அவளுக்கென்ன அழகிய முகம் விமர்சனம்

அவளுக்கென்ன அழகிய முகம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – பூவரசன், அனுபமா பிரகாஷ், விக்கி ஆதித்யன், சத்யா, யோகிபாபு, டி.பி.கஜேந்திரன், சபரி, பவர் ஸ்டார் சீனிவாசன், ரூபாஸ்ரீ,
இயக்குனர் – கேசவன்
இசை – டேவிட் ஷார்ன்
ஓளிப்பதிவு –நவநீதன்
பிஆர்ஓ – ஜான்சன்
தயாரிப்பார் – கதிரவன் ஸ்டூடியோஸ் கதிரவன்

கதைக்களம்…

படத்தில் நான்கு ஹீரோக்கள். எனவே அவர்களுக்கு நான்கு காதல் கதைகள்.

3 நண்பர்களின் காதலும் தோல்வியில் முடிகிறது. (3 காதலும் அவர்களின் பிரிவுக்கான காரணம் அனைத்தும் ரசிக்க வைக்கும்).

இவர்கள் காதலில் தோல்வி அடைந்து விட்டதால், சேர முடியாதவர்களை சேர்த்து வைப்பதே தங்கள் லட்சியம் என்று கொள்கையை வைத்து கொள்கிறார்கள்.

அப்போதுதான் 4வது வரும் நண்பரின் காதலை சேர்த்து வைக்க கேரளாவுக்கு பயணிக்கின்றனர்.

இவர்களின் மற்றொரு நண்பரான பவர் ஸ்டார் காரில் நான்கு பேரும் பயணிக்கிறார்கள்.

அங்கு என்ன ஆனது.? நாயகன் பூவரசனின் காதல் எப்படி பிரிந்தது? நண்பனின் காதலை சேர்த்து வைத்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் நாயகனாக பூவரசன். நாயகியாக அனுபமா பிரகாஷ். எல்லாருக்கும் இது முதல் படம் என்பதால் இன்னும் நடிப்பில் பாஸ் மார்க் பெற முயற்சிக்க வேண்டும். ஜாலியாக நடித்து கொடுத்துவிட்டுள்ளனர்.

நண்பர்களாக நடித்திருப்பவர்கள், அவர்களின் காதலிகள் அந்த பிரிவுகள் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பாக இருக்கும்.

யோகிபாபு, பவர் ஸ்டார் சீனிவாசன் இருந்தும் காமெடியில் இல்லை. ஏதோ ஒரு சில காட்சியில் சிரிப்பு மூட்டுகிறார் யோகிபாபு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டேவிட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்கத் தோனும். நவநீதனின் ஒளிப்பதிவு கச்சிதம்.

சின்ன சின்ன காதல் கதையை இளைஞர்களுக்காக உருவாக்கியுள்ளார் டைரக்டர். முதல் பாதி செல்வதே தெரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகள் நம்பும் படியாக இல்லை.

அவளுக்கென்ன அழகிய முகம்… பார்க்கும் முகமே…

First on Net தொட்ரா விமர்சனம்

First on Net தொட்ரா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிருத்வி பாண்டிராஜன், வீணா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் மற்றும் பலர்.
இசை – உத்தமராஜா
ஒளிப்பதிவு – ஆஞ்சி
படத்தொகுப்பு – ராஜேஷ் கண்ணன்
சண்டைப் பயிற்சி – விக்கி நந்த கோபால்
இயக்கம் – இயக்குநர் பாக்யராஜின் சீடர் மதுராஜ்
பி.ஆர்.ஓ. – அ. ஜான்
தயாரிப்பு – ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் (ஜெய்சந்திரா சரவணக்குமார்)

கதைக்களம்…

தொட்ரா.. தைரியம் இருந்தா தொட்டு பார்ரா என்பார்களாலே அந்த தோனியில் தொட்ரா என்ற தலைப்பில் வந்திருக்கும் படம் தான் இது.

தர்மபுரியில் நடைபெற்ற இளவரசன் திவ்யா ஜாதி கலப்பு திருமணத்தை அடிப்படையாக கொண்டு கமர்சியல் கலந்து ஓர் உண்மைச் சம்பவத்தை படமாக்கியுள்ளார் மதுராஜ்.

அந்த தைரியத்திற்காகவே அவரை பாராட்டி இந்த விமர்சனத்தை தொடங்கலாம்.

