தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆவணத் தொடர் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார்.
இந்த இணைய தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
1990களில் தமிழ்நாடு – கர்நாடக எல்லைகளில் உள்ள காடுகளைக் கட்டியாண்டவர் என்ற பெருமையை பெற்றவர் சந்தனகடத்தல் வீரப்பன்.
அவரது கதையை அவரே சொன்னால் எப்படி இருக்கும்? என்பதுதான் இந்த ‘கூச முனுசாமி வீரப்பன்’ தொடர்.
1995 – 96-களில் வீரப்பனைப் தன் பத்திரிகைக்காக பேட்டி எடுக்க காட்டிற்குள் சென்ற நக்கீரன் பதிவு செய்த செய்தி மற்றும் வீடியோக்களை இந்த கதை விவரிக்கிறது.
வீரப்பன் வாழ்வில் நடந்த போலீஸ் வழக்குகள், வீரப்பன் செய்த படுகொலைகள், சந்தனமரக் கடத்தல்.. யானை தந்தங்கள் கடத்தல் உள்ளிட்டவைகளை ஒவ்வொரு எபிசோடுகளாக இந்த தொடர் கதை விவரிக்கிறது.
மேலும் பொதுமக்கள் வதை முகாம்கள், காவல்துறை செய்த சித்ரவதைகள், காவல்துறைக்கும், அந்த பகுதி மக்களின் மனநிலை, வீரப்பனின் அரசியல் என எபிசோடுகள் ஒவ்வொன்றும் ஒருவிதம்.
எவரும் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் வீரப்பன் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் உலக செய்திகளை அறிந்திருப்பது அதை அவரை அவரது சொந்தக் குரலில் பேசி இருப்பது உள்ளிட்டவைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் நாம் நாட்டிற்குள் இருந்து பார்த்துக் கொண்டு அரசியல் வேறு.. காட்டுக்குள் நடக்கும் அரசியல் வேறு என வீரப்பன் பார்வையில் சொல்லி இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
மலைவாழ் மக்கள் மீது போலீஸ் நிகழ்த்திய கொடூரத் தாக்குதல் கண் கலங்க வைக்கிறது. இது வீரப்பன் பற்றிய ஆவணப்படம் என்பதால் அவர் பேசிய காணொளிகள் தொடர் முழுவதும் நிரம்பி இருக்கின்றன.
வீரப்பன் மீது ஆயிரம் ஆயிரம் குற்றச்சாட்டுகளை போலீஸ் வைத்தாலும் மக்களை நம்ப வைத்தாலும் போலீஸ் செய்த குற்றங்கள் யாருக்கும் தெரிவதில்லை.. ஆனால் அதை தைரியமாக சொன்ன வீரன் வீரப்பன்.
ஒரு காட்சியில் அவர் பேசும் வசனம் கைதட்ட வைக்கிறது. “காசு கொடுத்து ஆடு திண்ணா நான் எதுக்கு கன்னிவெடி வைக்கிறேன்?” என்கிறார்.
இத்துடன் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், வழக்கறிஞர்கள் மோகன், தமயந்தி, நடிகை ரோகினி, காவல்துறை அதிகாரி அலெக்சாண்டர், இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம், ஊர்கிராமமக்கள் என பலரும் வீரப்பன் குறித்த கதை விவரங்களை விவரிப்பதாக காட்சிகள் நகர்கின்றன.
இவையில்லாமல்… 1995இல் ஜெயலலிதா ஆட்சி செய்த போது நடத்திய நிகழ்வுகள்.. ரஜினிக்கும் ஜெயலலிதாவிற்கும் ஏற்பட்ட மோதல்.. ரஜினியின் அரசியல் பிரவேசம்.. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயம் திமுக நிலைபாடு உள்ளிட்டவைகளும் ஆராய்ந்து இருக்கிறது இந்த தொடர்.
Koose Munisamy Veerappan movie review and rating in tamil