100% ஈகோ மோதல்..; 100% காதல் திரை விமர்சனம்

100% ஈகோ மோதல்..; 100% காதல் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஜி.வி. பிரகாஷின் அத்தை பெண் ஷாலினி பாண்டே. கிராமத்திலிருந்து படிக்க சென்னை வருகிறார் ஷாலினி. ஆனால் படிக்க இஷ்டமில்லாமல் மாமாவுக்காக வந்து அவர்கள் வீட்டிலேயே தங்குகிறார்.

ஜிவி பிரகாஷ் தான் படிக்கும் காலேஜில் முதல் மாணவன். தன்னைப் போல தன் முறைப்பெண் நன்றாக படிக்க உதவுகிறார். ஒரு கட்டத்தில் ஷாலினி பர்ஸ்ட் மார்க் வாங்குகிறார். இதனால் இருவருக்கும் ஈகோ மோதல் தொடங்குகிறது.

இது பெரும் பிரச்சினையாக அந்த சமயத்தில் மற்றொரு மாணவன் அஜய் இருவரையும் முந்தி பர்ஸ்ட் மார்க் வாங்கிவிடுகிறார். எனவே அஜய்யை தோற்கடிக்க ஷாலினி அவரை காதலிப்பதாக கூறி அவனின் கவனத்தை திசை திருப்புகிறார்.

அதன்பின்னர் ஜிவி. பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே காதல் என்னாச்சு? ஷாலினி யாரை திருமணம் செய்தார்?, அஜய் என்ன செய்தார்? யார் முதல் மாணவனாக வந்தார்? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்…

ஜிவி பிரகாஷ் மற்றும் ஷாலினியின் ரொமான்டிக் லவ் சில இடங்களில் மட்டும் ரசிக்க வைக்கிறது. அதுபோல் முதல் பாதியில் வரும் ஈகோ மோதலும் ரசிக்கும் வகையில் உள்ளது.

ஷாலினி பாண்டே அழகிலும் கவர்ச்சியிலும் இளைஞர்களை சூடேற்றுகிறார். மாமா என கொஞ்சி பேசும்போது நமக்கு இப்படியொரு மாமா பெண் இல்லையே என ஏங்க வைக்கிறார்.

க்ளைமாக்சில் ஜிவி. பிரகாஷ் தன் நிலையை சொல்லும்போது இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கலாம். குழந்தைத்தனமாக உள்ளது.

ரேகா, தலைவாசல் விஜய், ஆர்வி. உதயகுமார், ஷிவானி பட்டேல், ஜெயசித்ரா கேரக்டர்கள் ஓகே.

மனோபாலா, அப்புக்குட்டி, சாம்ஸ் கேரக்டர்கள் இருந்தும் பயனில்லை.

தம்பிராமையா, நாசர் கேரக்டர்கள் படத்தின் நீளத்தை அதிகரிக்க உள்ளது. காட்சிகளை வெட்டினாலும் ஓகே தான் நல்ல கலைஞர்களை வீணடித்துவிட்டனர்.

படத்தில் 6 குட்டீஸ் நடித்துள்ளனர். இவர்கள் ஜிவி. பிரகாஷ் வீட்டிலேயே இருக்கிறார்கள். இவர்கள் யார்? என்பது தெளிவாக இல்லை. ஆனால் அதில் ஒரு குண்டு பையன் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்துவிடுகிறான்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் நாயகனே இசையமைப்பாளராக உள்ளார். பாடல்கள் பெரிதாக கவரவில்லை. பின்னணி இசை ஓகே.

கணேஷ் ஒளிப்பதிவில் காட்சிகளில் இளமை ததும்புகிறது.

எடிட்டர் காசி விஸ்வநாதன் நிறைய காட்சிகளை வெட்டி ரசிகர்களையும் படத்தை காப்பாற்றி இருக்கலாம். அதுதான் பெரும் குறையாக உள்ளது.

ஜிவி. பிரகாஷ் ஒருவரிடம் கதை சொல்வதும் ஷாலினி குட்டீஸ்க்கு கதை சொல்வதும் போரடிக்கிறது.

படத்தின் முதல் பாதியும் ரொமான்டிக் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. முதல் பாதி கலகலப்பாக உள்ளது.

ஆனால் இரண்டாம் பாதியில் ஹீரோ ஹீரோயின் பெயரை மாற்றி ஷாரூக் கஜோல் என வைத்திருக்கு காட்சிகள் கடுப்படிக்கிறது. அதுவும் க்ளைமாக்ஸ் நாடகம்.. மாப்பிள்ளை அஜய் (யுவன் மயில்சாமி) பாவம்.

இந்த படம் தெலுங்கில் 100% லவ் என்ற பெயரில் 2011ல் வெளியானது. அந்த படத்தை இந்த காலகட்டத்திற்கு ஏற்ப கொஞ்சம் மாற்றியிருந்தால் காதல் ரசிக்க வைத்திருக்கும்.

