ஆந்திரா மெஸ் விமர்சனம்

ஆந்திரா மெஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ராஜ்பரத், தேஜஸ்வனி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா, மதி, பாலாஜி, வினோத், அமர், சையத் மற்றும் பலர்.
இயக்கம் – ஜெய், ஒளிப்பதிவு – முகேஷ்.ஜி,
இசை – பிரசாத் பிள்ளை,
படத்தொகுப்பு – பிரபாகர்,
கலை – செந்தில் ராகவன்,
ஆடை வடிவமைப்பு – தாட்ஷா பிள்ளை,
பாடல்கள் – குட்டி ரேவதி, மோகன்ராஜன்,
சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன்
தயாரிப்பு – ஷோபோட் ஸ்டுடியோஸ் நிர்மல் கே.பாலா
பிஆர்ஓ. : குமரேசன்

கதைக்களம்…

ஜெய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம்தான் இது. மேலும் பிரபல ஓவியர் ஏபி. ஸ்ரீதரும் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

ஒரு ஜமீன்தார் அவருடைய இளம் மனைவி. அவர்களிடம் தஞ்சம்டையும் நான்கு திருடர்கள். திருடன் ஒருவனிடம் ஜமீன்தார் மனைவி காதல்.

நான்கு திருடர்களிடம் ஒரு ப்ராஜ்க்டை ஒப்படைக்கிறார் ஒரு தாதா. அந்த திருடர்கள் பணத்துடன் எஸ்கேப் ஆக, அவர்களை தேடி வரும் தாதா. இவர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.

கேரக்டர்கள்…

ஆறடி உயரத்தில் அசத்தலாக நாயகன் ராஜ்பரத். இவர் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ரிச்சி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவரது உயரத்திற்கு ஆக்சன் கொடுத்திருக்கலாம். அது பெரும் குறையாக உள்ளது.

தேஜஸ்வினியும் அவரது தேகமும் ரசிகர்களை ஈர்க்கும். அவரது உயரம் இந்த பட நாயகனுக்கு பொருத்தமாக இருந்தாலும் மற்ற நாயகர்களுக்கு செட்டாகுமா தெரியல. அண்ணாந்து பார்க்க வைக்கிறார்.

தன் உணர்ச்சிகளை கண்களாலே பேசிவிடுகிறார். ரொமான்சிலும் இந்த தேஜஸ்வினி கெத்துதான்.

பூஜா தேவரியா? அவருக்கு இந்த கேரக்டர் தேவையா? என கேட்கத் தோன்றுகிறது. ஒரு சில காட்சிகளில் வந்து செல்கிறார்.

ஏபி ஸ்ரீதர், வினோத் கேரக்டர்கள் கச்சிதம். தேவைக்கு ஏற்ற நடிப்பு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

முகேஷ்.ஜியின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதம்.

காதல் சேர்ந்த அந்த காம காட்சி ரசிகர்களை சூடேற்றும்.

பழைய ஜமீன் வீடு, அந்த சுற்றுபுற பகுதி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. கலை இயக்குனருக்கு கைகொடுக்கலாம்.

பிரசாந்த் பிள்ளையின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். எடிட்டர் பிரபாகர் இன்னும் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம்.

பாளக் ஹூயூமர் பாணியில் படத்தை எடுத்துள்ளார் ஜெய். ஆனால் பட இடங்களில் ஹீயூமர் வரவில்லை.
நிறைய காட்சிகளில் பொறுமை தேவை. வில்லனையும் காமெடியனாக்கி விட்டார்கள்.

ஆந்திரா மெஸ்… சுவை குறைவு

கோலி சோடா 2 விமர்சனம்

கோலி சோடா 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சமுத்திரக்கனி, சுபிக்ஷா, செம்பன் வினோத், பரத் சீனி, இசக்கி பரத், வினோத், க்ருஷா, கௌதம் மேனன், ரோகினி, ரேகா மற்றும் பலர்
இயக்குனர்: விஜய் மில்டன்
இசையமைப்பாளர்: அச்சு ராஜமணி
ஒளிப்பதிவாளர்: ஸ்ரீதர்
எடிட்டர் : தீபக்
சண்டைப் பயிற்சி: சுப்ரீம் சுந்தர்
தயாரிப்பாளர்: பரத் சீனி
பிஆர்ஓ. : சுரேஷ் சந்திரா ரேகா

கதைக்களம்…

படத்தில் 3 ஹீரோஸ், 3 ஹீரோயின்ஸ், 3 வில்லன்ஸ். எனவே கொஞ்சம் விரிவாகவே சொல்லிவிட்டு கதையை ஆரம்பிக்கிறோம்.