தன் ஜாதி கௌரவத்தை காப்பாற்றுவதற்காகவே வாழ்ந்து வருபவர் எம்.எஸ். குமார். இவரின் மனைவி மைனா சூசன்.

குமாருக்கு ஓர் அழகான தங்கை வீணா. அவரை காதலிக்கிறார் நாயகன் பிருத்வி பாண்டியராஜன்.

இவர்களின் காதலுக்கு ஜாதி ஒரு தடையாக இருக்கிறது. இவர்களின் காதலை தெரிந்துக் கொண்ட அண்ணன் தன் தங்கையை அவர்களின் ஜாதியை சேர்ந்த ஒருவருக்கு நிச்சயம் செய்து வைக்கிறார்.

இதனை மீறி வீணாவை அழைத்துக் கொண்டு பறக்கிறார் பிருத்வி.

ஒரு கட்டத்தில் இந்த காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுக்கிறார் வெங்கடேஷ். அதே சமயம் வீணாவை மீது காமம் கொண்டு அவளை அடைய நினைக்கிறார்.

மேலும் பணத்திற்கு ஆசைப்பட்டு அவர்களிடம் நடித்து வீணாவின் அண்ணனிடம் இவர்களை காட்டிக் கொடுக்கிறார்.
அதன்பின்னர் என்ன நடந்தது..? வில்லனிடம் சிக்கினாரா பிருத்வி..? தன் மனைவியை எப்படி காப்பாற்றினார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் விடை கொடுத்துள்ளார் டைரக்டர் மதுராஜ்.

கேரக்டர்கள்…

ஒரு நடுத்தர குடும்பத்து யதார்த்த இளைஞராக பிரகாசிக்கிறார் பிருத்வி. பேப்பர் போட்டு தன் குடும்பதை காப்பாற்று முதல் நாயகியுடன் டூயட் வரை பாடி செல்கிறார். முக பாவனைகளில் இன்னும் முதிர்ச்சி தேவை.

நாயகனை மிஞ்சி தன் மிரட்டல் நடிப்பால் ஜொலிக்கிறார் தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான எம்எஸ். குமார். ஜாதி கௌரவம் ஒரு பக்கம், தங்கை பாசம் மறு பக்கம் என மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார்.

தன் மனைவியின் பணத்தாசை மீறி இறுதியில் இவர் எடுக்கும் ஒரு முடிவு ஒரு பாசமலரை நினைவுப்படுத்தும்.
காதல், அண்ணன் பாசம், ஏக்கம், தவிப்பு என அனைத்தையும் கண்களில் காட்டி நம்மை தவிக்க விட்டுள்ளார் வீணா. நைட்டி, சுடிதார், புடவை என அனைத்து உடையில் நம்மை ஈர்க்கிறார்.

அழகும் திறமையும் நிறைந்த இவர் தமிழ் சினிமாவில் ஒரு வலம் வர வாய்ப்பு உண்டு. ஏனென்றால் இவரது பூர்விகம் கேரளா.

நாயகி வீணாவை வைத்து கேமராவில் கவிதை வாசித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆஞ்சி.

கல்யாணம் என்று வந்துவிட்டால் பெரும்பாலான பெண்கள் காதலனா? குடும்பமா? என தவிப்பார்கள். அதையும் நாசூக்காக தன் நடிப்பில் சொல்லிவிட்டார் வீணா,

உதவி செய்வதுபோல் நடித்து டபுள் கேம் விளையாட்டில் வென்றுள்ளார் வெங்கடேஷ். இவருக்கு பக்கபலமாக கூல் சுரேஷ்.

மைனா படத்தில் போலீஸ் மனைவியாக கலக்கிய சூசன் இதிலும் மிரட்டல். தன் கண்களிலேயே அதிரடி காட்டியுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் உத்தம ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. சிம்பு குரலில் ஒலிக்கும் பக்கு பக்கு என்ற பாடலும் நிச்சயம் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும்.

அதிலும் ஒளிப்பதிவாளர் ஆஞ்சியின் காட்சியமைப்பு அருமை.

படம் முடிகிறது என்று நாம் நினைக்கையில், அதன் பின்னர் ஒரு ட்விஸ்ட் கொடுத்து படத்தை இன்னும் நீட்டிவிட்டார் எடிட்டர். இதனால் இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.

