கதை கேட்க கேட்க என் உடல் மொழியே மாறியது.. ‘லத்தி’யில் 4 க்ளைமாக்ஸ் – விஷால்

கதை கேட்க கேட்க என் உடல் மொழியே மாறியது.. ‘லத்தி’யில் 4 க்ளைமாக்ஸ் – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற 22ஆம் தேதி வெளியாகும்
#லத்தி படத்தில் தன்னுடைய அனுபவம் குறித்து நடிகர் விஷால் கூறியதாவது :

நான் ஏற்கனவே காவல்துறை உயரதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் அதுபோன்ற கேரக்டர் இருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பேன். ஆனால், இது ஒரு கான்ஸ்டபிள் கதாபாத்திரம். உயர் அதிகாரிகள் கட்டளையிடுவதை செய்வதுதான் கான்ஸ்டபிள்-ன் வேலை. கதை கூறும் போது எனக்கும் இது புதிதாக இருந்தது.

அதேபோல் டைரக்டர் வினோத்குமார் என்னிடம் கதை சொல்லும் போது,
படத்தில் 7வயது பையனுக்கு அப்பாவாக நடிக்கிறீர்கள் என்று தயங்கி தயங்கி கூறினார். அதில் எனக்கு பிரச்சனை இல்லை நீங்கள் கதையைக் கூறுங்கள் என்றேன். படத்தில் நடித்த சிறுவன் இரண்டாவது கதாநாயகன் மாதிரிதான்.

கடைசி 45 நிமிடங்கள் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதிலும் பூர்த்தியாகாத கட்டிடத்திற்குள் நடக்கும் காட்சிகள். 45 நிமிடம் ஒரே இடத்தில் நடக்கும் காட்சிகளை ஆர்வம் குறையாமல் எடுப்பது என்பது புதுமையாக இருந்தது.

எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. முதலில் நான் சாதாரணமாக தான் கதை கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அடுத்தடுத்து கேட்க கேட்க என்னுடைய உடல் மொழியே மாறி விட்டது.

பொதுவாக ஒரு படத்திற்கு ஒரு கிளைமாக்ஸ் தான் இருக்கும். ஆனால், இந்த படத்தில் நான்கு கிளைமாக்ஸ் இருக்கும். இந்த காட்சிக்கு மேல் கதாநாயகனால் எதுவும் செய்ய முடியாது இதோடு படம் முடிந்தது என்று நினைக்கும் அந்த நிமிடத்தில் இருந்து திரைக்கதை யூடர்ன் எடுக்கும்.

அனைத்து கட்ட பணிகளும் முடிந்து இப்போதுதான் முழுதாக படத்தை பார்த்தேன். வினோத் கூறியதை விட மூன்று மடங்கு அதிகமாக தெரிந்தது. நான் நடித்த படம் என்பதற்காக இதைக் கூறவில்லை. அதேபோல், பின்னாடி இருந்து பீட்டர் ஹெயின் மற்றும் யுவன் சங்கர் ராஜா என்ற இரண்டு கதாநாயகர்கள் இப்படத்தை தூக்கி நிறுத்தி விட்டார்கள்.

#லத்தி என்பது கவர்ச்சிகரமான தலைப்பு என்பதால் அனைத்து மொழிகளிலுமே படத்தின் பெயரை லத்தி என்று வைத்து விட்டோம். அதேபோல லத்தி என்பது வெறும் பெயர் மட்டுமல்ல, படத்தில் அதுவும் ஒரு கதாபாத்திரம். அந்த லத்தி தான் ஒரு சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்தும். பின்பு அந்த லத்தி மூலமாக அவன் எப்படி அதிலிருந்து வெளியில் வருகிறான் என்பதுதான் கதை.

ஒரு உயர் அதிகாரியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, ஏன் எப்போதும் உயர் அதிகாரிகளைப் பற்றியே எடுக்கிறார்கள்? கான்ஸ்டபிளான எங்கள் வாழ்க்கையை எடுக்க மாட்டார்களா? என்று ஒரு கான்ஸ்டபிள் என்னிடம் கேட்டார் என்றார்.