மாறன் (பரத் சீனி) (இவர்தான் படத்தயாரிப்பாளர், இயக்குனர் விஜய் மில்டனின் தம்பி).

இவர் ஒரு ரவுடி கும்பலிடம் வேலை செய்கிறார். ரோகினியின் மகள் சுபிக்ஷாவை (படத்தில் இன்பா) காதலிக்கிறார். காதலியின் கட்டாயத்தால் ரவுடி கும்பலிடம் இருந்து விலகி நல்ல வேலைக்கு செல்ல நினைக்கிறார்.

ஹோட்டலில் பரோட்டா போடும் மாஸ்டர். ஆனாலும் பேஸ்கட் பால் விளையாடி சாதிக்க நினைக்கிறார்.

இவர் இசக்கி பரத் (ஒலி) இவரின் காதலி க்ருஷா (படத்தில் மதி)

ரேகாவின் மகன் ஆட்டோ சிவா. சொந்தமாக கார் வாங்கி கால் டாக்ஸிக்கு ஓட்ட ஆசைப்படுகிறார். இவர் ஒரு பெரியவருக்கு உதவ அவரின் பேத்தி இவருக்கு காதலியாகிறார்.

இவர்கள் மூவருக்கும் மற்றொருவரை தெரியாது. ஆனால் இந்த 3 பேரை தெரிந்த ஒரே நபர் சமுத்திரக்கனி.

ஏதோ ஒரு சூழ்நிலையில் இவர்களை சந்திக்கும் முன்னாள் போலீஸ்காரர் சமுத்திரக்கனி இந்த இளைஞர்களுக்கு உதவுகிறார்.

மூவரும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி செல்கையில் மூவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு வில்லன்கள் குறுக்கிடுகின்றனர்.

இதனால் அந்த இளைஞர்களின் வாழ்க்கையே நாசமாகிறது.

ஒரு சூழ்நிலையில் இந்த 3 வில்லன்களுக்கும் தொடர்ப்பு இருப்பது தெரிய வருகிறது.

அதன் பின்னர் ஒரு புள்ளியில் இணையும் இவர்கள் மூவரும் எப்படி அந்த வில்லன்களை பழிவாங்குகிறார்கள்? என்பதே இந்த கோலி சோடா 2.

கேரக்டர்கள்…

3 ஹீரோக்களுக்கும் சரி சமமான கேரக்டர்களை கொடுத்துள்ளார் விஜய் மில்டன். போட்டி அதிகமாக இருப்பதால் அவர்களே போட்டி போட்டு நடித்துள்ளனர்.

அதுபோல் 3 வில்லன்களும் செம. அதிலும் தில்லை கேரக்டரில் வரும் செம்பன் மிரட்டல் வில்லன்.

காலாவில் குடிகாரராக வரும் சமுத்திரக்கனிக்கு இதிலும் அதே கேரக்டர்தான். ஆனால் பக்குவப்பட்ட நடிப்பில் பளிச்சிடுகிறார்.

முதலில் இவரது கேரக்டர் ஓவர் அட்வைஸ் செய்வது போல தோன்றினாலும் பின்னர் அதுவே அந்த இளைஞர்களுக்கு வழிகாட்டுவது நச்.

அம்மாக்களாக வரும் ரோகினி மற்றும் ரேகா கேரக்டர்களில் கச்சிதம். ரோகினி தனது பிளாஷ்பேக்கை ஓவியங்கள் மூலம் தன் மருமகனிடம் சொல்வது ரசிக்கும் ரகம்.

