தர்மதுரை விமர்சனம்

தர்மதுரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்ட்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.கே.சுரேஷ், ராஜேஷ், ராதிகா சரத்குமார், கஞ்சா கருப்பு, மதுவந்தி அருண், சௌந்தரராஜா மற்றும் பலர்.
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : எம். சுகுமார்
படத்தொகுப்பு : காசி விஸ்வநாதன்
இயக்கம் : சீனு ராமசாமி
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : ஆர் கே சுரேஷ் (ஸ்டூடியோ 9)

dd 1

கதைக்களம்…

ராதிகாவின் மகன்களில் ஒருவரான விஜய் சேதுபதி (தர்மதுரை) டாக்டர். ஆனால் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு, வீட்டிலும் கலாட்டா செய்து கொண்டு இருக்கிறார்.

இதனால் அவமானப்படும் இவரது சகோதரர்கள், இவரை தீர்த்துக்கட்ட முடிவெடுகின்றனர்.

எனவே தர்மதுரையை வீட்டை விட்டு தற்காலிகமாக போக சொல்கிறார் ராதிகா.

அதன்பின்னர்…. ஒரு டாக்டர் ஏன் இப்படி ஆனார்? என்பதை அழகான குடும்பம் மற்றும் நட்புடன் பரிமாறி இருக்கிறார் சீனுராமசாமி.

dd 6

கதாபாத்திரங்கள்…

விஜய் சேதுபதி தனக்கான உரிய கேரக்டர்களை தேர்ந்தெடுக்கிறாரா? அல்லது தேர்ந்தெடுக்கும் கேரக்டருக்கு தன்னை மாற்றிக் கொள்கிறாரா? எனத் தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் ஸ்கோர் செய்து விடுகிறார் மனிதர்.

குடித்துவிட்டு இவரை போன்று மற்ற ஹீரோக்கள் கலாட்டா செய்வார்களா? என சொல்லமுடியாது. அப்படியொரு யதார்த்தத்தை கொடுத்து இருக்கிறார்.

அதுவும் ஸ்டைலாக இவர் இங்கிலிஷ் பேசுவதே தனி அழகுதான்.

நட்புக்காக உருகுவதும், காதலை இழந்து அழுவதும் என பிரித்து மேய்ந்து இருக்கிறார்.

dd 4

தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே இருவரும் அழகு என்றால் அவர்களின் நடிப்பு அதைவிட அழகு. தோழிகளாக வந்து படத்திற்கும் தோள் கொடுத்து இருக்கிறார்கள்.

அதிலும் ஒரு துளி கூட க்ளாமர் இல்லாமல் தங்கமாக ஜொலிக்கிறார் தமன்னா.

சீனியர் என்றால் விட்டுவிடுவோமா? நானும் இருக்கேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கிராமத்து பெண்ணை ஜெராக்ஸ் எடுத்து வந்திருக்கிறார்.

மாமா நான் உனக்கு செட் ஆவேனா? என் கேட்கும்போது தகுதி மீறிய கல்யாணத்தை அருமையாக சொல்கிறார். அதிலும் அம்மா முன் நின்று கொண்டு அழும் காட்சிகளில் கலங்கடிக்கிறார்.

இவர்களுடன் ராஜேஷ், ராதிகா, அருள்தாஸ், கஞ்சா கருப்பு, மதுவந்தி அருண், எம்எஸ் பாஸ்கர், சௌந்தரராஜா என அனைவரும் சிறப்பான தேர்வு. சரியான நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.

தர்மதுரையின் சகோதரி மகளாக வரும் சிறுமியும் அழகான தேர்வு.

dd 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவனின் இசையில் மக்க கழங்குதுப்பா செம்ம குத்து பாட்டு. அதற்கு தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் வந்து ஆட்டம் போடுகிறார். ,

எந்தப் பக்கம் கானும்போது வானம் ஒன்று…. ஆண்டிப்பட்டி ஆகிய பாடல்கள் அருமையான மெலோடி. இனி நிச்சயம் அடிக்கடி கேட்பீர்கள்.

கலை இயக்குனர் மற்றும் சுகுமாரின் ஒளிப்பதிவில் அத்தனையும் யதார்த்தம். கிராமத்துக்கே இருவரும் நம்மை அழைத்து சென்றுள்ளனர்.

dd 2

படத்தின் ப்ளஸ்…

  •  இயக்குனரின் திரைக்கதை மற்றும் கேரக்டர்கள் தேர்வு
  • கலை இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் படத்தின் பலம்
  • யுவனின் இசையில் இசைஞானியின் பாடல்களை கேட்ட திருப்தி. வைரமுத்துவின் வரிகள் கூடுதல் அழகை சேர்த்துள்ளது.