காதலை விட ஹீரோ ஹீரோயினுக்கும் நிறைய மோதல் உள்ளது.

மேலும் ஜிவி. பிரகாஷை விட அஜய் தான் (யுவன் மயில்சாமி) கிரேட் என ஷாலினி சொன்னதால் தான் இவ்வளவு பிரச்சினையும் உருவாகிவிடுகிறது. எனவே தான் 100% மோதல் என பதிவிட்டுள்ளோம்.

காதல் இருக்கும் இடத்தில்தான் மோதல் இருக்கும் என்கிறீர்களா..? ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் நம்ம இயக்குனர் எம்.எம். சந்திரமௌலி கோட்டை விட்டு இருக்கிறார்.

100 % Kadhal review rating

First on Net அசத்தல்.. அருமை.. அதிரடி.; அசுரன் விமர்சனம் (4.25/5)

First on Net அசத்தல்.. அருமை.. அதிரடி.; அசுரன் விமர்சனம் (4.25/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய ஹாட்ரிக் வெற்றிகளை தொடர்ந்து இந்த அசுர கூட்டணி அமைத்துள்ளனர் வெற்றிமாறன் & தனுஷ்.

பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை கதையாகக் கொண்ட படம் தான் இது.

கதைக்களம்…

சிவசாமி (தனுஷ்) இவரது மனைவி மஞ்சுவாரியர். மஞ்சு வாரியாரின் அண்ணன் பசுபதி.

தனுஷ் தம்பதிக்கு 2 மகன்கள் ஒரு மகள்.

தனுஷ் தன்னுடைய 2வது மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) உடன் காட்டிற்கு பதுங்கி பதுங்கி செல்கிறார். இதுதான் படத்தின் முதல் காட்சி.

நடக்கும் பாதம் அடையாளம் கூட தெரிய கூட என்பதற்காக ஆற்றில் நடந்து செல்கிறார்.

ஒரு பக்கம் போலீஸ். மற்றொரு பக்கம் ஒரு ரவுடி கும்பல் இவரை வலை வீசி தேடுகிறது. ஏன் என்ற நினைவோடு கதை பின்னோக்கி நகர்கிறது.

இந்த கும்பல்களிடம் இருந்து தனுஷ் தன் குடும்பதை காப்பாற்ற போராடுகிறார். எந்த வம்புக்கு போக கூடாது என தவிர்க்கிறார்.

தன் தந்தை கோழை. உதவாக்கரை, குடிக்காரன் என நினைக்கிறான் சிதம்பரம். ஆனால் தன் மகனுக்கு ஒரு பிரச்சினை வந்தபோது அசுரனாக மாறுகிறார் தனுஷ். அப்படி என்றால் இந்த தனுஷ் யார்? என்பதே மீதிக்கதை.

இது குடும்ப பழிவாங்கல் கதை என்றாலும் அதை வெற்றிமாறன் எடுத்திருக்கும் விதத்தை கூறினால் சுவை இருக்காது என்பதால் இத்துடன் முடிக்கிறோம்.

கலைஞர்கள்…

ஆடுகளம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு தேசிய விருதை வெல்ல போகிறார் தனுஷ். அப்படியொரு அபாரமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

1980களில் கதை தொடங்குகிறது. பின்பு 1960களிலும் ப்ளாஷ் பேக் பயணிக்கிறது. எனவே தனுஷ் இரு மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார் எனலாம். திருநெல்வேலி பாஷையிலும் நம்மை ஈர்க்கிறார்.

ஒரு 45 வயது உள்ள மனிதரை போல தன் உடல் மொழியை கொடுத்துள்ளார். பதுங்கி பதுங்கி செல்லும்போது சரி. பாயும்போது சரி.. அப்ப்ப்பா என்னவொரு நடிப்புய்யா.. செம.….

மலையாளத்தில் பல விருதுகளை குவித்த மஞ்சு வாரியாருக்கு அருமையான அறிமுகம் தமிழில் கிடைத்துள்ளது. இவருக்கு இனி தமிழில் வாய்ப்புகள் தேடி வரும்.

பசுபதிக்கும் அருமையான வேடம். யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார்.

தனுஷின் 2வது மகன் கென். கெட்டிக்காரன். இவர் நடிகர் கருணாசின் மகன். நடிப்பில் அப்பாவை மிஞ்சியிருக்கிறார்.

இவருடைய அண்ணனாக டீஜே அருணாசலம். கிராமத்து இளைஞருக்கு உண்டான நடிப்பை கொடுத்துள்ளார்.

ஆடுகளம் நரேன், பவன் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

ப்ளாஷ்பேக்கில் கொஞ்ச நேரம் வந்தாலும் அம்மு அபிராமி. அழகு அபிராமி. நடிப்பிலும் அருமை. செருப்பால் அடி வாங்கும் காட்சியில் கலங்க வைக்கிறார்.

