மக்கள கஷ்டப்படுத்தாதீங்க யோகிபாபு… பேய் மாமா விமர்சனம்.. 1.5/5

மக்கள கஷ்டப்படுத்தாதீங்க யோகிபாபு… பேய் மாமா விமர்சனம்.. 1.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகி பாபு நடிப்பில் பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘பேய் மாமா’.

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் இந்த படம் செப்டம்பர் 24ல் ரிலீஸ் என போஸ்டர் வெளியிட்டனர். அப்போதே சர்ச்சையானது.

ஹிந்தியில் விக்கி கெளசல் நடிப்பில் வெளியான ‘பூட்’ பட போஸ்டரை எடுத்து அந்த பட நாயகனின் உடம்பில் யோகிபாபு தலையை வைத்து போஸ்டரை டிசைன் செய்து வெளியிட்டனர்.

போஸ்டருக்கே இந்த நிலைமை என்றால் படத்தின் நிலைமை என்னவென்று யோசியுங்க மக்களே…

கதைக்களம்…

வழக்கமான பேய் பங்களா கதை தான். ஒரு பங்களாவில் எம்எஸ் பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டசில பேய்கள் உள்ளன.

அங்கு யோகிபாபு தன் குடும்பத்துடன் செல்கிறார். அந்த பேய்கள் தங்கள் ப்ளாஷ்பேக்கை சொல்லி யோகிபாபு உடலில் சென்று வில்லன் கோஷ்டிகளை பழி வாங்குகிறது.

கதையில்தான் புதுமை இல்லை. காட்சியில்…சொல்லவே வேண்டாம்.

ரஜினியின் சந்திரமுகி மற்றும் பேட்ட பட சாயலில் யோகிபாபு அறிமுகமாகிறார். பல படங்களில் காட்சிகளை எடுத்து அதில் தன் பாணி டயலாக்கை சொல்லி நம்மை வெறுப்பேற்றுகிறார்.

ஒரு பாடலுக்கு வடிவேலு பேசிய டயலாக்குகளை எல்லாம் வைத்து பாடலாக உருவாக்கியுள்ளனர்.

டயலாக் பஞ்சம் என்பதால் விஜய் அஜித் நடித்த படங்களின் பெயர்களையும் மட்டுமே சொல்லி பேய் பேசுவதாக காட்சிகள் உள்ளன.

புன்னகை மன்னன் கமல் ரேகா காதல் காட்சிகளில் மொட்ட ராஜேந்திரன் ரேகா காட்சிகளை வைத்து சில காட்சிகளை ஓட்டி விடுகின்றனர்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து மக்கு பாஸ் என்கின்றனர். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என (தியேட்டர்கள் வருபவர்களை பழிவாங்குகிறார்கள் போல…) டயலாக் எல்லாம் உள்ளது.

எல்லாரையும் சகட்டு மேனிக்கு வாடா போடா என திட்டுவதை இப்போது வழக்கமாக கொண்டுள்ளார் யோகிபாபு.

இவர் சீனில் வந்தால் காமெடி வரும் என யாரோ சொல்லி இருப்பார்கள் போல.. எனவே வந்து நிற்கிறார். பேசியே கொல்கிறார்.

கொஞ்சம் நேரம் பேயாக வந்து பாய்ந்து பாய்ந்து வேற அடிக்கிறார்.

பேய் படம் என்றால் கோவை சரளா இல்லாமல் இருப்பாரா? அவரும் வந்து செல்கிறார்.

ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் … சக்தி இல்லாமல் படத்தை இயக்கியுள்ளார். காமெடி கூட பெரிதாக கை கொடுக்கவில்லை.

யோகி பாபு மேடைகளில் பேசும்போது சினிமாவுக்கு கஷ்டப்பட்டு வந்ததாக பேசுவார். ஆரம்ப காலங்களில் அதை உணர்ந்து நன்றாக சிரிக்க வைத்து நம்மை மகிழ்வித்தார். ஆனால் தற்போது இவர் நடித்துள்ள சினிமாவை பார்ப்பவர்களை கஷ்டப்படுத்துகிறார்.

