நாடு விமர்சனம் 4/5.. மருத்துவரை நாடு

நாடு விமர்சனம் 4/5.. மருத்துவரை நாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சக்ரா & ராஜ் இணைந்து தயாரித்து எம் சரவணன் இயக்கத்தில் தர்ஷன் – மஹிமா நம்பியார் நடித்த படம் ‘நாடு’.

இவர்களுடன் சிங்கம்புலி, ஆர் எஸ் சிவாஜி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்..

கொல்லிமலையில் உள்ள தேவநாடு. அங்கு மலைவாழ் கிராம மக்கள் வசிக்கின்றனர். இங்கு மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. முக்கியமாக மருத்துவ வசதிகள் இல்லாத கிராமம் இது. விபத்துக்கள் ஏற்படும் நிலையில் எந்த உயிரையும் காப்பாற்ற முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் மக்கள் போராடி டாக்டர் மகிமா நம்பியாரை அங்கு வர வைக்கின்றனர். ஆனால் அவருக்கு அந்த ஊரில் தங்க விருப்பமில்லை ஆனாலும் மருத்துவ சேவைகளை செய்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்.

இதனால் மக்கள் அவரை தெய்வமாக கொண்டாடுகின்றனர். ஒரு கட்டத்தில் அவர் டிரான்ஸ்பர் (பணியிடம் மாற்றி) செல்ல நினைக்கிறார். மக்கள் இதனை தடுக்க பல சதி திட்டங்களை செய்கின்றனர்.

அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக கதை

கேரக்டர்ஸ்…

பிக் பாஸ் தர்ஷன் இந்த படத்தின் நாயகனாகவும் மகிமா நம்பியார் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஒரு பக்கம் மருத்துவ வசதி மற்றொரு பக்கம் தன்னுடைய வசதி என இரு மனநிலை வேறுபாடுகளை அழகாக தன் நடிப்பில் காட்டி இருக்கிறார் மகிமா நம்பியார்.. தர்ஷன் எதார்த்த மனிதராக சினிமா தனம் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

தர்ஷனின் அப்பாவாக ஆர் எஸ் சிவாஜி மற்றும் ஊர் தலைவராக சிங்கம் புலி நடித்துள்ளனர்.. ஆர்.எஸ். சிவாஜி தற்போது காலமாகிவிட்டார் ஆனால் இந்தப் படத்தில் அவரது நடிப்பு பேசப்படும் வகையில் உள்ளது.

கலெக்டராக அருள்தாஸ் சிறப்பான நடிப்பு. சிங்கம் புலியின் மகனாக நடித்தவரின் காமெடி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

டெக்னீசியன்ஸ்..

சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசையமைத்துள்ளார். இருவரின் பணியும் பாராட்டுபடியான வகையில் உள்ளது.

என்னதான் உயர்தர சிகிச்சை என நாம் பேசிக் கொண்டிருந்தாலும் இன்றளவிலும் பல கிராமங்களில் அடிப்படை வசதி கூட இல்லாத பல கிராமங்கள் இருப்பதை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.

அதே சமயம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் மருத்துவ வசதி இல்லாத ஒரு நாடு நாடே அல்ல என்பதையும் இந்த படம் சித்தரிக்கிறது.

என்றைக்கு கல்வியும் மருத்துவமும் வியாபாரம் ஆனதோ அன்றே மருத்துவர்கள் தங்களுடைய சுயநலத்தை மட்டுமே எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். மருத்துவ படிப்புகள் எளிதானால் மட்டுமே நல்ல மருத்துவர் இந்த நாட்டுக்கு கிடைப்பார்கள் என்பதையும் திரைக்கதையில் உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

‘எங்கேயும் எப்போதும்’ என்ற அழகான படத்தை கொடுத்த எம் சரவணன் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆக நாடு… மருத்துவரை நாடு

naadu movie review and rating in tamil

அக்ரஹார சிக்கன் பிரியாணி..; அன்னபூரணி விமர்சனம் 3/5

அக்ரஹார சிக்கன் பிரியாணி..; அன்னபூரணி விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்ரஹாரத்து பொண்ணு மாமிசம் சமைக்கும் மாமியாக வளர்ந்த கதை இது.

கதைக்களம்…

ஸ்ரீரங்கம் கோயிலில் சமைக்கும் தன் தந்தை போன்று தானும் பெரிய சமையல்காரராக வரவேண்டும் என்று நினைக்கிறார் சிறுமி நயன்தாரா.

இவரும் பல வகையான உணவுகளை ருசிக்க தொடங்கி சிறப்பான சமையலையும் கற்றுக் கொள்கிறார்.

ஆனால் இவரை அனைவரும் சமையல் காரி சமையல்காரி என கிண்டல் செய்ய அதையெல்லாம் தாண்டி ஸ்டார் ஹோட்டலில் பணிபுரியும் CHEFவாக உயர நினைக்கிறார்.

