கார்கி விமர்சனம் 4.5/5.. கலியுக கண்ணகி

கார்கி விமர்சனம் 4.5/5.. கலியுக கண்ணகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்கி விமர்சனம் : கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி விமர்சனம் இதோ

ஒன்லைன்…

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் வழக்கில் இந்தப் படத்தின் நாயகியின் தந்தையும் கைது செய்யப்படுகிறார். தந்தை நிரபராதி என்பதை நிரூபிக்க போராடுகிறார் கார்கி.

கதைக்களம்…

சாய் பல்லவி ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரின் தந்தை ஆர்.எஸ்.சிவாஜி… வீட்டில் அப்பா அம்மா மற்றும் தங்கையுடன் வசிக்கிறார் சாய்பல்லவி.

ஒரு அபார்ட்மெண்ட் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார் சிவாஜி. ஒருநாள் அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் சரவணின் மகளை 4 வட இந்தியர்கள் பலாத்காரம் செய்கின்றனர். அவர்களுடன் இணைத்து செக்யூரிட்டி சிவாஜியும் கைது செய்யப்படுகிறார்.

தன் தந்தை அப்படிப்பட்டவர் இல்லை அவர் நிரபராதி என்பதை நிரூபிக்க வக்கீல் காளி வெங்கட்டுடன் இணைந்து போராடுகிறார் கார்கி.

இறுதியில் என்ன ஆனது.? நிரபராதி யார்.? குற்றவாளி யார்.? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பிரேமம் படத்தில் மலர் டீச்சர் ஆக காதலர்களை கவர்ந்த இந்த சாய் பல்லவி அதிலிருந்து பத்து மடங்கு உயர்ந்து கார்கி என்ற கண்ணியமிக்க பெண்ணாக உயர்ந்து நிற்கிறார்.

இந்த படத்திற்கும் சாய் பல்லவிக்கும் பல விருதுகள் காத்திருக்கின்றன.

குட் டச் பேட் டச் என்று தனக்கு சொல்லிக் கொடுத்த தந்தை சிறை கைதியாக இருக்கும் போது தன் தந்தையின் முகம் பார்க்க முடியாமல் சாய்பல்லவி அழும் காட்சிகள் நம் மனதை கலங்கடிக்கும்.

அவர் என் அப்பா… அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று மீடியாவிடமும் பொதுமக்களிடம் சொல்லும் போதும்.. “நீங்க விரும்புனத சொல்றது செய்தி அல்ல.. நடந்தத சொல்றது தான் செய்தி.. என்று மீடியாக்களிடம் சாய்பல்லவி சொல்லும் போது சில மீடியாக்களுக்கு நெத்தியடியாக இருக்கும்.

தனக்காக வாதாட எந்த வக்கீலுமே முன் வராத நிலையில் உதவி செய்யும் காளி வெங்கட் இவர் நடத்தும் விதம் சரியில்லை. ஆனால் தன் அம்மாவிடம் காளிக்காக பரிந்து பேசும் போது அதில் நிவர்த்தி செய்து விடுகிறார். ஆனால் காளியை அலட்சியம் செய்வது ஏனோ.?

நீதிபதியாக நடித்துள்ள திருநங்கை டாக்டர் சுதா என்பவரை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்.. ஒரு பெண்ணின் உடல் வலியும் எனக்கு புரியும் ஒரு ஆணின் திமிரும் எனக்கு புரியும். நான் இரண்டும் கலந்தது தான்.. என்று நீதிபதி கூறும் போது நிச்சயம் கைதட்டாமல் இருக்க மாட்டீர்கள்.

சிவாஜி என்ற பெயரை தன்னுடன் இணைத்து இருப்பதால் தான் என்னவோ நடிப்பிலும் பல மடங்கு உயர்ந்துள்ளார் இந்த சிவாஜி.. கோலமாவு கோகிலா படத்திற்குப் பிறகு இந்த படத்தில் வித்தியாசமான ரோலை ஏற்றுள்ளார்.. ‘எங்கேயோ போய்டீங்க..’ சிவாஜீ சார்.!

