தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
இப்படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, ‘வெந்து தணிந்தது காடு’ படப்புகழ் சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடந்த மே 5-ம் தேதி தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானதும், கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது.
கேரளாவிலேயே பல திரையரங்குகள் பட வெளியீட்டுக்கு முன்வரவில்லை.
தமிழகத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேற்கு வங்காள அரசு படத்திற்கு தடை விதித்தது.
சுப்ரீம் கோர்ட்டு அந்த தடைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், நடிகை அதா சர்மா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் மீது மக்கள் அன்பும், ஆதரவும் காட்டி இருக்கிறீர்கள்.
இப்படம் கட்டாய மதமாற்றத்தில் பாதிக்கப்பட்டு, உண்மையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த இளம்பெண்களின் பின்னணியை பற்றி கவனித்து கேளுங்கள். அவர்களை பாராட்டுங்கள் என பேசியுள்ளார்.
ஓராண்டில் பல முறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களால் எப்படி சான்று தர முடியும் என கேட்டுள்ளார்.
அப்போது, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் வரும் நிமா என்ற பெண்ணின் வேடம் பற்றி குறிப்பிட்டு பேசிய அதா சர்மா.
அவர் தினசரி 15 முதல் 20 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார். அதற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முற்படுகிறார். அதற்கு அவர்கள் சான்று கேட்கின்றனர்.
இதுபற்றி சர்மா கூறும்போது, 15 பேர் ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக உங்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் என்றால், நீங்கள் என்ன சான்று தருவீர்கள்?
மேலும், இப்படத்தில் சர்மாவின் வேடம் (ஷாலினி) காதலில் துரோகத்திற்கு ஆளாகிறாள்.
காதலில் துரோகம் செய்யப்பட்டதற்கு எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்? என கேட்டு பேசியுள்ளார்.
Rape by 15 to 20 people everyday – ‘The Kerala Story’ actress Adah Sharma