அதற்கு நான் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறேன் என்று கூறியதும் மிகவும் சந்தோஷம் அடைந்தார். ஏனென்றால், சுமார் 2 லட்சம் பேர் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றுகிறார்கள். ஆனால், உயர் அதிகாரிகள் 250 பேர் தான் இருக்கிறார்கள்.

ஆகையால், கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கும் மகிழ்ச்சியே. கான்ஸ்டபிளுக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்பதை கிடையாது. அவர்கள் மொத்த வாழ்க்கையுமே அர்ப்பணித்து விடுகிறார்கள். அவர்கள் தூங்குவதே மூன்று மணி நேரம் மட்டும் தான் இருக்கும்.

அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தால் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் என்று ஏதாவது ஒரு பிரச்சனை நிச்சயம் இருக்கும். இதை நான் கூறவில்லை ; காவல்துறையினரே கூறியது. இவர்கள் ஆறு மாத காலம் பணியிடை நீக்கத்தில் இருந்தால், சரியான நேரத்திற்கு சாப்பாடு தூக்கம் என்று உடல் நலம் தேறி விடுவார்கள்.

நான் அண்ணா நகரில் இருக்கிறேன். அங்குள்ள காவல் நிலையத்தில் உள்ள அனைவரையும் அவர்களது குடும்பத்தாருடன் இப்படத்தை காண்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். சேலம் கமிஷனரும் நான் அனைவரையும் அழைத்து செல்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதேபோல் ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருக்கும் அனைவரையும் குடும்பத்துடன் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

143 நாட்கள் படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் அடிபட்டு நடித்திருக்கிறேன். இதுபோன்று இன்னொரு படத்தில் பணியாற்றுவேனா என்று தெரியவில்லை. ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு இந்த படத்திலும் இறுதி காட்சியில் ஆறு நிமிடங்கள் சவாலாக இருந்தது. அந்த காட்சியை கூறிவிட்டு வசனத்திற்கான பேப்பரை டைரக்டர் கொடுத்தார்.

ஆனால் நான் மறுத்து விட்டேன். என்னை சுற்றிலும் 12 கேமராக்கள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்ப இந்த காட்சியை நான் நடிக்க மாட்டேன் என்று கூறினேன். தன் மகனுக்காக ஒரு அப்பா தன்னுடைய உணர்வை, உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துவார் என்று மனதில் நிறுத்திக் கொண்டு நடித்திருக்கிறேன்.

ஒரு சராசரி மனிதன் தன் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது, அதுவரை இருந்த பேச்சு நடை என்று எல்லாம் மாறி கதாநாயகனாகி எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் இத்திரைப்படம்.

2012 இல் இருந்து சுனைனா வேறு, இப்போது இருக்கும் சுனேனா வேறு. அழகாக நடித்திருக்கிறார்.
பொதுவாக அம்மா பையன் சென்டிமென்ட் படங்கள் தான் அதிகம் இருக்கும். இந்த படத்தில் அப்பா பையனுக்கு இருக்கும் சென்டிமென்ட் காட்சிகள் படம் முழுவதுமே இருக்கும்.

மேலும், என்னுடைய 18 வருட கால சினிமா பயணத்தில் பீட்டர் ஹெயின் மாஸ்டர் போல் ஒரு ஸ்டண்ட் இயக்குநரை நான் பார்த்ததில்லை. அவர் பாதுகாப்பு தான் முதலில் பார்ப்பார். அவருடைய பணியை அர்ப்பணிப்போடு செய்வார்.

ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அவரை நான் பார்ப்பேன். அவர் உற்சாகமடைந்தால் தான் எனக்கு திருப்தியாக இருக்கும்.

காட்சியில் 50 பேர் உங்களை சுற்றி அடிக்க வருவார்கள் நீங்கள் எப்படி உங்களை காப்பாற்றிக் கொள்வீர்கள்? என்று கேட்டுவிட்டு என் விருப்பத்திற்கு விட்டுவிட்டார். அந்த சவால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், என்னுடன் சண்டையிட்ட வீரர்களுக்கு நிஜமாகவே அடி விழுந்தது. காட்சி முடிந்ததும் ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்டேன்.