போலீசாக டைரக்டர் பாலாஜி சக்திவேல். இவருடைய தோற்றமே மிரட்டல். அதுபோல் டைரக்டர் வெங்கடேஷ் மற்றும் ஜாதி வெறி பிடித்த வாலிபர் நிதிஷ் வீரா இருவரும் சூப்பர்.

ஊர் பெரியவராக வரும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நடிப்பிலும் செம. இவர்களுடன் பிரகாஷ் ராஜ். வக்கீல் வேடத்தில் நம் கவனம் பெறுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ளார். கண்ணழகு ரத்தினமே.. பெண்ணழகு பெட்டகமே… கத்திரி பூவழகி பாடல்கள் என்றும் ரசிக்க வைக்கும் வகையில் உள்ளது.

ராமரின் எடிட்டிங் எங்கும் குறையில்லை. வேல்ராஜின் ஒளிப்பதிவில் அந்த மிரட்டலான காடே நம்மை பயமுறுத்துகிறது.

பேய் படங்களில் வராத பயம் சில இருட்டு காட்சிகளில் நம்மை தொடுகிறது. அப்படியொரு இசையும் ஒளிப்பதிவையும் கொடுத்துள்ளனர்.

இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் பைட் உண்மையான வெறித்தனம்.. பின்னணி இசை வேற லெவல்.

இயக்கம் பற்றிய அலசல்…

வெற்றிமாறன்.. பெயரிலேயே வெற்றியை வைத்துள்ளதால் என்னவோ படம் இயக்கினாலும் தயாரித்தாலும் வெற்றிதான் இவருக்கு. பொறுமையாக படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்.

நாம் தினமும் சோறு சாப்பிட்டாலும் அதற்கு ஏற்றவாறு குழம்பு, கூட்டு என வைத்தால் நிச்சயம் ருசிப்போம். அதுபோல வன்முறை, அடி, வெட்டு குத்து, குடும்ப பகை என பார்த்து சலித்து போன கதையாக இருந்தாலும் அதை முறையாக கொடுத்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற பல்ஸை அறிந்திருக்கிறார்.

வாழ்க்கையில் ஒரு பெரிய இழப்பை சந்தித்த மனிதன் எப்படி பக்குவப்பட்ட வாழ்க்கையை வாழ்வான் என்பதையும், அவரின் பிள்ளைகள் அவரை எப்படி நடத்துவார்கள் என்பதையும் அசுர பலத்துடன் சொல்லியிருக்கிறார். அதுபோல 1960களில் இருந்த செருப்பு போடாத ஜாதி அரசியலையும் நச்சென்று சொல்லியிருக்கிறார்.

திரைக்கதையை போல படத்தின் வசனங்களும் நச் நச்… கைத்தட்டல்களை அள்ளுகிறது. வசனங்களில் சில…

கௌரவத்தை வச்சிட்டு குடும்பத்தை இழக்க முடியாது..
எல்லாரும் இறந்துட்டா குடும்ப வாரிசு இல்லாம போய்டும்…
போனவங்கள நினைச்சிட்டு இருக்கிறவங்கள இழந்துட கூடாது
செவலை நாய் போச்சுன்னு நீ சொல்ற.. நான் நாயோடு மட்டும் போச்சேன்னு போதும் நான் நினைக்கிறேன்.. என ஒவ்வொரு வார்த்தையிலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.

காசு, சொத்து ஆகியவற்றை ஒருவன் பறித்து விடலாம். ஆனால் படிப்பை மட்டுமே இந்த உலகில் யாரிடம் இருந்தும் யாரும் பறிக்க முடியாது என்ற கருத்தை சொல்லி அடித்திருக்கிறார்.

வன்முறை கொஞ்சம் ஓவர் டோஸ் என்பதால் குழந்தைகள் பார்ப்பது கடினம். மற்றபடி கலைப்புலி தாணு அவர்கள் தமிழ் சினிமா பெருமைப்பட கூடிய பெட்டகத்தை கொடுத்துள்ளார் எனலாம்.

அசுரன்.. அசத்தல்.. அருமை.. அதிரடி..

சிரஞ்சீவி ராஜ்ஜியம்.; சைரா நரசிம்ம ரெட்டி விமர்சனம் (3.5/5)

சிரஞ்சீவி ராஜ்ஜியம்.; சைரா நரசிம்ம ரெட்டி விமர்சனம் (3.5/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி

இசை – அமித் திரிவேதி

இயக்கம் – சுரேந்தர் ரெட்டி

தயாரிப்பு – கொன்னிடலா புரொடக்ஷன் கம்பெனி

கதைக்களம்..

நம் இந்திய தேசம் என்பது பல மாநிலங்களை சேர்ந்த ஒன்று. இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் அந்தந்த மாநிலங்களில் பலரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரடினர்.