சிறுவயதில் நயன்தாராவின் ஆசைக்கு ஓகே சொன்ன தந்தை நீ செஃப்பாக மாறினால் இறைச்சிகளை சமைக்க வேண்டும் என தடை விதிக்கிறார். இதனால் வெறுத்துப் போகும் நயன்தாரா எடுத்த முடிவு தான் என்ன? தந்தை சொல்லுக்கு கட்டுப்பட்டாரா? தன் லட்சிய கனவை அடைந்தாரா? அதற்காக என்ன செய்தார் இந்த ‘அன்னபூரணி’ என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து நிறைவு செய்து இருக்கிறார் அன்னபூரணி நயன்தாரா. ஆனால் இன்னும் மெனக்கெட்டு பயிற்சி பெற்று அக்ரஹாரத்து பாஷை பேசியிருந்தால் கூடுதல் கவனம் பெற்று இருப்பார்.

நயன்தாரா அருகில் ஜெய் போன்ற ஸ்மார்ட்டான நாயகன் இருந்தும் இருவருக்கும் எந்த ஒரு கனெக்சனும் இல்லாமல் திரைக்கதையை அமைத்திருப்பது ஏனோ?

‘தனி ஒருவன்’ படத்தில் சாதிக்கும் வரை காதலுக்கு இடமில்லை என ஜெயம்ரவி சொன்னாலும் அதில் நயன்தாராவிடம் ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது. ஆனால் இந்தப் படத்தில் நயன்தாரா சாதிக்கும் வரை சாதித்த பின்னும் ஜெய்யுடன் எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை என்பது வருத்தமே.

தயிர்சாதத்தில் வைத்த ஊறுகாய் போல நயன்தாரா படத்தில் ஜெய் கேரக்டர் உள்ளது.

சத்யராஜ் இடைவேளை சமயத்தில் தான் வருகிறார்.. அவர் வந்த பிறகு திரைக்கதை சமையலைப் போல சூடு பிடிக்கிறது.

சத்யராஜுக்கும் அவரது மகன் கார்த்திக் குமாருக்கும் தந்தை மகன் உறவு சரியாக காட்டப்படவில்லை. வேறு யாரோ போல இருக்கிறார்கள்..

நயன்தாராவின் நண்பர்கள் வரிசையில் ஜி டிவி புகழ் திடியன் மற்றும் ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்டோரும். சிலநேரம் இவர்கள் கவனிக்க வைக்கிறார்கள்.

அன்னபூரணி

சமையல்காரர் அண்ணாமலையாக கேஸ் எஸ் ரவிக்குமார். கொஞ்ச நேரமே வந்தாலும் ஆயில் இல்லாமல் நெருப்பு இல்லாமல் (NO BOIL NO OIL) இவர் சமைக்க சொல்லிக் கொடுக்கும் முறை நிறைய பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

அச்யுத் குமார், ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி, குமாரி சச்சு ஆகியோரும் நடித்துள்ளனர்.

இதில் அச்யுத் குமாருக்கு சிறப்பான வேடம். அவரும் அக்ரஹாரத்து அங்கிளாக கவனிக்க வைக்கிறார். பாட்டி சச்சு சொல்லும் நிலை..”தன் கனவுகளை துறந்து புகுந்து வீட்டுக்குள் வாழும் ஒவ்வொரு பெண்களின் நிலையை சொல்லும்.”

டெக்னீசியன்ஸ்…

தமன் இசையமைக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்து இருக்கிறார். அக்ரஹாரத்தில் இசை தொடங்கி ஹைடெக் வரை (கார்ப்பரேட் வரை) பயணிப்பது ரசிக்க வைக்கிறது. அது போல நயன்தாராவின் கனவு காட்சிகளுக்கு கிராபிக்ஸ் செய்து கொடுத்திருப்பது நல்ல கற்பனை.

ஒவ்வொரு முறையும் நயன்தாரா வாழ்க்கைப் படியில் ஏறுவதும் பின்னர் இறங்குவதும் அதற்கான இசையை கொடுத்து தமன் கவனிக்க வைத்துள்ளார்.

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஆயிரமாயிரம் ஹோட்டல்களில் உணவை ருசித்தாலும் அம்மா கை பக்குவம் எங்கும் கிடைக்காது.

ஆனாலும் வீட்டில் சமைக்கும் பெண்களுக்கு வீடு மட்டும் தான் உலகம் அவர்களின் கை பக்குவத்தை இந்த உலக அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அன்னபூரணி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதற்கு ஏற்ற கேரக்டரை நயன்தாரா மூலம் தேர்வு செய்திருப்பதும் புத்திசாலித்தனம்.

ஆனால் படம் முழுவதும் சமையல் சமையல் போட்டி என திரும்ப திரும்ப காட்டப்படுவதால் விளம்பரங்களையும் சீரியல்களையும் பார்ப்பதாகவே தோன்றுகிறது.

பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவு நேர்த்தி..

அருள் சக்தி முருகனின் எழுத்துக்களில் வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.. பிரியாணியை எந்த மதத்தைச் சார்ந்தவர் சமைத்தால் என்ன? அதற்கு ஏது ஜாதி ஏது மதம்? என்ற வசனங்களும்… எந்தக் கடவுளும் சைவ சாப்பாடு தான் வேண்டும் என கேட்பதில்லை என்ற வசனமும் கைதட்ட வைக்கிறது.

