மிகப்பெரிய படத்தில் இருப்பது பாக்கியம்..; விஜய் படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின் ஆனந்தம்

மிகப்பெரிய படத்தில் இருப்பது பாக்கியம்..; விஜய் படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 65 (1)சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தை இயக்கிய நெல்சன் தற்போது விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

இன்று இந்த படப்பூஜை சென்னையில் நடைபெற்றறது.

இதில் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஆனால் நாயகி பூஜா ஹெக்டே வரவில்லை.

இந்நிலையில், மலையாள நடிகையான அபர்ணா தாஸ், தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்து பதிவிட்டுள்ளார்.

‘தளபதி 65’ எனும் மிகப்பெரிய படத்தில் ஒரு அங்கமாக இருப்பது என் பாக்கியம்” என தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மலையாளத்தில் மனோகர், எஞ்சன் பிரகாஷன் ஆகிய படங்களில் நடித்துள்ள அபர்ணா தாஸ்.

தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

Manoharam fame Malayalam Actress Aparna Das joins Thalapathy 65 team

கொரோனா 2வது அலை : தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு

கொரோனா 2வது அலை : தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona second wave in tamil nadu (2)கடந்தாண்டு 2020 மார்ச் முதல் ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது.

முதலில் கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பின்னர் படிப்படியாக ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் அமலில் உள்ளது.

தற்போது பொதுத்தேர்தல் காரணமாக அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனால் கடந்த 2 வாரங்களாக கொரோனா மீண்டும் அதிகளவில் பரவி வருகிறது.

எனவே தேர்தலுக்கு பிறகு எந்த சமயத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான தமிழக அரசு, அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மருத்துவ நிபுணர்கள், டாக்டர்கள் ஆலோசனையின் அடிப்படையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம்.

பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாகும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, மற்ற பல நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் உள்ள விதிகள்படி செயல்பட உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடுவதை மேலும் அதிகப்படுத்த வேண்டும்.

65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட கூடாது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TN extends lock down till April 30

விஜய்யின் ‘தளபதி 65’ படப்பூஜையில் கலந்து கொள்ளாத ஹீரோயின் விளக்கம்

விஜய்யின் ‘தளபதி 65’ படப்பூஜையில் கலந்து கொள்ளாத ஹீரோயின் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PoojaHegdeகோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தற்போது விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார்.

மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

விரைவில் இப்பட சூட்டிங் நடைபெறவுள்ள நிலையில் இன்று இந்த படப்பூஜை சென்னையில் நடைபெற்றறது.

இதில் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

ஆனால் பட ஹீரோயின் பூஜா ஹெக்டே கலந்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில்…

‘தளபதி 65’ பட பூஜையில் இன்று கலந்து கொள்ள முடியவில்லை. நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்தேன்.

இந்த பட பூஜையில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன். இருப்பினும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Reason behind Thalapathy 65 heroine not attend the movie pooja

‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்டில் ‘கபாலி’ விஸ்வந்த்தின் பர்த் டே பார்ட்டி

‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்டில் ‘கபாலி’ விஸ்வந்த்தின் பர்த் டே பார்ட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Annaatthe (2)எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் ‘கபாலி’ விஸ்வாந்த், தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடியிருப்பது வைரலாகி வருகிறது.

‘வெளுத்து கட்டு’, ‘தோனி’, ’தடையற தாக்க’ என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த விஸ்வந்த், ’அட்ட கத்தி’ படம் மூலம் கவனிக்க வைத்ததோடு, ‘கபாலி’ படத்தில் தனது இயல்பான நடிப்பு மூலம் பாராட்டப்பட்டவர்.

தற்போது பல
படங்களில் கதையின் நாயகனாகவும், வில்லன் உள்ளிட்ட பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

’கபாலி’ படத்தை தொடர்ந்து ’அண்ணாத்த’ படம் மூலம் மீண்டும் ரஜினி படத்தில் நடித்து வரும் விஸ்வாந்த், பிறந்தநாளை
‘அண்ணாத்த’ படக்குழு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை
விஸ்வாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், நடிகர்களை வைத்து வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி வரும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் என்.ஜே.சத்யா, நடிகர் விஸ்வாந்தை வைத்தும் வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்களை சத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான உடையில், வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் விஸ்வாந்த் இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் போட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து வரும் விஸ்வாந்த், சசிகுமார் நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய
கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்.

‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பவர், ‘அங்காடி தெரு’ மகேஷ் நடிக்கும் படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

கதையின் நாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், வில்லன், குணச்சித்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருக்கும் விஸ்வாந்த், தனது எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

மேலும், அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பவர், இயக்குநர் சிவா உள்ளிட்ட அண்ணாத்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, ரஜினி சார், நயன்தாரா மேடம், பிரகாஷ்ராஜ் சார், சூரி சார், வேல ராமமூர்த்தி சார், ஆகியோருடன் நடிப்பது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்.

இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு காரணமாக இருந்த இயக்குநர் சிவா சார் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Kabali fame Viswanth celebrated his birthday at Annaatthe shoot

உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு இருக்கு.. – பாஜக மேடையில் ராதாரவி ஓபன் டாக்

உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு இருக்கு.. – பாஜக மேடையில் ராதாரவி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara udhayanidhi (2)ஏப்ரல் 6ஆம் தேதி் தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கட்சி சார்பாக ராதாரவி பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது…

நான் நயன்தாராவை பற்றி ஒன்றுமே பேசவில்லை.. ஆனால் என்னை திமுக வில் இருந்து தற்காலிகமாக நீக்கினார் ஸ்டாலின்.