அதுபோல ஆந்திராவில் கொயில்குன்ட்லா என்ற பிரதேசத்தில் நொசாம் பாளையத்துக்காரராக இருந்த உய்யலவாடா நரசிம்ம ரெட்டி, ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டுள்ளார். அவரது வாழ்க்கை வரலாறுதான் இந்த படம்.

ரேநாடு என்றழைக்கப்படும் நாட்டிற்குள் 60 பாளையத்துக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களது பிரதேசங்களை அவர்கள் ஆட்சி செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அவர்களிடம் வரி வசூலித்தும், அவர்களின் செல்வங்களை அபகரிக்கின்றனர் ஆங்கிலேயர்கள்.

இந்த கொயில்குன்ட்லா என்ற பகுதியில் ஜான்சன் துரை என்பவன் அதிகாரம் செய்கிறான். அவனை கொன்று அந்த பகுதியில் விடுதலை வேட்கையை ஆரம்பிக்கிறார் நரசிம்ம ரெட்டி.

துரையைக் கொன்றதால் நரசிம்ம ரெட்டியைக் கொல்ல படையை அனுப்புகிறார் மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர்.

மற்றவர்கள் ஓடி ஒளிய நரசிம்ம ரெட்டி தனியாளாக நின்று அந்த அவர் அனுப்பிய 300 படை வீரர்களை ஓட விடுகிறார்.

அதன்பின் இவருடன் 60 பாளையத்துக்காரர்களும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கின்றனர்.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கலைஞர்கள்…

படம் முழுக்க சீறும் சிங்கமாக சினங் கொண்ட சிறுத்தையாக சிரஞ்சீவி வெளுத்து கட்டியிருக்கிறார். ரெட்டிக்கு உரித்தான கம்பீரம், பயப்படாத வீரம் என அந்த கேரக்டரை நம் கண் முன்னே கொடுத்துள்ளார்.

ஒரு காட்சியில் தண்ணீருகு அடியில் தலையை சீவும் காட்சி சூப்பர். இப்படி பல காட்சிகள் அனைவருக்கும் பிடித்த மாதிரி படமாக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்து நம் மனதில் நிறைகிறவர் சுதீப். நரசிம்ம ரெட்டியையே எதிர்க்கும் அக்கு ராஜுவாக பட்டைய கிளப்பியிருக்கிறார்.

நரசிம்ம ரெட்டியின் குரு கோசாயி வெங்கண்ணாவாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார். தன் அனுபவ நடிப்பால் நம்மை கவர்கிறார்.

நரசிம்ம ரெட்டியின் மனைவியாக நயன்தாரா (சித்தம்மா). காதலியாக தமன்னா. (அதாவது மணம் முடிக்காமலேயே மனைவியாக வாழும் லட்சுமி கேரக்டரில் தமன்னா.) இருவருக்குமே பெரிதாக காட்சிகள் இல்லை. மேக் அப் கூட சில காட்சிகளில் ஓவராக இருக்கிறது. ஆனால் நயன்தாராவை விட தமன்னா காட்சிகள் ஓகே.

படத்தின் ஆரம்பத்தில் வரும் அனுஷ்கா இறுதியிலும் வருகிறார் அவ்வளவுதான். வேற யாரு இருக்கா? அட ஆமா நம்ம விஜய்சேதுபதி இருக்காருல்ல.. இருக்காரு அவ்வளவுதான். சொல்ல ஒன்றுமில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

அமித் திரிவேதியின் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். பார்க்கலாம்.

டப்பிங் படம் என்பதால் பாடலை ரசிக்க முடியவில்லை.

ஜுலியஸ் பாக்கியம் என்பவர் பின்னணி இசையமைத்துள்ளார்.

ரத்தினவேலு ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக கொண்டு செல்கிறது. பிரம்மாண்டத்தின் தன் கேமரா வழியே காட்டியிருக்கிறார்.

இவரைப் போல கலை இயக்குனர் ராஜீவன் அமைத்துள்ள செட் ஒர்க்கும் சூப்பர். கமலக்கண்ணனின் விஷுவல் கண்களுக்கு விருந்து.

படத்தின் நீளம் மிகப்பெரிய குறையாக உள்ளது. விஜய்சேதுபதி, அனுஷ்கா கேரக்டர்களை கூட வெட்டியிருக்கலாம் போல..

இயக்கம் பற்றிய அலசல்…

சிரஞ்சீவிக்கு நடிகர் அரவிந்த்சாமி டப்பிங் செய்துள்ளார். நடிகர் அமிதாப்பச்சனுக்கு நிழல்கள் ரவி டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

படத்தின் ஹீரோ நரசிம்ம ரெட்டிதான். ஆனால் இவரைப் போல பல நட்சத்திரங்கள் இருந்தும் மற்றவர்களை டம்மியாக்கிவிட்டார்கள். அதுதான் கொடுமை. மேலும் தெலுங்கு ரசிகர்களை கவனத்தில் கொண்டு படத்தை கொடுத்துள்ளனர்.