படத்தின் மைனஸ்…

  • எல்லாம் இருந்தும், படத்தின் நீளம் பெரும் குறையாக உள்ளது.
  • நிறைய நட்சத்திரங்கள் இருப்பதால் அவர்களுக்காக ஒவ்வொன்றையும் சொல்ல முற்பட்டு இருக்கிறார். அதிலும் ஸ்ருஷ்ட்டி டாங்கே காட்சியில் நிறைவு இல்லை.

dd 5

இயக்குனரை பற்றி….

  • காலேஜ் சண்டை நிரந்தரமல்ல. வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கும்போது கைகொடுப்பான் தோழன் என்பதை உணர்த்தும் காட்சி நச்.
  • உண்மையான டாக்டர் நிச்சயம் உயிர்களை காப்பாற்றுவார் என்பதை சொல்லும் சிறுவனுக்கு ஊசி போடும் காட்சி
  • மருத்துவம் படித்த மாணவர்கள் கிராமத்தில் பணிபுரிவது
  • ஆதரவற்ற திருநங்கைக்கு வேலை கொடுத்து, அவர்களையும் மதிப்பது.
  • தமன்னாவின் திருமண வாழ்க்கை சிசு கொலை
  • ஐஸ்வர்யா ராஜேஷ் மீன் பிடிக்கும் காட்சி கூட ரசிக்க வைக்கிறது
  • மணமகன் வரதட்சணை கேட்காவிட்டாலும் அவர்களது குடும்பத்தினர் கேட்பதால் வரும் பிரச்சினைகளை ஆணித்தரமாக அடித்துச் சொல்லியிருக்கிறார்.

என ஒவ்வொரு காட்சியிம் முத்திரை பதித்து இருக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி.

மொத்தத்தில் தர்மதுரை :  எப்பவும் ’வசூல்’ துரைதான்

 

ஜோக்கர் விமர்சனம்

ஜோக்கர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா, மு.ராமசாமி, பாவா செல்லத்துரை மற்றும் பலர்.
இசை : சியோன் ரோல்டன்
ஒளிப்பதிவு : செழியன்
படத்தொகுப்பு : சண்முகம் வேலுசாமி
இயக்கம் : ராஜீ முருகன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : டரீம் வாரியர்ஸ் (எஸ்ஆர் பிரகாஷ்பாபு, எஸ்ஆர் பிரபு)

joker ramya

கதைக்களம்…

இது ஒரு கதை என்பதை விட இதான் நாம் இன்றும் வாழும் வாழ்க்கை என்றே சொல்லலாம். நாட்டில் எது நடந்தாலும் கண்டுக்காமல் செல்லும் நம்மில், ஒருவர் அநியாயமாக நியாயத்திற்காக போராடினால் அவரை பிழைக்கத் தெரியாதவன் என்போம்.

அப்படியான ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கை இப்பதிவு.

நாயகன் குரு சோமசுந்தரம், தன்னை இந்த நாட்டின் ஜனாதிபதி என அழைத்து கொள்கிறார். நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக போரடுகிறார்.

இப்படியான ஒருவர் எதற்காக தன் மனைவியை கருணை கொலை செய்ய சொல்கிறார்? என கேள்விகளோடு இரண்டாம் பகுதி நகர்கிறது.

அதில் அழுத்தமான காரணங்களையும் உணர்வுகளையும் கொடுத்து இந்த சமூகத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜீமுருகன்.

joker tamil movie stills

கதாபாத்திரங்கள்…

ஆரண்யகாண்டம், ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்த குரு சோமசுந்தரம், இதில் மன்னர் மன்னன் கேரக்டரில் ஒரு ஜனாதிபதியாக வாழ்ந்து இருக்கிறார்.

கொடுத்த கேரக்டரில் எந்தவொரு சமரசமும் இல்லாமல் அருமையாக வாழ்ந்திருக்கிறார். லுங்கி கட்டிக் கொண்டு சாதாரண மனிதனை கண் முன் நிறுத்தியிருக்கிறார்.

கோட் அணிந்துவிட்டு அவர் பேசும் பாவனைகள் சிரிக்க வைத்தாலும் நிச்சயம் உங்களை பல முறை யோசிக்க வைக்கும்.

ரம்யா மற்றும் காயத்ரி என இரண்டு நாயகிகள். இவர்களை நீங்கள் நேரில் பார்த்தாலும் உங்களால் அடையாளம் காண முடியாது. அப்படி ஒரு யதார்த்த பதிவை இவர்கள் வழங்கியுள்ளனர்.

