தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தை போலவே கேரளா மற்றும் ஆந்திராவில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.
கேரளாவில் தமிழிலேயே திரையிடப்படுகிறது.
தெலுங்கு பதிப்புக்கான பாடல்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘சர்கார்’ பட தமிழக வெளியீட்டு உரிமையை 65 கோடிக்கு மெர்சல் பட நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
மேலும் இந்த நிறுவனம் அதை ஏரியாவாரியாக பிரித்து விற்று வருகிறது.
அதன்படி, சென்னை நகரத்தின் வெளியீட்டு உரிமையை ரூ. 7 கோடிக்கு அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார்.
விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களின் சென்னை நகர உரிமையை பெற்றவர் அபிராமி ராமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.