சைவம் அசைவம் சாப்பிடுவது எல்லாம் அவரவர் விருப்பம்.. சபரிமலைக்கு மாலை போட்டவர் மீன் விற்பதில்லையா? கறி வெட்டுவதில்லையா? அதுபோல அக்ரஹாரத்து பெண் சிக்கன் சமைத்தால் என்ன என்ற வசனங்களும் கவனிக்க வைக்கிறது.

கலை இயக்குநர் துரைராஜின் கலை வண்ணத்தில் அக்ரஹாரத்தின் அனைத்தும் அருமை.

ஆக இந்த அன்னபூரணி.. தற்போது பரபரப்பாக பேசப்படும் உணவு அரசியலையும் தொட்டு ருசி பார்க்க வைத்திருக்கிறது..

அன்னபூரணி

Annapoorani movie review and rating in tamil

பார்க்கிங் விமர்சனம் 3.75/5… தியேட்டரில் ‘பார்க்கிங்’ செய்ய யோசிக்க வேண்டாம்

பார்க்கிங் விமர்சனம் 3.75/5… தியேட்டரில் ‘பார்க்கிங்’ செய்ய யோசிக்க வேண்டாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமா பாணியில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ் படங்கள் வருவது ஆரோக்கியமான ஒன்றாகும். நாம் சாதாரணமாக நினைக்கும் குறட்டையை வைத்து ‘குட் நைட்’ என்ற படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

அதுபோல வண்டியை பார்க்கிங் செய்ய நாம் படும் அவஸ்தைகளை பிரச்சனைகளை இந்த படம் சொல்கிறது.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஸ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ரமா ஆகியோர் நடித்துள்ள படம் ‘பார்க்கிங்’

கதைக்களம்..

ஐடி நிறுவன ஊழியர் ஹரிஷ் கல்யாண்.. இவரது மனைவி இந்துஜா. இவர்கள் எம் எஸ் பாஸ்கர் வீட்டில் உள்ள மேல்தளத்தில் வாடகைக்கு குடியேறுகின்றனர்.

எம்எஸ் பாஸ்கர் வசிக்கிறார் ஒரு அரசு ஊழியர். ஒரு கட்டத்தில் புதிய கார் ஒன்றை வாங்குகிறார் ஹரிஷ். அந்த காரை வீட்டின் முன் பார்க்கிங் செய்கிறார். இதனால் தன்னுடைய வண்டியை பார்க்கிங் செய்ய முடியாமல் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.

இதனால் சுமூக உறவில் இருந்த இரு குடும்பங்களுக்கும் இடையில் மோதல் வெடிக்கிறது. ஒருவரை ஒருவர் பழிவாங்க நினைக்கின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்ஸ்…

இன்றைய ஹீரோக்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சியான ஒன்றாகும். சித்தா படத்தில் சித்தார்த்.. டாடா படத்தில் கவின்.. குட் நைட் படத்தில் மணிகண்டன் உள்ளிட்ட ஒரு வரிசையில் தற்போது ஹரிஷ் கல்யாண் இணைந்துள்ளார்.

எந்த சினிமாத்தனமும் இல்லாத யதார்த்த சினிமாவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். நட்பு கோபம் பாசம் என அனைத்தையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார்.

பார்க்கிங்

இவரை மிஞ்சிய அளவுக்கு எம்.எஸ். பாஸ்கர் வெளுத்துக் கட்டி இருக்கிறார். ஐடி இளைஞனுடன் மல்லுக்கட்டி பார்க்கிங் செய்ய இவர் செய்யும் ஒவ்வொன்றும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

இவர்களுடன் இந்துஜா, ரமா, ப்ராதனா நாதன், இளங்கோ, இளவரசு உள்ளிட்டோரும் நிறைவாக செய்திருக்கின்றனர். டாடி மீது டென்சனாகும் ப்ரார்த்தனா.. கணவன் மீது கடுப்பாகும் இந்துஜா ஆகியோர் நல்ல தேர்வு.

சட்னி அரைக்க மிக்ஸி இல்லை என ரமா சொல்லும்போது நம் வீட்டுப் பெண்களின் நினைவு நிச்சயமாக உங்களுக்கு வரும்.

டெக்னீசியன்ஸ்…

ஜிஜு சன்னி என்பவர் ஒளிப்பதிவு செய்ய சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இன்றைய இசையமைப்பாளர்களில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் சாம் சி எஸ். அவரின் நேர்த்தியான பணி படம் முழுக்க தெரிகிறது. அதுபோல ஒளிப்பதிவாளரும் தன் பணியை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

இருவரும் கதை ஓட்டத்திற்கு ஏற்ப தங்கள் பணியை செய்திருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது.

முதல் படத்திலேயே யதார்த்த திரைக்கதை அமைத்திருக்கிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன். சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்பதை எல்லாம் தாண்டி ரசிகர்களுடன் திரைக்கதை கலந்து விட்டால் அதுதான் படத்தின் வெற்றியாகும்.

அப்படி ஒரு கனெக்ஷனை ‘பார்க்கிங்’ மூலம் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். முன்பே கணிக்க கூடிய திரைக்கதை என்பதால் நமக்கு கொஞ்சம் அசதி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் நிச்சயமாக இந்த ‘பார்க்கிங்’ படத்தை பார்க்க உங்களது வாகனத்தை தியேட்டரில் பார்க்கிங் செய்யலாம்..