இந்த படத்தை பாகுபலியுடன் ஒப்பிட கூடாது. ஆனால் பலரும் அதை தான் செய்வார்கள். ராஜமௌலி மெகா மௌலி. அவருடன் ஒப்பிடுவது சரியில்லை. மற்றபடி பிரம்மாண்ட கதையை கமர்சியல் மசாலா கலந்து சொல்லியுள்ளனர்.

வயசானாலும் சிரஞ்சீவியின் கம்பீரம் இன்னும் குறையவில்லை என்பதுதான் இதில் ஹைலைட். தமிழுக்கு கமல் போல தெலுங்குக்கு என்றும் சிரஞ்சீவிதான்.

ஆக.. சைரா நரசிம்ம ரெட்டி… சிரஞ்சீவி ராஜ்ஜியம்

First on Net வாடாத பாசமலர்.. நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம் (3.25/5)

First on Net வாடாத பாசமலர்.. நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம் (3.25/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

எத்தனை இன்னல்கள் வந்தாலும் தன் தங்கைக்காக எந்தவொரு தியாகமும் செய்ய தயாராக இருக்கும் அண்ணனின் கதை இது.

இதில் சிவகார்த்திகேயன் அண்ணன். அவரது தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவர் சிவகார்த்திகேயன். இவர் சின்ன வயதிலேயே இவரின் தந்தை சமுத்திரக்கனியை இழந்துவிடுகிறார். பெயரியப்பா சித்தப்பா ஆதரவு இல்லை. எனவே தன் தங்கையை பார்த்து பார்த்து வளர்க்கிறார்.

இவரின் தங்கையின் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் தனக்கு விருப்பமில்லை என்றாலும் தங்கையின் விருப்பத்தின் பேரில் நட்ராஜை திருமணம் செய்து வைக்கிறார்.

அதன்பிறகு நட்ராஜ் தன் வில்லத்தனத்தை காட்ட, என்ன செய்தார் இந்த அண்ணன் என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒரு ஹோட்டல் மெனு கார்டை விட படத்தில் நடித்துள்ளவர்கள் அதிகம். எனவே நீங்க டயர்ட் ஆகாம சுருக்கமாக சொல்லி முடிக்கிறோம்.

இப்படியொரு அண்ணன் நமக்கு வேண்டும் என ஏங்க வைத்துவிடுகிறார் சிவகார்த்திகேயன். க்ளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்க வைக்கிறார்.

தந்தையை இழந்த பிள்ளைகள் படும் கஷ்டத்தை வாழ்ந்து சொல்லியிருக்கிறார். ஜாடிக்கு ஏத்த மூடீ போல பாசமிக்க தங்கையாக ஐஸ்வர்யா. அவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

சிவாவுடன் சேர்ந்துவிட்டால் மட்டும் சூரிக்கு காமெடி சிக்ஸர் அடிக்கிறது. அதுபோல் சிலகாட்சியில் வந்தாலும் யோகிபாபு கைத்தட்டலை அள்ளுகிறார்.

ஹீரோயின் அனு இமானுவேல் கண்களாலும் உதடுகளாலும் பேசியே நம்மை கவர்ந்துவிடுகிறார்.

நட்ராஜ், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பு கச்சிதம். ஹீரோயின் அண்ணன்களாக வரும் ரெஜித் மேனன், சிரிப்பு போலீசும் நம்மை கவர்கின்றனர்.

மாமா வரும் சண்முகராஜன், முத்துராமன் ஆகியோரின் நடிப்பு சிறப்பு

இவர்களுடன் பாரதிராஜா, வேல ராமமூர்த்தி, அருந்ததி, சமுத்திரக்கனி, ஆர்.கே. சுரேஷ், சுபு பஞ்சு, அர்ச்சனா உள்ளிட்டோர் கச்சிதம். சூரியின் மகனும் சூப்பர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எங்க அண்ணன் பாடல் இமான் இசையில் இதமாக இருக்கிறது. பின்ணனி இசையும் ஓகே.

நீரவ் ஷா ஒளிப்பதிவில் மயிலாஞ்சி பாடல் கண்களுக்கு குளிர்ச்சி.

காந்த கண்ணழகி பாடல் தேவையில்லாத ஒன்று.

நிறைய காட்சிகளை வெட்டியிருந்தால் சீரியல் போல இல்லாமல் படமாக இருந்திருக்கும். சென்டிமெண்ட் என்ற பெயரில் ப்ளாஷ்பேக் காட்சி கொஞ்சம் நீளம். அதுபோல் சில மொக்கை காமெடியை தவிர்த்திருக்கலாம்.