ஹிந்தியில் என்னுடைய படம் வெளியானால் தமிழ் மொழிக்கு 50 மற்றும் ஹிந்தி மொழிக்கு 50 திரையரங்குகள் கிடைக்கும். ஆனால் இந்த படத்தை அதிகாரப்பூர்வமாகவே வெளியிடுகிறார்கள். ஆகையால்,சுமார் 450 திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளம் மற்றும் கன்னட மக்கள் எப்போதும் ஒரிஜினல் தான் விரும்புவார்கள்.

நாங்கள் அந்த மொழிகளில் டப்பிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அது மட்டுமல்ல, திரைப்பட விழாக்களுக்கு சென்றேன். அங்கும் படத்தை புரமோட் செய்ய முடியும் என்பதை அறிந்து கொண்டேன்.

இப்படத்தின் புரமோஷனுக்காக ஒவ்வொரு ஊராக சென்றதில் என் ட்ரஸ்ட் மூலமாக படிக்கும் 15 மாணவிகளுக்கு இலவசமாக சிறந்த கல்லூரியில் இடங்கள் கிடைத்துள்ளது.

திருட்டு வீடியோவை அழிப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழு ஆறு மாதங்கள் கடினமாக உழைத்து கண்டுபிடித்து வைத்துள்ளோம். ஆனால், அரசாங்கம் நினைத்தால் அதை எளிதில் ஒழித்து விடலாம். ஏனென்றால், சைபர் கிரைமில் தொழில்நுட்பங்கள் இருக்கின்றது.

அனைத்து தளங்களையும் முடக்குவதற்கு வாய்ப்பு இருக்கும்போது திருட்டு வீடியோ ஒளிபரப்பாகும் தளங்களை மட்டும் ஏன் அவர்களால் தடை செய்ய முடியவில்லை என்று தெரியவில்லை. ஆனால், என்றாவது ஒருநாள் பிரதமர் மோடி அவர்களை சந்தித்தால் இரண்டு விஷயங்களுக்காக கோரிக்கை வைப்பேன். ஒன்று திருட்டு வீடியோ தளம் இன்னொன்று ஜிஎஸ்டி.

திருட்டு வீடியோ தளத்தை அழித்தால் தளத்தை ஐபி முகவரியை மாற்றி வேறொரு பெயரில் புதிதாக தொடங்குகிறார்கள். இது இப்படியே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதை யார் செய்கிறார்கள், அவர்களுடைய வீடு, குடும்பம் என்று மொத்த விபரம் என்னிடம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் கூகுள் வழிகாட்டியும் இருக்கிறது.

ஒரு காட்சிக்கு 10 பேர் மட்டுமே வந்திருக்கும் நிலையில், இவர்கள் மொத்தமாக 50 டிக்கெட்டுகள் வாங்கிக் கொண்டு நடுவில் ஸ்டாண்ட் வைத்து படம் பிடித்து வெளியிடுகிறார்கள். இப்போது யார் தளத்தில் முதலில் வெளியிடுவது என்று போட்டிகளே நடக்கிறது.

#சத்யம் திரைப்படத்தில் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு விரைப்பாக நடித்து விட்டேன். ஆனால், லத்தி படத்தில் அதற்கு எதிரான கதாபாத்திரம். அது சவாலாக இருந்ததால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இப்படத்தின் 45 நிமிட சண்டைக் காட்சிகளுக்காக இடம் தேடிக் கொண்டிருந்தோம். நிறைய இடத்தில் தேடி இறுதியாக ஹைதராபாத்தில் பீட்டர் ஹெயின் மாஸ்டர் தான் கண்டுபிடித்தார்.

அந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்து வெடித்த பின் படப்பிடிப்பு நடத்திவிட்டு, மறுநாள் உரிமையாளர் வருவதற்குள் சுத்தம் செய்து வைத்தோம்.

#கைதி படம் எப்படி முதலில் மன்சூர் அலிகானில் ஆரம்பித்து கார்த்தியில் முடிந்ததோ?! அதுபோல இந்த படம் முதலில் சமுத்திரக்கனிக்கு தான் எழுதப்பட்டது. சமுத்திரக்கனி நடித்திருந்தால் முருகானந்தம் என பெயரிடப்பட்டிருக்கும்

தனது திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த நடிகை அஞ்சலி

தனது திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த நடிகை அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் பேசும் ஒரு அழகான நடிகையாகவே அஞ்சலியை ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

இந்தப் பெண் நடிக்கிறாரா அல்லது உண்மையிலேயே அந்த கதாபாத்திரமாகிவிட்டாரா என்று வியக்கும் அளவுக்கு அவர் தனது பாத்திரங்களை எடுத்துச் செல்கிறார்.