பாக்யராஜ் சீடர் என்றாலும் அவரை போல சமாச்சாரங்களை இடம் பெறாமல் செய்துள்ளார் மதுராஜ்.

எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என முதல் படத்தை ஏனோ தானோ கொடுக்காமல் ஜாதியை ஒழிக்க டைரக்டர் எடுத்துள்ள முயற்சிக்கு ஹாட்ஸ் ஆஃப்.

ஜாதி என விஷ காற்றை நாம் சுவாசித்தால் ஆபத்து என்பதையும் அடித்து சொல்லியிருக்கிறார் மதுராஜ்.

ஒரு நல்லவனை அவன் சாதி அதன் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு கெட்டவன் அவன் சாதியை தன் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொல்(ள்)கிறான் என்பதே டைரக்டர் டச்.

தொட்ரா… ஜாதி வெறியர்களுக்கு காதல் சவுக்கடி

Thodra aka Thodraa movie review rating

60 வயது மாநிறம் விமர்சனம்

60 வயது மாநிறம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா, குமரவேல், மதுமிதா மற்றும் பலர்.
இசை- இளையராஜா
ஒளிப்பதிவு- விவேக் ஆனந்தன்
இயக்கம்- ராதாமோகன்
பி.ஆர்.ஓ. – டைமண்ட் பாபு
தயாரிப்பு – கலைப்புலி எஸ் தாணு

கதைக்களம்…

படத்தின் தலைப்பிலேயே பாதி புரிந்திருக்கும். 60 வயது மதிக்கத்தக்க மாநிறம் கொண்ட ஒருவரை காணவில்லை.

தன் தந்தை பிரகாஷ்ராஜ் இருக்கும் போது அவரின் அன்பை உணராத ஒரு மகன் தன் அப்பாவை தொலைத்துவிட்டு தேடி அலையும் கதை.

மும்பையில் வேலை பார்க்கும் விக்ரம் பிரபு, தன் அப்பாவுக்கு அல்சைமர் நோய் (ஞாபக மறதி) இருப்பதால் ஒரு கேர் சென்டரில் பணம் கொடுத்த தங்க வைக்கிறார்.

ஒருநாள் அப்பாவை அழைத்து கொண்டு ஷாப்பிங் செல்கிறார். திரும்பி வந்து விடும் வேளையில் வாசலிலேயே கொண்டு விட்டு செல்கிறார்.

திசை மாறி போகும் பிரகாஷ்ராஜ் ஒரு கொலைக்கார (சமுத்திரக்கனி) கும்பலிடம் சிக்குகிறார்.

அவரை வைத்துக் கொண்டு குமரவேல் வீட்டில் தஞ்சம் புகுந்து கொள்கிறார் சமுத்திரக்கனி.

அதன்பின்னர் என்ன நடந்தது? மகனுக்கு அப்பா கிடைத்தாரா? சமுத்திரக்கனி போலீசில் சிக்கினாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

விக்ரம் பிரபுக்கு இது ஒரு வித்தியாசமான படம். ஆக்சனில் ஜொலிக்கும் அவர், இதில் சென்டிமெண்ட்டில் கலங்க வைக்கிறார்.

பெற்றோரை கவனிக்காமல் வேலை பிஸி என சுற்றுத் திரியும் மகன்களுக்கு இப்படம் நிச்சயம் ஒரு பாடத்தை கற்பிக்கும்.

நாயகன், நாயகி என எத்தனை கேரக்டர்கள் இருந்தாலும் 60 வயது முதியவராக பிரகாசிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

ஞாபக மறதியால் எல்லாவற்றையும் மறந்து நிற்கும் இவர் தன் அப்பாவித்தன நடிப்பால் அசத்திவிடுகிறார்.

இவர் நல்லவனா? கெட்டவனா? என்று தெரியாத அளவுக்கு சமுத்திரக்கனி. ஆனால் இவரது கேரக்டரில் கொஞ்சம் வலுவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவர் திடீரென திருந்துவது. கொலை செய்யும் தொழிலை கொள்ளும் இவர் மற்றவர்களை கொல்ல நினைக்க யோசிப்பது ஏன்..?

குரங்கு பொம்மையில் வில்லனாக மிரட்டிய குமரவேல் இதில் காமெடியில் கலக்கியிருக்கிறார். சீரியசான படத்தை சிரமம் கொடுக்காமல் கொண்டு செல்கிறார் இந்த மனிதர்.