யோகிபாபு ஹீரோவாக நடித்த படங்களில் மண்டேலோ மட்டுமே பாராட்டும் படியாகவும் சிந்திக்க வைக்கும் வகையில் இருந்தது என்பதே மறுக்க முடியாத உண்மை.

Yogi Babu in Pei Mamam movie review and rating in Tamil

எவன் ஆண்டாலும் இதான் நிலை…இராமே ஆண்டாலும் இராவணேஆண்டாலும் விமர்சனம்.. 3.75/5

எவன் ஆண்டாலும் இதான் நிலை…இராமே ஆண்டாலும் இராவணேஆண்டாலும் விமர்சனம்.. 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

மழை பொய்த்து போன பூச்சேரி என்ற கிராமத்தில் நாயகன் மிதுன் மாணிக்கம், நாயகி ரம்யா பாண்டியன் இருவரும் கணவன் மனைவியாக வாழ்கின்றனர்.

இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆனாலும் குழந்தை கூட பெற்றுக் கொள்ளாது தாங்கள் வளர்க்கும் காளை மாடுகளை பிள்ளைகள் போல வளர்கின்றனர்.

அதற்கு வெள்ளையன் கருப்பன் என்று பெயரிட்டு அதுவே தங்கள் வாழ்க்கையாக சந்தோஷமாக வாழ்கின்றனர். மாடு பெயரில் லோன் வாங்கினால் காளை காதுகளில் ஓட்டை போடுவார்கள் என்பதால் லோன் கூட வாங்காதவர்கள் இவர்கள். அப்படியென்றால் இவர்களின் பாசத்தை நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள்.

மாடு என்று மற்றவர்கள் சொன்னால் கூட இவர்கள் கோபம்படுவதுண்டு.

ஒருநாள் இரவில் இரண்டு காளை மாடுகளும் காணாமல் போய்விடுகின்றன.

காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் கூட எடுப்பதில்லை. ஆனால் எம்எல்ஏ வீட்டு நாய்குட்டி காணாமல் போனால் எம்எல்ஏ மனைவி உறக்கம் இல்லாமல் தவிக்கிறார் என காவல் துறையினர் அலைந்து நாய்களை தேடுகின்றனர்.

அந்த காளை மாடுகள் கிடைத்ததா? எப்படி காணாமல் போனது?

இந்த காளை மாடுகளும் அதனை சுற்றி அந்த கிராமத்தில் நடக்கும் மாற்றங்கள் என்ன? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் முக்கியமான கேரக்டர்கள் 4 அல்லது 5 தான். மற்றபடி இவையில்லாமல் எடப்பாடி ஸ்டாலின் சீமான் பாஜக விவசாய சங்கத் தலைவர் என அவர்கள் பாணியில் சிலர் வந்து செல்கின்றனர்.

அவற்றை நாம் வரிகளில் சொல்லிவிட முடியாது. நீங்கள் படத்தை பார்த்தால் புரிந்துக் கொள்வீர்கள்.

குன்னி முத்து கேரக்டரில் மிதுன் மாணிக்கம். பிள்ளைகளாக இவர் காளைகளை வளர்க்கும் காட்சிகளிலும் தேடும காட்சிகளிலும் நம்மையும் தேட வைக்கிறார்.

ஜோக்கர் படத்துக்கு பிறகு அசல் கிராமத்து பெண்ணை ஜெராக்ஸ் எடுத்து வந்திருக்கிறார் ரம்யா பாண்டியன், காளைகளே தன் பிள்ளை  என்னும் காட்சியில் தாய் பாசத்தில் ஜொலிக்கிறார்.

மிதுன் மாணிக்கத்தின் நண்பனாக வரும் வடிவேல் முருகன் செம. இவர் அடிக்கும் டைமிங் காமெடிகள் சூப்பர். ஹிந்தி தெரியாது போடா என்பது முதல் அரசியல் நையாண்டி வரை அப்ளாஸ் அள்ளுவார்.

நியூஸ் ரிப்போர்ட்டராக வாணி போஜன். வாவ் சூப்பர். ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு அருமையான நடிப்பில் நம்மை கவர்கிறார்.

