First On Net விவசாய விக்கெட்… கனா திரை விமர்சனம்

First On Net விவசாய விக்கெட்… கனா திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன், சிவகார்த்திகேயன், இளவரசு மற்றும் பலர்
இயக்கம் – அருண் ராஜா காமராஜ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
இசை – திபு நினான் தாமஸ்
எடிட்டர் – ரூபன்
தயாரிப்பு – சிவகார்த்திகேயன்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் நேர்மையான மனிதர் சத்யராஜ் (முருகேசன்). கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆர்வம் இவருக்கு.

இவரைப் பார்த்து வளரும் மகள் கௌசல்யாவுக்கும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) அப்பாவை போல் கிரிக்கெட் ஆர்வம் அதிகரிக்கிறது. இந்தியளவில் சாதித்து அப்பாவை பெருமைப்படுத்த நினைக்கிறார்.

இவருக்கு சில ஆண் நண்பர்கள் உதவ, நன்றாக விளையாடி சாதிக்க புறப்படுகிறார்.

ஆனால் அம்மாவுக்கோ கிரிக்கெட் மீது துளியளவு கூட ஆர்வம் இல்லை.

இந்நிலையில் பல எதிர்ப்புகளை மீறி இந்திய கிரிக்கெட் பயிற்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் பயிற்சி தோல்வியில் முடிகிறது.

மற்றொரு புறம் தண்ணீர் இல்லாத பிரச்சினையால் விவசாயமும் பாதிக்கிறது. இதனால் விவசாய கடனை கட்ட முடியாமல் தவிக்கிறார் சத்யராஜ்.

வீட்டை ஜப்தி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார் சத்யராஜ்.

மகளின் கனவும் வீணாகியது. விவசாயமும் பாதிக்கிறது. அதன்பின்னர் தந்தையும் மகளும் இணைந்து என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கௌசல்யா முருகேசன் என்ற கேரக்டரை தன் உணர்வில் கலந்துக் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை கேரக்டர்கள் வரிசையில் இந்த படம் இவரது நடிப்புக்காகவே நிச்சயம் பேசப்படும். தமிழ் சினிமாவுக்கு ஒரு தமிழச்சியே சிறந்த நடிகையாக கிடைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கிரிக்கெட் ஆர்வம், விளையாட்டுத்தனம், பிடிவாதம், தோல்வி, வெற்றி என ஒவ்வொரு காட்சியிலும் பந்து போடாமலே சிக்ஸர் அடித்துள்ளார். அதற்கு ஏற்ப பின்னணி இசையும் பலம் சேர்த்திருக்கிறது.

இவருடன் சத்யராஜ்ம் தன் பங்குக்கு அதிகம் ஸ்கோர் செய்துள்ளார். விவசாயி முருகேசனாக அந்த கேரக்டரை முறுக்கேற்றியிருக்கிறார்.

சத்யராஜின் மனைவி, அவரின் நண்பர் இளவரசன், ஹீரோ தர்ஷன், அவரின் நண்பர்கள் சச்சின் மற்றும் டெண்டுல்கர் என அனைவரும் மனதில் நிறைகின்றனர்.

கௌசிக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுக்கும் அத்தனை அண்ணன்மார்களும் அருமை.

சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோல் என்றாலும் அவரின் காட்சிகளும் வசனங்களும் படத்தை வெற லெவலுக்கு எடுத்துச் செல்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒரு நிஜ கிரிக்கெட் போட்டியை திரையில் காட்டி நம்மை சீட்டின் நுனிக்கே வரவைத்துவிட்டார் அருண்ராஜா காமராஜ். ஒவ்வொரு பந்தும் நம் கண்களை விட்டு அகலாது நிற்கிறது.

படத்தின் வசனங்களே செஞ்சுரி அடிக்கிறது. உதாரணத்திற்கு

லஞ்சம் கொடுத்தவருக்கு ஏன் மரியாதை கொடுக்க வேண்டும் என்று பேசிவிட்டு அவன் இவன் என சத்யராஜ் பேசுவது செம.

11 பேர் சேர்ந்து நம்ம கிரிக்கெட் டீமை காப்பாத்திட்டோம். ஆனால் விவசாயத்தை நம்பியிருக்கும் இந்தியர்கள் அதை காப்பாத்தல என ஐஸ்வர்யா பேசும்போது குற்ற உணர்வு நம்மை ஆட்கொள்கிறது.

