தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஸ்னா சவேரி, எம்எஸ் பாஸ்கர், பூஜா குமார், ஊர்வசி, சந்தான பாரதி, தளபதி திணேஷ், தலைவாசல் விஜய், சிறப்பு தோற்றத்தில் கமல் மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : லட்சுமண்
படத்தொகுப்பு : ரிச்சர்ட் கெவின்
இயக்கம் : அமுதேஷ்வர்
பி.ஆர்.ஓ.: டைமண்ட் பாபு
தயாரிப்பாளர் : ஈஷான் புரொடக்ஷன்ஸ் துஷ்யந்த், அபிராமி துஷ்யந்த்
கதைக்களம்…
தன் பிள்ளை காளிதாஸ் மீது அதிக பாசம் வைத்துள்ளார் பிரபு.
ஆனால் அவரது அன்பை புரிந்துக் கொள்ளாத காளிதாஸ் அவரிடம் பாசம் காட்டி நடிக்காதே என்று கூறிவிடுகிறார்.
இதனால் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர்.
இதனையறிந்த இவரது உறவினர் ஒய்ஜி மகேந்திரன், அவர்கள் இருவரையும் ஞானி கமல்ஹாசனை சந்திக்க சொல்கிறார்.
அதன்படி இருவரும் சந்திக்க, இருவரின் ஆன்மாக்களை எக்ஸ்சேஞ்ச் செய்து விடுகிறார் கமல்.
மற்றவரின் இடத்தை அவர் இடத்தில் பார்க்க இந்த ஏற்பாடாம்.
அதன்பின் அவர்கள் வாழ்வில் நடக்கும் கதைதான் இப்படம்.
கதாபாத்திரங்கள்…
இது பிரபுவின் 200வது படம். சில நடிகர்கள் இத்தனை படங்களை தொடும்முன் மார்கெட்டை இழந்துவிடுவார்கள்.
ஆனால் இன்றும் தனது மார்கெட்டில் ஸ்டெடியாக இருக்கிறார் பிரபு.
அதுபோல் படத்திலும் இவருக்கு ஸ்டாராங்கான வேடம்தான்.
சாந்தமான அப்பாவாக, இளமை துள்ளல் மகனாக என இருவேடங்களிலும் ஜொலிக்கிறார் பிரபு.
ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழுக்கு அறிமுகம். முதல் படத்திலேயே நன்றாக நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்.
அப்பாவிடம் எரிச்சல் காட்டும் இன்றைய இளைஞர்களின் கண்ணாடியாக பிரதிபலிக்கிறார்.
அரைகுறை ஆடைகளுடன் அசத்துகிறார் ஆஷ்னா சவேரி. ஆனால் படம் முழுக்க ஹீரோ மீது கோபமாகவே வருகிறார். இதனால் இவரது அழகு முகத்தில் ஸ்மைல் மிஸ்ஸிங்.
ஆக்ஷன் காட்சியில் ஆரம்பித்து, பின்னர் அழகு ஆண்ட்டியாக வருகிறார் பூஜாகுமார்.
மலேசியா டானாக வரும் எம்எஸ் பாஸ்கர் வரும் காட்சிகளில் நிச்சயம் சிரிக்காமல் இருக்க முடியாது.
இவர்களுடன் ஊர்வசி, சந்தான பாரதி, தலைவாசல் விஜய், ஒய்ஜி மகேந்திரன் ஆகியோரும் உண்டு.
கௌரவ தோற்றத்தில் கமல். பர்ஸ்ட் டைம் விவேகானந்தர் கெட்டப்பில் வரும் இவர் பின்னர் உலகநாயகனாக வருகிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இமானின் இசையில் மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு, நிலா அதே நிலா பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
மலேசியா நகர அழகை ஒளிப்பதிவாளர் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் அமுதேஷ்வருக்கு இது முதல் படம் என்றாலும் சிறந்த நடிகர்களை சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.
ஆனால் கதையில் கொஞ்சம் புதுமை காட்டியிருக்கலாம். பிரபுவின் சின்ன வாத்தியார் படத்தை பார்த்த ஞாபகம் வருகிறது.
பிரபு மகனாக மாறும்போது மாடர்னாக வருகிறார். ஆனால் காளிதாஸ் அப்பாவாக மாறும்போது, வேஷ்டி அணியவில்லையே. ஏன் சார்?
பிரபுவும் காளிதாசும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பாத்ரூம் தண்ணீர் மட்டுமே போதுமா என்ன? ஒருவேளை ஒரே பாத்ரூம் இருந்தால் என்ன செய்வது?
மொத்தத்தில் மீன் குழம்பும் மண் பானையும்.. ரசிக்க… ருசிக்க… சிரிக்க…