பார்க்கிங்

Parking movie review and rating in tamil

தேவா இசையில் ‘வா வரலாம் வா’ விமர்சனம்…

தேவா இசையில் ‘வா வரலாம் வா’ விமர்சனம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட வருடங்களுக்குப் பிறகு தேனிசைத் தென்றல் தேவா இசையில் உருவான திரைப்படம் ‘வா வரலாம் வா’. இந்த படத்தின் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாலாஜி முருகதாஸ் நாயகனாக அறிமுகமாகிறார்.

‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் நம்மை கவர்ந்த மஹானா இதில் நாயகியாக நடித்துள்ளார்.

வா வரலாம் வா பட விமர்சனம் இதோ…

சிறுவயதில் செய்த தவறுக்காக சிறைக்கு சென்ற ஒருவனின் கதை. தான் ஒரு முன்னாள் கைதி என்பதால் தன்னை ஒரு கெட்டவனாகவே நினைத்து வாழும் நல்ல மனம் கொண்ட மனிதனின் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர்

கதைக்களம்…

படத்தின் ஆரம்பக் காட்சியில் பாலாஜி முருகதாஸ் & ரெடின் கிங்ஸில் இருவரும் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகின்றனர். உழைத்து சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் இருவரும் வேலை தேடி அலைகின்றனர்.

ஆனால் சிறைக்கு சென்று வந்த காரணத்தினால் யாரும் வேலை கொடுக்க முன்வரவில்லை.

இந்த சூழ்நிலையில் மைம் கோபி கொடுத்த வேலையின் படி ஒரு பெரிய பேருந்தை கடத்துகின்றனர். அந்த பேருந்தில் மஹானா, காயத்ரி ஆகியோருடன் 40 ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்றால் மஹானும் காயத்ரியும் தங்களை காதலிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர் பாலாஜி & கிங்ஸ்லி.

அதன் பிறகு என்ன நடந்தது? இருவரும் காதலித்தார்களா?

இதனிடையில் கொள்ளைக் கும்பல் தலைவன் மைம் கோபியை பிடிக்க ஸ்கெட்ச் போட்டு அலைகிறது தமிழக காவல்துறை. கொள்ளையன் பிடிபட்டானா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

பாலாஜி முருகதாஸ்.. வழக்கமான தமிழ் ஹீரோக்களை போல பனியன் போட்டுக் கொண்டு சட்டை பட்டன் போடாமல் படம் முழுவதும் சுற்றித் திரிகிறார்.. அக்ஷனில் அதகளம்.. ஆனால் எமோஷனல் மற்றும் ரொமான்ஸில் கொஞ்சம் மெனக்கடல் தேவை.

அழகின் நாயகியாக மஹானா.. படம் முழுவதும் ஹோமிலியாக வந்தவர் ‘சுல்தானா.. தில்லானா என்ற பாடலுக்கு கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கிறார். முன்னழகும் பின்னழகும் நம்மை ஏதோ செய்கிறது.. இந்த மழைக்கால குளிரில் மஹானாவின் கவர்ச்சி மயங்க வைக்கிறது.

மஹானாவின் தங்கையாக காயத்ரி.. இவர் ரெடின் கிங்ஸ்லிக்கு ஜோடி. இருவரின் கெமிஸ்ட்ரி சுத்தமாக ஒட்டவில்லை.

காமெடி நடிகராக வர நினைக்கும் ரெடின் கிங்ஸ்லி காமெடி டயலாக்குகளை பேசலாம். ஆனால் கத்தி கத்தி பேசி எரிச்சலை ஏற்படுத்துகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் திரண்டு வரும்போது ஐஜி ஆபிசை காலி பண்ணிட்டீங்களா ?என்று கேட்பது சிரிக்க வைக்கிறது.

சிங்கம்புலி தீபா இருவரும் ஓவர் ஆக்டிங்.. இடைவேளை காட்சியில் சாப்பாட்டில் விஷம் வைத்து இருவரும் பேசும் வசனங்கள் தேவையற்றது.

இவர்களுடன் வில்லனாக மைம் கோபி.. போலீசாக சரவண சுப்பையா.. ரவுடியாக வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் மற்றும் 40 குழந்தைகள் நடித்துள்ளனர்.

யோகி பாபுவை போலவே ஒருவரை நடிக்க வைத்துள்ளனர். ஒரே ஒரு கனவு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் நடிகை பவ்யா. இவர் சமீபத்து வெளியான ஜோ என்ற படத்தில் நடித்திருந்தார்.)

டெக்னீசியன்ஸ்…

தேவா இசையில்… ‘வா வரலாம் வா.. என்ற பாடலும் சுல்தானா தில்லானா என்ற பாடலும் ஆட்டம் போட வைக்கிறது.

நீங்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் ‘வா வரலாம் வா…’ என்ற பாடல் நம்மை முனுமுனுக்க வைக்கிறது.