ஜெயிச்சவங்க சொல்றதத்தான் இந்த நாடு கேட்கும். நீ எது பேசினாலும் ஜெயிச்சிட்டு வந்து பேசு.

உன்னால முடியாதுன்னு சொன்னா நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல. உன்ன… என்ற டயலாக்குகள் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

விவசாயம் கிரிக்கெட் என இரண்டையும் பேட்டிங், பீல்டிங் போல கலந்து கொடுத்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

திபு நினான் தாமஸ் இசையில் வாயாடி பெத்த புள்ள… கண்ணே என் கண்ணழகே… சவால் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கிரிக்கெட் பாடல் உத்வேகத்தை கொடுக்கும்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், எடிட்டர் ரூபன் இருவரும் அருமையான பணியை செய்துள்ளனர்.

க்ளைமாக்ஸில் வரும் அந்த கிரிக்கெட் மேட்ச் பைனல் காட்சிகளும் அந்த மேக்கிங்கும் அருண்ராஜா அவர்கள் அருமைராஜா ஆக மாறியிருக்கிறார்.

மொத்தத்தில் கனா… விவசாய விக்கெட்!

செத்தும் கொடுத்தான்… சீதக்காதி திரை விமர்சனம்

செத்தும் கொடுத்தான்… சீதக்காதி திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய்சேதுபதி, அர்ச்சனா, ராஜ்குமார், வைபவ் அண்ணன் சுனில், பக்ஸ், மௌலி, பார்வதி நாயர், பாரதிராஜா, ரம்யா நம்பீசன், காயத்ரி மற்றும் பலர்
இயக்கம் – பாலாஜி தரணிதரன்
ஒளிப்பதிவு – சரஸ்காந்த்
இசை – கோவிந்த வசந்த்,
எடிட்டர் – ஆர். கோவிந்தராஜ்
தயாரிப்பு – சுதன், உமேஷ், அருண் வைத்யநாதன், பேஷன் ஸ்டூடீயோஸ்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

செத்தும் கொடுத்தான் சீதக்காதி.. என்பதை கான்செப்ட்டாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் டைரக்டர்.

பழம்பெரும் நாடக நடிகர் அய்யா ஆதிமூலம். இவரின் நாடகத்திற்கு தமிழகமே ரசிகர். நாளடைவில் நாடக மோகம் குறைந்து, சினிமா வளர்ச்சி காண்கிறது.

இதனால் இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வருகிறது. ஆனாலும் நாடகமே தன் உயிர் மூச்சு என வாழ்கிறார்.

இந்நிலையில் இவரின் பேரனுக்கு ஆப்ரேசன் செய்ய பணம் தேவைப்படுகிறது. ஆனால் பெரும் தொகை தேவைப்படுவதால் செய்வது அறியாமல் தவிக்கிறார்.

அதன் பின்னர் ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கிறது. (அதை சொன்னால் கதை வெளியே தெரிந்து விடும் என்பதால் அதை சொல்ல முடியாது. படக்குழுவினர் கேட்டுக் கொண்டதால் அதை தவிர்க்கிறோம்.)

அதன் பின்னர் என்ன செய்தார்? சினிமாவில் நடித்தாரா? ஆப்ரேசன் நடந்ததா? அய்யா ரசிகர்கள் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மாறுபட்ட கதைக்களத்தில் விஜய்சேதுபதியும் பாலாஜி தரணி தரனும் மீண்டும் இணைந்துள்ளனர்.

ஒரு காட்சியில் நாடக நடிகராக ஒரே டேக்கில் நடித்து அசத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. தன் உடல் மொழியை கூட வயதான தோற்றத்திற்கு ஏற்ப மாற்றியிருக்கிறார். 75 வயதான ஆதி மூலமாக நடிப்பில் மிளிர்கிறார்.

ஆனால் மேக் அப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்தியன் தாத்தாவிடம் பார்த்த அந்த மேக்அப் இதில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இவருக்கு இணையாக வில்லன் சுனிலும், ராஜ்குமாரும் ஸ்கோர் செய்கின்றனர்.