கோண மண்டை புடிக்கல என நாயகனை உதறிவிட்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக ரம்யா பாண்டியன் மனம் மாறுவது மலர்ச்சி.

புகுந்த வீட்டில் என்ன வசதி இருக்கிறது? கேட்டுவிட்டு டாய்லெட் பற்றி கேட்கும் இடத்தில் பெண்களின் உணர்வுகளை கண்களில் பிரதிபலிக்கிறார்.

என்னதான் கணவன் சந்தோஷமாக வைத்திருந்தாலும் அடிக்கடி கட்டி முடிக்கப்படாத டாய்லெட்டை பார்க்கும்போது  அவர்களின் மன உளச்சலையும் காட்டியிருக்கிறார்.

தங்கள் குழந்தை சூப்பர் சிங்கரில் பாடனும், நாம டிவியில அழனும் என கூறி டிவிக்களின் டிஆர்வி ரேட்டிங்கையும் சாடியிருக்கிறார்.

joker tamil movie 4

ஹீரோவுக்கு பக்கபலமாக இருந்து உதவும் காயத்ரி, க்ளைமாக்ஸில் நாளை போராட்டமா? நான் தயார் தோழரே என கூறும்போது இசை கேரக்டருக்கே பலம் சேர்த்திருக்கிறார்.

இன்று சமூகத்தில் அதிகளவில் மாற்றத்தை உண்டாக்கும் பேஸ்புக்கை ஒரு நற்பணிக்காக இவர் பயன்படுத்துவது நச்.

அதிலும்  டிவி நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி வருவாரா? என யுவகிருஷ்ணா, அதிஷா உள்ளிட்ட ஆர்வலர்கள் கமெண்ட்ஸ் போடுவதையும் விட்டு வைக்கவில்லை.

மு.ரா. என்று அழைக்கப்படும் மு.ராமசாமி. படத்தின் அடுத்த ஹீரோ. இவர் போல் ஒருவர் போராட நமக்கு துணையாக வரமாட்டாரா?  என எண்ணத் தோன்றும்.

க்ளைமேக்ஸில் இவர் கேட்கும் கேள்விகளுக்கு எவராலும் பதில் சொல்லமுடியாது.

ப்ளாஷ்பேக் காட்சியில் வரும் எழுத்தாளர் பவா செல்லதுரை படத்தின் உயிர்நாடி. காட்சிகள் கொஞ்சம் என்றாலும் மனம் முழுவதும் நிறைந்து நிற்கிறார்.

joker 3

படத்தின் பிளஸ்…

  • மைனஸ் ஒன்றுமில்லாத இப்படத்தில் எல்லாமே ப்ளஸ்தான்.
  • செழியனின் கேமரா கவிதையாய் விரிந்து இருக்கிறது.
  • பறவை பார்வையில் நாயகன் கிராமத்துக்குள் உலா வருவதைக் காண்பித்தல் நச்.
  • ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். என்னங்க சார் உங்க சட்டம்? செல்லம்மா பாடல்கள் மனதில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
  • சதீஷ்குமார் கலையில் கிராமங்களும் அந்த வீடுகளும் கொள்ளை அழகு.
  • இவையில்லாமல்  வசனங்கள், காட்சி அமைப்பு, யதார்த்த பதிவு என அனைத்தையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

joker tamil movie pava

கைகொடுக்கும் முக்கியமான காட்சிகள்…

  • மினரல் வாட்டர் நிறுவனத்தின் பெயர் ‘AMA’, ‘
  • மதுவால் இறந்தவர் இங்கே… மதுவைத் திறந்தவர் எங்கே உள்பட பலர் பேனர்கள்
  • அரசு அலுவலகத்தில் ஆமையை விடுதல்
  • கக்கூஸ் கட்டியதாக அரசிடம் கணக்கு காட்டும் அந்த போட்டோ காட்சிகள்
  • டாய்லெட் இடிந்து விழும் அந்த கனமழை காட்சிகளும் அதன் பின்னணிகளும்