கார்கி படத்திற்கு பிறகு காளி வெங்கட் அவர்களை கலக்கல் வெங்கட் என்றும் சொல்லலாம். சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு இதில் சவாலான வேடத்தை ஏற்று சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

அரசு வக்கீலாக கவிதாலயா கிருஷ்ணன் நடித்துள்ளார். படு யதார்த்தமாக அரசு ஊழியர்களின் அலட்சியத்தையும் அவர்களுக்கே உரித்தான ஆணவத்தையும் தன் பாடி லாங்குவேஜ்ஜில் காட்டியுள்ளார் கிருஷ்ணன்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையாக சரவணன் முதல் காட்சிகளும் வேறுபையும் கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்கு நடிப்பையும் கொடுத்துள்ளார்.

பத்திரிக்கையாளராக ஐஸ்வர்யா லட்சுமி பெரிதாக வேலை இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தில் சிறப்பு. அதிலும் குறிப்பாக சாய் பல்லவியின் தங்கைக்கு இவர் சொல்லும் அட்வைஸ் சூப்பர்.

‘கார்கி’ விழாவில் கண்கலங்கிய நடிகை ஐஸ்வர்ய லட்சுமி.; சாய் பல்லவி சமாதானம்

ஜெயபிரகாஷ், லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர். எஸ் ஐ யாக வரும் கேப்டன் பிரதாப் நம்மை கவனிக்க வைக்கிறார்.

டெக்னீஷியன்கள்..

’96’ படத்தில் காதலர்களை தன் இசையால் கட்டிப் போட்ட கோவிந்த் வசந்தா கார்க்கி படத்தில் தன் இசையால் மனதை வருடி செல்கிறார். முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சியில் இதயத்தை எகிறச் செய்யும் லப் டப்… லப் டப்… என்ற சப்தம் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் மனதை விட்டு நீங்காது. ஆனால் பாடல்கள் பெரிதாக கவனம் பெறவில்லை.

ஒளிப்பதிவு- ஸ்ரயந்தி & பிரம்மகிருஷ்ணா அக்கடு.. படத்தொகுப்பு – ஷபிக்முஹமது.. இருவரும் சிறப்பான தேர்வு. எங்கும் குறை காணாத நேர்த்தியான பணி.

இந்த படத்தை இயக்கி தயாரித்துள்ளார் இயக்குநர் கௌதம்
ராமசந்திரன். தமிழ் சினிமாவுக்கு ஒரு தரமான படைப்பாளி கிடைத்துவிட்டார்.

எல்லா குற்றவாளிகளுக்கும் ஒரு குடும்பம் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஆனால் குடும்பத்தில் ஒருவர் எப்படி இருப்பார் வெளியில் எப்படி நடந்து கொள்வார் என்பதை அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.

கிளைமாக்ஸ் இல் இப்படி ஒரு டிஸ்ட்ட் கொடுக்க முடியுமா? என்று எவருமே எதிர்பாராத வகையில் அனைவரையும் உறைய வைத்து விட்டார் இயக்குனர் கௌதம்.

தரமான படங்களை எவரேனும் தயாரித்தால் அதை வாங்கி வெளியிடும் நடிகர் சூர்யாவிற்கும் அதை விநியோகம் செய்யும் சக்திவேலன் ஃபிலிம் ஃபேக்டரிக்கும் மனதார பாராட்டுக்கள்.. வியாபாரம் என்பதை தாண்டி நல்ல படங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று அண்மைக் காலமாக இவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைவராலும் கவனிக்கப்படுகிறது.