ராஜ்குமார் ரொமான்ஸ் காட்சியில் டேக் வாங்கும்போது ரசிகர்களின் சிரிப்பலையை அடக்க முடியாது.

வைபவ்வின் அண்ணன் சுனில் வில்லனாக நடித்துள்ளார். இனி இவருக்கு பல வாய்ப்புகள் வந்துக் கொண்டே இருக்கும். மார்க்கில் நின்னு நடிங்க சார் என்று டைரக்டர் கெஞ்சும் காட்சிகளில் உங்கள் சிரிப்பை அடக்கவே முடியாது.

இறுதியில் அந்த கோர்ட் சீன் நம்பும் படியாக இல்லை. கருணாகரன், மகேந்திரன் ஆகியோருக்கு அதிகப்படியான காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

காயத்ரி மற்றும் ரம்யா நம்பீசனுக்கு காட்சிகளே இல்லை. பாவம் அவர்கள் விஜய்சேதுபதிக்காக நடித்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

அர்ச்சனா, டைரக்டர் மௌலி ஆகியோர் நடிப்பில் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இதில் தன் இசையால் சீதக்காதிக்கு உணர்வூட்டியிருக்கிறர்.

நாடகம் முதல் சினிமா வரை காலத்திற்கு ஏற்ப இசையை மாற்றிக் கொடுத்திருப்பது ரசிக்கும் ரகம். அதிலும் நடிக்கும் ஹீரோக்கள் பல்பு வாங்கும்போது இவர் கொடுக்கும் இசை உச்சக்கட்டம்.

ஒளிப்பதிவாளரும் தன் பணியை கச்சிதமாக செய்துள்ளார். நாடகம் சினிமா என வெரைட்டி காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது.

ஆனால் எடிட்டர் தான் நம்மை சோதிக்கிறார்.

நியூஸ் 7 விவாதம் காட்சிகள் தேவையில்லாத ஒன்று. அதுபோல் நாடக காட்சிகளை சிலவற்றை வெட்டியிருக்கலாம். இவையில்லாமல் சினிமாவில் டேக் வாங்கும் காட்சிகளும் அதிகப்படியாக இருக்கிறது. இது ரசிகர்களை அதிகம் சோதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை தொடர்ந்து இந்த படத்தை இயக்கியுள்ளார் பாலாஜி தரணிதரன்.
அந்த படத்தில் கிரிக்கெட் பந்தில் அடிப்பட்டு குழம்பிய (மிடுல ஆப்ளகேட்டா) ஒருவரின் கதையை படமாக்கியிருந்தார்.

இதில் எவரும் யூகிக்க முடியாத நாடகம், சினிமா, ஆத்மா என கதையை நகைச்சுவையாக படமாக்கியிருக்கிறார்.
பொதுவாக பேய் படங்களில் மட்டுமே இதுபோன்ற கதைகள் வரும். அதை வித்தியாசமான கோணத்தில் விஜய்சேதுபதியை வைத்துக் கொடுத்திருக்கிறார்.

நீளமான காட்சிகளை வெட்டிவிட்டால் சீதக்காதி பிழைத்துக் கொள்வான். நாடக காட்சிகள் இன்றைய மாணவ ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்பது சந்தேகம்தான். விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு அது திருப்தி தருமா? என்பது தெரியவில்லை.

விஜய்சேதுபதிக்கு இது 25வது படமா? என்பதுதான் நம்ப முடியவில்லை.

சீதக்காதி.. செத்தும் கொடுத்தான்…

Seethakaathi review rating

பிரகாசிக்கும் பிரசாந்த்… ஜானி விமர்சனம்

பிரகாசிக்கும் பிரசாந்த்… ஜானி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிரசாந்த், சஞ்சிதா செட்டி, பிரபு, ஆனந்த்ராஜ், சாயாஜி ஷின்டே, தேவதர்ஷினி, சோனா மற்றும் பலர்
இயக்கம் – வெற்றிச் செல்வன்
ஒளிப்பதிவு – எம். வி. பன்னீர்செல்வம்
இசை – ஜெய்கணேஷ்
கலை – மிலன்
படத்தொகுப்பு – சிவசரவணன்
தயாரிப்பு – தியகராஜன்
தயாரிப்பு நிறுவனம் – ஸ்டார் மூவிஸ்
பிஆர்ஓ – டைமண்ட் பாபு

கதைக்களம்…

பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் இவர்கள் 5 பேரும் பிஸினர் பார்ட்னர்ஸ். இது இல்லாமலும் மற்ற தொழில்களிலும் முதலீடு செய்துள்ளனர்.