jo 2

கைகொடுக்கும் வசனங்கள்…

  • விமானத்தை கையெடுத்து கும்பிடுதல், அரை நாள் உண்ணாவிரதத்துக்கு ஏன் ஏர் கூலர்?
  • இஸ்லாம் பிறைக்கும் சிவன் பிறைக்கும் முடிச்சு போட்டு பேசும் மேடைபேச்சு
  • குண்டு வைக்கிறவன விட்டுங்க, கோயில்ல உண்டக்கட்டி வாங்குறவன் பிடிங்க?
  • கக்கூஸ்ல ஊழல் பண்ற உங்ககிட்ட கருணையை எப்படி எதிர்பார்க்கிறது?
  • ஹீரோவைவிட வில்லனைத்தான் இப்போ ஜனங்களுக்கு பிடிக்குது
  • நிம்மதியா வாழவும் விடல பேளவும் விடல இவிங்க
  • எந்த போலீஸ் ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?’
  • கக்கூஸ் கட்டுன காசு நாறாது
  • சகாயம் பண்ணல.. அட்லீஸ்ட் சகாயம் மாதிரி பண்ணுங்க
  • நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?
  • உங்களுக்கு நல்லது பண்ணினா நான் பைத்தியக்கரனா? போங்கடா போய் பீயை தின்னுங்க.? லாட்ஜ்ல பிராத்தல் பண்ணுங்க
  • நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்… அவன டிஸ்மிஸ் பண்ண உரிமை இல்லையா….?

இப்படியான சாட்டையடி வசனங்கள் கூடுதல் பலம்.

jo 1

இயக்குனர் ராஜீமுருகன்…

இப்படியான ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதற்கு ஒத்துழைத்த தயாரிப்பாளரையும் பாராட்டியே ஆகவேண்டும்.

பொதுவாக அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், போலீஸ் ஆகியோரை எதிர்க்கும் ஒருவரை மாஸ் ஹீரோவாக நாம் பார்த்திருப்போம். அதுதான் தமிழ் சினிமாவின் சக்ஸஸ் பார்முலாவும் கூட.

ஆனால் இங்கே இவர்களை எதிர்க்கும் ஹீரோவே நீங்கள்தான். நம்மை மறந்து பல முறை கைதட்டல்கள் அள்ளிச் செல்கிறார் இந்த ஹீரோ டைரக்டர்.

மொத்தத்தில் இந்த ஜோக்கர் – இந்தியாவின் ரியல் ஹீரோ

 

 

முடிஞ்சா இவன புடி விமர்சனம்

முடிஞ்சா இவன புடி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சுதீப், நித்யா மேனன், முகேஷ்திவாரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், சரத் லோகிஸ்தவா, நாசர், இமான் அண்ணாச்சி மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : ராஜா ரத்தினம்
படத்தொகுப்பு : பிரவீண் ஆண்டனி
இயக்கம் : கேஎஸ் ரவிக்குமார்
பிஆர்ஓ : ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பாளர் : ராம்பாபு புரொடக்ஷன்ஸ் (சூரப்பா பாபு)

கதைக்களம்…

கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் ஒருவன் போலீஸ் துறைக்கே தண்ணி காட்டுகிறார். முடிஞ்சா இவன புடி என தன் திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

கதாபாத்திரங்கள்…

இதுநாள் வரை நாம் பார்த்த வில்லன் சுதீப், இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.  கன்னடத்தில் இவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

எனவே ஹீரோவுக்கே உரித்தான மாஸ், ஆக்ஷன், மசாலா, சென்டிமெண்ட் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். படு ஸ்டைலிஷாக உயர்ந்து நிற்கிறார்.

காதலிக்காக ஏங்கினாலும், டூயட் காட்சிகளில் கெமிஸ்ட்ரி இல்லை.

நாயகியாக நித்யா மேனன்… அழகு பதுமையாகவும் காதலனை நல்வழிப்படுத்தவும் வந்து செல்கிறார்.

நாசர், பிரகாஷ் ராஜ் ஆகிய இருவரும் தங்களுடைய காட்சிகளில் முத்திரை பதிக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் தந்தையாக தனித்து நிற்கிறார்.

காமெடி காட்சிகளில் சதீஷின் டைமிங் காமெடி கைகொடுக்கிறது.

வில்லன்களாக வரும் முகேஷ் திவாரி, சரத் லோகிஸ்த்வா இருவரும் கொஞ்சமே மிரட்டியிருக்கிறார்கள்.

போலீஸாக வரும் சாய்ரவி மிரட்டலும் காமெடியும் கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இவர்களுடன் அவினாஷ், லதா ராவ், இமான் அண்ணாச்சி, டெல்லி கணேஷ் ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் ஓரிரு பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை பழைய தாளங்களை அடிக்கடி நினைவு படுத்துகிறது. ஆக்ஷன் காட்சிகளில் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது.

ராஜரத்தினம் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி.

படத்தின் ப்ளஸ்…

  • ஒருவரை இருவராக காட்டி கொஞ்சம் திரைக்கதையில் விளையாடியிருக்கிறார் கேஎஸ்ஆர்
  • வில்லனை ஹீரோவாக்கி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மாஸ்.