வீட்டில், என் திருமணத்தைப் பற்றி அடிக்கடி கேட்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும், நான் கமிட் ஆன படங்களின் பெரிய பட்டியலை அவர்களுக்குக் காட்டுவேன்.

திருமணத்துக்குப் பிறகும் ஹீரோயின் நடிக்கலாம் என்ற நிலை உள்ளது.

ஆனால் இப்போது எனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. கண்டிப்பாக எல்லாரிடமும் தெரிவித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ‘அவதார்’ தொழில்நுட்ப கலைஞர்கள்

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ‘அவதார்’ தொழில்நுட்ப கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அவதார் 2 பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ‘அவதார்’ படத்தில் பணிபுரிந்த சில டெக்னீஷியன்கள் இணைந்துள்ளனர் என்ற தகவல் கசிந்துள்ளது.

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஏலியன் படமான ‘அயலான்’ படத்தின் 1000க்கும் மேற்பட்ட சிஜி காட்சிகள் படமாக்கப்பட்டதால் கடந்த பல மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிக்கலான தொழில்நுட்ப வேலைகளை உள்ளடக்கிய சில காட்சிகளுக்காக, அவதாரில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்தியுள்ளது.

‘சூர்யா 42’ பற்றிய ரெட் ஹாட் அப்டேட்ஸ் இதோ !

‘சூர்யா 42’ பற்றிய ரெட் ஹாட் அப்டேட்ஸ் இதோ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல ஸ்டண்ட் நடன இயக்குனரான சுப்ரீம் சுந்தர் ‘சூர்யா 42’ படக்குழுவில் சமீபத்தில் இணைந்துள்ளார்.

யதார்த்தமான சண்டைக்காட்சிகளுக்கு பெயர் பெற்ற மாஸ்டர் ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.

‘சூர்யா 42’ படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில், கராத்தே கார்த்தி தான் லேட்டஸ்ட்டாக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ‘பிகில்’ படத்தில் முதன்முதலில் கவனிக்கப்பட்ட இவர், நெல்சன் இயக்கிய ‘டாக்டர்’ படத்தில் வில்லன் வேடத்தில் நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்தார்.

குறும்பட போட்டியில் பரிசு வென்ற ‘கோடீஸ்வரன்’.; சிஷ்யன் ஆதேஷ் பாலாவுக்கு பரிசளித்த குரு பாக்யராஜ்

குறும்பட போட்டியில் பரிசு வென்ற ‘கோடீஸ்வரன்’.; சிஷ்யன் ஆதேஷ் பாலாவுக்கு பரிசளித்த குரு பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆதேஷ் பாலா.

இவர் 1980களில் பிரபலமான நடிகர் சிவராமனின் மகன் ஆவார்.

‘ஒரு கதையின் கதை’ மூலம் பாக்யராஜ் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர்.

சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திலும் நடித்திருந்தார்.

மேலும் ரஜினியுடன் பேட்ட, சூர்யாவுடன் ஆறு, விக்ரமுடன் சாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் பல குறும்படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார் ஆதேஷ் பாலா.

இந்த நிலையில் STAR AWARDS என்ற குழு நடத்திய விழாவில் சிறந்த குறும்படத்திற்கான போட்டியில் இரண்டாம் பரிசை தட்டிச் சென்று இருக்கிறார் ஆதேஷ் பாலா.

இந்த விருதுடன் இவருக்கு 25 ஆயிரம் ரொக்க பணமும் கிடைத்துள்ளது.

250 படங்கள் கலந்துக் கொண்ட குறும்பட விழாவில் இவர் இயக்கி தயாரித்து நடித்த ‘கோடீஸ்வரன்’ என்ற குறும்படம்
2வது பரிசை பெற்றுள்ளது.