ஒரு கிராமத்து சிறுமியிடன் உன் தலை முடி ஏன் இந்த கலரில் இருக்கிறது என கேட்கிறார். என் வீட்டில் தேங்காய் எண்ணெய் இல்லை. ஆமா… உங்க முடியும் செம்பட்டையா இருக்கே உங்க வீட்லயும் எண்ணெய் இல்லையா? என கேட்கும்போது அசத்தல்,

அதுபோல் தன் நியூஸ் சேனலில் இவரது படைப்பு உரிமை பறிக்கப்படும் போது இவர் எடுக்கும் முடிவு சபாஷ் போட வைக்கும்.

மற்றபடி ரம்யா வீட்டு பாட்டி கேரக்டர் சூப்பர். வாரே வா…

டெக்னிஷியன்கள்..

தன் முதல் படத்திலேயே இயக்குனர் அரசில் மூர்த்தி தன் அச்சு முத்திரையை சினிமாவில் பதித்துவிட்டார்.

காளைக்கும் குடும்பத்தினருக்கும் உள்ள பாசத்தை இன்னும் அழுத்தமாகவே காட்டியிருந்தால் காளை காணாமல் போனால் நாமும் அழுதிருப்போம்.

பாடகர் நடிகர் கிரிஷ் இசையமைப்பில் பாடல்கள் சூப்பர். பின்னனி இசையும் காளையோடு சாரி கதையோடு பயணிக்க வைக்கிறது.

சுகுமாரின் ஒளிப்பதிவு கிராமத்தின் காட்சிகளை கண்களுக்கு இதம் சேர்கிறது.

சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்து நம் சமூகத்திற்கு ஒரு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

வரும் 24ஆம் தேதி இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளதால் பார்த்து ரசியுங்கள்.

ஆக… இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்.. எவன் ஆண்டாலும் நாம் மாறினால் மட்டும்தான் இந்த நாடு மறுமலர்ச்சி அடையும் என்பதை இந்த படம் உணர்த்துகிறது.

Raame Aandalum Raavane Aandalum movie review and rating in Tamil

ஓயாத மரண ஓலங்கள்… ஆறாம் நிலம் விமர்சனம்

ஓயாத மரண ஓலங்கள்… ஆறாம் நிலம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்

இலங்கையில் ஓயாத போர்… ஓயாத மரண ஓலங்கள்…. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஆறாத காயம்.. இவைதான் இலங்கையில் வாழும் தமிழர்களின் விதி. இன்னும் பல இன்னல்களை அவர்கள் அனுபவித்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான். இதை உலக நாடுகள் அறிய எடுக்கப்பட்ட படம் தான் இந்த “ஆறாம் நிலம்”.

2008 ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழத்து போர் முடிவுக்கு வந்தபிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்கள் அதன் பிறகு என்ன ஆனார்கள்?

சரணடைந்தவர்கள் பலரை காணாமல் போனவர்கள் என்றும் அறிவித்துள்ளது.

சிங்கள இராணுவத்திடம் சரணடைந்தவர்களும் அவர்களின் குடும்பங்கள் எப்படியான சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்பதையே இந்தப் படம் உணர்வாக உணர்த்தியுள்ளது.

சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த தன் கணவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அவரை தேடும் மனைவி, அப்பா எப்போது வருவார்? என்ற கேள்வியுடன் வாழும் மகள். இவர்களுக்கு ஆதரவாக ஒரு பாட்டி.

அவர்களின் கண்ணீர் துளிகளை நம் கண் முன் நிறுத்தியுள்ளார் இயக்குநர் அனந்த ரமணன்.

இலங்கையில் போர் முடிவுக்கு பிறகு, ஈழத்தமிழர்களுக்கு நல்லமுறையில் வாழ்வளிப்பதாகவும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி வருவதாகவும் சிங்கள அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை என்ன தெரியுமா? போரின் போது பூமிக்கடியில் பதுக்கி வைக்கப்பட்ட கன்னி வெடிகளை எடுப்பது தான்.