கொலைக்கார கும்பலை விரட்ட ஒரு ஐடியா. நீ சம்பார் வை அவங்க எல்லாம் ஓடி போய்டுவாங்க என இவர் மதுமிதாவிடம் சொல்லும்போது, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்த போது நான் கவலைப்படல. என்கிட்ட 100 ரூபாய் நோட்டு 2 இருந்துச்சி என சொல்லும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.

மேயாத மான் இந்துஜாவுக்கு இதில் நாயகி வேடம். தேவையான நடிப்பை கொடுத்து கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறார்.

இவர்களுடன் மதுமிதா, சமுத்திரக்கனி உதவியாளர், அவரின் காதலி அனைவரும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விவேக் ஆனந்தனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

இளையராஜா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் சிறப்பு.

அப்பா மகன் பாசத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் டைரக்டர் ராதாமோகன். ஆனால் முதல் பாதியில் இருந்த கலகலப்பு இடையில் இல்லாமல் போய்விடுவதால் கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது.

செட் 1, செட் 2, செட் 3 என்பதுபோல் காட்டிய இடங்களையே காட்டி கொண்டிருப்பதால் சோர்வை தருகிறது.

ஆனால் நிச்சயம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்துள்ள ராதா மோகனை பாராட்டியே ஆக வேண்டும்.

60 வயது மாநிறம்.. பாசத்தின் நிறம்

60 Vayadu Maaniram review rating

ஆருத்ரா விமர்சனம்

ஆருத்ரா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பா விஜய், பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர், ஞானசம்பந்தம், ஒய்.ஜி.மகேந்திரன், விக்னேஷ், யுவா, சஞ்சனா சிங் மற்றும் பலர்.
இசை- வித்யாசாகர்
ஒளிப்பதிவு- பி.எல். சஞ்சய்
எடிட்டிங்- ஷான் லோகேஷ்
கலை-ராம்பிரசாத், ஸ்டண்ட்-கணேஷ்,
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்- பா.விஜய்.
பி.ஆர்.ஓ. – யுவராஜ்
தயாரிப்பு – வில் மேக்கர்ஸ் நிறுவனம்

கதைக்களம்…

தனது மாமா ஞானசம்பந்தம் உடன் இணைந்து அரிதான பழம்பொருட்களை விற்பனை செய்கிறார் பட நாயகன் பாடலாசிரியர் பாடகர் பா. விஜய். இவர்தான் படத்தின் இயக்குனரும் கூட.

மேலும் சமூக சேவையாக பள்ளிகளுக்குச் சென்று ‘குட் டச் பேட் டச்’ விஷயங்களையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்.

இவருக்கு அடுத்த அபார்ட்மெண்டில் புதிதாக குடும்பத்துடன் வந்து நுழைகிறார் டிடக்டிவ் ஏஜென்ட் பாக்யராஜ்.

அப்போது சிட்டியில் உள்ள மாபெருத் நகை கடை அதிபர் கடத்தப்படுகிறார். மேலும் அந்நியன் பட ஸ்டைலில் பல மர்ம கொலைகள் நடக்கிறது.

இதனால் போலீஸ் பாக்கியராஜிடம் உதவி கேட்கிறது.

இதனை துப்பறிய பாக்யராஜ் தனது அசிஸ்டண்ட் ராஜேந்திரன் மற்றும் மச்சினிச்சி தக்சிதா உடன் களம் இறங்குகிறார் பாக்யராஜ்.

அவருக்கு ஒரு சூழ்நிலையில் விஜய் மீது சந்தேகம் வருகிறது. அதன்படி அவரிடம் விசாரிக்க மரணத்திற்கு காரணமான பல முடிச்சுகளை அவிழ்க்கிறார் நாயகன்.

அப்படி என்ன நடந்தது..? கொலையாளி யார்? எதற்காக கொலை செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஸ்ட்ராபெரி படத்திற்கு பிறகு நடிகராக பளிச்சிடுகிறார் பா. விஜய். தங்கை மீது பாசம், நண்பன் மீது நம்பிக்கை என நம்மை கவர்கிறார்.

இறுதியில் கடவுள் மீது ஆக்ரோஷம் காட்டுவதிலும் அசத்தல். நடிகராக கவர்ந்தாலும் இயக்குனராக அதை மிஸ் செய்துவிடுகிறார்.