இவர்கள் 5 பேரும் ஒரு சூதாட்ட கிளப் வைத்துக் கொண்டு அதன் வருமானத்தில் சட்ட விரோதமாக குறுக்கு வழியிலும் பணம் சம்பாதிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், இவர்களின் நண்பர் கொச்சி போலீஸ் (சாயாஜி ஷிண்டே) மூலம் ஒரு கடத்தல் பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக தகவல் கிடைக்கிறது.

இவர்கள் அந்த பொருளை வாங்க ஆளுக்கு ரூ. 50 லட்சம் போட்டு ஒரு பார்ட்னரிடம் பணத்தை கேரளாவுக்கு கொடுத்து அனுப்புகின்றனர்.

ஆனால் இந்த பணத்தை மொத்தமாக கொள்ளையடித்துவிட்டு தன் காதலி சஞ்சிதாவுடன் கனடாவில் செட்டில் ஆக திட்டமிடுகிறார் பிரசாந்த்.

அதன்படி பணத்தையும் கொள்ளையடிக்கிறார். ஆனால் அந்த பார்ட்னர் விபத்தில் கொல்லப்படுகிறார்.

இந்த விவகாரம் ஒவ்வொருவருக்கும் தெரிய வருகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? மற்றவர்கள் பிரசாந்தை என்ன செய்தார்கள்? போலீஸ் என்ன செய்தது.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நீண்ட இடைவெளிக்கு பிரசாந்த் படம். கதைக்கு தேவையில்லாத அலட்டல், பன்ச் டயலாக், என எதற்கும் இடம் கொடுக்காமல் பிரசாந்த் பின்னியிருக்கிறார். காதலி இருந்தாலும் ரொமான்ஸ்க்கு இடம் கொடுக்காமல் மெச்சூரிட்டியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

இவரின் பார்ட்னருக்கு இவரை பற்றி தெரிய வர, பிரசாந்த் எடுக்கும் முடிவுகள் கச்சிதம். வெல்கம் பேக் பிரசாந்த். (ஆனால் உடம்பை குறைத்துக் கொள்வது பிரசாந்த்துக்கு நல்லது)

ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழமாய் சஞ்சிதா. கவர்ச்சியிலும் நடிப்பிலும் கவர்கிறார்.

பிரபு, ஆனந்த் ராஜ் தங்களின் அனுபவமிக்க அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

இவர்களுடன் பார்ட்னர்கள், சாயாஜி ஷிண்டே, ஆனந்த்ராஜ் மனைவி தேவ தர்ஷினி, சோனா என அனைவரும் ரசிகர்களை கவர்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஜெய்கணேஷ். படத்தில் பாடல்கள் இல்லை என்பதால் அனைத்தையும் பின்னணி இசையில் காட்டியிருக்கிறார்.

மேலும் படத்தின் மற்றொரு பலமாக ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர் செல்வம் உள்ளார். படமும் 2 மணி நேரத்தில் முடிந்துவிடுவதால் படத்தொகுப்பாளரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

பத்து வருடங்களுக்கு முன் ஹிந்தியில் வெளியான ‘ஜானி கட்டார்’ படத்தை தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார் பி.வெற்றிசெல்வன். தமிழ் ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ? என்பதை அறிந்து தரமாக கொடுத்துள்ளார்.

வெற்றிச்செல்வனுக்கு இதுவொரு வெற்றி படமே.

மொத்தத்தில் ஜானி… மீண்டும் பிரகாசிப்பார் பிரசாந்த்

செம ஷார்ப்… துப்பாக்கி முனை திரை விமர்சனம்

செம ஷார்ப்… துப்பாக்கி முனை திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விக்ரம் பிரபு, ஹன்சிகா, மாரிமுத்து மற்றும் பலர்
இயக்கம் – தினேஷ் செல்வராஜ்
இசை – எல்வி. முத்துகணேஷ்
ஒளிப்பதிவு – ராசாமதி
தயாரிப்பாளர் – கலைப்புலி எஸ் தானு
பிஆர்ஓ – டைமண்ட் பாபு

கதைக்களம்…

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிசராக விக்ரம் பிரபு. படத்தில் இவரது கேரக்டர் பெயர் பிர்லா போஸ்.