நாயகிகளில் சுபிக்ஷாவின் அழகு சுகம். கிருஷாவும் நம்மை கவனிக்க வைக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் கவுதம் மேனன் சில காட்சிகளில் வந்தாலும் பார்வையாலே மிரட்டுகிறார்.

பார்வையிழந்த அந்த சிறுமியும் பாராட்டுக்குரியவர்தான்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கௌம்பு பாடல் நிச்சயம் பட்டைய கிளப்பும். பொண்டாட்டி பாடலும் காட்சி அமைப்புகளும் அருமை.

அச்சு ராஜமணி பின்னணி இசை பேசப்படும். தேவைக்கு ஏற்ப பயன்படுத்தியுள்ளார்.

சண்டைக் காட்சிகளை கமர்சியலாக கொடுக்காமல் படு யதார்த்தமாக கொடுத்துள்ளார். ஆனால் அந்த காட்சிகளின் நடுவே 3 இளைஞர்களும் வசனம் பேசுவதால் எதை கவனிப்பது என்றே தெரியவில்லை. அதிலும் சண்டைப் போட்டுக் கொண்டே பேசுவது புரியவில்லை.

ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்திற்கு பலம்.

ஒருவரின் காட்சியை முடித்துவிட்டு மற்றொருவரின் காட்சியை காட்டாமல் அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் காட்டி காட்டி காட்சிகளை நகர்த்தியுள்ளார். இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்டலாம்.

இது ரசிகர்களுக்கு முதலில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இறுதியில் எல்லாவற்றையும் இணைத்துவிடுகிறார் டைரக்டர்.

முதல் பாகத்தில் சிறுவர்களாக இருந்தாலும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் வகையில் இருந்தது. இந்த 2ஆம் பாகத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங்.

கோலி சோடா 2… இந்த ஜிஎஸ்டி-யை மக்கள் ஏற்பார்கள்

First on Net காலா விமர்சனம்

First on Net காலா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா மற்றும் பலர்.

தொழில் நுட்பக்குழு:

இயக்குனர் – பா. ரஞ்சித்
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – முரளி . ஜி
கலை இயக்கம் – டி.ராமலிங்கம்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
சவுண்ட் டிசைன்ஸ் – ஆண்டனி பி ஜெயரூபன்
கிரியேட்டிவ் டிசைனர் – வின்சி ராஜ்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
ஆடை வடிவமைப்பு – அனு வர்தன், சுபிகா
காஸ்ட்யூம்ஸ் – செல்வம்
ஒப்பனை – பானு பாஷ்யம், ராஜா
ஸ்டில்ஸ் – ஆர்.எஸ்.ராஜா
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், ஆர். ராகேஷ்
நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.வினோத்குமார்
தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது

kaala rajini muslim

கதைக்களம்…

முதலில் அனிமேசனில் ஒன் லைன் கதை சொல்லப்படுகிறது. அதில் நிலத்தின் பெருமைகள் சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் இன்றைய காலகட்டத்திற்கு கதையை கொண்டு வருகிறார் இயக்குனர்.

திருநெல்வேலியில் இருந்து மும்பை தாராவி பகுதிக்கு சென்று வாழ்கிறார் காலா என்ற கரிகாலன்.

அது சார்ந்த பகுதிகளின் முன்னேற்றத்திற்கு இவர்களே கடுமையாக உழைக்கிறார்கள்.

ஒரு பக்கம் மனைவி மற்றும் மகன்கள் பேரக்குழந்தைகள் சந்தோஷமாக வாழ்கிறார் காலா.

ஒரு சூழ்நிலையில் தன்னை நம்பி வாழும் மக்களையும் அவர்கள் வாழும் நிலத்தையும் ரியல் எஸ்டேட் மாஃபியா புரோக்கர்களிடமிருந்தும் அரசியல்வாதிகளிடம் இருந்து மீட்க போராடுகிறார்.

அதாவது இந்த பகுதி மக்களை காலி செய்துவிட்டு சேரி தாராவியை டிஜிட்டல் தாராவியை ஆக்க முயற்சிக்கிறார்கள்.