இவருடன் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர், ஞானசம்பந்தம், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர்களின் பாத்திர படைப்புகளும் அவர்களின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

பாக்யராஜ் அசிஸ்டெண்ட் மொட்டை ராஜேந்தின் சில காட்சிகளில் சிரிப்பு மூட்டுகிறார். ஆனால் இவரின் முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டாமல் இருப்பது நல்லது.

வில்லனாக முன்னாள் ஹீரோ விக்னேஷ் வருகிறார். அவரின் பாத்திரப் படைப்பு கச்சிதம்.

பிளாஸ்பேக் காட்சிகளில் விஜய்யின் தங்கையாக வரும் யுவா ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்கிடுவார். அவ்வளவு அழகு. அதே சமயம் இறுதியில் அனுதாபத்தையும் பெற்று விடுகிறார்.

மெகாலி, சோனி ஷ்ரிஸ்ட்டா, தக்சிதா, சஞ்சனா சிங் போன்றோர்களுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சஞ்சய் லோக்நாத்தின் ஒளிப்பதிவும், ஷான் லோகேஷின் எடிட்டிங்கிலும் குறையில்லை.

வித்யாசாகர் இசையில் ஆருத்ரா பாடல் மற்றும் ‘செல்லம்மா செல்லம்’ பாடல் இனிமையான ராகங்கள். புலி ஒன்னு வேட்டைக்கு போகுது பாடல் தேவையற்ற இடத்தில் வருவதை தவிர்த்திருக்கலாம்.

இரண்டாம் பாதியில் வரும் கிராமத்து காட்சிகள் படத்துடன் ஒன்ற வைக்கிறது. நம் குடும்பத்துடன் ஒன்றாக பழகும் சிலரே நம் வீட்டு சிறுமிகளை / பெண்களை பாலியல் தொல்லை செய்வார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் முதல் பாதியில் அந்நியன் பாணியில் கதை சொல்ல நினைத்து ஆருத்ராவை போரடிக்க வைத்துவிட்டார் டைரக்டர் பா. விஜய்.

ஜலசமாதி, சம்ஹாரம் என புராண கால கதைகளை சொல்லி கதையோட்டத்தை திருப்பி விட்டுள்ளார்.

அதுபோக ஒரு காட்சியில் சிறுவனை வைத்துக் கொண்டு பைக்கில் செல்கிறார் பா.விஜய். அதற்கு ஏன் க்ரீன்மேட்..? பனிமலை காட்சிகளில் கிராபிக்ஸ் அப்பட்டமாக தெரிகிறது.

சிறுமிகள் பாலியல் தொல்லை கதைக்களத்தை அருமையாக சொல்லியிருக்கலாம். அதை விடுத்து திரைக்கதையை கொண்டு சென்ற விதத்தில் கோட்டை விட்டுள்ளார் விஜய்.

இரண்டாம் பாதி கவர்ந்த அளவுக்கு முதல் பாதியில்லை என்பது ஏமாற்றம் தான்.

ஆருத்ரா… பாலியல் தொல்லைக்கு அபாய சங்கு

இமைக்கா நொடிகள் விமர்சனம்

இமைக்கா நொடிகள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் (மகிழ்திருமேனி டப்பிங்), விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், ராஷி கண்ணா, மானஷ்வி (நடிகர் கொட்டாச்சி), உதய் மகேஷ் மற்றும் பலர்.
இயக்கம் – அஜய் ஞானமுத்து
இசை – ஹிப்ஹாப் ஆதி
ஒளிப்பதிவு – ஆர்.டி. ராஜசேகர்
எடிட்டிங் – புவன் ஸ்ரீனிவாஸ்
பி.ஆர்.ஓ. – சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : கேமியோ பிலிம்ஸ்

கதைக்களம்…

அடுத்தடுத்து கடத்தல், கொலைகள் நடக்கிறது. அதை நயன்தாரா தலைமையிலான சிபிஐ டீம் விசாரிக்கும்போது அது 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை பாணியில் ஒத்துப் போகிறது.

மேலும் கடத்தல்காரன் பணத்தை கேட்டு மிரட்டிவிட்டு பணம் கைக்கு வந்த உடன் ஆளை கொலை செய்துவிடுகிறான்.

அந்த கொலைக்காரன் ருத்ரா முன்பே இறந்துவிட்டான். அப்படி என்றால், அவன் பெயரில் கொலைகளை செய்வது யார்?