போஸ் என்ற கேரக்டருக்கு போஸ் கொடுத்தப்படியே தன் கதையை ஆரம்பிக்கிறார்.

என்கௌண்டர் என்பதால் யாரையும் பொருட்படுத்தாமல் போட்டுத் தள்ளுகிறார். இதனால் அம்மா, காதலி என அனைவரது அன்பையும் இழக்கிறார்.

இந்நிலையில் பாலியல் குற்றத்திற்காக ஒருவனை என்கௌண்டர் செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். ஆனால் அந்த நேரத்தில்தான் அந்த நபர் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது.

எனவே அவனை குற்றமற்றவர் என்பதை கோர்ட்டில் நிரூபிக்க போராடுகிறார். இதில் அந்த நபரை போட்டுத் தள்ள ஒரு ரவுடி கும்பல் விரைகிறது.

இந்த சூழ்நிலையில் விக்ரம் பிரபு என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

படம் முழுவதும் சீரியசான என்கௌண்டன்ராக விக்ரம் பிரபு ஜொலிக்கிறார். கம்பீரம் தோற்றத்துடன் பிர்லா போஸ்ஸாக மனதில் நிறைக்கிறார்.

ஹன்சிகாவுக்கு படத்தில் அதிக வேலையில்லை.

மற்றொரு நாயகன் போல எம்எஸ். பாஸ்கர். க்ளைமாக்ஸில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். துப்பாக்கி முனையை விட இவர் பேசும் வசனங்கள் செம ஷார்ப்.

பாலியல் குற்றத்தை குறைக்க அடிப்படையிலேயே மாற்ற வேண்டும். விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினால் இந்த குற்றத்தை குறைக்கலாம் என்பதை ஆணித்தரமாக சொல்லியுள்ளார்.

அதுபோல் விக்ரம் பிரபுவின் அம்மா பேசும் வசனங்களும் செம. எப்போ பார்த்தாலும் காந்தி, காமராஜரை பற்றியே பேசுகிறோம். அதன்பின்னர் ஏன் யாரும் உருவாகவில்லை. உருவாக்கவில்லை என்பதும் நச் கேள்வி.

கைதியாக வரும் அந்த ஆசாத் நிச்சயம் ரசிகர்களை கவருவார். வேல ராமூர்த்தி மிரட்டல் வில்லனாக ஜொலிக்கிறார்.

இவரின் மகன் மற்றும் அவரின் நண்பர்களும் நல்ல தேர்வு.

எம்எஸ் பாஸ்கரின் மகளாக வரும் அந்த நாயகி நல்ல தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

முத்துகணேஷின் இசையில் மகள் பாடல் நம்மை ஈர்க்கிறது. பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.

ராசாமதியின் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம் காட்சிகள் சிறப்பு.

இயக்குனர் தினேஷ் செல்வராஜ் ஒரு ஆக்சன் கதையை அதிரடியாக கொடுத்துள்ளார். க்ளைமாக்ஸ் வசனங்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

மொத்தத்தில் துப்பாக்கி முனை… செம ஷார்ப்

மச்சக்காரன்… இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு விமர்சனம்

மச்சக்காரன்… இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விமல் (ஹரி), ஆஷ்னா சவேரி (சுரேகா), ஆனந்தராஜ் (அண்ணாச்சி) சிங்கம்புலி (கிரி) மன்சூரலிகான் (செங்கல்வராயன்), பூர்ணா (கீதா), மியாராய் (கன்பைட் காஞ்சனா) லோகேஷ், வெற்றி வேல்ராஜ்.
இயக்கம் – AR.முகேஷ்
இசை – நடராஜன் சங்கரன்
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
தயாரிப்பாளர் – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்
பிஆர்ஓ – மௌனம் ரவி

கதைக்களம்…

‘அடல்ட் காமெடி’ படங்கள் நிறைய தமிழில் வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள அடுத்த படம் இது.

ஹரியும் (விமல்) கிரியும் (சிங்கம் புலி) இருவரும் ஒரு மருந்துக் கடையில் வேலை செய்கிறார்கள்.

ஹரி திருமணமாகாதவர். இதனால் பல பெண்களை வளைத்து போட்டு வச்சு செய்கிறார். ஹீரோயின் ஒரு புறம் என்றாலும் அவரின் அக்காவுக்கும் ரூட்டுக்கு விடுகிறார்.

ஆனால் கிரிக்கு திருமணம் ஆகிவிட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி வேறொருவருடன் ஓடி விடுகிறார்.

இவர்கள் இருவருக்கும் சம்பளம் பத்தவில்லை என்பதால் சின்ன சின்ன திருட்டுக்களை செய்கின்றனர். அதாவது வீடுகளில் புகுந்து சோப் டப்பா முதல் விளையாட்டு பொம்மை வரை திருடுகின்றனர்.

ஒருமுறை திருடும்போது போலீஸ் வீட்டிலேயே ஆளுக்கு ஒரு 5 லட்சம் திருடுகின்றனர்.

அதன் பின்னர் என்ன ஆனது? போலீஸ் என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

Evanukku Engeyo Matcham Irukku stills

கேரக்டர்கள்…

விமலுக்கு இதுவொரு வித்தியாசமான படம். ப்ளேபாய் கேரக்டர் என்றாலும் திருட்டுப்பயலாகவும் வாழ்ந்திருக்கிறார்.

அதுவும் சன்னி லியோன் தங்கை மியா ராயுடன் மாட்டிக் கொண்டு இவர் விழிப்பது காம நெடி.

கொஞ்சம் உடை, நிறைய கவர்ச்சி என தாராளமாக வந்துள்ளார் ஆஷ்னா சாவேரி. இவரது ஆடை போலவே இவருக்கு வசனங்களும் குறைவு.

காம நெடி டயலாக்குகளை ஆங்காங்கே சிதற விட்டுள்ளார் சிங்கம் புலி. செக்ஸ் புத்தகம் படிக்கும் போது இவர் செய்யும் முகபாவனைகளுக்கு தியேட்டரில் சிரிப்பலை தான்.

ஆனந்த ராஜ் அசத்தல் ராஜ். வில்லனாக விஸ்வரூபம் எடுத்தவர், இதில் டபுள் மீனிங் டயலாக்கிலும் அசத்தியிருக்கிறார்.

கம்பீரமான  காவல் துறை அதிகாரியாக விமல். மன்சூர் அலிகான் நடிப்பிலும் கச்சிதம்.

வ்வ்வ்வ்வா என விமலை காமத்துடன் அழைக்கும் மியாராய்க்கு இனி நிறைறைறைய வாய்ப்புகள் வரும். கன் பைட் காஞ்சனா செம ஷாட்.

Evanukku Engeyo Matcham Irukku stills 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சங்கர நாராயணன் நடராஜனின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் நம்மை கவர்கின்றன. அதுவும் கவர்ச்சியான காட்சிகள் இளைஞர்களை சூடேற்றும்.

இப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முகேஷ். இளைஞர்களை குறி வைத்து அடல்ட் காமெடி படத்தை தந்துள்ளார்.

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு… மச்சக்காரன்

Evanukku Engeyo Matcham Irukku review rating

காதல் கிறுக்கன்… சீமத்துரை விமர்சனம்

காதல் கிறுக்கன்… சீமத்துரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கீதன், வர்ஷா, விஜி சந்திரசேகர், மகேந்திரன், கயல் விண்செண்ட், மாமா காசிராஜன், ஊமையன் நிரஞ்சன், வில்லன் ஆதேஷ் பாலா மற்றும் பலர்.
இயக்கம் – சந்தோஷ் தியாகராஜன்
இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின்
ஒளிப்பதிவு – திருஞானசம்பந்தம்
தயாரிப்பாளர் – சுஜய் கிருஷ்ணா
பிஆர்ஓ – குமரேசன்

கதைக்களம்…

ஹீரோ கீதன் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட். இவரின் அம்மா விஜி சந்திரசேகர். மீன் விற்கும் தொழிலை செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் நாயகி வர்ஷாவை சந்திக்கிறார் கீதன். பார்த்த உடனே காதலும் கொள்கிறார். ஆனால் வர்ஷா இவரின் காதல் வழிக்கு வர முதலில் மறுக்கிறார்.