பசியோடு கிடக்கும் குழந்தைகளை தூங்க வைக்க ‘சிங்கம் கதை…’ என்ற பாடல் வருகிறது.. சிறுவர்களுக்காக கதை சொல்லும் பாடல்கள் வந்து வெகு காலமாகிவிட்டது. இந்தப் பாடலுக்கு பாலாஜி மஹானா காயத்ரி ஆடிய கதை சொல்லி ஆட்டமும் ரசிக்க வைக்கிறது.

கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கச்சிதம்.

சிறைக்கு சென்று வந்ததால் குற்ற உணர்ச்சியுடன் வாழும் இருவரின் மனநிலையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர்கள் ரவிச்சந்தர் மற்றும் எஸ் பி ஆர்.

ஆனால் பல காட்சிகளில் செயற்கை தனமான காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

முக்கியமாக போலீஸ் சரவணன் சுப்பையா தேடும் குற்றவாளி மைம் கோபி எந்த முகமூடியும் இல்லாமல் பைக்கில் சுற்றுவது எல்லாம் ஓவர் சீன்.. அவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் ஸ்கெட்ச் போடுவது ஏனோ? என்று தெரியவில்லை..

நாயகனின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் கண் கலங்கவும் வைக்கிறது. தன் குழந்தையின் பட்டினியை தீர்க்க தன் உடலையே கொடுக்க நினைக்கும் தாயின் வலியை காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் அதற்கு அழுத்தமான காரணங்கள் சொல்லப்படவில்லை. அவர் வேறு ஏதேனும் வேலைக்கு கூட சென்று இருக்கலாமே என்று என்ன தோன்றுகிறது.

சிறைக்கு சென்று வந்தவர்கள் மனநிலை எப்படி இருக்கும்? அவர்களை இந்த சமூகம் எப்படி நடத்தும்? அவர்கள் எப்படி திசை மாறி தங்கள் வாழ்க்கை அமைத்துக் கொள்வார்கள்? என்பதை ‘வா வரலாம் வா’ என்பதன் மூலம் சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர்கள் ரவிச்சந்தர் & எஸ்.பி.ஆர்.

கூடுதல் தகவல்..

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது ஆகிய படங்களை இயக்கியவர் எல்.ஜி.ரவிசந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

Va Varalam Va movie review and rating in tamil

குய்கோ விமர்சனம்- 3.75/5.; நைஸ் ஸ்டோரி இன் ஐஸ் பாக்ஸ்

குய்கோ விமர்சனம்- 3.75/5.; நைஸ் ஸ்டோரி இன் ஐஸ் பாக்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குய்கோ – குடியிருந்த கோயில் என்பதன் சுருக்கமே… சடலம் கெட்டுப் போகாமல் இருக்க ஃப்ரீசர் பாக்ஸில் (ஐஸ் பெட்டியில்) வைப்பது வழக்கம். இந்த ஐஸ் பெட்டியை வைத்து நம் இதயத்திற்கு ஐஸ் வைக்கும் திரைக்கதையை கொடுத்திருக்கிறார் பத்திரிக்கையாளரும் இயக்குனருமான அருள் செழியன். இவர் தான் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதைக்களம்…

தமிழ்நாட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மலையப்பன் (யோகி பாபு) துபாயில் வேலை கிடைத்து அங்கு அரசர் குடும்பத்தில் விஸ்வாசியாக மாறி ஒட்டகம் மேய்ப்பவராக பணிபுரிந்து வருகிறார்.

அவரது தாய் இங்கு மரணம் அடையவே அவர் இந்தியாவுக்கு வர ஓரிரு நாட்கள் தாமதம் ஆகிறது. இந்த சூழ்நிலையில் யோகி பாபுவின் தாய் சடலத்தை பாதுகாக்க ஐஸ் பெட்டியை ஒரு கிராமத்திற்கு கொண்டு வருகின்றனர் இளவரசும் விதார்த்தும்.

ஒரு கட்டத்தில் யோகிபாபு வந்து விட அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது விதாரர்த்துக்கு. தன் தாய் குடியிருந்த ஐஸ் பெட்டியை தானே விலைக்கு வாங்கிக் கொள்கிறார் யோகி பாபு.

ஓரிரு தினங்களில் அந்த ஃப்ரீசர் பாக்ஸ் காணாமல் போகவே அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை கலகலப்புடன் சொல்லி இருக்கிறார் அருள் செழியன்.

கேரக்டர்ஸ்…

தன் அம்மா இறந்த பிறகு.. அம்மா குடியிருந்த கோயில் அந்த ஐஸ் பெட்டி என்பதால் அதனை விலைக்கு வாங்கி பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார் யோகி பாபு. இப்படி அம்மா மீது பாசம் கொண்டவர் ஒரு காட்சியில் கூட அழவில்லை.

வேறு ஏதோ வீட்டு துக்கத்திற்கு வந்தது போல பல காட்சிகளில் காணப்படுகிறார். இதனால் நம்மால் காட்சியுடன் ஒன்ற முடியவில்லை.