அவனின் சவால்கள் அனைத்தும் நயன்தாராவுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

ஒருமுறை பணத்தை கொடுத்து விட்டு மறைந்து இருந்து கண்காணிக்கிறது சிபிஐ. அந்த பணத்தை எடுத்து செல்கிறார் அதர்வா.

அதர்வா நயன்தாராவின் தம்பி. அப்படியென்றால் அவர்தான் கொலை செய்கிறாரா? என்ற பாணியில் களம் இறங்குகிறது சிபிஐ டீம்.

நயன்தாராவின் தம்பி அதர்வா என்பதால், நயன்தாரா மீது நம்பிக்கை இழக்கின்றனர். எனவே தேவன் தலைமையிலான அணி விசாரணையில் இறங்குகிறது.

அதன்பின்னர் என்ன ஆனது? அதர்வா ஏன் அப்படி செய்தார்? அவர் கொலை செய்ய காரணம் என்ன? நயன்தாரா பணி என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் நயன்தாரா, அதர்வா ஆகிய பிரபலங்கள் இருந்தாலும் அவர்களை மிஞ்சிய நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார் அனுராக் காஷ்யப்.

இவரை பார்த்தால் நமக்கே கோபம் வெறி வரும். ஐ லவ் கில்லிங் என்று இவர் சொல்லும்போது? என்னடா இவன் சைக்கோ மாதிரி பேசுறானே என கடுப்பேற்றுவார். அப்படியொரு அபாரமான நடிப்பை கொடுத்துள்ளார்.

கவர்ச்சியில்லாமல் ஆக்சனில் கவர்ந்திருக்கிறார் நயன்தாரா. மிரட்டல் பார்வை, மிடுக்கான தோற்றம் என ஈர்க்கிறார்.

முதல்பாதியில் லவ், ப்ரேக் அப் என வலம் வந்தாலும் இரண்டாம் பாதியில் ஆக்சனில் அதிரடி காட்டியுள்ளார் அதர்வா.

நயன்தாராவின் கணவராக சில காட்சிகளில் வருகிறார் விஜய்சேதுபதி. நடிப்பில் குறை இல்லையென்றாலும், இந்த சின்ன வேடத்திற்கு அவர் தேவையா? என கேட்கத் தோன்றுகிறது.

அனுராக் காஷ்யப்புக்கு டப்பிங் கொடுத்துள்ள மகிழ்திருமேனியை பாராட்டியே ஆக வேண்டும். மிரட்டல் குரல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாராவின் மகளாக நடித்துள்ள மானஷ்வி க்யூட். பேச்சிலும்தான். இவர் நடிகர் கொட்டாச்சியின் மகள். ஆனால் சொட்டை சொருகிடுவேன் என ஒரு பெரியவரை பார்த்து பேசுவது எல்லாம் ரொம்பவே ஓவர்.
இதுபோன்ற படைப்புகளால் நம் வீட்டிலுள்ள பிள்ளைகளும் இப்படி பேசுவார்கள்தானே…

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இந்த த்ரில்லர் சப்ஜெக்ட்டுக்கு செம சாப்பாடு போட்டு இருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. (தீனி என்று சொன்னால் கொஞ்சமா இருக்கும்தானே… அதான் சாப்பாடு என்றோம்.. ஹிஹி..ஹி)

விளம்பர இடைவெளி ரெமான்டிக் என்றால், நீயும் நானும் அன்பே இதமான ராகம். காதலிக்காதே பாடல் ஆட்டம் போட வைக்கும் ரகம்.

ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ஆனால் எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன்தான் நம்மை சோதித்து விட்டார்.

படத்தில் அதர்வா ராஷிகண்ணா ரொமான்டிக்கில் கத்திரி போட்டு இருக்கலாம். நயன்தாராவுக்கு ஒரு ப்ளாஷ்பேக், அதர்வாவுக்கு ஒரு ப்ளாஷ்பேக், அனுராக் காஷ்யப்புக்கு ஒரு ப்ளாஷ் பேக். முடியலட சாமி.

ஒரு த்ரில்லர் கதைக்கு தேவையான அனைத்தையும் கொடுக்க முயற்சித்துள்ளார் அஜய் ஞானமுத்து. ஆனால் திரைக் கதையில் நிறைய லாஜிக்கை மறந்துவிட்டார்.