கூட்டுக்குடும்பம், தாத்தா, பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா என பல உறவுகளை இழந்திருக்கும் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற ஒரு படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

பாண்டிராஜ் தன் பாணியில் ஒரு குடும்ப விருந்து படைத்திருக்கிறார்.

ஆக… அண்ணன் தங்கை உறவு என்பது வாடாத பாசமலர் என்பதை காட்சிகளில் நிரூபித்திருக்கிறார்.

நம்மை காப்பான்.. காப்பான் விமர்சனம் 3.25/5

நம்மை காப்பான்.. காப்பான் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தஞ்சாவர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இயற்கை விவசாயம் பார்க்கிறார் சூர்யா. இவரின் பெயரும் கதிர் என்பது ஹைலைட். இவருக்கு பின்னணியில் சில விசயங்கள் நடக்கிறது.

அதன்பின்னர் மிலிட்டரி இன்டலிஜன்ஸ் பிரிவிலிருந்து பிரதமர் மோகன்லாலுக்கு பெர்சனல் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் சூர்யா.

100 உயிரை காக்க ஒரு உயிர் போனாலும் தவறில்லை நினைப்பவர் பிரதமர். அத்துடன் பாகிஸ்தான் மக்களும் நன்றாக இருக்க வேண்டும என நினைப்பவர் ஒரு முறை காஷ்மீர் சென்றபோது அங்கு தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார்.

எனவே சூர்யா வேலையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.

அதன் பின்னர் சூர்யா என்ன செய்தார்? கொன்றவர்களை என்ன செய்தார்? தீவிரவாதிகளின் நோக்கம் என்ன? அடுத்த பிரதமர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கலைஞர்கள் எப்படி..?

தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே தோல்வியால் துவண்ட சூர்யா இந்த காப்பானை பெரிதும் நம்பியிருக்கிறார். எனவே தன் நடிப்பை அர்ப்பணிப்பை கொடுத்திருக்கிறார். அதில் ஒன்றும் குறையில்லை.

பாதுகாப்பு அதிகாரிக்கே உரிய மிடுக்கு, கம்பீரம், ஸ்மார்ட்னெஸ் என வெரைட்டி காட்டியிருக்கிறார். அதனால் ரொமான்ஸ கூட அடக்கியே வாசித்திருக்கிறார்.

ஒருவேளை சாயிஷா நிஜ கணவர் ஆர்யா அருகில் இருப்பதால் அந்த நடிப்போ? என்ற சந்தேகமும் வருகிறது.

கம்ப்ளீட் ஆக்டர் மோகன்லால் தன் நடிப்பில் கச்சிதம். இந்திய நாட்டு மக்கள் மீது அவர் காட்டும் அன்பு, கார்ப்பரேட் முதலாளிகளிடம் காட்டும் கோபம், பாகிஸ்தான் மக்களிடம் காட்டும் பாசம் என அசத்தியிருக்கிறார் பிரதமர். இப்படி ஒரு பிரதமர் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணமும் எழுகிறது.

முதல் பாதியில் ஆர்யாவுக்கு பெரிதாக வேலையில்லை. டபுள் மீனிங் காமெடி செய்திருக்கிறார். சில நேரங்களில் நோட்டா பட ஹீரோவை நினைவுப்படுத்துகிறார். க்ளைமாக்ஸில் அவர் எடுக்கும் முடிவுகள் சபாஷ்.

காஷ்மீர் ஆப்பிள் போல ஜில்லென்ஸ் இருக்கிறார் சாயிஷா. நடிப்பிலும் பாஸ் மார்க் பெறுகிறார். சமுத்திரக்கனி இதுவரை ஏற்காத கேரக்டர்.

ஆனால் அவருக்கும் பூர்ணாவுக்கும் உள்ள காதல் காட்சிகள் படத்தின் நீளத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

பிரேம் தலைவாசல் விஜய், சுவாமிநாதன் என்ற நட்சத்திர பட்டியலும் கூடவே உள்ளது.

கார்ப்பரேட் டானாக பொம்மன் இரானி. எதையும் நிதானமான செய்து இவர் நிகழ்த்தும் நகர்வுகள் நம்மை பயமுறுத்துகின்றன. இவரைப் போன்றவர்கள் நம் பிரதமரையே இப்படித்தான் ஆட்டி வைக்கிறார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துக்கிறது.

அமைச்சராக நடித்துள்ள நாகிநீடு. ‘அசாசின்’ வேலைகளைச் செய்பவராக சிராக் ஜானி ஆகியோரின் நடிப்பு பேசும்படியாக உள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கிராமத்து பாடல் சிறுக்கீ சீனு, ஹே அமீகோ பாடல் ஓகே ரகம். ஆனால் மற்ற பாடல்கள் படத்தின் நீளத்தை அதிகரிக்கிறது.

