சூப்பர் ஸ்டார் யார்.? கமல் – அமீர்கானுடன் இருந்த போட்டோவை பகிர்ந்த விஷ்ணு விஷால்

சூப்பர் ஸ்டார் யார்.? கமல் – அமீர்கானுடன் இருந்த போட்டோவை பகிர்ந்த விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார்.

அந்தப் படத்தின் டீசர் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று வெளியானது. இதன் பின்னர் நவம்பர் 14ஆம் தேதி தன்னுடைய X பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு வந்தார். அது சர்ச்சையானது. தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்..

அதன் விவரம் வருமாறு.

கமல்ஹாசன் மற்றும் ஆமீர்கானுடன் தான் (விஷ்ணு) போட்டோவை பகிர்ந்து அதில்.. ’ஃபேவரிட் படங்களுக்கு எல்லாம் ஃபேவரிட்’ என்று குறிப்பிட்டு ‘Superstars are superstars for a reason’ என பதிவிட்டார்.

பின்னர் அந்த வார்த்தைகளை மாற்றி ’stars are stars for a reason’ இருந்தார்.

தற்போது பதிவில்…

சூப்பர்ஸ்டார்கள் சூப்பர்ஸ்டார்கள் தான். அந்தப் பதிவை நான் எடிட் செய்துவிட்டேன் என்பதற்காக நான் பலவீனமானவன் அல்ல. சூப்பர்ஸ்டார்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

என்னுடைய டைம்லைனில் நெகட்டிவிட்டியை பரப்புவோர் இங்கிருந்து கிளம்புங்கள். நமக்கென்று ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் பட்டம் மட்டுமே உள்ளது. ஆனால் என்னுடைய மதிப்புக்கு. அப்பாற்பட்டு, சாதித்த அனைவருமே சூப்பர்ஸ்டார்கள்தான்.” என பதிலளித்துள்ளார்.

Vishnu Vishal click with Kamal and Amirkhan became controversy

திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பதவியிலிருந்து விலகிய திருப்பூர் சுப்ரமணியம்

திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பதவியிலிருந்து விலகிய திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள் எப்போதும் புகழ் வெளிச்சத்தில் இருப்பார்கள்.

ஆனால் அவர்கள் வெற்றிக்கு காரணமான தயாரிப்பாளர்களோ இயக்குனர்களோ பெரிதாக வெளியே தெரிவதில்லை.

அதுபோலதான் விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும்.. ஆனால் தமிழக ரசிகர்களை பொறுத்தவரை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் மிகவும் பிரபலம்.

காரணம் இவர் யூடியுப் மற்றும் டிவி சேனல்களில் கொடுக்கும் இன்டர்வியூகள் எப்போதுமே வைரலாக இருக்கும்.

இந்த நிலையில் இவர் தீபாவளியன்று அரசு அனுமதி இன்றி ஆறு காட்சிகளை அவரது சக்தி சினிமாஸ் திரையரங்கில் திரையிட்டுள்ளார்.

இதனை எடுத்து அவருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட திரை அரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் ராஜினாமா..

சமீபத்தில் இவரது திரையரங்கத்தில் தீபாவளி அன்று காலை அனுமதியின்றி படங்களை திரையிட்டதாக மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை ஈரோடு நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கம் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளர்.

திருப்பூர் சுப்பிரமணியம்

Tirupur Subramanyam resigned his post from theatre owners association

PONGAL 2024 ரஜினி – தனுஷ் – சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய்சேதுபதி

PONGAL 2024 ரஜினி – தனுஷ் – சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த ஆண்டு 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி கௌரவத் தோற்றத்தின் நடித்துள்ள ‘லால் சலாம்’ படம் பொங்கல் சமயத்தில் வெளியாகிறது. இதன் டீசர் கடந்த நவம்பர் 12 தீபாவளி அன்று வெளியானது. இந்த டீசரிலும் ரிலீஸ் தேதி உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.