நாயகி ஸ்ரீபிரியாவின் உதடு பேசும் வார்த்தைகளை விட அவரது உருண்ட கண்கள் நம் இதயங்களில் எதையோ உருட்டச் செய்கிறது. கண்ணழகி மீனாவைப் போல இவரின் கண்களும் நம்மை இம்சை செய்யும். காட்சிகள் குறைவு என்றாலும் கொடுத்த இடத்தில் நிறையவே ஸ்கோர் செய்து விடுகிறார் ஸ்ரீ பிரியங்கா.

மற்றொரு நாயகியாக யோகி பாபுவின் ஜோடியாக துர்கா.. முத்துமாரியாக ஒரு ஹிந்தி பாடல் பாணியில் யோகி பாபுவுடன் டூயட் பாடி செல்கிறார். கிளைமாக்ஸில் அவருக்கு மனைவியாகி மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

எப்போதும் படத்துக்கு படம் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிப்பவர் விதார்த். இதிலும் பக்கத்து வீட்டு மனிதராக நம்மை கவர்ந்திருக்கிறார்.

வில்லத்தனம் எதுவும் செய்யாமல் காமெடியில் சிக்ஸர் அடித்திருக்கிறார் இளவரசு.. இயக்குனர் எப்படி எல்லாம் சமூகத்தை கலாய்க்க நினைத்தாரோ அதை இளவரசு கேரக்டரை வைத்து நிறைவேற்றி விட்டார்.

பெண்கள் பேசினால் அதில் உண்மை இருக்காது என்பதை வினோதினி கேரக்டரை வைத்து கலாய்த்து இருக்கிறார்.

போலீஸாக கருணாராஜன் நடித்திருக்கிறார். எதை சொல்வதாக இருந்தாலும் ஸ்டேஷனில் பேசிக் கொள்.. பொருள் காணாமல் போனாலும் தேடி பிடிக்க அபராதம்.. பொருளை அவர்களே தேடிக் கொண்டாலும் காவல்துறைக்கு கட்டணம் என்கிற ரீதியில் இவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

டெக்னீசியன்ஸ்…

பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார்.

பெரும்பாலும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் வில்லனாகவே காட்டியிருப்பார்கள். ஆனால் இதில் (பண்பழகன் பைனான்ஸ் முத்துக்குமார்) பணம் கொடுக்கும் போது கடவுளாக தெரிவோம்.. அதன் பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் நம்மை காட்டேரியாக பார்ப்பார்கள் என்பதை போலவும் வசனங்கள் வைத்திருக்கிறார்.

நிச்சயம் அது உண்மைதான்.. உதவிக்கு / வட்டிக்கு பணம் வாங்குபவர்கள் தன் தேவை முடிந்த பிறகு அலைய விடுவது எல்லாம் விவஸ்தை கெட்ட செயல் என்பதை உணர வைத்திருக்கிறார் இயக்குனர் அருள் செழியன்.

ஆடு மேய்த்தவரை ஆண்டவராக ஏற்றுக் கொள்ளவில்லையா? என கிறிஸ்தவ மக்களையும் கிண்டல் அடித்திருக்கிறார்.

வேலு என்ற கேரக்டர் பெயரை இரு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அருள்செழியன். அதிலும் முக்கியமாக வடிவேலுக்கு என்னை கண்டால் ஆகாது.. அவன் பெரிய ஆளாக நினைத்துக் கொண்டிருப்பான் என யோகி பாபு வைத்து கிண்டல் அடித்திருக்கிறார்.

துக்க வீட்டிற்கு வரும் சிலரை வைத்து இவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் இருப்பவர்கள் இன்று ஒப்பாரி வைக்க வந்திருக்கிறார்கள்.. இதுதான் இவர்களது இன்றைய வேலை எனவும் நக்கல் அடித்து இருக்கிறார். அவர்களுக்கு அதிக ஊதியம் கொடுத்தால் ஒப்பாரி வைக்க மாட்டார்கள் என யோகிபாபுவை வைத்து அதையும் கிண்டல் செய்து இருக்கிறார்.

கமர்ஷியல் இல்லாமல் சினிமாத்தனம் இல்லாத வகையில் யதார்த்த வாழ்வியலை கொடுத்திருக்கிறார்.

பாடலும் சரி பாடல் வரிகளும் சரி புரியும் படி எழுதி இருப்பது சிறப்புக்குரியது. ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவு அருமை. நேர்த்தியான உழைப்பை கொடுத்திருக்கிறார்.

விஜய்சேதுபதி – யோகி பாபு இணைந்து நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர்தான் இந்தப்பட இயக்குனர் அருள் செழியன். அந்தப் படத்திலேயே சென்னையில் வாடகைக்கு வீடு தேடும்போது பல நையாண்டி வசனங்களை வைத்திருப்பார்.

இதில் அதைவிட 10 மடங்கு நையாண்டி வசனங்களை வைத்து ஒவ்வொரு காட்சியையும் கைதட்டி ரசிக்க வைக்கிறார்.

திருடனே திருந்தினாலும் கூட போலீஸ் திருந்தாது என்பதை ஒரு பாடல் காட்சியில் கூட வைத்துள்ளார். கான்ஸ்டபிள் கனகா காதலையும் வச்சி செய்து இருக்கிறார்.