ஆக கார்கி… கலியுக கண்ணகி

Gargi Movie Review in Tamil

இரவின் நிழல் விமர்சனம் 3.5/5.; இறவாத நினைவுகள்

இரவின் நிழல் விமர்சனம் 3.5/5.; இறவாத நினைவுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரவின் நிழல் விமர்சனம் : பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான இரவின் நிழல் விமர்சனம் இதோ

ஒன்லைன்..

NON LINEAR SINGLE SHOT MOVIE என பார்த்திபன் மார்த்தட்டி சொல்லி கொள்ளும் படம். அதாவது… நான்-லீனியராக (Non-Linear) தன் கதையை விவரிக்கும் ஒரு படத்தை சிங்கிள் ஷாட்டில் முடித்திருக்கிறார் பார்த்திபன்.

மூன்று மாதங்கள் அதாவது 90 நாட்கள் ஒத்திகை எடுத்து 23 சிங்கிள் ஷாட்டுகளில் எடுத்த திரைப்படம் இரவின் நிழல்.

படம் ஆரம்பிக்கும் போது முதலில் 30 நிமிடம் மேக்கிங் வீடியோ காட்டப்படுகிறது. அதன் பிறகு இடைவேளை விட்டு 90 நிமிடங்கள் படம் ஓடுகிறது.

மேக்கிங் வீடியோவை பார்த்தால் மட்டுமே இந்த படத்தின் வலி புரியும். ஒரு வித்தியாசமான இயக்குனரின் உணர்வு புரியும். ஆரம்பிக்கலாங்களா..??

‘இரவின் நிழல்’ படத்திற்கு உலக அங்கீகாரம்.; இப்படியொரு படமா.? பார்த்திபனை பாராட்டும் பிரபலங்கள்

கதைக்களம்...

நந்து என்ற பார்த்திபன் தனது நடுத்தர வயதில் சில நினைவுகளை அசைப் போடுகிறார். தனது 10 வயது 20 வயது 30 வயது 40 வயது எனது ஒவ்வொரு வயதிலும் தான் சந்தித்த தனக்கு ஏற்பட்ட கசப்பான இனிப்பான அனுபவங்களை அசைபோடும் ஒரு நாள் இரவில் நடைபெறும் பயணமே இந்த ‘இரவின் நிழல்’.

ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு, பிரவீன் குமார், ஜோஷுவா உள்ளிட்டோர் பார்த்திபன் கேரக்டரில் நால்வராக நடித்துள்ளனர்.

நாயகிகளாக பிரிகிடா சகா, சாய் பிரியங்கா ரூத், சிநேகா குமாரி என மூவர் நடித்துள்ளனர். மூவருமே தங்கள் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர்.

இதில் பிரிகிடா தன் நடிப்பில் பின்னி எடுத்துள்ளார். கண்ணழகிலும் கவர்கிறார். இவர் எடுக்கும் முடிவு அதிர்ச்சியானது.

இதில் ஒருவர் பார்த்திபனை தீயவழிக்கு கொண்டு செல்கிறார்.. ஒருவர் நல்வழிக்கு கொண்டு செல்கிறார்.. மற்றொருவர் அந்த நல்பாதையில் பயணிக்க வைக்கிறார்.

இவர்களோடு வரலட்சுமி, ரோபோ சங்கர் ஆகியோரும் உண்டு. பெரிதாக வேலையில்லை. ஆனாலும் நித்தியானந்தா ரஞ்சிதா ஆகியோரை இவர்கள் நினைவுப்படுத்துகின்றனர்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன்… இசை : ஏஆர்.ரஹ்மான்.. கலை : விஜய்முருகன்.

சிங்கிள் ஷாட் என்பதால் அனைத்துக்கும் நிறைய செட்கள் போட வேண்டும். அனைத்தையும் ஒரே இடத்தில் போட வேண்டும்.

அதுவும் நான் லீனியர் என்பதால், அதே நடிகர்கள் மீண்டும் அடுத்த காட்சியில், வேறொரு ஆடையில் தோன்ற வேண்டும். கிட்டத்தட்ட நாடகம் போலத்தான்.

