தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இப்போராட்டத்திற்கு ஆளுங்கட்சியை தவிற ஏனைய அரசியல் அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும், பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரையுலகை சேர்ந்த நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம், பெப்சி, பி.ஆர்.ஓ யூனியன் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதன்படி இன்று தமிழகத்தில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், எவ்விதமான படப்பிடிப்புகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளன.