தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
கடந்த மே 5-ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானது.
இந்தப் படத்துக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
‘தி கேரளா ஸ்டோரி’ படம் தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இதனால், திரையரங்குகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை மே 8-ம் தேதி முதல் நிறுத்துவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்தார்கள்.
மேற்கு வங்கத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை வெளிப்படையாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் வரவேற்றுள்ளன.
இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நடிகை அடா ஷர்மா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “எங்கள் படத்தைப் பார்க்கப் போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை டிரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி. மே 12-ம் தேதி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 37-க்கும் மேற்பட நாடுகளில் வெளியாகிறது” என பதிவிட்டுள்ளார்.
TheKeralaStory releases internationally in 37 countries