எனவே நானே முழுமையாக விலகி வந்துவிட்டேன்.

திமுகவில் நயன்தாராவின் பங்கு என்ன? அவர் கட்சி உறுப்பினர்? இல்லை.

ஆனால் உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு இருக்கு. அதான்..” இவ்வாறு ராதாரவி பேசினார்.

கடந்த 2019ல் ‘கொலையுதிர் காலம்’ பட விழாவில் ஒருமுறை நயன்தாராவை நடவடிக்கை குறித்து இழிவுபடுத்தி பேசினார் ராதாரவி.

அப்போது திமுக-வில் இருந்தார் ராதாரவி.

எனவே திமுக தலைவரான ஸ்டாலின் அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கினார்.

இதனால் தானே அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ராதாரவி என்பது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi stalin and Nayanthara are in relation ship says Politician Radha Ravi

பொன்ராம் படத்தில் பொன்னான வாய்ப்பு.. சசிகுமார் தந்த பிறந்தநாள் பரிசு..; மகிழ்ச்சியில் முருகன் மந்திரம்!

பொன்ராம் படத்தில் பொன்னான வாய்ப்பு.. சசிகுமார் தந்த பிறந்தநாள் பரிசு..; மகிழ்ச்சியில் முருகன் மந்திரம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasi Kumar MGR maganவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள படம் எம்.ஜி.ஆர் மகன்.

சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிர்ணாளினி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

எம்.ஜி.ஆர் மகன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்தோணிதாசன் மற்றும் பூஜா வைத்யநாத் பாடியுள்ள, “ஏறெடுத்து பாக்காம, என்னண்ணுதான் கேக்காம” பாடலை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார்.

இந்த பாடலை “எனக்குப் பிடித்த பாடல்” என்று சசிகுமார் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பாடலாசிரியர் முருகன் மந்திரத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி பாடலாசிரியர் முருகன் மந்திரம் கூறும்போது…

‘பொன்ராம் சார் படத்துக்காக ஒரு பாட்டு எழுதணும்ணு அந்தோணிதாசன் அண்ணா சொல்லும்போதே மனசுக்குள்ள ஒரு கொண்டாட்டம்.

ஏன்னா பொன்ராம் சார் படத்தின் பாட்டெல்லாம் கண்டிப்பா பெரிய ஹிட் ஆகும். வேற லெவல்ல ரீச் ஆகும். கூடவே சசிகுமார் சார்… லவ் டூயட் …. கன்ஃபார்ம் படம் பெரிய ஹிட் ஆகும், பாடலாசிரியராக என்னை அடுத்த இடத்திற்கு கொண்டு போகும்ணு நம்பிக்கை வந்தது.

பொன்ராம் சார், பாடல் வரிகள் பற்றி கிட்டத்தட்ட 1 மணி நேரம் பேசுனாங்க, “ஏன்டா நீயும் பார்க்கும் போது, சட்டை வேர்க்குது”, “வீச்சருவா போல ஓன் நெனைப்பு கீற”… இதுபோல பாடலில் வரும் விஷயங்களை நீங்க என்ன அர்த்தத்தில் எழுதி இருக்கீங்கன்னு கேட்டாங்க. என் விளக்கத்தைக் கேட்டுட்டு சில இடங்களில் மட்டும் வேற வார்த்தை போடலாம்னு சொன்னாங்க. பாடல் வரிகளுக்காக முழுசா கதையை சொல்லி, படத்தில் பாடல் வரும் இடத்தையும் சூழலையும் சொன்னாங்க.

ரொம்ப அன்பான மனிதர். அழகான ஒரு பாடல் எழுத வாய்ப்பு தந்ததுக்கு ரொம்ப நன்றி சார்.

படப்பிடிப்பு தளத்தில் சசிகுமார் சாரை சந்தித்தோம். அப்பவே பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னார். “தெக்குதெச காத்தே… போடி என்னை சேர்த்தே” வரிகளை பாடி சந்தோஷப்படுத்தினார்.

உலகம் முழுவதும் திரும்ப திரும்ப பேசப்பட்டுக் கொண்டே இருக்கும், சுப்பிரமணியபுரம் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், நண்பர்களின் நண்பர் சசிகுமார் சாரின் பாராட்டு எனக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது.

படப்பிடிப்பில் என்னிடம் நேரில் சொன்னதை இப்போது மக்களிடம் சொல்லி என்னை மிகப்பெரிய சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார். உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார். (மார்ச் 30) என் பிறந்தநாள்.

உங்களுடைய வாழ்த்தும் பாராட்டும் இந்தப் பிறந்தநாளில் எனக்கு கிடைத்த பெரிய பரிசா நெனைக்கிறேன். மீண்டும் நன்றி சார்.

மிக முக்கியமாக இந்த வாய்ப்புக்கு முதல் காரணமான அந்தோணிதாசன் அண்ணாவுக்கு பெரிய நன்றி.

நடனம் அமைத்திருக்கும் பிருந்தா மாஸ்டர், சத்யராஜ் சார், சமுத்திரக்கனி சார், கதாநாயகி மிர்ணாளினி, தயாரித்திருக்கும் ஸ்கிரீன் ஸீன் நிறுவனம், சோனி மியூசிக் நிறுவனம் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Lyricist Murugan Manthiram talks about MGR Magan song

More Articles
Follows