படத்தின் மைனஸ்…

  • வில்லன் + மன்மதன் படங்களை உல்டா செய்து இருக்கிறார். இரண்டிலும் சென்டிமெண்ட் டச்சிங்கா இருக்கும். இதில் மிஸ்ஸிங்.
  • பாடல்கள் கன்னடத்திற்கு  மேட்ச் ஆகும் போல. தமிழுக்கு அவ்வளவாக ஒட்டவில்லை.

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நாம் ரெகுலராக எதிர்பார்க்கும் விஷயங்கள் இதில் மிஸ்ஸிங். மற்றபடி  முடிஞ்சா இவன புடிச்சி ஒரு முறை பார்க்கலாம்.

மொத்தத்தில் முடிஞ்சா இவன புடி… ஆக்ஷன் பிரியர்களுக்கு புடிக்கும்

 

 

 

 

 

 

திருநாள் விமர்சனம்

திருநாள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜீவா, நயன்தாரா, கருணாஸ், கோபிநாத், மீனாட்சி, சரத் லோகித்ஸ்வா, ஜோ மல்லூரி, ஜெயபாலன், மாரிமுத்து, முனீஷ்காந்த் மற்றும் பலர்.
இசை : ஸ்ரீ
ஒளிப்பதிவு : மகேஷ் முத்துஸ்வாமி
படத்தொகுப்பு : விடி விஜயன்
இயக்கம் : பி.எஸ். ராம்நாத்
பிஆர்ஓ : யுவராஜ்
தயாரிப்பாளர் : கோதண்டபாணி பிலிம்ஸ்

கதைக்களம்…

பிளேட் (ஜீவா) பிரபல ரவுடியிடம் (சரத்) அடியாளாக வேலை செய்கிறார். ரவுடியும் நயன்தாராவின் தந்தையும் (ஜோ மல்லூரி) தொழில்முறை பார்ட்னர்கள்.

ஒரு சூழ்நிலையில் பார்ட்னர்ஷிப் முறிய, நயன்தாராவை காதலிக்கும் ஜீவா தன் வருங்கால மாமனாருடன் செல்கிறார்.

இதனால் ஜீவா வாழ்க்கையில் ஏற்படும் பின் விளைவுகளே படத்தின் கதை.

nayan

கதாபாத்திரங்கள்…

முடியே சீவாத தலை, லுங்கி, டைட் சர்ட் என பிளேடாக நடித்துள்ளார் ஜீவா. சிறுது நாட்களாக ஐடி பாய் ஆக வந்த இவர், மீண்டும் கிராமத்து வேடத்துக்கே சென்றுள்ளார்.

ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்க செய்கிறார். இறுதியாக திருந்தி வாழ நினைக்கும் போது வில்லன் காலில் விழந்து கலங்க வைக்கிறார். மற்ற ஹீரோக்கள் இதுபோல் செய்வது கொஞ்சம் கஷ்டம்தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தாவணியில் வந்து இளம் நெஞ்சங்களை தத்தளிக்க வைக்கிறார் நயன்தாரா.

டீச்சராக வந்து, கண்ணழகிலும் இடையழகிலும் கொஞ்சம் பாடம் எடுக்கிறார். ஆனால் அறிமுக காட்சிகளில் கொஞ்சம் ஓவராக பேசு அதகளம் செய்கிறாரே? அது ஏன்..?

jiiva and nayanthara

வில்லன் சரத், சைலண்டாக வந்து வைலண்டாக மிரட்டியிருக்கிறார்.

இவருடன் படுக்கை அறை காட்சிகளில் வரும் மீனாட்சி சூடேற்றுகிறார்.

கோட் சூட் இல்லாமல், முறுக்கு மீசை தாடியுடன் வருகிறார் விஜய்டிவி கோபிநாத்.

நீயா? நானா? மேடையில் காணாமல் போவது போல் கொஞ்சம் நேரத்திற்கு பிறகு மீண்டும் வருகிறார். ஆனால் வலுவான காட்சிகள் இவருக்கு இல்லை.

தேவையில்லாத காட்சிகளை வெட்டி, முனிஷ்காந்துக்கு காட்சிகளை கொடுத்து சிரிக்க வைத்திருக்கலாம்.

இவர்களுடன் கருணாஸ், ஜோ மல்லுரி, ஜெயபாலன், மாரிமுத்து ஆகியோர் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்கள்.

jiiva

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஸ்ரீயின் இசை படத்திற்கு பலம். பழைய சோறு, பங்காளி, திட்டாதே ஆகிய பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது.