இயக்குநர் கே பாக்யராஜ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

இது குறித்து ஆதேஷ் பாலா நம்மிடம் பேசுகையில்…

“என்னை அறிமுகப்படுத்திய என் ஆசான் பாக்யராஜ் அவர்களால் நான் விருது பெற்று இருப்பது பெரும் பாக்கியம்.

மேலும் என் தந்தையை அவர் நினைவு வைத்து “உன் அப்பா பெயரை காப்பாற்றி விட்டாய்..” எனக் கூறிய போது எனக்கு மெய் சிலிர்த்தது.

‘கோடீஸ்வரன்’ என்ற குறும்படம் ஒரு விவசாயியை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. விவசாயிகள் படும் வேதனையும் தத்துரூபமாக நடித்து இருந்தேன். பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த குறும்படம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் என நம்புகிறேன்’ என தெரிவித்தார் ஆதேஷ் பாலா.

படையப்பா பாணியில் போயஸ் கார்டனில் ரஜினி பக்தர் ரஞ்சித்.; உதவ காத்திருக்கிறோம் என லதா உறுதி

படையப்பா பாணியில் போயஸ் கார்டனில் ரஜினி பக்தர் ரஞ்சித்.; உதவ காத்திருக்கிறோம் என லதா உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூளவாடி கிராமத்தை சேர்ந்த (களிமண்) மண்பாண்ட தொழில் செய்து வருபவர் ரஞ்சித்.

இவரை ரஜினி ரஞ்சித் என்று சொன்னால்தான் அந்த பகுதி மக்களுக்கே இவரை தெரிகிறது.

இவர் தீவிர ரஜினி ரசிகர் என்பதால் தன் பெயரை ரஜினி ரஞ்சித் என வைத்துக் கொண்டார். இவரை பார்த்தாலே இவர் ரஜினி ரசிகர்தான் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

நெற்றியில் விபூதி பட்டை… கழுத்தில் ருத்திராட்ச மாலை, ரஜினி ஸ்டைலில் உடைகள், தலைவரின் 90s சிகை அலங்காரம் என அச்சு அசலாக ரஜினியாகவே வலம் வருகிறார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த ரஜினி ரஞ்சித் சிறுவயதிலிருந்தே ரஜினியின் படங்களை வரைவது வழக்கமாக கொண்டவர்.

தற்போது கடந்த 10 ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்.

அந்த மண்பாண்டத் தொழிலில் ரஜினியின் உருவ சிலையை வடிவமைத்து ரஜினி அவர்களுக்கு அனுப்பி அவரிடம் இருந்து வாழ்த்து பெற்றுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் ரஜினியின் படையப்பா சிலையை வடிவமைத்து அதை ரஜினியிடமே நேரில் கொடுத்துள்ளார்.

ரஜினியை சந்தித்து அவரின் மற்றொரு சிலையை பரிசளிக்க ரஜினியின் நேரம் கேட்டு காத்திருக்கிறார்.

இதனையறிந்த ரஜினி.. “சீக்கிரமே உன்னை சந்திக்கிறேன் கண்ணா நீ மிகப் பெரிய திறமைசாலி. நீ நல்லா இருக்கணும் ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று டிசம்பர் 18ஆம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது மனைவி லதாவை சந்தித்துள்ளார்.

படையப்பா படத்தில் ரஜினி அணிந்திருந்த உடை போலவே உடையணிந்து தனது நண்பருடன் சென்று சந்தித்துள்ளார் ரஞ்சித்.

அப்போது ரஜினியின் பெற்றோர் உருவ சிலையை (தானே வடிவமைத்த) பரிசாக கொடுத்துள்ளார். மேலும் ரஞ்சித் வடிவமைத்த ஜெயிலர் பட ரஜினி சிலையையும் கொடுத்துள்ளார்.

இதனை பெற்றுக் கொண்ட லதா ரஜினிகாந்த்.. “விரைவில் தலைவர் ரஜினி உங்களை சந்திப்பார். அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் என்றும் உங்கள் தொழிலுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். நாங்கள் செய்து தருகிறோம்” என்று உறுதி அளித்துள்ளார் லதா.

——-

தலைவர் புரிஞ்சிக்கவே மாட்டாரா.? கலங்கிய ரசிகரால் அதிர்ந்த ரஜினி. l Fan request to Thalaivar Rajini

More Articles
Follows