ஒரு வேளை தவறுதாக எடுத்துவிட்டால் அதை வெடிக்க நேரிடும். எனவே நமக்கு மரணம் நிச்சயம்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் நவயுகா மற்றும் அவரது மகளாக நடித்திருக்கும் தமிழரசி, இருவரும் யதார்த்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

கன்னிவெடிகளை தேடி எடுக்கும் காட்சிகளில் நமக்கே பயம் தொற்றிக் கொள்ளும்.

பின்னனி இசையில் சிந்தக்கா ஜெயக்கொடி ரசிக்க வைக்கிறார்.

ஆனால் படம் எடுக்கப்பட்ட விதம் நம்மை சோதிக்கிறது. ஒரு டாக்குமெண்டரி படம் தான் என்றாலும் அதை ரசிக்கும் வகையில் கொடுக்க வேண்டாமா? அரசு விளம்பரங்களையும் நாடகங்களையும் பார்த்தால் எப்படி சலிப்பு தட்டுமோ? அதுபோல லைவ் ரெக்கார்ட்டிங் செய்துள்ளதால் வாய்ஸ் சரியாக இல்லை. அதை சரி செய்திருக்கலாம்.

இந்த ‘ஆறாம் நிலம்’ படம் வரும் 24 ஆம் தேதி ஐபிசி தமிழ் (IBC Tamil) யூடியுப் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

 

Aaram Nilam movie review and rating in Tamil

டக் அவுட்டான ஹர்பஜன்சிங்.. லாஸ் ஆன லாஸ்லியா; பிரண்ட்ஷிப் விமர்சனம்

டக் அவுட்டான ஹர்பஜன்சிங்.. லாஸ் ஆன லாஸ்லியா; பிரண்ட்ஷிப் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சினிமாவில் அறிமுகமாகிறார். அதுவும் முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்துள்ளார். (டிக்கிலோனா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அது முதலில் வந்துவிட்டது)

கதைக்களம்..

ஹர்பஜன் சிங், சதீஷ், KPY பாலா மற்றும் சில நண்பர்கள் ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கின்றனர். (காலேஜ்ஜில் இணைந்த பின்தான் இவர்கள் ப்ரெண்ட்ஸ்)

இவர்கள் மெக்கானிக்கல் துறையிலேயே ஒரே ஒரு பெண் படிக்க வருகிறார். அவர்தான் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா. அவருக்கும் சினிமாவில் இதுதான் முதல் படம்.

ஒரு கட்டத்தில் இவர்கள் அனைவரும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸாக மாறுகிறார்கள்.

அப்போதுதான் லாஸ்லியாவிற்கு ஒரு நோய் இருப்பதாகவும் அவர் சில மாதங்களில் இறந்துவிடுவார் என நண்பர்களுக்கு தெரிய வருகிறது.

அதன்பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்? லாஸ்லியாவின் நோய் என்ன? குணமானதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அறிமுக காட்சியிலேயே ரஜினி பாட்டுடன் அதகளம் செய்கிறார் ஹர்பஜன் சிங். அதன்பிறகு தான் ஒன்றுமே பேசாமல் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட் போல படம் முழுக்க வருகிறார்.

இவர்தான் படத்தின் நாயகன் என்பதால் உள்ளே ஒரு டிஷர்ட் போட்டு வெளியே பட்டன் போடாத சட்டையோடு வலம் வருகிறார்.

ஹர்பஜனை படத்திலும் சிங் ஆகவே காட்டியிருக்கிறார்கள். ஆனால் பக்க தமிழில் பேசுகிறார். அதையாவது கவனித்திருக்கலாம் இயக்குனர்.

இதுநாள் வரை சிவகார்த்திகேயன் படங்களில் (அவரது படங்களில் மட்டுமே) காமெடி மட்டுமே செய்துவந்த சதீஷ் இதில் கொஞ்சம் குணச்சித்திர கேரக்டரில் முயற்சித்துள்ளார். இவர்தான் படத்தின் நாயகன் என்று கூட சொல்லலாம்.