அனைவரும் இணைந்து மிகவும் கடினமான ஒன்றைச் சாத்தியப்படுத்தியுள்ளனர்..

பார்த்திபன் பாணியில் பல வசனங்கள் பளிச்சிடுகின்றன.

செருப்பால அடிப்பான்னு பார்த்தா சிரிப்பால அடிச்சா…பணத்தை அமுக்க தெரிஞ்ச உனக்கு பண எண்ணும் மெஷினை அமுக்க தெரியலையே… செஞ்ச பாவம் கங்கைக்குப் போனா தீரும். சிலர் செஞ்ச பாவம் கங்கையோட போனாலும் தீராது என அசத்தியிருக்கிறார்.

ஆனால் தன் புதிய பாதை பாணியை இன்னும் அவர் மேற்கொண்டு வருவது கொஞ்சம் வருத்தமே. பார்த்திபன் அந்த பார்முலாவை மாற்றிக் கொள்வது நல்லது.

ஒரு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சிறுவன் பின்பு என்ன ஆவான் என்பதை பல படங்களில் பார்த்திபன் காட்டி வருகிறார்.

ஆனால் இந்த படத்தில் பாலியல் பலாத்காரம் என்பது சிறுமிக்கு மட்டுமல்ல சிறுவனுக்கும் ஏற்படும் என்பதை சொல்லிவிட்டார்.

பெற்றோர்கள் தங்கள் ஆண்மகன் விஷயத்திலும் அக்கறை காட்ட வேண்டும் என்று எடுத்துரைத்து இருக்கிறார்.

ஒரு நல்ல படைப்பை கொடுக்கும் போது நல்ல வார்த்தைகளை சேர்த்தால் இன்னும் இனிமையாக இருந்திருக்கும். படத்தில் ஏகப்பட்ட கெட்ட கெட்ட வார்த்தைகள் உள்ளன.

இந்தப் படத்தின் கதைக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை. அதுபோல பாடல்களும் அதன் வரிகளும் நம்மை கவர்கின்றன.

பின்னணியில் இசையில் கதைக்குத் தேவையானதை உணர்ந்து கொடுத்திருக்கிறார்.

முக்கியமாக கலை இயக்குனர் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். ஒவ்வொரு காலகட்டம் சிங்கிள் ஷாட் என்பதால் அது உணர்ந்து ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு விதமான கலையை கொடுத்து 1980 90 2000 என பல்வேறு பரிமாணங்களை கொடுத்துள்ளது சிறப்பு.

அதற்கு ஏற்ப ஒளிப்பதிவாளரும் தன் பணியை சிறப்பாக கொடுத்துள்ளார்.

ஆக இந்த இரவின் நிழல் இறவாத நினைவுகள்

Iravin Nizhal movie review in Tamil

படைப்பாளன் விமர்சனம்.; பயப்படாதவன்

படைப்பாளன் விமர்சனம்.; பயப்படாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தியான் பிரபு, அஷ்மிதா, நிலோபர் , காக்கா முட்டை புகழ் ரமேஷ் மற்றும் விக்கி , வேல்முருகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தியான் பிரபு இயக்கியுள்ள படம் ‘படைப்பாளன்’. தியான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

ஒன்லைன்..

சினிமா வாய்ப்பு தேடி அலையும் உதவி இயக்குனர்களின் பரிதாப நிலையை சொல்லும் படம். பல சிறப்பான கதைகளை படமாக்க முற்படும் ஒரு படைப்பாளனின் வாழ்வியல்.

கதைக்களம்…

சினிமாவில் சாதிக்க நினைக்கும் ஒரு உதவி இயக்குனர் நாயகன் தியான் பிரபு.

ஒரு கதையை தயாரிப்பாளரிடம் சொல்கிறார் தியான் பிரபு.

