தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : ஜோதிகா, ஜிவி. பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ், தமிழ்குமரன் மற்றும் பலர்
இயக்கம் : பாலா
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு: ஈஸ்வர்
எடிட்டிங்: சதீஷ் சூர்யா
பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தயாரிப்பு: பாலா மற்றும் EON STUDIOS
கதைக்களம்…
நாச்சியார் (ஜோதிகா) ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு மைனர் பெண்ணை (இவான்) கற்பழித்து குற்றத்திற்காக ஜிவி பிரகாஷை கைது செய்கிறார்.
அவரும் மைனர்தான். இந்நிலையில் இவானுக்கு குழந்தை பிறக்கிறது.
ஆனால் குழந்தையின் டிஎன்ஏ டெஸ்ட் ஜிவி.பிரகாஷின் டெஸ்ட் உடன் மேட்ச் ஆகவில்லை.
அப்படியென்றால் அந்த சிறுமியின் குழந்தைக்கு அப்பன் யார்? குழந்தை என்ன ஆனது? ஜோதிகா குற்றவாளியை கண்டு பிடித்தாரா? ஜிவி. பிரகாஷ் யார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு நாச்சியார் விடை சொல்வாள்.
கேரக்டர்கள்…
இதுநாள் வரை நாம் பார்த்த துறுதுறு ஜோதிகா இதில் முரட்டு ஜோதிகாவாக ஜொலிக்கிறார்.
வெள்ளத் தோலா இருக்கேன். ஹேய் ஸ்வீட்டி, ஹாய் இப்படி எல்லாம் பேசுவேன் பாத்தியா. சங்க அறுத்துடுவேன் என ஜோதிகா சொல்லும் போதே இவர் ஒரு டெரர் போலீஸ்தான் என பயமுறுத்துகிறார்.
ஆனால் அந்த முரட்டு குணத்திலும் மென்மை இருக்கிறது என்பதை தன் போலீஸ் ஜீப் டிரைவர் ஒரு வண்டியில் மோதிய உடன் அந்த டிரைவரை கண்டிப்பதில் தெரிகிறது.
அந்த மென்மையை க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்று நம் மனதை வென்றுவிடுகிறார்.
குற்றவாளிக்கு ஜோதிகா கொடுக்கும் அந்த தண்டனை பாலா டச். இதுபோல் தண்டனை கொடுத்துவிட்டால் எவனும் தப்பு செய்ய மாட்டான்.
இதுநாள் வரை ஜிவி. பிரகாஷிடம் இப்படியொரு நடிப்பை பார்த்திருக்க முடியாது. தன் கெட்டப் முதல் பாடி லாங்குவேஜ் வரை மாற்றியிருக்கிறார்.
நாச்சியார் படத்திற்கு முதல்நாள் சூட்டிங் செல்லும்போது இந்த மேக்அப் உடன்தான் ஜிவி பிரகாஷ் போனாராம். அப்போதே இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம். இவரின் கேரக்டர் வெற்றி அன்றே தொடங்கிவிட்டது.
மேடம் அது ஒரு சப்ப மேட்டர். நான் பாத்துகிறேன். அவகிட்ட சொல்லாதீங்க என ஜோதிகாவிடம் சொல்லும்போது ஜிவி. பிரகாஷ் ஜேஜே பிரகாஷ் ஆக மாறிவிடுகிறார்.
தன் இனிமையான நடிப்பால் மயிலிறகாய் வருடி செல்கிறார் இவானா.
சின்ன சின்ன முகபாவனைகள், மழலைத்தனம் மாறா பேச்சு, எல்லாரிடம் அன்பாய் பழகும் விதம் என நம்மை இறுக வைத்து விடுகிறார் இந்த இவானா.
இவர்களுடன் ப்ரோஷ் கானாக வரும் ராக்லைன் வெங்கடேஷ் படம் முழுக்க யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டு விடுகிறார். கம்பீரம் கண்ணியம் என நல்ல தேர்வு.
இவர்களுடன் ஜிவி. பிரகாஷின் பாட்டி (மருதுவில் விஷால் அம்மாவாக நடித்தவர்), போலீஸ் கான்ஸ்டபிள், இவானாவின் தாய்மாமன், டாக்டர்கள், ஜோதிகாவின் கணவர், அவர்களின் மகள் என அனைவரும் சில காட்சிகளில் வந்தாலும் தன் முத்திரையை பதித்து செல்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாலாவுக்கு இளையராஜாவுக்கும் அப்படி என்னதான் கெமிஸ்ட்ரியோ தெரியாது. கதையை புரிந்து அதற்கு தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார். பின்னணி இசையில் கூட திரைக்கதையின் உணர்ச்சிகளை சொல்லிவிடுகிறார்.
படத்தின் டைட்டில் கார்டூ போடும்போது எதற்க்காக குப்பை மேட்டை காண்பிக்கிறார்கள் என்றால், அதையும் ஒரு முக்கிய காட்சியாக கொடுத்துவிடுகிறார்.
எங்களுக்கு கோயிலும் ஒன்னுதான். குப்பை மேடும் ஒன்னுதான் என் போலீஸ் சொல்வது சட்டத்தின் மதிப்பை காட்டுகிறது.
குண்டு வைக்கிறவன அந்த கடவுள் தண்டிக்கலையே என்று சொல்லிவிட்டு அப்படியென்றால் ஒரு நல்ல கடவுளை இனி உருவாக்கிவிடுமோ என்று அந்த போலீஸ் பேசும் வசனங்கள் நச்.
கோர்ட் காட்சி முதல் விசாரணை காட்சிகள் வரை அனைத்தும் யதார்த்தம்.
க்ளைமாக்ஸில் ஜிவி. பிரகாஷை ஜோதிகா பாராட்டும் காட்சி மனதில் நிற்கும்.
ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் கைவண்ணத்தில் காட்சிகள் கவிதை.
டீசரில் ஜோதிகா பேசும் அந்த கெட்ட வார்த்தை சரியான இடத்தில்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
படத்தின் முதல் பாதி செல்வதே தெரியாது. அப்படியொரு எடிட்டிங் செய்து இருக்கிறார் சதீஷ் சூர்யா.அடடா… இப்படியொரு ட்விஸ்ட் என நினைக்கும்போதே இண்டர்வெல் கொடுத்து ரசிக்க வைத்துவிடுகிறார் பாலா.
சினிமாவில் நடித்தவர்கள் எல்லாம் நடிகர்கள் என்றால் பாலாவின் இயக்கத்தில் நடித்தவர்கள்தான் சிறந்த நடிகர்கள் என ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.
குற்றம் செய்யாதவர்களை ஜோதிகா தண்டிப்பதும் அதன்பின்னர் அதற்கு மன்னிப்பு கூட கேட்காதது எல்லாம் போலீஸின் மிருகத்தனம்.
விசாரித்துவிட்டு அடிக்காமல் அடித்துவிட்டு விசாரிப்பதும் அதற்கு விளக்கம் கொடுப்பதும் சரியான தீர்வல்ல. இவருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறதே. அதை எண்ணி பார்ப்பது இல்லையோ?
நாச்சியார்… தமிழ்சினிமாவின் நறுமணம்