மகேஷ் முத்துஸ்வாமியின் ஒளிப்பதிவு மனதிற்கு ஆறுதல். விடி விஜயன் கத்திரிகோலுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார். நிறையவே வெட்டியிருக்கலாம்.

jiiva action

படத்தின் ப்ளஸ்…

  • நாயகன் ஜீவா, வில்லன் சரத் ஆகியோரின் நடிப்பு
  • குத்துப் பாடலும் ஓகே மெலோடியும் ஓகே.
  • ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துஸ்வாமியின் கிராமத்து காட்சிகள்

படத்தின் மைனஸ்…

  • கத்தியை எடுத்தவனுக்கு கத்தியில்தான் சாவு என்ற தெரிந்த கதை
  • ரவுடி திருந்த நினைப்பான், பின்னர் தொல்லை கொடுக்கும் வில்லன் கோஷ்டியை போட்டுத்தள்ளுவது என்ற பார்முலா
  • பாடல்கள் பக்காவாக இருந்தாலும் தேவையில்லாத இடத்தில் வந்து பொறுமையை சோதிக்கிறது

Thirunaal-movie-images-12

அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் காமெடி, வலுவான கதை என அனைத்தையும் கொடுத்த ராம்நாத், இதில் கமர்ஷியல் மசாலாவை கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் திருநாள்… ஒருமுறை பார்க்கலாம்.

தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்

தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜெய், யாமி கௌதம், சந்தானம், விடிவி கணேஷ், பிரேம்குமார், நாசர், தம்பிராமையா, அஜீதோஷ் ராணா மற்றும் பலர்.
இசை : கார்த்திக்
ஒளிப்பதிவு : சத்யா பொன்மர்
படத்தொகுப்பு : பிரவீன் ஆண்டனி
இயக்கம் : பிரேம்சாய்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : கௌதம்மேனன்

கதைக்களம்…

தனியார் அஞ்சல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார் தமிழ்செல்வன் (ஜெய்).

ஒரு சூழ்நிலையில் மருத்துவதுறையில் நடக்கும் மோசடியின் முக்கியமான ஆதாரம் ஒன்று முக்கியமான நபருக்கு அஞ்சலில் செல்கிறது.

அதனை தடுக்க நினைக்கும் வில்லன் கோஷ்டியினருக்கும் நாயகனுக்கும் நடக்கும் போராட்டமே இப்படத்தின் விறுவிறுப்பான கதை.

கதாபாத்திரங்கள்…

வழக்கம் போல தனக்கே உரித்தான துள்ளல் மற்றும் உற்சாகத்துடன் நடித்துள்ளார் ஜெய்.

காதலிக்காக அஞ்சல் கொண்டு போவதும், அலைவதும் என சின்ன சின்ன விஷயங்கள் மூலம் ரசிக்க வைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

ஆனால் அவரது அழகான ஹேர் ஸ்டைல் இதில் மிஸ்ஸிங். இப்போதெல்லாம் எவரும் தலை சீவுவதே கிடையாது என்பதாலோ?

நாயகி யாமி கௌதமுக்கு பெரிதாக வேலையில்லை என்றாலும் கண்களால் கவர்கிறார். அழகான உடைகள் உடுத்தி அம்சமாக வந்து செல்கிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு காமெடியனாக சந்தானம். முதல் பாதியில் படம் ஆமை வேகத்தில் நகரும் போது இவரே ஆறுதல் தருகிறார்.

இவருடன் விடிவி கணேசும் சேர்ந்து கலகலப்பூட்டியிருக்கிறார்கள்.

நாசர் மற்றும் தம்பி ராமையா ஆகியோருக்கான காட்சிகள் மிகவும் குறைவே. இருந்தபோதிலும் நிறைவான நடிப்பை தந்துள்ளனர்.

வில்லன் அஜீதோஷ் ராணா, டாக்டர் பிரேம்குமார் இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடகர் கார்த்திக்கின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையமைத்துள்ள சந்தீப் மற்றும் அக்சத் நம்மை கவர்கின்றனர்.

க்ளைமாக்சில் அஞ்சல் மாறும்போது வரும் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கிறது.

சத்யா பொன்மரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து.

படத்தின் ப்ளஸ்…

  • விழிப்புணர்வுடன் உள்ள திரைக்கதையும் அதன் விறுவிறுப்பும்
  • சரியாக 113 நிமிடங்களில் அழகான படத்தை கொடுத்திருக்கிறார்
  • நாம் கற்றது எந்த தொழிலாக இருந்தாலும் ஒரு வகையில் கை கொடுக்கும் என உணர்த்திய க்ளைமாக்ஸ் அருமை

படத்தின் மைனஸ்…

  • முதல் பாதியில் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம்
  • பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் முதல் பாதியை ரசிக்க வைத்திருக்கலாம்
  • தன் முதல் படத்திலேயே அருமையான ஸ்கிரிப்டை எடுத்து அதை ரசிக்கும்படி கொடுத்திக்கிறார் இயக்குனர் பிரேம்சாய்

பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக இருந்தாலும் அவரது சாயலே இல்லாமல் படம் செய்திருக்கிறார்.

ஒரு சில இடங்களில் நடக்கும் மருத்துவதுறையின் மோசடிகளை அம்பலப்படுத்தியதற்கு இயக்குனருக்கு அப்ளாஸ் கொடுக்கலாம்.

தன்னுடைய படத்தலைப்புகளை போன்றே அழகான தமிழ் பெயரை வைத்த தயாரிப்பாளர் கௌதம் மேனனை பாராட்டலாம்.

மொத்தத்தில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்… அழகான அஞ்சல்

கபாலி விமர்சனம்

கபாலி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, நாசர், தன்ஷிகா, தினேஷ், கலையரசன், ஜான் விஜய், வின்ஸ்டன் சவோ, கிஷோர் மற்றும் பலர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : முரளி
படத்தொகுப்பு : பிரவீண் கே.எல்.
இயக்கம் : பா. ரஞ்சித்
பிஆர்ஓ : ரியாஸ் கே அகமது மற்றும் டைமண்ட் பாபு
தயாரிப்பாளர் : கலைப்புலி எஸ் தாணு

kabali rajini face broke

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும்.

கபாலியில் அந்த எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்து விண்ணைத் தொட்டு விட்டதாக உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகியுள்ளன.

லிங்கா படத்திற்கு பிறகு கிட்டதட்ட 18 மாதம் கழித்து, ரஜினியை காண ரசிகர்கள் தவம் கிடந்துள்ளனர்.

அவர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்துவிட்டதா என்பதை  பார்ப்போம்…

Kabali Rajini New Photos

கதைக்களம்…

மலேசியாவில் வசிக்கும் தமிழ் நேசன்  (நாசர்) ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க நினைக்கிறார். இதனை எதிர்க்கும் சிலர் நாசரை கொல்ல, கபாலி (ரஜினி) உருவெடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் எதிரிகளை இவர் வெட்டி கொல்ல ஜெயிலுக்கு செல்கிறார்.  எனவே, எதிர்ப்பு இல்லாத 43 என்ற கேங்ஸ்டர் கூட்டம் பெரியளவில் வளர்கிறது.

25 வருடங்களுக்கு பிறகு விடுதலையாகும் கபாலி தன் மக்களுக்கு என்ன செய்கிறார்?  என்பதே இப்படத்தின் கதை.

கதாபாத்திரங்கள்…

ரஜினிக்கே உரித்தான மாஸ் தோற்றம். வயதானாலும் அவரது ஸ்டைலில் குறைவில்லை. கண்ணாடி அணிந்திருந்தாலும் அதை மீறியும் அவரது பார்வையில் ஒரு பவர் இருக்கத்தான் செய்கிறது.

ஜெயிலில் இருந்து விடுதலையானதும் நேராக வில்லனின் அடியாளை சந்திக்கும் காட்சிகள் மாஸ். அடி தூள் கிளப்பியிருக்கிறார்.  பின்னர் மகளுக்காக ஏங்குவதும் மனைவியை தேடி அலைவதும் ரஜினி கண் கலங்க வைக்கிறார்.

ரஜினியின் கருணை இல்ல காட்சிகள் இன்றைய நவீன சமுதாயத்திற்கு தேவை.

ப்ளாஷ்பேக் காட்சியில் நாம் பார்த்து ரசித்த 1980களின் கால ரஜினியை நினைவூட்டுகிறார்.

ரஜினியின் மகளாக தன்ஷிகா பளிச்சிடுகிறார். தந்தையை காப்பாற்ற நினைப்பது முதல் ஒரு ஆண் பிள்ளையாக மாறியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் சாவடி அடித்து அப்ளாஸ் அள்ளுகிறார்.

rajini old look in kabali

ரித்விகா கொஞ்சம் நேரம் வருகிறார். அதில் தன் முத்திரை பதிக்க முயற்சித்திருக்கிறார்.

கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் பொருத்தமான  தேர்வு. இதுவரை இவர்களை இப்படி பார்த்து இல்லை. ஆனால் ஜான் விஜய்யின் வழக்கமான காமெடி இதில் மிஸ்ஸிங்.

அட்டக்கத்தி தினேஷின் அதிவேக சுறுசுறுப்பு சில சமயம் சிரிப்பை வர வைக்கிறது.

மைம் கோபி, விஜே லிங்கேஷ் ஆகியோர் உருவம் தெரியாத அளவிற்கு மாறி மிரட்டியிருக்கிறார்கள்.