அதிகார வர்க்கத்தை மக்கள் சக்தியுடன் எப்படி முறியடிக்கிறார்? என்பதே இந்த காலாவின் முழு ரவுடித்தனம்.
rajini kaala gang

கேரக்டர்கள்…

ரஜினியின் அறிமுகம் கேஷ்வலாக இருந்தாலும் நிச்சயம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

ரஜினிக்கு மாஸ், ஆக்சன், ஸ்டைல், ரொமான்ஸ் எல்லாம் சொல்லித்தரனுமா? புகுந்து விளையாடி இருக்கிறார்.

இதில் குடும்ப சென்டிமெண்ட்டிலும், சேரி மக்களின் போராட்டக் களத்திலும் காலாவாக ஜொலிக்கிறார்.

சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன் என ஒரு ஸ்டார் பட்டாளமே ரஜினியுடன் நடித்தாலும் இந்த சூப்பர் ஸ்டார்தான் அதிகம் ஜொலிக்கிறார்.

ரஜினிக்கும் செரினாவுக்கும் (ஹீமா குரேஷிக்கும்) கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இளமை அதே சமயத்தில் ஒரு அன்பான முதிர்ச்சியான லவ் ட்ராக்கை காணலாம்.

காலா-ஷரினா ஆகியோரின் லவ் போர்ஷன் நிச்சயம் ரசிகர்களுக்கு ட்ரீட்தான்.

ரஜினியின் மனைவியாக நடித்துள்ளவர் செல்வி (ஈஸ்வரி ராவ்). இவரின் திருநெல்வேலி பாஷை கச்சிதம். தேவைக்கேற்ற நடிப்பு

ரஜினியின் மகன்களில் ஒருவரின் காதலியாக வருகிறார் அஞ்சலி பாட்டீல். அந்த கேரக்டர்களை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் கொடுத்துள்ளார்.

மும்பையை ஸ்தம்பிக்க வைக்க ரஜினிகாந்த் செய்யும் அந்த யுக்தி மாஸ். நம் உடம்புதான் நம் ஆயுதம் போராடுவோம் என்கிறார்.

மும்பை நகரம் இயங்க காரணமான துப்புரவு தொழிலாளர்கள், முனிசிபாலிடி மற்றும் டாக்சி ஓட்டுனர்களை வைத்து ஸ்ட்ரைக் செய்கிறார்.

இதனால் ஹரி தாதாவாக நடித்துள்ள நானா படேகருக்கும் ரஜினிக்கும் வரும் மோதல் சூடு பிடிக்கிறது.

நம் இதிகாசத்தில் ராமனை நல்லவனாகவும் ராவணனை கெட்டவனாகவும் காட்டியிருப்பார்கள். ஆனால் காலாவில் ராமனை கெட்டவனாகவும் ராவணனை நல்லவனாக காட்டி மிரட்டியிருக்கிறார் ரஞ்சித்.

ரஜினி சொன்னது போல் வில்லன் நானா படேகர் காட்சிகள் படத்தின் ஹைலைட்.

வில்லன் நானா படேகருக்கு வெயிட் ஏற்றி காலா ரஜினிக்கு செம வெயிட்டு கொடுத்திருக்கிறார் டைரக்டர் ரஞ்சித்.

தொழில்நுட்ப கேரக்டர்கள்…

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் முரளி படத்தின் மிகப்பெரிய பலம். அந்த சேரி பகுதிகளை போராட்டக்களத்தையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.

நிக்கல் அந்துப்போச்சி, என் தங்க சிலை பாடல்கள் ரிப்பீட் மோட்.

பின்னணி இசையும் ரஜினியின் மாஸ் சீன்சும் ரசிகர்களுக்கு வெயிட்டுத்தான்.

ரஜினியின் ஒவ்வொரு மேனரிசத்தையும் கதைக்கு தேவைக்கேற்றப்படி ரசித்து வைத்திருக்கிறார் ரஞ்சித்.

இண்டர்வெல் காட்சியும் அந்த சண்டை காட்சிக்கும் நிச்சயம் அப்ளாஸ் கொடுக்கலாம். இதில் நாம் பவர்புல் பாட்ஷா ரஜினியை திரையில் பார்க்கலாம்.

