தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத்குமார் இயக்கத்தில் விஷால் சுனைனா இணைந்து நடித்துள்ள படம் ‘லத்தி’.
இந்த படம் டிசம்பர் 22ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக விஷால் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து வருகிறார்.
இதனிடையில் செய்தியாளர்களை சந்தித்தபோது விஷால் பேசியதாவது..
“இப்போதைக்கு சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன். கர்நாடகாவில் நான் அரசியலுக்கு வர போவதாக ஒரு செய்தி பரவியது. அது தெரிந்ததும் எனது அப்பாவிற்கு தொடர்பு கொண்டு நிறைய பேர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
ஆனால், அது உண்மை இல்லை. குப்பத்தில் நான் மூன்று வருடங்கள் தங்கி இருந்தேன். அப்போது தினமும் ஒவ்வொரு குவாரிக்கும் நான் செல்வேன். அங்கு இருக்கும் மக்களுக்கு நான் நன்றாக பரிச்சயம் என்பதால் அரசியலுக்கு வருவேன் என்று செய்தி வந்துள்ளது.
அதேபோல் நான் பிஜேபி தலைமை அலுவலகத்திற்கு செல்வதாகவும் ஒரு செய்தி பரவியது. அப்போது நான் அசாமில் இருந்தேன். பிறகு காசிக்கு சென்றேன்.
கங்கை ஆற்றில் பிணங்கள் எரியும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்பினேன் ஆனால் செல்ல முடியவில்லை. அங்கு ஒருபுறம் ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரரின் உடலும் எரிந்து கொண்டிருக்கும்.
மறு புறம் ஆயிரம் ரூபாய்க்கு வழியின்றி இருப்பவரின் உடலும் எரிந்து கொண்டிருக்கும். நாமும் இறுதியாக இங்கு தான் வர போகிறோம். ஆகையால், யாருக்கும் பேதமில்லை, எல்லோரும் ஒன்று தான் என்று தோன்றியது.
எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேனா என்பது தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது ஒரு துறை அல்ல; அது ஒரு சமூக சேவை! யாரெல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்களோ, அனாதை இல்லத்திற்கு ஒருவேளை சாப்பாடு போடுகிறார்களோ அவர்களும் அரசியல்வாதி தான்.
மற்றவர்களுக்கு உதவுவது தான் அரசியல். அதை என்னால் இப்போதே செய்ய முடியும் போது, பதவிக்கு வந்து தான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்” என்றார்.