தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கத்தில் நடைபெற்ற நெல் திருவிழாவில் நடிகர் விஷால் கலந்துக் கொண்டார்.
அப்போது ‘நெல் செய்தி’ என்ற காலாண்டு இதழை வெளியிட்டு அவர் பேசியதாவது:
ஒரு நடிகராக இருந்தாலும் விவசாயியாக வாழ்வதே எனது நோக்கம். எனவே, டெல்லா பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்யவுள்ளேன்.
எனக்கு விதை விதைக்கும் பணிகள் ரொம்ப பிடிக்கும்.
இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் துறை போன்று விவசாயத்தையும் ஒரு துறையாக மாற்றி சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
கடன் பிரச்சினைகள் வந்தாலும் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு செல்ல கூடாது. தங்களின் பிரச்சினைக்கு அது ஒரு தீர்வாகாது” என்றார்.