கிஷோர் தன் பாத்திரம் அறிந்து அடக்கி வாசித்திருக்கிறார். ஆனால் டீசரில் பார்த்த அந்த வசனம்.. யாருடா? அந்த கபாலி. வரச்சொல்லுடா என்ற டயலாக் படத்திற்கு வேலையில்லை.  கபாலியை நன்றாக தெரிந்தவர் எப்படி அவ்வாறு சொல்ல முடியும். (படத்தில் இது இல்லை என்பதால் ஓகே)

வில்லன் வின்ஸ்டன் சவோ… பேசவே இல்லை. அப்படியே பேசினாலும் தமிழக ஜனங்களுக்கு புரிய போவதில்லை.

நாசருக்கு பெரிதாக வேலையில்லை.  ரஜினி படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தால் யாருக்கு பெரிதாக வேலை இருக்காது. இதிலும் அதேதான்.

kabali vaanam parthen video song

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜி. முரளியின் ஒளிப்பதிவில் மலேசியா காட்சிகளும் பிரம்மாண்டங்களும் ஓகே. ஆனால் எடிட்டர் பிரவீண் முதல் பாதியை நிறையவே வெட்டியிருக்கலாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னணி இசை ஓகே. ஆனால் பாடல்கள் நிச்சயமாக வெகுநாட்களுக்கு மனதில் நிற்காது.

ரஜினியின் இன்ட்ரோ பாடல் போல வரும்… ‘உலகம் ஒருவனுக்கா” தோன்றினாலும் எந்தவிதமான ஆட்டத்தையும் ரசிகர்களிடம் காண முடியவில்லை.

நெருப்புடா பாடல் இடையே இடையே வருவதால் அதையும் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

kabali veera song stills

படத்தின் ப்ளஸ்…

  • ரஜினி ரஜினி ரஜினி – 3 விதமான ரஜினியின் தரிசனம்
  • தன்ஷிகா மற்றும் ராதிகா ஆப்தேவின் நடிப்பு
  • காந்தி சட்டை போடாததற்கும் அம்பேத்கர் கோட் போட்டதற்கும் அரசியல் இருக்கு.. இதுபோன்ற சில  வசனங்கள்
  • அடிமைப்படுத்தப்பட்ட தமிழர்களுக்காக ரஜினி பேசும் வசன காட்சிகள் நச்.
  • பறவையோட தன்மை பறப்பதுதான்.. பறக்க விடு.. வாழ்வோ? சாவோ? அதை அந்த பறவை தீர்மானிக்கட்டும்’ . (வசனம்)

படத்தின் மைனஸ்…

  • இது ரஜினியின் மாஸ் ஆக்ஷன் படமில்லை. அட ரஜினியின் காமெடி கூட இல்லையே.
  • மகிழ்ச்சி இருக்கட்டும். அதற்காக வில்லன் கோபமாக பேசினாலும் மகிழ்ச்சியா?
  • டான் கதையில் இவ்வளவு சென்டிமெண்ட்ஸ் தேவையா?
  • பாடல்கள் வருவதும் போவதும் தெரியவில்லை.

rajini and ranjith

க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதது. ஆனால் ரஞ்சித் அதை முடித்துள்ள விதம் புத்திசாலித்தனம். அதுபோல் இடைவேளை ட்விஸ்ட் ஓகே என்றாலும் அதை யூகிக்க முடிகிறது.

எதற்காக இவ்வளவு பெரிய நட்சத்திர கூட்டத்தை கூட்டியிருக்கிறார் ரஞ்சித் என தெரியவில்லை.  ராம்திலக் எதற்காக வருகிறார்? இவரை போலவே நிறைய மலேசிய முகங்கள் வருகிறார்கள்.

ரஜினிக்கென்று எப்பவும் கிராமத்து ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்படம் முழுக்க மலேசியா, கிளப், தாய்லாந்து பார்ட்டி என் இருப்பதால் நிச்சயம் அவர்களை கவராது.

மேலும் வில்லன்கள் மலாய் மொழி பேசிக்கொண்டிருக்கும்போது தமிழில் சப் டைட்டில் போடுவது ஓகேதான். ஆனால் படிக்காதவர்களின் நிலைமை? இது இயக்குனருக்கு தெரியாதா?

பாட்ஷா மாதிரியான ஒரு மாஸ் ஆக்ஷன் இனி வருமா? என தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இது வழக்கமான ரஜினி படம் இல்லை. ரஜினியை வேறு கோணத்தில் பார்க்க நினைப்பவர்களுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.

கபாலி… மகிழ்ச்சி 60%

More Articles
Follows