அரசியல்வாதிகள் கூட ஐந்து வருடத்தில் ஆட்சி முடித்துக் கொண்டு விடுவார்கள். ஆனால் போலீஸ் அராஜகம் என்றும் தீராது.. ஊழல்களின் ஊற்று அவர்கள் என்பதையும் ஊளையிட்டு சொல்லி இருக்கிறார்.

மாலை முரசு பேப்பர் காலையில் வரும் .. தினத்தந்தி மாலையில் வரும் என்றும் பத்திரிக்கையும் கிண்டல் அடித்திருக்கிறார்.

ஆக குய்கோ… ஐஸ் பெட்டியில் நைஸ் ஸ்டோரி

Kuiko movie review and rating in tamil

80ஸ் பில்டப் விமர்சனம் 3.5/5… பில்டப் பின்றாப்ல

80ஸ் பில்டப் விமர்சனம் 3.5/5… பில்டப் பின்றாப்ல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

1980 களில் நடக்கும் திரைக்கதை இது.. அதாவது 1980இல் ரஜினி நடித்த முரட்டுக்காளை.. 82 இல் கமல் நடித்த சகலகலா வல்லவன் போன்ற படங்கள் வந்த பிறகு நடக்கும் காலகட்டம். அதுபோல 1987இல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு முன் நடப்பதாக காட்சிகள் உள்ளன.

சரி.. அப்படியென்ன கதை..

ஆர் சுந்தர்ராஜன் தாத்தா.. இவரது மகன் ஆடுகளம் நரேன்.. இவரது மகன் சந்தானம்.. சந்தானம் தங்கை சங்கீதா.. இவர்கள் ஜமீன்தார் குடும்பம்.

ஆடுகளம் நரேன் ஒரு குடிகாரன். சந்தானம் ஒரு தீவிர கமல் ரசிகர். இவரின் தாத்தா சுந்தர்ராஜன் தன்னை இளமையாக காட்டிக்கொள்ள ரஜினி ரசிகன் என்று சொல்பவர்.

இந்த டும்பத்தில் ஒரு அதிசய கத்தி இருப்பதால் அதனை திருட மன்சூர் அலிகான் மனோபாலா மொட்ட ராஜேந்திரன் மூவரும் உள்ளே நுழைகின்றனர். அப்போது அந்த கத்தியை ஆர் சுந்தரராஜனிடம் கேட்க கத்தி வேண்டுமானால் எனக்கு என்ன தருவீர்கள் என கேட்கிறார்? அதற்கு வைரங்கள் தருகிறோம் என கொடுக்கின்றனர்.

ஆனால் அவர் அந்த வைரக் கற்களை கற்கண்டுகள் என நினைத்து வாயில் போட்டு விழுங்கி விடுகிறார். சில நிமிடங்களில் ஷாக் அடித்து இறந்தும் போகிறார்.

எனவே போஸ்ட்மாடம் செய்யும் ஆனந்தராஜ் உதவியுடன் மன்சூர் கூட்டணி பாடியை அறுத்து வைரம் எடுக்க திட்டம் போடுகின்றனர்.

மரண செய்தி அறிந்த உறவினர்கள் அனைவரும் கிராமத்திற்கு வருகின்றனர். அப்போது தன் உறவுக்கார பெண் ராதிகா ப்ரீத்தி மீது காதல் கொள்கிறார் சந்தானம்.

இதனை கண்டுபிடிக்கும் சந்தானத்தின் தங்கை சங்கீதா ஒரு சவால் விடுகிறார். தாத்தா சடலத்தை எடுப்பதற்குள் அந்தப் பெண் உன்னை காதலித்தால் நாங்கள் மொட்டை அடித்துக் கொள்கிறோம் என்கின்றனர். இதனையடுத்து சந்தானம் முறைப்பெண் ராதிகாவை இம்ப்ரஸ் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்கிறார்.

ஒரு பக்கம் தங்கை சங்கீதாவோ பிணத்தை வேகமாக எடுக்க பல சதிகளை செய்கிறார். ஆனால் சந்தானமும் சடலத்தை எடுக்க விடாமல் நேரத்தை நீட்டுகிறார்.

இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம்.. எமனாக கே எஸ் ரவிக்குமார், சித்தரகுப்தனாக முனீஸ்காந்த், விசித்திரகுப்தனாக ரெடின் கிங்ஸ்லீ அந்த குடும்பத்திற்குள் வருகின்றனர். அப்போது சுந்தரராஜனின் நிறைவேறாத ஆசைக்காக சில மணி நேரங்கள் காத்திருக்கின்றனர்.

இறுதியில் என்ன ஆனது காதலியை கவர்ந்தாரா சந்தானம்? சடலம் என்ன ஆனது? உறவினர்கள் என்ன செய்தார்கள்? போட்டியில் ஜெயித்தது அண்ணன்? தங்கை? வைரம் என்னாச்சு? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

நடிகர்கள் சந்தானம், ராதிகா பிரித்தி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, ஆடுகளம் நரேன், சங்கீதா, ஆர் சுந்தர்ராஜன், கலைராணி, கூல் சுரேஷ், சேசு, லொள்ளு சபா சுவாமிநாதன், கே எஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடின் கீங்ஸிலீ உள்ளிட்ட கோலிவுட் முன்னணி காமெடி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்

சந்தானம் வழக்கம் போல தன்னுடைய டைமிங் காமெடி மூலம் பில்டப் கொடுத்திருக்கிறார். சந்தானம் நாயகனாக நடிக்க தொடங்கிய பின் பல படங்களில் தாடி வைத்து தான் நடித்து வருகிறார்.

