தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத்குமார் இயக்கத்தில் விஷால் சுனைனா இணைந்து நடித்துள்ள படம் ‘லத்தி’.
இந்த படம் டிசம்பர் 22ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக விஷால் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து வருகிறார்.
இதனையடுத்து கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்று வருகிறார்.
இதனிடையில் செய்தியாளர்களை சந்தித்தபோது விஷால் பேசியதாவது..
“வரும் பிப்ரவரி மாதத்தில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறேன். நான் படம் இயக்குவேன் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
நான் எழுதியது வேறு கதை. ஆனால், இயக்கப் போவது வேறு. அந்த கதையில் ஏழு தெரு நாய், ஒரு பூனை, ஒரு குதிரை சம்பந்தப்பட்ட விலங்குகளின் கதை.
அந்த விலங்குகளை ப்ளூ கிராஸில் தத்தெடுத்து வெளிநாட்டு பயிற்சியாளரை வரவழைத்து பயிற்சி அளித்து படத்தை உருவாக்கப் போகிறோம். அந்தப் படம் தான் அறிமுக இயக்குநராக நான் இயக்கும் படமாக இருக்கும். அடுத்து நான் நடிக்கும் படம் # மார்க்ஆண்டனி, #துப்பறிவாளன்-2.
கொரோனா காலத்தில் விஜய்-க்கு கதை சொல்ல வேண்டும் என்று ராமு சாரை தொடர்பு கொண்டேன். அப்போது முடியவில்லை.
ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் அவரை வைத்து இயக்குவேன். ஒரு ரசிகனாக இயக்குவேன். அவருக்காக அவருக்கு பிடித்த மாதிரி கதையை எழுதி வருகிறேன்.
அவர் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவ்வப்போது தோன்றும் போதெல்லாம் சுவரில் எழுதி விடுவேன். வெளியே இருந்தால் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து வைப்பேன்.
மிஷ்கின் அழைத்தால் நிச்சயம் அவரது அலுவலகம் செல்வேன். தயாரிப்பாளராக அல்ல, ரசிகனாக செல்வேன்.
அமைச்சராக பதவி ஏற்கும் போது தான் உதயநிதி ஸ்டாலின் என்று அப்பா பெயரை உபயோகித்தார். அதுவரை உதயா என்று தான் கூறுவார். #லத்தி படம் வெளியான பிறகு இங்கு ஒரு பிலிம் சிட்டி வேண்டும். ஏற்கனவே சென்னையில் இருப்பதை மேம்படுத்தினாலே போதும் என்று கோரிக்கை வைப்பேன்” என்றார்.