அந்த தயாரிப்பாளர் இவரின் கதையை மற்றொரு இயக்குனரிடம் கொடுத்து படத்தை தயாரிக்க திட்டமிடுகிறார்.

இதனால் விரக்தியடைந்த தியான் பிரபு, தனது கதையை திருடிவிட்டனர் என்று கூறி நீதிமன்றம் செல்கிறார்.

நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறக் கூறி தயாரிப்பாளர் குரு மிரட்டல் விடுக்கிறார்.

மிரட்டலுக்கு தியான் பிரபு பணிந்தாரா.? அல்லது தனது படைப்பு உரிமைக்காக போராடினாரா என்பதை படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

படத்தின் பெரிய மைனஸ் எதுவென்றால்..

நாம் ரேடியோவின் திரைச்சித்திரம் காண்பது போல உள்ளது…” நான் உள்ள வந்துட்டேன் இல்ல… நல்ல வேளை நான் தப்பிச்சிட்டேன் இது போன்ற டயலாக்குகள் ஏதோ சினிமா பார்க்காத நபர்களுக்கு சொல்வது போல உள்ளது. இதை கூடவா இயக்குனர் கவனிக்கவில்லை..

அதிலும் அந்த பெண் ஆங்கிலத்தில் பேசும் போது இது போன்ற டயலாக்ஸ் ரிப்பீட் ஆகிறது அதை கவனித்திருக்கலாம்.

நாயகன் தியான் பிரபு, உதவி இயக்குனர் கதாபாத்திரத்தில் ஒன்றியிருக்கிறார்.

ஒரு உதவி இயக்குனரின் வலியையும் வேதனையும் யதார்த்தமாக சில நேரம் ஓவராகவே காட்டியிருக்கிறார் தியான் பிரபு.

வில்லனை பழிவாங்கும் காட்சி ரசிக்கலாம்..

படத்தில் நாயகிகளாக அஷ்மிதா, நிலோபர். இருவரும் வழக்கமான நாயகிகள்.. பெரிதாக வேலையில்லை. மஸ்காரா மஸ்காரா மஸ்காரா பாடலுக்கு நடனமாடிய நடிகைக்கு இந்த நிலையா? ஒரு நல்ல பாடலை கொடுத்தால் ரசிகர்கள் என்ஜாய் செய்திருப்பார்கள்.

காக்கா முட்டை விக்கி, ரமேஷ் ஆகிய இருவரும் நாயகனின் நண்பர்களாக வருகிறார்கள்.

வில்லன்களாக வளவன், பாடகர் வேல்முருகன் ஆகியோர் படத்தில் உள்ளனர்.

திரைப்படத்தயாரிப்பாளராக மனோபாலா நடித்திருக்கிறார்.

வேல் முருகனின் ஒளிப்பதிவில் ஒகே ரகம்.. பாலமுரளியின் பின்னணி இசை படத்திற்கு பலம்.

தமிழ் சினிமாவில் நடந்த கதை திருட்டு சம்பவத்தை மையப்படுத்தி படத்தை உருவாக்கியுள்ளனர்.

உதவி இயக்குனர்களின் வலியையும் வேதனையையும் கண்முன்னே நிறுத்தியதற்காக இயக்குனர் தியான் பிரபுவிற்கு பாராட்டுக்கள்.

Padaippaalan movie review in Tamil

பன்னி குட்டி விமர்சனம்.; மூடநம்பிக்கை

பன்னி குட்டி விமர்சனம்.; மூடநம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

பன்னிக்குட்டியால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் கருணாகரன். அதே பன்னு குட்டியால் தன் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்புகிறார் யோகி பாபு.

பன்னிக்குட்டிக்காக இந்த இருவருக்கும் நடக்கும் பிரச்சினையே படத்தின் ஒன்லைன்.