பரபரப்பான காட்சியாக காட்டப்படும் காலேஜ் கேட் மூடும் காட்சியில் சதீஷ் கொஞ்சம் பேசுகிறார்.. ஹர்பஜன் டோட்டல் ஆஃப் ஆகிவிடுகிறார்.

காமெடியை விட சென்டிமென்ட் காட்சிகள் சதீஷுக்கு கைகொடுத்துள்ளது.

படவா கோபி மற்றும் பாலா கிரிக்கெட் கமெண்ட் என்ற பெயரில் அறுத்துவிடுகின்றனர். ஹர்பஜனுக்காக கிரிக்கெட் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சரி அதையாவது கிராபிக்ஸ் இல்லாமல் ரியலாக எடுத்திருக்கலாம். அப்பட்டமாக தெரிகிறது.

சுட்டித்தனமாக இருக்க முயற்சித்துள்ளார் லாஸ்லியா. ஆனால் பல இடங்களில் இவரது நடிப்பு செயற்கைத்தனமாக உள்ளது.

கிளைமாக்ஸ் நெருங்கும் போது வருகிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவரது காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

வில்லத்தனத்தில் வெங்கட் சுபா மற்றும் ஜே.எஸ்.கே. சிறப்பு.

டெக்னீஷியன்கள்..

உதயகுமார் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை ஓகே ரகம். சாந்த குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து.

நட்பை மையமாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. ஆனால் இதில் நட்பை இன்னும் அழுத்தமாக காட்டியிருக்கலாம்.

இயக்குனர்கள் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரும் இன்னும் கவனம் செலுத்திருக்க வேண்டும். நட்பும் சரி சென்டிமெண்ட்டும் சரி எதிலும் நம் மனம் அவற்றுடன் ஒன்றவில்லை.

ஹர்பஜன் சிங் இனியாவது கிரிக்கெட்டை போல நடிப்பில் சிக்ஸர் அடிக்க வாழ்த்துவோம். லாஸ்லியா இன்னும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தால் சினிமாவிலும் லேடீ பாஸ் ஆகலாம்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியிருக்கிறார்கள். எனவே படக்குழுவுக்கு வாழ்த்துகள்.

friendship movie review rating

அலட்சியத்தில் விஜய்சேதுபதி.. அப்பா பெயரை கெடுக்கும் தீபக்.. அனபெல் சேதுபதி விமர்சனம் 1.5/5

அலட்சியத்தில் விஜய்சேதுபதி.. அப்பா பெயரை கெடுக்கும் தீபக்.. அனபெல் சேதுபதி விமர்சனம் 1.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திரபிரசாத்;
இசை: கிருஷ்ண கிஷோர்
ஒளிப்பதிவு: ஜார்ஜ் கௌதம்
இயக்கம்: தீபக் சுந்தர்ராஜன் (இவர் நடிகர் சுந்தர்ராஜனின் மகன் முதல் படம்)

கதைக்களம்…

நம் நாடு இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை.

அந்த அரண்மனையில் உள்ளே யாரும் செல்வதில்லை. ஏனென்றால் அங்கு நிறைய பேய்கள் இருக்குதாம்.

ஒரு பௌர்ணமி தினத்தன்று யார் அங்கு தங்கி அங்கு (பேய் உடம்பில் புகுந்துவிடும்) சமைத்து சாப்பிட்டால் அவர்களும் இறந்துவிடு பேயாகிவிடுவார்கள்.

ஒருவேளை அவர்கள் இறக்கவில்லை என்றால் அங்கிருந்து தப்பிவிடலாம் என ஒரு பயங்கர பேய் கதையும் சொல்கிறார்கள்.

அந்த அரண்மனையின் ரகசியம் என்ன? ராஜா ஏன் அப்படி கட்டினார்? அவருக்கு வாரிசுகள் இல்லையா? என்பதே ‘அனபெல் சேதுபதி’ படத்தின் கதை.
இதன்பிறகு ஒரு ப்ளாஷ்பேக் காதல் காட்சியும் இருக்கு.

கேரக்டர்கள்..

