Thalapathy 65 Pan India Movie..? மாநிலத்தில் நேசிக்கப்படும் அற்புத மனிதருடன் மீண்டும் ஒரு பயணம்..: தளபதி 65 அப்டேட்ஸ்

Thalapathy 65 Pan India Movie..? மாநிலத்தில் நேசிக்கப்படும் அற்புத மனிதருடன் மீண்டும் ஒரு பயணம்..: தளபதி 65 அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிக்கவுள்ள அடுத்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘தளபதி 65’ என அழைக்கப்படும் இந்தப் படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் சண்டை இயக்குநர்களாக அண்பறிவ் பணியாற்றுவதாக தகவல் வெளியானது.

கே.ஜி.எப் 1 மற்றும் 2-ல் ஸ்டண்ட் டைரக்டர்களாக இவர்கள் பணியாற்றியுள்ளனர்

இந்த நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்திருப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா தெரிவித்துள்ளார்.

இது குறித்த ட்விட்டரில், “மாநிலத்தில் நேசிக்கப்படும் இந்த அற்புத மனிதருடன் மீண்டும் ஒரு பயணத்தை தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

விரைவில் முழு தேசமும் அவரை நேசிக்கும். ’நண்பனை’ விட்டுச் சென்ற இடத்திலிருந்து மீண்டும் வேலை செய்ய காத்திருக்கிறேன். தளபதி 65 ஒரு பான் இந்தியா படமாக இருக்கும்! எல்லோரும் தயாராகுங்கள்…” எனத் தெரிவித்துள்ளார்.

Thalapathy 65 will also be a Pan-Indian movie ?

கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் செல்வராகவன் சாணிக் காயிதத்தில் உருக்கமான பதிவு

கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் செல்வராகவன் சாணிக் காயிதத்தில் உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்களை போல தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை 23 ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருப்பவர் செல்வராகவன்.

இதுவரை திரைக்குப் பின்னால் இயக்குனராக இருந்த செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இதில் கீர்த்தி சுரேஷ் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற செல்வராகவன், 23 வருடங்களாக திரைப்படங்களை உருவாக்கி வந்த நான் இன்று நடிகனாகியுள்ளேன்.

இதற்கெல்லாம் நான் எனது ரசிகர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் என்னை உருவாக்கினார்கள்” என உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Selva Raghavan’s emotional tweet on his upcoming film

சட்டமன்ற தேர்தல் 2021..: சென்னையின் முக்கிய தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு

சட்டமன்ற தேர்தல் 2021..: சென்னையின் முக்கிய தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்பமனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalinகலைஞரின் பேரன், மு.க.ஸ்டாலின் மகன், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் உதயநிதி.

கலைஞர் மறைவுக்கு பின்னர் திமுக.வில் முக்கிய புள்ளியாக கருதப்படுகிறார்.

2019-ம் ஆண்டு தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்திற்கு முன்பு அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை்

இந்த நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பமனுவை உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார்.

எனவே, அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

Udhaya Nidhi Stalin to contest in Chepauk

இயக்குனர் அகத்தியன் மகளை மணந்தார் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர்

இயக்குனர் அகத்தியன் மகளை மணந்தார் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Niranjani marriage (2)கடந்த 2020ல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்த படத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, கௌதம் மேனன், ரக்‌ஷன், நிரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தார்.

இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினி, இப்பட டைரக்டரை அழைத்து தனக்கும் ஒரு கதை ரெடி செய்ய சொன்னார் என்பது கூடுதல் தகவல்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் நிரஞ்சனி நடிகையானார்.

இந்த படத்தில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரக்க்ஷன் என்பவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நிரஞ்சனி.

இவர் (நிரஞ்சனி) இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது தங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.

நடிகையாகும் முன்பு நிரஞ்சனி ஆடை வடிவமைப்பாளராக இருந்தார்.

வாயை மூடி பேசவும், சிகரம் தொடு, காவியத்தலைவன், கபாலி உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறாராம்.

இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் அகத்தியனின் இளைய மகள் நிரஞ்சனிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

அகத்தியன் மகள்கள் மூன்று பேருமே இயக்குநர்களை திருமணம் செய்துள்ளனர்.

கனி என்பவர் இயக்குநர் திருவையும், விஜயலக்ஷ்மி இயக்குநர் பெரோஸையும் திருமணம் செய்து கொண்டனர்.

தன் சகோதரிகளை போலவே நிரஞ்சனியும் ஒரு இயக்குநரை மணந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kannum Kannum Kollaiyadithaal director Desingh and actress Niranjani Agathiyan gets married

பாராட்டு மழையில் நனையும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பட நடிகர் விவந்த்

பாராட்டு மழையில் நனையும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பட நடிகர் விவந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivanthநடிகர் விவந்த் அவர்கள் சமீபத்தில் வெளியான ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

திரையுலகில் இவர் முன்பே பரீட்சயமானவர், இவர் நாளைய இயக்குனர் சீசன் 4 இல் திரையிடப்பட்ட ஒரு குறும்படத்தில் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

நடிகர் விவந்த் அவர்கள் கூறுகையில்…

“எனது முதல் படம் 2014 இல் வெளியான ‘இருக்கு ஆனா இல்ல’ திரைப்படம்.