ஆனால் இதில் 1980களில் உள்ள கமல்ஹாசனை போல ஹேர் ஸ்டைல் மீசை வைத்து ரொமான்டிக் ஹீரோவாக மாறி இருக்கிறார். படம் முழுக்க கமல் ரசிகராக வந்தாலும் ஒரே காட்சியில் முரட்டுக்காளை ரஜினியாக மாறி பில்டப் செய்திருக்கிறார்.

நாயகி ராதிகா ப்ரீத்தி.. தங்கை சங்கீதா இருவரும் கோலிவுட்டுக்கு கிடைத்த திறமை வாய்ந்த அழகிய ஹீரோயின்கள். சங்கீதா அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் அவர் போடும் ஆட்டவும் துள்ளலும் ரசிக்க வைக்கிறது.. ராதிகா நாயகிக்கு உரித்தான அப்பாவித்தனத்தை கொடுத்திருக்கிறார்.

மஞ்சக்கிளி ஆனந்த்ராஜ்.. பெண் வேஷம் போட்டு கரடு முரடு ஆண்டியாக வெளுத்து கட்டி இருக்கிறார். இவரது இடுப்பு அழகை ரசித்து அவரது மடியில் ஆடுகளம் நரேன் செய்யும் சில்மிஷங்கள் ரசிகர்களுக்கு காம நெடி விருந்து. அது போல சேசுவின் மனைவி & மயில்சாமி மற்றொரு வகையான காமெடி.

சொல்லப்போனால் ஆனந்தராஜ் & ஆடுகளம் நரேன் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

எமதர்ம கூட்டமாக கே.எஸ்.ரவிக்குமார, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரும் கலகலப்பூட்டி உள்ளனர். ரவிக்குமார் அடிக்கும் ஒன் லைன் பஞ்சுகளும் ரசிக்க வைக்கிறது.

மன்சூர் அலிகான் அடக்கி வாசித்திருக்கிறார். மனோபாலா மொட்ட ராஜேந்திரன் கொஞ்சம் சிரிக்கவும் வைக்கின்றனர்.

இங்கிலீஷ் திருடனாக கூல் சுரேஷ், சுபாஷினி கண்ணன் பழைய ஜோக் தங்கதுரை, மிட்புசாமி, அர்ஜய் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு பயன் படுத்தப்பட்டுள்ளனர்.

கண்ட்ரி நன்றி என தங்கதுரை சொல்லும் போது அதற்கு சந்தானம் கொடுக்கும் அட்டாக் காமெடி வேற லெவல்.

டெக்னீசியன்ஸ்..

Directed by : S KALYAN

Director of Photography : JACOB RATHINARAJ

Music : GHIBRAN

Art : A.R. MOHAN

Editor : M.S.BHARATHI

Action : RAVI STUNT & HARI DINESH

ஜிப்ரான் இசையில் பின்னணி இசை சிறப்பு.. ஒய்யாரி ஒய்யாரி என்ற பாடல் நீண்ட காலம் ரசிகர்களால் ரசிக்கப்படும்.

கலை இயக்குனர் மோகனின் கைவண்ணம் அசத்தல்.. 1980களில் மக்களால் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் பாத்திரங்கள் மின்விசிறி என அனைத்தையும் தேடி கண்டுபிடித்து பயன்படுத்தியிருந்தார்.

ஒளிப்பதிவு ஜேக்கப் ரத்தினராஜ் தன்னுடைய பணியை கவனத்துடன் மேற்கொண்டு ரசிக்கும்படி படமாக்கி கொடுத்திருக்கிறார்.

குலேபகவாலி ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாண் இந்த படத்தையும் கலகலப்பாக கொடுக்க எல்லா வகையிலும் முயற்சித்துள்ளார். எந்த லாஜிக்கும் பார்க்காமல் காமெடியை ரசிக்க விரும்பினால் நிச்சயமாக பில்டப் படத்தை ரசித்து கொண்டாடலாம்.

எமதர்மன் வருவது எந்த உடை அலங்காரமும் இல்லாமல் யதார்த்தமாக வருவதற்கும் ரவிக்குமார் சொல்லும் காரணங்களும் ரசிக்க வைக்கிறது.

கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.. ஒரு பக்கம் சீரியஸ் ஆன படங்கள் ஒரு பக்கம் ஜாலியான படங்கள் என மக்களுக்கு தொடர்ந்து விருந்து கொடுப்பதை நாம் நிச்சயம் பாராட்டலாம்..

படம் முடியும் தருணத்தில் எதிர்பாராத விதமாக இரண்டாம் பார்ட்டுக்கும் லீடு கொடுத்திருப்பது டைரக்டர் டச்..

ஆக.. இந்த 80ஸ் பில்டப்… பில்டப் பின்றாப்ல

80s Buildup movie review and rating in tamil

More Articles
Follows