ரஜினிக்கான வசனங்களை பட்டைத் தீட்டி கொடுத்திருக்கிறார் ரஞ்சித்.

எதிர்பாராத க்ளைமாக்ஸில் சமூக கருத்தை ரஜினியை வைத்து சொல்லிவிட்டார் ரஞ்சித்.

காலா.. கரிகாலனின் முழு ரவுடித்தனம்

Kaala Review in Video

எக்ஸ் வீடியோஸ் விமர்சனம் X Videos

எக்ஸ் வீடியோஸ் விமர்சனம் X Videos

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – அஜ்யராஜ், அக்ரித்தி சிங், ரியாமிக்கா, விஷ்வா, ஷான், பிரபுஜித், பிரசன்னா ஷெட்டி, நிஜய், அர்ஜூன், அபிஷேக், மகேஷ் மது மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் – சஜோ சுந்தர்
தயாரிப்பு – கலர் ஷெடோஷ்ஸ் என்டர்டெயின்மென்ட் அஜிதா சஜோ
இசை – ஜோஹன்
ஒளிப்பதிவு – வின்சென்ட் அமல்ராஜ்
படத்தொகுப்பு – ஆனந்தலிங்க குமார்
கலை இயக்குனர் – கே.கதிர்
பி.ஆர்.ஓ. : அ. ஜான்

கதைக்களம்….

ஹீரோ மனோஜ் (அஜ்யராஜ்) ஒரு ஜர்னலிஸ்ட். ஆபாச இணையதளங்களால் ஏற்படும் சமூக பிரச்சினைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறார்.

ஆராய்ச்சிக்காக ஓர் இணையதளத்தை பார்க்கும்போது தனது நண்பன் அங்கித்தின் (பிரசன்னா ஷெட்டி) மனைவி திருப்தியின் (அக்ரித்தி) நிர்வாண வீடியோ ஒரு இணையதளத்தில் இருப்பதை பார்த்து விடுகிறார்.

எனவே தனது மற்றொரு நண்பனான டேனியுடன் சேர்ந்து (நிஜய்) அங்கித்திடம் விஷயத்தை கூறுகிறார்.
அப்போதுதான் அவர் ஓர் உண்மையை கூறுகிறார்.

மனைவி எவ்வளவு மறுத்தும், அவளை எப்போதும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக நான் தான் அந்த வீடியோவை எடுத்ததாகக் கூறி கதறி அழுகிறார் அங்கித்.

அப்படி என்றால் அந்த வீடியோ இணையத்தளத்திற்கு எப்படி சென்றது? என குழம்புகிறார்.

மன விரக்தியால் அங்கித் தற்கொலை செய்துகொள்கிறார்.

First On Net வாழை கொட்டுடிச்சி… வானம் கொட்டட்டும் விமர்சனம்

நண்பனின் மரணத்தால் பாதிக்கப்படும் மனோஜும், டேனியும் போலீஸ் அதிகாரி இம்ரானுடன் (ஷான்) இணைந்து, அந்த வீடியோ எப்படி ஆபாச தளத்தில் பதிவிடப்பட்டது என ஆராய்கிறார்கள்.

அப்போது பல தகவல்கள் கிடைக்கிறது.

சாப்ட்வேர் இன்ஜினியர்கள் சில சேர்ந்து கொள்ளை லாபத்திற்காக இது போன்ற ஆபாச படங்ளை மொபைல் போன் ரிப்பேர் செய்பவர்களிடம் இருந்து வாங்கி அதை இதுபோன்ற வெப்சைட்டுக்கு விற்று விடுகிறார்கள் எனத் தெரிய வருகிறது.

அந்த கும்பலை பிடிக்க நெருங்கிறார்.

ஆனால் வெப்சைட் நடத்துவதால் மட்டும் அவர்களை கைது செய்ய முடியாது என்பதால் ஒரு திட்டம் போடுகிறார் மனோஜ்.

என்ன திட்டம் அது? அவர்களை எப்படி மடக்கி பிடித்தார்? ஆபாச தளம் முடக்கப்பட்டதா? என்பது போன்ற பல கேள்விகளின் விடையே இந்த எக்ஸ் வீடியோஸ்.