ஒளிப்பதிவும் (எம்ஸ். பிரபு) சண்டை காட்சிகளையும் பாராட்டியே ஆக வேண்டும். அற்புதமான வேலை. காஷ்மீரில் சண்டை காட்சி, ட்ரெயின் பைட் என அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்து.

விவசாயிகள் போராட்டம், மீடியா, பிரதமர் வருகை, பாதுகாப்பு என படம் முழுவதும் ஷங்கர் பட பிரம்மாண்டம் போல உள்ளது.

படத்தின் நீளம் நமக்கு சோர்வை தருகிறது. நிறைய காட்சிளை வெட்டியிருந்தால் நல்லது. (எடிட்டர் ஆண்டனி)

இயக்கம் பற்றிய அலசல்…

மண் மலடு ஆனால் மனித மலம் தான் மண்ணின் உரம் என்ற வசனங்கள் ரசிக்க வைக்கிறது.

மிலிட்டரி போல விவசாயமும் நாட்டிற்கு தேவையான ஒன்று என்ற வசனமும் ரசிக்க வைத்தாலும் வேறு ஒரு படத்தில் கேட்ட உணர்வை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் தற்போது விவாதப் பொருளாக உள்ள அனைத்தையும் படத்தில் சேர்த்திருக்கிறார் டைரக்டர் கேவி ஆனந்த்.

விவசாயிகள் போராட்டம், தண்ணீர் பிரச்சினை, இயற்கை விவசாயம், ஸ்டெர்லைட் ஆலை, பூச்சிக் கொல்லி மருந்து உரங்கள் என அனைத்தையும் அலசியிருக்கிறார்.

இத்தனை பாதுகாப்புகள் இருந்தும் பிரதமர் வீடு அலுவலகத்தில் ஒட்டு கேட்கும் கருவிகளையும் வைப்பதெல்லாம் நம்ப முடியவில்லை.

பிரதமர் ஆர்யா தண்ணி அடிப்பது, மாறுவேஷம் போடுவது எல்லாம் தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் அதெல்லாம் ஓவர்.

ஆண்டி என்றால் 40+ தானே என சைஸ் மற்றும் வயசை சொல்வது எல்லாம் பெண்களை அவமதிப்பதாக உள்ளது. அதிலும் மோகன்லால் முதல் சமுத்திரக்கனி வரை டபுள் மீனிங் பேசுவது வரம்பு மீறுவது போல உள்ளது.

பொதுவாக பிரதமர் என்றால் அவரின் அலுவலகத்தை காட்டியிருப்பார்கள். ஆனால் இதில் வீடு, அவரின் ஜாலியான பேச்சுகள் என காட்டியிருப்பது அவரும் மனிதன் தானே என்பதை உணர்த்துகிறது.

மற்றபடி என்ன தான் பிரதமரே என்றாலும் எல்லாம் இடத்திலும் பாதுகாப்பு ஓட்டைகள் இருப்பதை பக்காவாக காட்டியிருக்கிறார்கள்.

ஏனென்றால் பிரதமராக இருந்த இந்திராகாந்தி முதல் ராஜீவ் காந்தி வரை கொல்லப்பட்டதும் அப்படி தானே. எனவே அதனையும் நம்பிதான் ஆக வேண்டும்.

பிரதமர் மோகன்லால் லண்டன் முதலீட்டாளர்கள் மாநாட்டில் காதலி, அம்மா உறவுகள் பற்றியும் அதில் நம் தாய்நாட்டை பேசியிருப்பதும் சூப்பர்.

பிரதமர் ஆர்யா பிரஸ் மீட் ஜாலியாக இருந்தாலும் லாஜிக் இல்லை.

காஷ்மீர் முதல் எங்கு சென்றாலும் எல்லாரும் தமிழ் பேசுவது நம்பும்படியாக இல்லை. ஒருவேளை இதுதான் பொதுமொழியா?

பயோ வார் சார்ந்த விஷயங்களை காட்டியிருப்பது அருமை.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிலிபிரா என்ற பூச்சி இனத்தையும் அவை விவசாய நிலத்தை அழிப்பதையும், அதிலும் ஆண் பெண் பூச்சிகள் பற்றி பேசியிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த பூச்சிகள் தொடர்பான காட்சிகளை படமாக்கப்பட்ட விதம் சூப்பர்.

விவசாயம் தான் ஒவ்வொரு தேசத்தின் முதுகெலும்பு என்ற கருத்தைச் சொன்னதற்காக காப்பானைப் காப்பாற்றலாம்.

ஆக காப்பான்.. நம்மை காப்பான்..

Suriya Kaappaan review rating

ஜாம்பியே செத்துடும்.; சிக்கனே சாப்பிடமாட்டீங்க.. ஜாம்பி விமர்சனம் (1/5)

ஜாம்பியே செத்துடும்.; சிக்கனே சாப்பிடமாட்டீங்க.. ஜாம்பி விமர்சனம் (1/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜாம்பி என்றால் என்ன..? தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்.. மிருதன் படத்தில் பாத்து இருப்பீங்க. வைரஸ் தாக்கிய அந்த நோய் தான்.