கதைக்களம்…

ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் தங்கைக்கு திருமணம் ஆனாலும் புகுந்த வீட்டில் பல பிரச்சினைகள். எனவே அடிக்கடி அம்மா வீட்டுக்கு வந்து செல்கிறார். அப்பா டி பி கஜேந்திரன் குடிகாரர். இதனாலும் பல பிரச்சினைகள்.

கருணாகரனுக்கு பலமுறை முயன்றும் பெண் கிடைக்கவில்லை. அப்போதுதான் ஒரு பெண் இவர் காதலியாக வாழ்வில் நுழைகிறார்.

தன் பிரச்சினைகள் தீர ஒரு நாள் தனது நண்பர் ராமர் மற்றும் தங்கதுரையுடன் சாமியார் திண்டுக்கல் லியோனியை சந்திக்கிறார்.

லியோனி ஒரு திருட்டு பைக் எடுத்துக்கொண்டு நீங்கள் செல்லுங்கள் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்கிறார.

ஒரு பைக்கை திருடி கொண்டு செல்லும் போது ஒரு பன்னி மீது மோதி விடுகிறார் கருணாகரன். அப்போது முதல் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.

இந்த கதை ஒருபுறம் இருக்க அந்த பன்றி குட்டியை தன் செல்ல பிராணியாக வளர்க்கிறார் யோகி பாபு.

அந்தப் பன்னி குட்டியால் தன் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என யோகி பாபு காத்திருக்கும் நிலையில் அந்த பன்னிக்குட்டி மீது மீண்டும் விபத்து ஏற்படுத்த முயற்சிக்கிறார் கருணாகரன்.

அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்பதுதான் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகனாக கருணாகரன் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நடிப்பில் கவர்கிறார். ஒரு சராசரி நடுத்தர குடும்பத்து இளைஞனாக நடித்திருக்கிறார்.

பன்னிக்குட்டிக்காக அலையும் கேரக்டரில் யோகி பாபு. தன் பிள்ளையாக வளர்த்து அதன் மேல் அன்பு காட்டுகிறார்.

கருணாகரன் மற்றும் யோகி பாபு காதலிகள் நல்ல தேர்வு. அழகிலும் நடிப்பிலும் நம்மை கவர்கின்றனர்.

ராமர் மற்றும் தங்கதுரை இருந்தும் பெரிதாக சிரிப்பு வரவில்லை. ஆனால் ஓரிரு இடங்களில் ஓகே.

இதே கூட்டணியில் சிங்கம் புலியும் வருகிறார். அவர் தன் குடும்பத்துடன் அமர்ந்து கொண்டு ஹோட்டலில் சாப்பிடும் காட்சிகள் நல்ல நகைச்சுவை.

டிபி கஜேந்திரன் & நளினிகாந்த் ஓரிரு காட்சிகளில் வருகின்றனர். இவர்கள் படத்தில் ஏனோ என்பது புரியவில்லை.

20 வருடங்களுக்குப் பிறகு ஐ லியோனி சினிமாவில் நடித்துள்ளார். அவருக்கு பெரிய காட்சிகள் இல்லை என்றாலும் கொடுத்த காட்சியில் சிறப்பு.

டெக்னீஷியன்கள்…

கிட்டத்தட்ட காமெடி நடிகர்கள் மட்டும் பத்து பேர் இருந்தும் படத்தில் காமெடிக்கு பெரிய பஞ்சம் உள்ளது. காமெடி செய்ய மறுத்துவிட்டார் இயக்குனர் அனுச்சரன்.

ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

பின்னணி இசையும் பாடல்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை என்றாலும் ரசிக்கலாம்.

ஆக மொத்தம் இந்த பன்னிக்குட்டி… மூடநம்பிக்கையின் உச்சம்

Panni Kutty movie review in Tamil

கிராண்மா விமர்சனம்.. பயமுறுத்தும் பாட்டி!

கிராண்மா விமர்சனம்.. பயமுறுத்தும் பாட்டி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

கிராண்ட் மதர் என்பதின் சுருக்கம் தான் ‘கிராண்மா’. தமிழில் சொன்னால் பாட்டி.