இந்த பிரச்சினை வீட்டுக்கு தெரிய வர வர்ஷாவின் தாய்மாமன் பெண் கேட்கிறார். ஆனால் வர்ஷாவின் அப்பா இவரை செருப்பால் அடித்துவிடுகிறார்.

நாளடைவில் நாயகன் கீதன் மீது வர்ஷாவுக்கு காதல் வருகிறது. அதன்பின்னர் என்ன நடந்தது.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் கீதன், நாயகி வர்ஷா, விஜி சந்திரசேகர் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

ஹைட் வெயிட் என அழகாக வருகிறார் கீதன். ஆனால் நடிப்பில் இன்னும் முதிர்ச்சியில்லை.

கிராமத்து மண் வாசனை, கனகாம்பரம் பூ, பாவாடை தாவணி என பளிச்சென வருகிறார் நாயகி வர்ஷா. அருமையான நடிப்பையும் வெளியிப்படுத்தியுள்ளார்.

96 படத்தில் ஒரு காட்சியில் தன் கண்களாலேயே த்ரிஷாவிடம் பேசுவார் வர்ஷா. இதில் படம் முழுக்க தன் கண்களால் தன் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கருவாடு மீன் விற்கும் பெண்ணாக விஜி சந்திரசேகர். பக்கா கிராமத்து அம்மாவாக அசத்தியிருக்கிறார்.

இவர்களுடன் காசிராஜன், ஆதேஷ் பாலா ஆகியோரும் சிறப்பான தேர்வு. ஊமையன் கேரக்டரில் நடித்துள்ள நிரஞ்சன் நம் நெஞ்சங்களில் நிறைகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கிராமத்து வீடு, அந்த பகுதி மனிதர்கள் என இயற்கையோடு கொஞ்சி விளையாடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் திருஞானசம்பந்தம்.

இசையமைப்பாளர் ஜோஸ் ஃபிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்க முடிகிறது.

ஒளிப்பதிவும் பாடல்களும் நன்றாக உள்ளதால் படத்தை ரசிக்க முடிகிறது. படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று. அதுபோல் வில்லன் கேரக்டரும் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

ஹீரோ ஆரம்பக் காட்சிகளில் அவரை ரவுடித்தனம் பன்னும் மாணவனாக காட்டி விட்டு, இறுதியில் அடி வாங்கிக் கொண்டே இருப்பதாக காட்டியது சரியாக பொருந்தவில்லை.

சீமத்துரை என்று டைட்டில் வைத்துவிட்டு கோழையாக ஹீரோ இருப்பது சரியா டைரக்டர் சாரோ?

வழக்கமான கிராமத்து காதலை அழகாக சொல்ல முயற்சித்துள்ளார். அதில் யூகிக்க முடியாத ட்விஸ்ட்டுகளை சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆனால் படம் எந்த காலத்தில் எடுக்கப்பட்டது என்பது பெரும் குழப்பமாக உள்ளது.?

காரணம் நிறைய வீடுகளில் டேப் ரிக்கார்ட்டர் இருக்கிறது. அதில் 1990களில் வந்த பாடல்களே ஒலிக்கிறது. ஆனால் அண்மையில் வெளியான வீரம், கயல் பட போஸ்டர்களும் இருக்கிறது.

ஒரு வேளை இது இந்த காலமாக இருக்குமோ? என்று எண்ணினால் ஒருவரிடம் கூட செல்போன் இல்லை.

ஒருவர் இறந்து கிடக்கிறார் என்றால் ஓடிப்போய் தான் தகவல் சொல்கிறார்.

பிரஸ் ஷோ முடிந்தவுடன் இந்த குழப்பத்தை நாம் நேரில் கேட்டுவிட்டோம். செல்போன் இல்லாத கிராமங்கள் இருக்கிறது. இன்னும் டேப் ரிக்கார்ட்டர் இளையராஜா பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிற கிராமங்களும் இருக்கிறது என பதிலளித்தார் டைரக்டர்.

அவர் சொன்னது சரியாக இருந்தாலும் எல்லா ரசிகர்களுக்கும் இது புரியுமா? என்பது சந்தேகம்தான்.

சீமத்துரை.. காதல் கிறுக்கன்

More Articles
Follows