திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ பட நடிகை

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ம் ஆண்டு சிம்பு – நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதா சர்மா.

இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிரபுதேவாவுடன் இணைந்து `சார்லி சாப்ளின்-2′ படத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது அதுமட்டுமல்லாமல் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது.

மேலும், இப்படத்தில் நடித்ததற்காக நடிகை அதா சர்மாவிற்கு மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகை அதா சர்மா அவரது அடுத்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியின் போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கடுமையான வயிற்று போக்கு, உணவு அலர்ஜி போன்ற பிரச்சினைகள் இருந்ததாகவும் இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

The kerala story actress Adah Sharma admitted in hospital

ரஜினிக்கு 5 படம் கன்பார்ம்.; மீதம் 5 இருக்கு.; சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினி அண்ணன் பேட்டி

ரஜினிக்கு 5 படம் கன்பார்ம்.; மீதம் 5 இருக்கு.; சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினி அண்ணன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பத்தூரில் ஆண்டியப்பனூர் பாப்பாத்தி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணன் வந்திருந்தார்.

தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சத்தியநாராயணன். அப்போது அவர் பேசியதாவது

“ஆகஸ்ட் 10-ந் தேதி ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் ரிலீசாகிறது. அம்மன் அருளால் படம் வெற்றி பெறும்.

ரஜினிகாந்த் இன்னும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க உள்ளார். அதில் 5 படங்களில் நடிக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிகாந்த்துக்கு மக்கள் கொடுத்தார்கள். மக்கள் விரும்பினால் அந்த பட்டத்தை யார் வேண்டுமானாலும் வாங்கட்டும் என்றார்.

கிருஷ்ணகிரியில் கட்டப்பட்ட தாய், தந்தை கோவிலுக்கு ரஜினிகாந்த் விரைவில் வருவார்.” என்றார்.

இந்த சந்திப்பின் போது கர்நாடகா மாநில ரஜினி மன்ற தலைவர் சந்திரகாந்த், வாணியம்பாடி அன்பரசு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Rajini will act in more than 10 films after Jailer

அரசாங்கத்தால் தடுக்க முடியாததற்கு வழி சொல்லும் ‘வேம்பு’.; இயக்குநர் ரஞ்சித் ஆதரவு

அரசாங்கத்தால் தடுக்க முடியாததற்கு வழி சொல்லும் ‘வேம்பு’.; இயக்குநர் ரஞ்சித் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.

அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி அம்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் கிராமப்புற நாடகக் கலைஞர்கள் பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணகிரி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தனுஷ் நடித்த தங்கமகன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆ.குமரன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மிருதன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த கே.ஜே வெங்கட்ரமணன் இந்த படத்தின் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மணிகண்டன் முரளி இசையமைதுள்ளார்.

பாடல்களை அந்தோணி தாசன், தஞ்சை சின்னப்பொண்ணு, ஜோக்கர் படத்திற்காக தேசியவிருது பெற்ற சுந்தரய்யர் மற்றும் கபில் கபிலன் ஆகியோர் பாடியுள்ளனர்.

‘ஜோக்கர்’ படத்தில் பாடிய ராணியின் பாடல் வரிகளையும் இதில் பயன்படுத்தி உள்ளதுடன் அவரும் இந்தப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வேம்பு

படம் குறித்து இயக்குநர் ஜஸ்டின் பிரபு கூறும்போது…

“யதார்த்தமான ஒருவரின் வாழ்வியல் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. தங்களது சொந்த வாழ்க்கையைத் தாண்டி அவர்கள் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள், சூழல் அவர்களை எப்படி பெரிய மனிதர்கள் ஆக்குகிறது என்கிற விதமாக இதன் கதை உருவாகியுள்ளது.

எளிய மக்களில் இருந்து பெரிய மக்கள் வரை சார்ந்ததாக இந்த கதை இருக்கும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உந்துதல் அளிக்கும் ஒரு படமாக இருக்கும். ஒரு நல்ல சமூக கருத்து இந்த படத்தில் இருக்கிறது. படம் பார்க்கும் அனைவராலும் இந்த கதையுடன் தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.

ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது எப்படி தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள், ஒரு பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது, பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் தாண்டி ஒரு தந்தை தன் மகளுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார், நாயகியின் முறைப் பையனாக வரும் நாயகன் அவளுக்கு எப்படி உறுதுணையாக நிற்கிறார், அவள் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதும் சொல்லப்பட்டுள்ளது.

இதனால் அந்த சமூகத்தில் யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடியாத ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்கிறது.

காவல்துறையோ, அரசாங்கமோ தடுக்க முடியாத ஒரு விஷயத்தை, இது இருந்தால் எல்லோருமே தங்களை பாதுகாப்பாக வழி நடத்திக் கொள்ளலாம் என்கிற ஒரு விஷயத்தை இந்த கதையில் சொல்லி இருக்கிறோம்.

இது சமூகத்திற்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட ஒரு கதையாக உருவாகியுள்ளது.

இதற்கு முன்னதாக தூய்மை பணியாளர்களின் வாழ்வியலை மையப்படுத்தி குப்பைக்காரன் என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளேன்.