அதர்வாவை மாறி மாறி சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் உடம்பில் காயத்தையும் காட்டவில்லை. கட்டையும் காட்டவில்லை. சட்டை ஓட்டையை மட்டுமே காட்டியிருக்கிறார்கள்.

போலீஸ் படையே துரத்தும் போது அதர்வா சைக்கிள் ஓட்டியே காப்பாற்ற செல்வது எல்லாம் ரொம்பவே ஓவர் பாஸ். இன்னுமா? மக்களை இப்படி எல்லாம் ஏமாத்துறீங்க…?

இமைக்கா நொடிகள்… எடிட்டர் வெட்டினால் இமைக்காமல் பார்க்கலாம்

இமைக்கா நொடிகள் விமர்சனம் (வீடியோ)

கோலமாவு கோகிலா விமர்சனம்

எச்சரிக்கை விமர்சனம்

எச்சரிக்கை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டைம் லைன் சினிமாஸ்’ சார்பாக சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’.

இதில் சத்யராஜ், வரலட்சுமி, கிஷோர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இசை – சுந்தரமூர்த்தி,

ஒளிப்பதிவு – சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்,
படத்தொகுப்பு – கார்த்திக் ஜோகேஷ்,
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்,
எழுத்து, இயக்கம் – கே.எம்.சர்ஜுன். இவர் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குனர்களிடம் பணியாற்றியவர். மா, லட்சுமி உள்ளிட்ட பல குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

கதைக்களம்…

தன் 19 வயதில் தந்தையை கொலை செய்த குற்றத்துக்காக சிறைக்கு சென்று 15 வருடங்கள் கழித்து வீடு திரும்புகிறார் கிஷோர்.

சிறுவயதில் அனாதையாக விடப்பட்ட தனது அக்கா மகன் விவேக் ராஜ்கோபாலை தேடி வருகிறார்.

அதன் பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு பெண்ணை (வரலட்சுமி) கடத்தி கோடிக்கணக்கில் பணம் பறித்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று முடிவு செய்கின்றனர்.

கிஷோரின் தம்பி தன் காதலியான வரலட்சுமியை கடத்த திட்டமிடுகிறார். கிஷோருக்கு தன் தம்பியின் காதலி என்பது தெரியாது.

அதன்படி கடத்துகின்றனர். பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

வரலட்சுமியின் தந்தை திறமையான ரிட்டயர்டு போலீஸ் அதிகாரி சத்யராஜை நாடுகிறார்.

ஆனால் சத்யராஜ்க்கோ மனைவியில்லை. வீட்டில் உடல் நிலை பாதிக்கப்ட்ட தன் மகள் மட்டுமே இருக்கிறாள். முதலில் மறுக்கும் அவர் வீட்டில் இருந்தபடியே உதவ நினைக்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? வரலட்சுமியை காப்பாற்றினாரா? தம்பி காதலியை கடத்தும் நோக்கம் என்ன? கிஷோர் என்ன ஆனார்? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்..

கடத்தல்காரனை பிடிக்க சத்யராஜ் போடும் திட்டங்கள் ரசிக்க வைக்கிறது. மகள் பாசம், கடமை என தடுமாறினாலும் அந்த கம்பீரம் செம.

தன் தம்பி தனக்கு தெரியாமல் போடும் திட்டத்தால் கடைசியில் தடுமாறும் கிஷோர் எடுக்கும் முடிவு நல்ல ட்விஸ்ட்.

கிஷோரின் தம்பியும் அவரது நடிப்பில் கச்சிதம். வரலட்சுமியை பெரும்பாலும் கட்டி போட்டு விட்டனர். எனவே அவரது கேரக்டரில் பெரிய சுவாரஸ்யம் இல்லை.

கடத்தல் விறுவிறுப்பான திரைக்கதையில் சில நேரங்கள் காதல் பாடல் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதை குறைத்திருக்கலாம்.

குறும்படங்களை இயக்கியவர் சர்ஜீன். இதில் க்ளைமாக்ஸில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

க்ளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம் என்றாலும் அது ரசிக்க வைக்கவில்லை.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பாடல்கள் சுமார். பின்னணி இசையில் ஜெயித்து விடுகிறார்.

ஒளிப்பதிவாளர் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்… ஒருமுறை பார்க்கலாம்.

More Articles
Follows