கேரக்டர்கள்…

மொபைல் போன் காலத்திற்கு முன்பு, அடுத்தவர் வீட்டு பெட்ரூம்பை ஜன்னல் வழியாக எட்டி பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் இப்போது அந்த வேலையை கேமரா செய்துவிடுகிறது.

எனவே தங்கள் வீட்டில் இருந்தபடியே ரசிக்கிறார்கள்.

சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்

ஒரு சிலர் தன் கேர்ள் பிரண்ட்./ மனைவி உடை மாற்றும்போது, குளிக்கும் போது வீடியோ எடுத்து வைத்துக் கொள்கின்றனர். நேரம் கிடைக்கும் போது அதை பார்த்து ரசிக்கின்றனர்.

சில நேரங்களில் அந்த மொபைல் ரிப்பேர் அல்லது காணாமல் போனால் அந்த போன் சில விஷமிகள் கையில் கிடைத்து விடுகிறது. அதன்பின்னர் பல பிரச்சினைகள் வரும். அந்த விழிப்புணர்வு பற்றிய படமே இது.

ஒரு சில இயக்குனர்களைப் போல் ஆபாச படத்தை எடுத்து வெற்றி பெற நினைக்காமல், ஒரு சமூக பிரச்சினையை கையில் எடுத்து, மக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார் சஜோ சுந்தர்.

கபாலி படத்தில் ரஜினிக்கு பாண்டிச்சேரி முகவரியை தேடி கண்டு பிடிப்பாரோ அந்த விஷ்வாவை தவிர மற்றவர்கள் நமக்கு தெரியாத முகங்கள்தான்.

இது ஒரிஜினல் தமிழ் படம் இல்லை என்பதால் நிறைய வசன காட்சிகள் இங்கு ஒத்துப் போகவில்லை.

மற்றபடி நடிகர்கள் படத்திற்கு தேவையான கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

வில்லனாக வரும் பிரபுஜித் ஹைடெக் மிரட்டல்.

நாயகிகள் அக்ரித்தி மற்றும் ரியாமிக்காவின் நடிப்பும் கச்சிதம். இவர்களுக்கான காட்சிகள் குறைவு என்றாலும் இவர்களைச் சுற்றிதான் படத்தின் கதையே நகர்கிறது.

படத்தில் காமெடி இல்லை பாடல்கள் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம்தான்.

பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஜோஹன் தன் பேச வைக்கிறார்.

இது ஒரு நீல விழிப்புணர்பு படம் என்றாலும் படத்தின் நீளத்தை குறைத்து நம்மை ஈர்க்கிறார்கள்.

ஏதோ ஒரு சின்ன சின்ன ஆசைக்காக ஆபாச வீடியோக்கள் எடுப்பது நல்லதல்ல.

இதனால் நம் குடும்பத்தை நாமே இழக்க நேரிடும என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

கணவரோ, பாய் ப்ரண்டோ யாராக இருந்தாலும் நம் அந்தரங்கத்தை படம் எடுக்கக்கூடாது என பெண்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளனர்.

அதற்காக சில காட்சிகளை கொஞ்சம் ஓவராகவே காட்டிவிட்டார்கள்.

அதுபோல் மொபைல் ரிப்பேர் செய்யும் கடை நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீட்டில் ப்ளம்பர், எலக்ட்ரீசியன்கள் வந்தால் அவர்கள் கேமரா வைக்க வாய்ப்புண்டு. அதையும் நாம் கவனிக்க வேண்டும் என சில எச்சரிக்கையும் கொடுத்துள்ளார்.

எக்ஸ் வீடியோஸ்…. நம் வீட்டு பெண்களுக்கு எச்சரிக்கை

ஆண்டனி விமர்சனம்

ஆண்டனி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்ற பெருமையுடன் வந்துள்ள படம் ஆண்டனி.

இந்த படத்தில் நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா, சம்பத்ராஜ், வெப்பம் ராஜா, சேரன் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குட்டி குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

ஆர்.பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, இளம் பெண் இசையமைப்பாளர் ஷிவாத்மிகா இசை அமைத்துள்ளார்.

