தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
சமீபத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து பேசிய கமல், “அந்த படம் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டது அல்ல என்று கூறினார். மேலும், டைட்டில் கார்டில் “உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்” என்று பாேடும் அளவிற்கு படத்தில் உண்மை இல்லை” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குனர் சுதிப்டோ சென், “இதுபோன்ற விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதை இப்போது நிறுத்திவிட்டேன். படத்தை பார்க்காமலேயே சிலர் விமர்சனம் செய்கிறார்கள். படம் பார்த்தவர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொள்கிறார்கள். நம் நாட்டில் நிறைய முட்டாள்தனமான முன் முடிவுகள் இருக்கின்றன.” எனக் கூறியுள்ளார்.
அப்படி போடுவதனால் மக்களை இதுதான் உண்மை கதை என ஏமாற்றிவிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
the kerala story director Sudipto Sen answer to kamalhaasan comment