இந்த படத்தில் விமலா ராமன் அவருடைய மகள் பௌர்ணமி ராஜ் அவரின் பாட்டியாக சர்மிளா.

கதைக்களம்..

பேய் படம் என்றாலே ஓர் அடர்ந்த காட்டுக்குள் யாருமே எளிதில் செல்ல முடியாத அளவிற்கு ஒரு பங்களா ஒன்று இருக்கும் தானே. அது இந்த படத்திலும் உண்டு. இந்த படத்தில் அந்த வீடு மட்டும் தான் கதைக்களம் கதை எல்லாமே.

பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும் ஒரு காட்டுக்குள் ஒரு வீடு.

வழக்கறிஞர் விமலாராமனும் அவருடைய மகள் பௌர்ணமியும் வசிக்கின்றனர்.

இரண்டாம் வகுப்பு படிக்கிற சிறுமி ஆகிய இருவர் மட்டும் உள்ளனர். வீட்டில் ஒரு வாய் பேச முடியாத வேலைக்காரி இருக்கிறாள். ஆனால் அவர் இரவில் அங்கு தங்குவதில்லை.

அந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாடம் நடத்த ஆசிரியராக வருகிறார் சோனியா அகர்வால்.

எங்கள் பாட்டி இந்த வீட்டில் தான் ஆன்மாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறாள் அந்த சிறுமி. இதுவரை எந்த ஆசிரியரும் இந்த வீட்டில் தங்குவதில்லை. பேய்க்கு பயந்து உடனே ஓடி விடுவார்கள் என சொல்லி சோனியாவை மிரட்டுகிறார்.

அதன் பிறகு சோனியா என்ன செய்தார்.? சோனியாவை அந்த பாட்டி ஆவி என்ன செய்தது? அந்த வீட்டில் என்ன என்ன நடந்தது? என்பதுதான் நீதி கதை.

கேரக்டர்கள்..

நீண்ட நாட்களுக்கு பிறகு சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். விதவிதமான ஆடைகளை போட்டு வருகிறார். ஏற்கனவே அவரது முகம் சற்று தூங்கி எழுந்தது போல் தான் இருக்கும். அதுவும் இந்த படத்தில் பயமுறுத்து காட்சிகளில் அது அப்படியே அவருக்கு பொருந்தி உள்ளது .

விமலா ராமன் வீட்டிற்கு கெஸ்ட் போல வந்து செல்கிறார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எதிராளிகளிடம் தைரியமாக சிங்க பெண்ணாக துணிச்சலான வக்கீலாக நடந்து கொள்கிறார்.

சிறுமி பௌர்ணமி நிறையவே கண்டிப்பாக நடந்து கொள்கிறார். நிக்கி வேடத்தில் தயாரிப்பாளர் ஜெயராஜின் மகள் பௌர்ணமி ராஜ் நடித்திருக்கிறார்.

அவரது பாட்டியாக வரும் சர்மிளா தலையில் விக் வைத்தது போல வருகிறார். மேக்கப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

டெக்னீஷியன்கள்…

ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்பதால் கேமராவை மறந்துவும் கூட வெளிய வைக்கவில்லை. சில காட்சிகளில் மட்டும் ட்ரோன் பயன்படுத்தி வீடு மற்றும் காட்டு பங்களாவை காட்டுகின்றனர்.

ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜி பறவைப் பார்வையில் அந்த வீட்டைக் காட்டியிருப்பது அழகு.

இசையமைத்திருக்கும் சங்கர் ஷர்மாவின் பின்னணி இசை கதைக்கேற்ப ஓட்டியிருக்கிறார்.

கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் சிஜின்லால். இறுதியாக ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர்..

