் நம்மை சோதிக்கிறார்.

நியூஸ் 7 விவாதம் காட்சிகள் தேவையில்லாத ஒன்று. அதுபோல் நாடக காட்சிகளை சிலவற்றை வெட்டியிருக்கலாம். இவையில்லாமல் சினிமாவில் டேக் வாங்கும் காட்சிகளும் அதிகப்படியாக இருக்கிறது. இது ரசிகர்களை அதிகம் சோதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை தொடர்ந்து இந்த படத்தை இயக்கியுள்ளார் பாலாஜி தரணிதரன்.
அந்த படத்தில் கிரிக்கெட் பந்தில் அடிப்பட்டு குழம்பிய (மிடுல ஆப்ளகேட்டா) ஒருவரின் கதையை படமாக்கியிருந்தார்.

இதில் எவரும் யூகிக்க முடியாத நாடகம், சினிமா, ஆத்மா என கதையை நகைச்சுவையாக படமாக்கியிருக்கிறார்.
பொதுவாக பேய் படங்களில் மட்டுமே இதுபோன்ற கதைகள் வரும். அதை வித்தியாசமான கோணத்தில் விஜய்சேதுபதியை வைத்துக் கொடுத்திருக்கிறார்.

நீளமான காட்சிகளை வெட்டிவிட்டால் சீதக்காதி பிழைத்துக் கொள்வான். நாடக காட்சிகள் இன்றைய மாணவ ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்பது சந்தேகம்தான். விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு அது திருப்தி தருமா? என்பது தெரியவில்லை.

விஜய்சேதுபதிக்கு இது 25வது படமா? என்பதுதான் நம்ப முடியவில்லை.

சீதக்காதி.. செத்தும் கொடுத்தான்…

Seethakaathi review rating

பிரகாசிக்கும் பிரசாந்த்… ஜானி விமர்சனம்

பிரகாசிக்கும் பிரசாந்த்… ஜானி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிரசாந்த், சஞ்சிதா செட்டி, பிரபு, ஆனந்த்ராஜ், சாயாஜி ஷின்டே, தேவதர்ஷினி, சோனா மற்றும் பலர்
இயக்கம் – வெற்றிச் செல்வன்
ஒளிப்பதிவு – எம். வி. பன்னீர்செல்வம்
இசை – ஜெய்கணேஷ்
கலை – மிலன்
படத்தொகுப்பு – சிவசரவணன்
தயாரிப்பு – தியகராஜன்
தயாரிப்பு நிறுவனம் – ஸ்டார் மூவிஸ்
பிஆர்ஓ – டைமண்ட் பாபு

கதைக்களம்…

பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் இவர்கள் 5 பேரும் பிஸினர் பார்ட்னர்ஸ். இது இல்லாமலும் மற்ற தொழில்களிலும் முதலீடு செய்துள்ளனர்.

இவர்கள் 5 பேரும் ஒரு சூதாட்ட கிளப் வைத்துக் கொண்டு அதன் வருமானத்தில் சட்ட விரோதமாக குறுக்கு வழியிலும் பணம் சம்பாதிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், இவர்களின் நண்பர் கொச்சி போலீஸ் (சாயாஜி ஷிண்டே) மூலம் ஒரு கடத்தல் பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக தகவல் கிடைக்கிறது.

இவர்கள் அந்த பொருளை வாங்க ஆளுக்கு ரூ. 50 லட்சம் போட்டு ஒரு பார்ட்னரிடம் பணத்தை கேரளாவுக்கு கொடுத்து அனுப்புகின்றனர்.

ஆனால் இந்த பணத்தை மொத்தமாக கொள்ளையடித்துவிட்டு தன் காதலி சஞ்சிதாவுடன் கனடாவில் செட்டில் ஆக திட்டமிடுகிறார் பிரசாந்த்.

அதன்படி பணத்தையும் கொள்ளையடிக்கிறார். ஆனால் அந்த பார்ட்னர் விபத்தில் கொல்லப்படுகிறார்.

இந்த விவகாரம் ஒவ்வொருவருக்கும் தெரிய வருகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? மற்றவர்கள் பிரசாந்தை என்ன செய்தார்கள்? போலீஸ் என்ன செய்தது.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நீண்ட இடைவெளிக்கு பிரசாந்த் படம். கதைக்கு தேவையில்லாத அலட்டல், பன்ச் டயலாக், என எதற்கும் இடம் கொடுக்காமல் பிரசாந்த் பின்னியிருக்கிறார். காதலி இருந்தாலும் ரொமான்ஸ்க்கு இடம் கொடுக்காமல் மெச்சூரிட்டியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

இவரின் பார்ட்னருக்கு இவரை பற்றி தெரிய வர, பிரசாந்த் எடுக்கும் முடிவுகள் கச்சிதம். வெல்கம் பேக் பிரசாந்த். (ஆனால் உடம்பை குறைத்துக் கொள்வது பிரசாந்த்துக்கு நல்லது)

ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழமாய் சஞ்சிதா. கவர்ச்சியிலும் நடிப்பிலும் கவர்கிறார்.

பிரபு, ஆனந்த் ராஜ் தங்களின் அனுபவமிக்க அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

இவர்களுடன் பார்ட்னர்கள், சாயாஜி ஷிண்டே, ஆனந்த்ராஜ் மனைவி தேவ தர்ஷினி, சோனா என அனைவரும் ரசிகர்களை கவர்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஜெய்கணேஷ். படத்தில் பாடல்கள் இல்லை என்பதால் அனைத்தையும் பின்னணி இசையில் காட்டியிருக்கிறார்.

மேலும் படத்தின் மற்றொரு பலமாக ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர் செல்வம் உள்ளார். படமும் 2 மணி நேரத்தில் முடிந்துவிடுவதால் படத்தொகுப்பாளரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

பத்து வருடங்களுக்கு முன் ஹிந்தியில் வெளியான ‘ஜானி கட்டார்’ படத்தை தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார் பி.வெற்றிசெல்வன். தமிழ் ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ? என்பதை அறிந்து தரமாக கொடுத்துள்ளார்.

வெற்றிச்செல்வனுக்கு இதுவொரு வெற்றி படமே.

மொத்தத்தில் ஜானி… மீண்டும் பிரகாசிப்பார் பிரசாந்த்

More Articles
Follows