படத்தின் நாயகன் யோகிபாபு எனலாம். இவர்தான் பேய்களும் நமக்கும் கதை சொல்கிறார். படம் முழுக்க இவர் வருகிறார். மனிதர் பல சினிமாக்களில் நடிப்பதால் காமெடி செய்ய நேரம் இல்லை போல. கவனிக்கவும்.

படத்தின் பிற்பாதியில் விஜய் சேதுபதி வருகிறார். திருமண வரவேற்புக்கு மணமகன் அணியும் டிரஸ்களை போடுகிறார். ஓ… இவர்தான் ராஜாவாம். அதுபோல டிரெஸ் போட்டத்தான் நம்புவாங்களாம். அந்த அரண்மனையில் ஓரிரு வரை தவிர யாருமே இல்லை.

லாபம், துக்ளக் தர்பார் என சமீபகால படங்களைப் போல இதிலும் அலட்சியமாகவே வருகிறார். நிறைய படங்களில் நடிப்பதால் இவருக்கும் சிரமம் எடுத்து நடிக்கதோன்றவில்லை போலும். இதில் இல்லாமல் நிறைய மேடைகளில் அரசியல் பேச வேண்டும். டிவிக்களில் ஷோ நடத்த வேண்டும். என பிசியாக இருக்க நினைக்கிறார் போலும். கொஞ்சமாச்சும் நடிங்க பாஸ்.

விஜய்சேதுபதி டாப்சி பிளாஷ்பேக் காட்சிகள் நிறைவு. தமிழிலேயே பேசும் விஜய், ஆங்கிலத்திலேயே பேசும் டாப்ஸீ… காதல் மொழி நம்மை ரசிக்க வைக்கிறது.

டாப்சி தன் கேரக்டரில் பெரிதாக குறை வைக்கவில்லை. ஆனால் மற்றவர்கள் நம்மை சோதிக்கும்போது இவரால் என்ன செய்ய முடியும்.

ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திர பிரசாத் இவ்வளவு பேர் இருந்தும் நம்மை சிரிக்க வைக்க ரசிக்க வைக்க யாராலும் முடியவில்லை.

டெக்னீஷியன்கள்..

கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு அரண்மனையின் அழகும் அனபெல் டாப்ஸீயை அழகும் படத்திற்கு ப்ளஸ்.

இசையமைப்பாளர் கிருஷ்ணா கிஷோர் பின்னணி இசையில் சிறப்பு. ஆனால் பாடல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். எனவே மதராசப்பட்டினம் காட்சிகள் போல காதலை அழகாக காட்டியிருக்கிறார்.

திருமதி பழனிச்சாமி, வைதேகி காத்திருந்தாள், ராஜாதி ராஜா என ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனரின் தந்தை சுந்தர்ராஜன். அவரை போல இல்லாவிட்டாலும் அவரின் பெயரை கெடுக்காமல் இருந்தால் சரி.

இயக்குனருக்கு ஒரு அட்வைஸ்.. : ஒரு படம் வெற்றி பெற்றால்தான் பார்ட் 2 வரும். இந்த படத்தின் க்ளைமாக்சில் பார்ட் 2 விரைவில் என்கிறார்கள். அடேய்… கொல்லாதீங்க..

ஏழைகளின் தலைவன்..; கோடியில் ஒருவன் விமர்சனம் 3.5/5

ஏழைகளின் தலைவன்..; கோடியில் ஒருவன் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடியில் ஒருவன் ஆத்மிகா, கோடியில் ஒருவன் பாடல்கள், விஜய் ஆண்டனி கோடியில் ஒருவன், மெட்ரோ இயக்குனர் கோடியில் ஒருவன்

மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மீகா ஜோடியாக நடித்துள்ள படம் கோடியில் ஒருவன்.

கதைக்களம்.

தன் ஏழை தாய் ஆசைப்பட்டப்படி ஒரு ஐஏஎஸ் ஆகி இந்த நாட்டுக்கு சேவை செய்ய நினைக்கிறார் விஜய் ஆண்டனி.