யோகிபாபு ஒரு கேங் லீடர். இவர் தன் செல்போனை தொலைத்துவிடுகிறார். அது பிஜிலி ரமேஷிடம் இருக்கிறது. அவரை தேடி ரிசார்ட்டுக்கு வருகிறார்.

அங்கு ஏற்கெனவே சரக்கு அடித்துவிட்டு ரூம் போட்டுள்ளனர் கோபி, சுதாகர், அன்புதாசன், கார்த்திக் & பிஜிலி ரமேஷ்.

அதுபோல் யாஷிகா ஆனந்த் மற்றும் சக மாணவிகள் ஆகியோரும் அந்த ரிசார்ட்டுக்கு பார்ட்டி வருகின்றனர்.

கூவம் ஆறுகளில் செத்துக் கிடக்கும் கோழிகளை எடுத்து சுத்தம் செய்து, ஸ்டார் ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர்.

அந்த சிக்கன்களை சாப்பிடும் சில பெண்களுக்கு அந்த வைரஸ் தாக்குகிறது.

இந்த ஜாம்பிகளிடம் இருந்து படத்தின் நாயகர்கள் மற்றும் நாயகி எப்படி தப்பிக்கின்றனர் என்பது தான் கதை.

கலைஞர்கள்..

அட.. கதை நல்லாயிருக்கே என்று நீங்கள் நினைக்கலாம். அது சரி தான். ஆனால் படமாக்கியிருக்கும் விதம் இருக்கே.. கூவத்தில் கிடந்த சிக்கனை நாம் சாப்பிட்டால் வாந்தி வருமே. அதுதான் படத்தின் ரிசல்ட்.

யோகிபாபு அண்ட் யாஷிகா இருப்பதால் படத்தை கொஞ்சம் பார்க்க முடிகிறது. அரை குரை ஆடைகளில் நம்மை கிறங்கடித்து விட்டு செல்கிறார் யாஷிகா.

யோகிபாபு காமெடி ரசிக்க வைக்கிறது. இவருடன் வரும் அடியாட்கள் ஓகே.

படத்தின் க்ளைமாக்ஸில் யோகிபாபுவிடம் ஒரு கேள்வியை நண்பர்கள் கேட்கின்றனர்.

நீங்க ஏன்னே கல்யாணம் பண்ணிக்கலன்னு… சினிமாக்காரனுக்கு வீடே தர மாட்டுறாங்க. இதுல எங்கடா பெண் தருவாங்க? என்கிறார். ஆனால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கள்ளஉறவு (பொதுமக்களை) தான் காட்டுறாங்க என நக்கல் அடிக்கிறார். இவர் இந்த சினிமாவை பொறுத்தவரை டான் தானே.. பின் ஏன் இந்த தேவையில்லாத டயலாக்.?

பிஜிலி ரமேஷ் தீவிர ரஜினி வெறியர். அதற்காக எப்போதும் அவரைப் போல செய்வது ரஜினி ரசிகர்களையே சலிப்படைய வைக்கிறது.

யூடிப்பில் கலக்கிய பரிதாபங்கள் புகழ் கோபி & சுதாகர் இதில் நடித்துள்ளனர். இனி சினிமா பரிதாபம் என்கிற அளவுக்கு நம்மை சோதிக்கின்றனர்.

வில்லன் ஜான்விஜய் பாவம். அன்புதாசன் யாஷிகாவுடன் சுத்துகிறார். அதை எல்லாம் பார்க்க கூட முடியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நடிகர் பிரேம்ஜி தான் இப்படத்தின் இசையமைப்பாளர். ஒவ்வொரு படத்திற்கும் தன் அடைமொழியை மாற்றிக் கொள்கிறார். இதற்காக இசை காட்டேரி என வைத்துள்ளார். அதற்கு ஏற்ப இசையை கொடூரமாக கொடுத்துள்ளார்.

பேட்ட முதல் விக்ரம் வேதா வரை உள்ள மியூசிக்கை ஓட விட்டுள்ளார். ஆர் யூ ஓகே பேபி பாடல் கூட இரைச்சலாக உள்ளது.

படத்தில் ஒரே ஆறுதல்.. ஒளிப்பதிவாளர் விஷ்னுஸ்ரீ மற்றும் மேக்அப் மாரியப்பன் தான். அவர்கள் நியாயமாக உழைத்துள்ளனர். ஜாம்பி மேக் அப் ஓகே.

ஆனால் ஜாம்பியை போல சுதாகர், கோபி, அன்புதாசன் நடிப்பது மரண கொடூரம்.

புவன் நலன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பார்த்தால் ஜாம்பியே செத்துடும். மக்களின் நிலை என்னவாகும்? யோசித்து பாருங்கள்.

More Articles
Follows