கதைக்களம்…

கதாநாயகன் ஆண்டனி (நிஷாந்த்), கொடைக்கானலில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிகிறார். இவரது நேர்மையால் இவருக்கு பல எதிரிகள் இருக்கிறார்கள்.

ஆண்டனியின் காதலி மகா (வைஷாலி) லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண் இளம்.

ஆண்டனியின் தந்தை ஜார்ஜும் (மலையாள நடிகர் லால்) ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். தாய் மேரி (ரேகா) விபத்தில் கால்களை இழந்தவர்.

படத்தின் முதல் காட்சியை இருட்டில் துவங்குகிறது. ஹீரோ ஆண்டனி ஒரு காருக்குள் போதை நிலையில் இருக்கிறார். போதை தெளிந்தவுடன் தான் எங்கே இருக்கிறோம் என தெரியாமல் குழம்புகிறார்.

அப்போதுதான் தான் மண்ணுக்குள் அதுவும் ஒரு காருக்குள் புதைந்து கிடக்கிறோம் என தெரிய வருகிறது.

இவரிடம் போன் வேற இல்லை. இதனால் யாரையும தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்.

காருக்குள் இருக்கும் லைட் வெளிச்சத்தை வைத்து தன்னால் முயன்ற முயற்சிகளை செய்து வெளியே வர நினைக்கிறார்.

காரை உடைத்து வெளியே வர நினைத்தாலும் மண் சரிந்துக் கொண்டே இருக்கிறது.

இதனிடையில் ஆண்டனி வராததால், அவரது தந்தை ஜார்ஜ் தன் நண்பர்களுடன் தேடுகிறார்.

அவனது எதிரிகளின் மீது சந்தேகம் கொண்டு அவர்களை தேடி செல்கிறார்.

மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் ஆண்டனி வெளியே வந்தாரா? எப்படி வந்தார்? அவரது தந்தை கண்டு பிடித்தாரா? அவரை மண்ணுக்குள் புதைத்தது யார்? உயிருடன் மீண்டு காதலியை கரம் பிடித்தாரா? என்ற கேள்விகளுக்கு இறுதியில் விடையை சொல்வான் இந்த ஆண்டனி

கேரக்டர்கள்…

பெரும்பாலும் ஹீரோக்களுக்கு முதல் படத்தில் அழுத்தமான கேரக்டர்கள் கிடைக்காது. ஆனால் ஹீரோ நிஷாந்துக்கு அசத்தலான அறிமுகத்தை கொடுத்துள்ளது இந்த ஆண்டனி.

ரொமான்ஸ் அவ்வளவாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் ஆக்சன் கை கொடுக்கும் எனத் தெரிகிறது.

ஹீரோயின் வைஷாலிக்கு சின்ன வேடம்தான். ஆனால் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளார்.

அம்மாவாக வரும் ரேகாவுக்கு கெஸ்ட் ரோல் போல. மகனை பிரிந்துள்ள தாய்க்கு நிறைய காட்சிகளை கொடுத்திருக்கலாம்.

மலையாளத்தில் அசத்தும் லால் நடிகருக்கு தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வில்லன் வேடம்தான் கொடுத்திருக்கிறார்கள். தான் ஒரு நல்ல குணசித்திர நடிகனும் என்பதை நிருபித்துள்ளார்.

வில்லனாக அறிமுகமாகியுள்ளார் இப்பட தயாரிப்பாளர் வெப்பம் ராஜா. இவருக்கு டெரர் பேஸ் இல்லையென்றாலும் நடிப்பில் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எக்ஸ்ட்ரா லைட்டிங் எதுவும் இல்லாமல் காருக்குள் இருக்கும் லைட்டை வைத்தே மண்ணுக்குள் படமாக்கியிருக்கும் டைரக்டரையும் ஒளிப்பதிவாளரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

ஷிவாத்மிகாவின் பின்னணி இசை மிரட்டல். அடங்காமாமலை, மற்றும் காற்றின் மொழி பாடல்கள் ரிப்பீட் மோட். ஆனால் ஓயாமல் பாடல்கள் வந்துக் கொண்டே இருப்பது சலிப்பை தட்டுகிறது.

முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்பது வருத்தம்தான். ஆனால் க்ளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.

ஆண்டனி… வித்தியாச முயற்சி! வீரியம் குறைவு!

காலக்கூத்து விமர்சனம்

காலக்கூத்து விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, ஸ்ருஷ்ட்டி டாங்கே மற்றும் பலர்
இயக்கம் – எம் நாகராஜன்
ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
எடிட்டிங் – செல்வா
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு : மதுரை ஸ்ரீ கள்ளழகர் கம்பெனி

கதைக்களம்…

பிரசன்னாவும் கலையரசனும் பால்ய நண்பர்கள். வேலைக்கு செல்லாத கலையரசன் கல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவை காதலிக்கிறார்.

தன்ஷிகாவும் வீட்டை விட்டு வந்து கல்யாணம் செய்துக் கொள்ளும் அளவுக்கு வெறித்தனமாக காதலிக்கிறார்.

பிரசன்னாவை துரத்தி துரத்தி லவ் செய்கிறார் சிருஷ்டி டாங்கே. முதலில் மறுக்கும் பிரசன்னா பின்னர் காதலை ஏற்கிறார்.

இதனிடையில் சிருஷ்டி டாங்கேவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடக்கிறது.

அதன்பின்னர் காதல் தோல்வியும் இருக்கும் பிரசன்னா, தன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க முயல்கிறார்.
இறுதியில் என்ன ஆனது? என்பதே இதன் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அமைதியான முகம் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் பிரசன்னா பிரகாசிக்கிறார்.

துறுதுறு கேரக்டரில் கலையரசன். வேலைக்கு செல்லாமல் தன்ஷிகா பின்னாடி சுற்றுவதும் காதலியை கரம் பிடிப்பதிலும் கலக்கல்.

மதுரை மாவட்ட மொழியில் தன்ஷிகா தேர்ச்சி பெறுகிறார். க்ளைமாக்ஸில் அப்ளாஸ் அள்ளுவார்.

அப்பாவுக்கு பயந்த பெண்ணாக ஸ்ருஷ்டி டாங்கே சூப்பர். காதலனை கழட்டிவிட்டு கல்யாணமும் செய்துக் கொள்கிறார்.

இவர்களுடன் நண்பனாக வருபவரும், கவுன்சிலர் தம்பிகளும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். கண்ண கட்டி பாடல் முணுமுணுக்க வைக்கும்.

சங்கரின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அழகு. படத்தொகுப்பாளர் செல்வா நிறைய காட்சிகளை கத்திரி போட்டிருக்கலாம்.

காதலிச்சவனை கழட்டிவிட்டால் லைப்பில் நன்றாக இருக்கலாம் என்று இயக்குனர் சொல்ல வருகிறாரா?

காதலித்து கல்யாணம் செய்தால் குடும்பத்திற்கு அசிங்கம். காதலர்களுக்கு மரணம் என்கிறாரா? என்று புரியவில்லை.

காதலிக்கும் நண்பனுக்கு உதவினால் உனக்கு சங்குதான் என்று சொல்கிறாரா? இதுபோல் பல கேள்விகள் நிச்சயம் எழுகிறது.

ஆனால் இறுதியில் வறட்டு கௌரவத்தை தவிர்த்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்கிறார்.
மதுரையை மையமாக வைத்து கதைக்களத்தை நகர்த்தியுள்ளார் அறிமுக இயக்குனர் நாகராஜன்.

மிகவும் பழக்கப்பட்ட கதை வேறு. அதை இன்னும் பொறுமையாக கொண்டு சென்று சோதித்து விடுகிறார்.

படம் எடுக்கப்பட்ட விதம் அருமையாக இருந்தாலும் இதற்கு இவ்வளவு நேரம் தேவையா? என்பதுதான் கேள்வி

டிவிஸ்ட் வைத்து காட்சிகளை நகர்த்தியிருக்கலாம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பதுதான் திரைக்கதையின் பலவீனம்.

காலக்கூத்து… இந்த காலத்துக்கு இந்த கூத்து ஒர்க்அவுட் ஆகுமா.?

More Articles
Follows