எல்லா படங்களிலும் பேய்கள் மனிதனை பயமுறுத்தும்.. மனிதனை கொன்றுவிடும். ஆனால் இந்த படத்தில் பேய்களால் மனிதனை ஒன்றுமே செய்ய முடியாது என்று விளக்கம் கொடுத்துள்ளார் அதை நிச்சயமாக பாராட்டலாம்..

Grandma Movie Review in Tamil

ஃபாரின் சரக்கு விமர்சனம்..; வேலையில்லா மூளைக்காரன்

ஃபாரின் சரக்கு விமர்சனம்..; வேலையில்லா மூளைக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஃபாரின் சரக்கு’.

அறிமுக நடிகர்கள் கோபிநாத், சுந்தர், உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன், அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரித்துள்ளார்.

சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒன்லைன்..

ஃபாரின் சரக்கு என்பதால் இந்த படத்தில் தண்ணி அடிக்கும் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதற்கு ஏமாற்றமே.
ஃபாரினில் இருந்து வரும் பொருட்களை கூட நாம் சரக்கு என்று சொல்வோம் அல்லவா அதுதான் இந்த ஃபாரின் சரக்கு.

கதைக்களம்…

குஜராத் அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். அப்படி என்றாலே அதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்பது அர்த்தம் தானே..

எனவே தமிழக அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் அவரை சில நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதுஒரு புறம் நடந்தாலும் மறுபுறம் குஜராத் அமைச்சரின் மகனை சில கும்பல்கள் துரத்துகின்றன.

இறுதியில் அவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா?, அவர்கள் யார்? குஜராத்

அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்தில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? என்பதை ட்விஸ்டுகளோடும் சொல்லியிருக்கிறார்கள்.

கேரக்டர்கள்…

நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், படத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் சில யுக்திகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.

கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் படம் என்றாலும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மேக்கப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை

மகாலிங்கம் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்திருக்கும் உசேன் அசத்தியிருக்கிறார். சுரேந்தர் சுந்தரபாண்டியனும் கச்சிதம்.

அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோருக்கு பெரிதாக வேலை இல்லை ஆனாலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்கள்.

பிரவீன் ராஜ் இசையில் பாடல்கள் கதை ஓட்டத்திக்கு உதவியுள்ளது.

பின்னணி இசை இரைச்சலை கொடுத்துள்ளது ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளில் ஓகே.

ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜனின் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆனால் படத்திற்கு வெளிச்சத்திற்காக வைக்கப்பட்ட லைட் செட்டிங் கருவிகள் காட்சிகளில் தெரிவது ஏன்? ஒரு முக்கியமாக இடைவேளைக்கு வரும் பிறகு வரும் சண்டை காட்சியில் தெருவிளக்கு மட்டும் இருந்தால் போதும். மற்ற செட் ஸ்டாண்ட் விளக்குகளும் தெரிகிறது.. அதை இயக்குனர் கவனிக்கவில்லையா? அல்லது ஒளிப்பதிவாளர் கவனிக்கவில்லையா?

எடிட்டர் பிரகாஷ்ராஜ் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியிருப்பது பலம்.

’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை வைத்துவிட்டு படத்தில் மது அல்லது புகை காட்சிகளை வைக்காமல் சொன்னது சூப்பர்.

இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி, இளைஞர்களுக்கான மெசஜோடு படத்தை நிறைவு செய்கிறார்.

படிக்காதவனே நிறைய தவறுகளை செய்யும்போதும் அதிகாரத்தில் இருந்து சில தவறுகளை செய்யும்போது படித்த புத்திசாலிகள் என்னென்ன செய்வார்கள் என்பதை இயக்குநர் சொல்லி இருப்பது சிறப்பு.

குறைந்த பட்ஜெட் காரணமாக சிறு சிறு குறைகள் காணப்படுகிறது.

மொத்தத்தில், ‘ஃபாரின் சரக்கு’ ஒருமுறை பருகலாம்

Foreign Sarakku movie review in Tamil

More Articles
Follows