இந்த படம் எனது நடிப்புக்கு ஒரு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது, எனது இரண்டாவது படம் 2018 ஆம் ஆண்டில் வெளியான ‘ஏகாந்தம்’, இது கிராமப்புற அடிப்படையிலான படம்.

எனது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நயம்’, இது திகில்- திரில்லர் கதையம்சம் கொண்டது.

நடிகர் சந்தனம் அவர்களின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ல் எனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பிற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த படத்தின் ஒரு பகுதியாக எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய நடிகர் சந்தானம் அவர்களுக்கும், இயக்குனர் ஜான்சன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

படம் பார்த்த பிறகு, தொழில்துறையைச் சேர்ந்த பலர் என்னை வாழ்த்தினர்.

இப்போது எனக்கு நிறைய பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன” என்கிறார் நடிகர் விவந்த்.

2005 முதல் புகழ்பெற்ற டப்பிங் கலைஞராகவும், வரவிருக்கும் பல ஹீரோக்களுக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார்.

இவர் திரைப்படங்களில் திறமையான நடிகராகவும் மற்றும் மிக சிறந்த டப்பிங் கலைஞராக மட்டுமின்றி, செய்தித்தாள் மற்றும் டிவி விளம்பரங்களிலும் மாடலாக நடித்துள்ளார்.

ஜோயலுக்காஸ், கே.ஆர்.ஜி நெய், ஆலயா வேஷ்டி, ஹமாம் சோப், ஆச்சி மசாலா, 999 லுங்கி, போத்தீஸ், சென்னை சில்க்ஸ், கலர் ஹோம்ஸ், சென்னை மெட்ரோ டெஸ்டிமோனி, நிப்பான் பெயிண்ட்ஸ் , ஹார்லிக்ஸ், ஜாரா பார்லர், சரவணா ஸ்டோர்ஸ், சுதா மருத்துவமனை, தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பல விளம்பரங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

Parris Jeyaraj actor Vivanth gets appreciation from cinema lovers

இன்ஸ்டாகிராமில் சாதனை..; ஸ்டார் ஹோட்டலில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தர்ஷா குப்தா

இன்ஸ்டாகிராமில் சாதனை..; ஸ்டார் ஹோட்டலில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தர்ஷா குப்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய காலகட்டங்களில் ஷோஷியல் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரபலமான நடிகைகளை பலோ பண்ணுபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பாமர மக்கள் வரை சென்று சேர்ந்தவர் தர்ஷாகுப்தா.

மெகாஹிட் திரைப்படமான “திரௌபதி” படத்தின் இயக்குனர் மோகன் ஜியின் அடுத்த படமான “ருத்ர தாண்டவம்” படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் தர்ஷா குப்தா.

இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் கூடியிருக்கிறது.

ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தா இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததை தொடர்ந்து, தனது ரசிகர்களை சந்திக்க நினைத்தார்.

சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனது ரசிர்களோடு இந்த மகிழ்ச்சியை கொண்டாட விரும்பினார்.

மதுரை, கன்னியாகுமாரி, திருச்சி, கோயமுத்தூர் என பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் சென்னை வந்தனர். 300 க்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி விருந்தும் சாப்பிட்டார்.

இந்தியாவில் ஒரு நடிகை தனது ஷோஷியல் மீடியா ரசிகர்களை சந்திப்பது, இதுவே முதல் முறையென்று நினைக்கிறோம்.

ரசிர்கள் கொடுத்த கிப்ட், பூங்கொத்துகளை பெற்றுக்கொண்ட தர்ஷாகுப்தா, ரசிகர்கள் கேட்ட பல்வேறு வகையான கிடுக்குப்பிடி கேள்விகளுக்கும் ரசித்துக்கொண்டே சாதுர்யமாக பதில் கூறினார்.

தர்ஷா குப்தா பேசும் போது எனக்கு 1 மில்லியன் பாலோயர்ஸ் வர நீங்கள் மட்டும் தான் காரணம். எனக்கு குடும்பம் என்பதே நீங்கள் தான்.

அதனால் தான் இந்த நிகழ்வை உங்களோடு கொண்டாட விரும்பினேன் என்று கூறினார்.
ரசிகர்களின் குடும்பத்தாரோடு வீடியோ காலில் பேசிய போது, உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போனார்கள். சிலரால் ஆனந்த கண்ணீரை அடக்க முடியவில்லை.

தற்போது ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தா மிகப்பெரிய பேனர் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்.

Darsha Gupta’s treat to her fans

Darsha Gupta

More Articles
Follows