தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொம்பன்’ படத்திற்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து ‘விருமன்’ படத்தின் மூலம் முத்தையா – கார்த்தி கூட்டணி இணைந்துள்ளனர். இதில் தயாரிப்பாளராக நடிகர் சூர்யாவும் இணைந்துள்ளார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தில் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது.
இப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.
#விருமன் பட விழாவில் நடிகர் சூரி பேசும்போது…
சூர்யா வந்தாலே தாங்காது, மாறன் விருமன் இருவரும் வந்தால் சொல்லவா வேண்டும்? மதுரையே ஆரவாரமாக இருக்கிறது. ரசிகர்கள் சார்பாக சூர்யா அண்ணன் தேசியவிருது பெற்றதற்கு வாழ்த்துகள்.
இந்த விருதுகளெல்லாம் சினிமாவில் நீங்கள் உழைத்த உழைப்பிற்கு கிடைத்தது. ஆயிரம் கோவில்கள் கட்டுவதைவிட, ஆயிரமாயிரம் அன்னச் சத்திரம் கட்டுவதைவிட,்ஒரு ஏழைக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மத்திற்கு பேசப்படும். அவரின் குடும்பமும் அதைத் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், உங்கள் பின்னால் உறுதுணையாக பலரும் இருக்கிறார்கள்.
முத்தையா பிரதர் இயக்கத்தில் ‘மருது’ படத்தில் நடித்திருக்கிறேன். பின் ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தேன். இப்போது 3வது படமாக இதில் நடித்திருக்கிறேன்.
முத்தையா பிரதர் வெளியே இருக்கும்போது, கிராம படங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள், நகர்புற படங்கள் எடுப்பதில்லை. ஏன்? என்று கேட்டார்கள். எல்லோரும் நகர்ப்புற படங்கள் எடுத்தாலும், எங்களுடைய பிழைப்பு என்னவாகும்? ஷங்கர் சார் மைதானத்தில் நாங்கள் நுழையக் கூட முடியாது.
கருணாஸ் கூறியது போல, ஒரே நேர்க்கோட்டில் சென்று கொண்டிருந்த சினிமாவை, இதுதான் என் மண், இங்கே கேமராவை வையுங்கள் என்று திசைமாற்றியது பாரதிராஜா சார்தான்.
அவர் போட்ட விதைதான் இன்று எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆகையால், எல்லோரும் அந்த பக்கம் போய்விடாதீர்கள். ஆனால், எல்லா இயக்குனர்களும் இங்கு தேவைதான்.
கார்த்தி பிரதருடன், நான் மகான் அல்ல, கடைக்குட்டி சிங்கம் நடித்தேன். இப்படம் 3வது படம். முத்தையா பங்காளியுடனும் 3வது படம். சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் நீங்கள் கதாநாயகன் தான்.
எந்த பொறுப்பைக் கொடுத்தாலும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செய்கிறீர்கள். உங்களின் கடமை, விடாமுயற்சி ஆகியவைக்கு மதுரை மீனாட்சி என்றும் துணையிருப்பாள்.
இந்த விழா நாயகன் யுவன் ஷங்கர் ராஜா. கதாநாயகர்களுக்கு சமமாக உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த லட்சக் கணக்கான ரசிர்களில் நானும் ஒருவன். கஞ்சா பூ கண்ணாலே…என்ற பாடலை கேட்காதவர்கள் பாவம் செய்தவர்கள்.
தினமும் இரவில் கேட்டுக் கொண்டிருப்பேன். எப்போது பார்த்தாலும் இந்தப் பாடலையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனது மனைவி கேட்டார். எல்லோரையும் முணுமுணுக்க வைத்திருக்கிறது அந்த பாடல்.
ரோபோ ஷங்கரின் மகளை சிறிய வயது முதல் பார்த்து வருகிறேன். இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் இயக்குனர் அவரை தூக்கி இடுப்பில் வைக்க முடியுமா? என்று கேட்டார்.
நான் ஒரு அடி பின்னால் சென்றேன். ஆனால், பாப்பா கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னைத் தூக்கி வைத்துக் கொண்டு ஓடினார். அவருடைய கதாபாத்திரம் நன்றாக பேசப்படும். அனைவரின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.
இப்படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி, ராஜ்கிரன் ஒழுக்கத்தின் முன்னுதாரணமாக இருக்கிறார். அவருடன் நடித்ததற்கு நன்றி.
அதிதியின் நடிப்பை பார்த்தால் 50, 60 படங்களில் நடித்தது போன்ற அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப் படுத்தியிருக்கிறார். ஒரு பாடலுக்கு அத்தனை பாவனைகளை கொடுப்பார். அவரைக் கொடுத்த ஷங்கர் சாருக்கு நன்றி என்றார்.
Actor Soori speech at Viruman trailer launch