இதற்காக சர்வதேச திரைப்பட விருதும் பெற்றுள்ளேன். சில முக்கியமான படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளேன்.

நான் சாதாரண ஒரு கிராமத்தில் வாழ்ந்தவன் என்பதால் எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து எல்லாவற்றையும் பார்க்கிறேன். அதனால் எனது கதைகள் எல்லாமே சமூக பார்வையுடன் தான் இருக்கும். சமூகத்திற்கு மக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் தான் படங்கள் இயக்குவேன்” என்று கூறியுள்ளார்

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

தயாரிப்பு ; கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி

டைரக்சன் ; ஜெஸ்டின் பிரபு

ஒளிப்பதிவு ; ஏ.குமரன்

படத்தொகுப்பு ; கே.ஜே வெங்கட்ரமணன்

இசை ; மணிகண்டன் முரளி

பாடகர்கள் ; அந்தோணி தாசன், தஞ்சை சின்ன பொண்ணு, சுந்தர அய்யர் மற்றும் கபில் கபிலன்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

வேம்பு

Director Ranjith launches Vembu first look

மனதைத் தொடும் காதலில் இணையும் ஸ்ரீராம் – க்ரிஷாகுருப்

மனதைத் தொடும் காதலில் இணையும் ஸ்ரீராம் – க்ரிஷாகுருப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா, ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’, உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

2017ம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ள அஜயன் பாலா, தற்போது இந்த புதிய திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்குகிறார்.

அஜயன் பாலா

நல்ல கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்து தமிழ் சினிமாவின் தரமான கலைஞர்களை கொண்ட கூட்டணி இப்படத்திற்காக கைகோர்த்துள்ளது.

செழியன் ஒளிப்பதிவை கவனிக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கையாள, சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

‘கன்னிமாடம்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘கோலிசோடா 2’ புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார்.

அஜயன் பாலா

யோகி பாபு மற்றும் முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் அஜயன் பாலா…

“மனதைத் தொடும் காதல் கதை ஒன்றை மலைப்பகுதியின் பின்னணியில் மக்களுக்கு சொல்ல உள்ளோம்.

கதையை மட்டுமே நம்பி என்னுடன் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் இப்படத்தை தயாரிக்கும் மருத்துவர் அர்ஜுன் அவர்களுக்கும் நன்றி. திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.

அஜயன் பாலா

Writer Actor Ajayan Bala makes directorial debut with Sriram

பரத் – ரகுமான் இணையும் ‘சமாரா’..; மூன்று மொழிகளில் உருவானது

பரத் – ரகுமான் இணையும் ‘சமாரா’..; மூன்று மொழிகளில் உருவானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Peacock Art House என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் M.K.சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘சமாரா’.

இத்திரைப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகியுள்ளது.

சார்லஸ் ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில் பரத் மற்றும் ரகுமான் முதன்மை நாயகர்களாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி, சினு சித்தார்த், சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஹிந்தியில் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’, ‘ஜோலி எல்எல்பி-2’, தமிழில் ‘விஸ்வரூபம்-2’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் மீர் சர்வார் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – சினு சித்தார்த் , இசை – தீபக் வாரியர், பின்னணி இசை – கோபி சுந்தர், படத் தொகுப்பு – R.J.பாப்பன், சண்டை இயக்கம் – தினேஷ் காசி, நடன இயக்கம் – டேனி பவுல், தயாரிப்பு – M.K. சுபாகரன், அனுஜ் வர்கீஸ். வசனம் – கதை, திரைக்கதை, இயக்கம் – சார்லஸ் ஜோசப்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Eye catchy First Look of Samara goes viral

வடசென்னை பின்னணியில் skm சினிமாஸ்-இன் புதிய படம்

வடசென்னை பின்னணியில் skm சினிமாஸ்-இன் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களை நடிகரும் தயாரிப்பாளருமான அகில் திட்டமிட்டுள்ளார் .

இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்தன் இயக்குகிறார்.

நாளைய இயக்குநர்கள் போட்டியில் கலந்துக்கொண்டு பாராட்டு பெற்ற விஜய் ஆனந்தன், பல குறும்படங்கள் இயக்கி தன்னை நிரூபித்திருக்கிறார்.

சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் சினிமாவைக் கற்றுக்கொண்டவர் எஸ்.கே.எம சினிமாஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

வட சென்னையை பின்னணியாக கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘போத்தனூர் தபால் நிலையம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த தென்மா இசையமைக்கிறார்.

ஆரி ஒளிப்பதிவு செய்ய, ராம் படத்தொகுப்பு செய்கிறார். மக்கள் தொடர்பாளர்களாக தர்மதுரை & சுரேஷ் சுகு பணியாற்றுகிறார்கள்.

ஐந்து இளைஞர்களாக தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்திருக்கும் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்.

இன்று (ஆகஸ்ட் 4) சென்னை பிரசாத் லேபில் எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம் மற்றும் அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான ‘புரொடக்‌ஷன்ஸ் 1’ துவக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு எஸ்.கே.ம் சினிமாஸ் நிறுவனத்தையும், படக்குழுவினரையும் வாழ்த்தினார்கள்.

The dawn of SKM Cinemas in the presence of film celebrities

More Articles
Follows