என ஐஏஎஸ் பயிற்சிக்காக சென்னையில் ஒரு சேரி பகுதியில் தங்கி படிக்கிறார். அங்கு போதை பழக்கத்துக்கு அடிமையான சிறார்களை நல்வழிப்படுத்த டியூசன் எடுக்கிறார்.

இதனால் அங்குள்ள போதை விற்பனையாளர்களின் கோபத்திற்கு ஆளாகிறார். அவர்களை சமாளிக்க தனக்கு பதவி வேண்டும் என நினைத்து அரசியலில் நுழைகிறார்.

அவருக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா? அம்மாவின் ஆசையை நிறைவேற்றினாரா? ஐஏஎஸ் லட்சியம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பொறுமை கோபம் ஆக்சன் அம்மா சென்டிமெண்ட் இவை விஜய் ஆண்டனிக்கு அல்வா சாப்பிடுவது போல. எனவே இதில் அனைத்திலும் அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு வீடாக சென்று மாணவனை படிக்க சொல்லி கேட்பது நம்மை கலங்க வைக்கும். கவுன்சிலர் ஆகி இவர் எடுக்கும் நடவடிக்கை ரசிக்க செய்கிறது.

விஜய் ஆண்டனிக்கு சுட்டு போட்டாலும் ரொமான்ஸ் வராது. எனவே நாயகியுடன் லவ் என்பதை மறந்துவிட வேண்டியதுதான்.

ஆத்மிகா அழகாக வருகிறார். ஒரு சில காட்சிகள் வந்து டூயட் பாடுகிறார். நாயகன் லட்சிய பயணத்தில் கொஞ்சம் இவருக்கும் காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

இவர்களுடன் சுல்லு, ராமசந்திர ராஜு, சூப்பர் சுப்புராயன், பூ ராமு, ஆதித்யா கதிர் ஆகியோர் தங்கள் கேரக்டரில்களில் நிறைவு. வில்லன்கள் அனைவரும் மிரட்டல்.

டெக்னீஷியன்கள்…

N.S.உதய குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு. அதுவும் சென்னை நகர சேரி மக்களின் வீடுகளும் அந்த சாக்கடை பகுதிகளை எப்படித்தான் படம் பிடித்தாரோ?

குப்பைகளை விஜய் ஆண்டனி பொறுக்கி எடுக்கும் காட்சி நம்மை முகம் சுளிக்க வைக்கும். அதில் நடித்தவர்கள் பாராட்ட வேண்டும்.

நிவாஸ் K பிரசன்னா இசையில் பாடல்கள் ஓகே ரகம். தாய் சென்டிமெண்ட் பாடல் பாட வைக்கிறது. பின்னணி இசை மிரட்டல். ஆக்சன் காட்சிகள் அனல் பறக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்திவ் தெறிக்க விட்டுள்ளார்.

மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். அதில் செயின் திருடர்களை ஸ்கெட்ச் போட்டு காட்டியிருப்பார்.

இதில் வார்டு மெம்பர் முதல் கவுன்சிலர் வரை… அவர்களின் ஊழல் தோலை உரித்திக் காட்டியிருக்கிறார். ஒரு சட்டசபையை போல மாநகராட்சி அரங்கம் இருப்பதும் அதில் இத்தனை உறுப்பினர்களா? என உள்ளாட்சி பற்றி பாடமும நடத்தியிருக்கிறார்.

ஒரு மாநகராட்சி தேர்தலை இன்ச் பை இன்ச் ஆக காட்டிய இயக்குனர் பொதுத் தேர்தலை டிவியில் மட்டும் காட்டிவிட்டார். நாயகனுக்கு மக்கள் ஆதரவு எப்படி கிடைத்தது? வீட்டை விட்டே வெளியே வராத விதவை தாய் தன் மகனை எப்படி படிக்க வைத்தார்? என்பதற்கான விடைகள் இல்லை.

இந்த லாஜிக்கை எல்லாம் மறந்து தாய் சென்டிமெண்ட் பாட்டு ஆக்சன் சமூக அக்கறை என அனைத்தைதையும் கலந்துக் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

ஆக இந்த “கோடியில் ஒருவன்” ஏழைகளின் தலைவன்.

More Articles
Follows