தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொம்பன் மற்றும் மருது ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்பட்டது.
ஆனால் மற்ற படங்களில் நடிக்க கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
எனவே சூர்யாவுக்காக எழுதிய கதையில் சசிகுமாரை நடிக்க வைத்துவிட்டாராம் முத்தையா.
கொடி வீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மஹிமா நம்பியார், சனுஷா, பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் சூட்டிங் நேற்றுமுதல் தொடங்கியது.
படத்தின் நாயகன் சசிகுமாரே இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.