இதற்கு முன்னரே சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ரகுமான் இசையமைப்பில் உருவான ‘அயலான்’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ படமும் 2024 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படமான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற திரைப்படமும் பொங்கல் சமயத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அந்தாதூன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ளனர்.

ப்ரீத்தம் இசையமைக்க தமிழில் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியிருக்கிறார்.

மது நீலண்டன் ஒளிப்பதிவு செய்ய, பூஜா லதா சூர்தி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் ரிலீஸாகிறது.

மெரி கிறிஸ்துமஸ்

Merry Christmas movie release postponed to Pongal 2024

ஜிவி. பிரகாஷ் இசையில்… ‘வறண்ட மண்ணும் குருதி குடிக்கும்’..; இந்தப் பாடலை பாடியவர் தனுஷ்

ஜிவி. பிரகாஷ் இசையில்… ‘வறண்ட மண்ணும் குருதி குடிக்கும்’..; இந்தப் பாடலை பாடியவர் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ்குமார், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் இந்த ஆண்டு 2023 டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளால் தாமதமானது. எனவே 2024 பொங்கல் தினத்தில் வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் படத்தின் பாடல் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.

அவரின் இசையில் உருவான இந்த பாடலை தனுஷ் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில், “இந்த வறண்ட மண்ணும் குருதி குடிக்கும் … புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் …. நாந்தாண்டா நீதி …. நாந்தாண்டா நீதி ….” என்று குறிப்பிட்டு முதல் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Gv Prakash reveals Dhanush sung in Captain Miller

விஜய்சேதுபதி – மஞ்சுவாரியரை இளமையாக காட்ட வெற்றிமாறன் எடுக்கும் ரிஸ்க்

விஜய்சேதுபதி – மஞ்சுவாரியரை இளமையாக காட்ட வெற்றிமாறன் எடுக்கும் ரிஸ்க்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்த நடிகர் சூரியை நாயகனாக்கி அழகு பார்த்தவர் வெற்றிமாறன்.

இவர் இயக்கிய ‘விடுதலை’ படத்தில் சூரி நாயகனாகவும் கதையின் நாயகனாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

தற்போது இந்த படத்தின் (விடுதலை 2) இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய்சேதுபதிக்கு அதிகப்படியான காட்சிகள் உள்ளன.

இந்த கதைக்களம் 1960-70களில் நடப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே விஜய்சேதுபதி மற்றும் அவருக்கு மனைவியாக நடிக்கும் மஞ்சு வாரியார் இருவரையும் இளமையாக காட்ட டிஏஜிங் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கூடுதல் தகவல்…

இந்தப் படத்தை முடித்த பின் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இதில் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அதன்பிறகு தனுஷ் நடிப்பில் ‘வட சென்னை 2’ பாகத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vetrimarans Viduthalai 2 news updates

இயக்குநர் – நடிகர் சேரனின் தந்தை பாண்டியன் காலமானார்

இயக்குநர் – நடிகர் சேரனின் தந்தை பாண்டியன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா போற்றும் வகையில் தரமான படங்களை இயக்கியவர் சேரன்.

இவர் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், பொற்காலம், வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிஃராப், தவமாய் தவமிருந்து என பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

இதில் ஆட்டோகிராப் படத்திலிருந்து அவரே நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் இயக்குநர்-நடிகர் சேரனின் தந்தை எஸ். பாண்டியன் இன்று (நவம்பர் 16) காலை 6 .30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவர்களது வீட்டில் இயற்கை எய்தினார்.

சேரனின் தந்தை

84 வயதான பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று நவம்பர் 16 காலை உயிரிழந்தார்.

அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் 1/14 ஏ, பழையூர்பட்டியில் உள்ள வீட்டில் நடைபெறும்.

சேரன் தந்தை பாண்டியன் மறைவை தொடர்ந்து பல்வேறு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சேரன் தந்தை

Director Actor Cherans father Pandiyan passes away

G-map:

https://maps.app.goo.gl/LdFdGMYcLMZbE1qe6

More Articles
Follows