மீண்டும் சூர்யா தயாரிப்பில் கார்த்தி..; இயக்குனர் யார் தெரியுமா?

மீண்டும் சூர்யா தயாரிப்பில் கார்த்தி..; இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2ல் ரிலீசாகவுள்ளது.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.

இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இந்த நிலையில் கார்த்தி அடுத்து நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

நாயகியாக லட்சுமி மேனன் நடிக்க ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கெனவே சூர்யா தயாரித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya produce Karthi’s next film

கார்த்தியின் ‘சுல்தான்’ பட டிரைலருக்கு மட்டும் யுவன் இசை ஏன்..?

கார்த்தியின் ‘சுல்தான்’ பட டிரைலருக்கு மட்டும் யுவன் இசை ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சுல்தான்’.

இந்த படத்தின் இசை & டிரைலர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இப்படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

ஆனால் இந்த டிரைலருக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

விவேக் – மெர்வின் டிரைலருக்கு மட்டும் இசையமைக்காதது ஏன் என ரசிகர்களுக்கு சந்தேகத்தை அளித்துள்ளது.

ஏனென்றால் இந்தப் படத்திற்கு யுவன்தான் பின்னணி இசை அமைத்துள்ளாராம்.

எனவே தான் சுல்தான், டிரைலருக்கும் யுவனே இசையமைத்துக் கொடுத்திருக்கிறாராம்.

Karthi’s Sulthan has Background score by Yuvan Shankar Raja!

Sulthan (1)

விரலோடு உயிர் கூட கோர்த்து…; நயன்-விக்கி நிச்சயதார்த்தம்..!

விரலோடு உயிர் கூட கோர்த்து…; நயன்-விக்கி நிச்சயதார்த்தம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara vignesh shivanநடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக லிவிங் டு கெதர் பாணியில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

இருவரும் ஒன்றாகவே ஊர் சுற்றி தங்கள் ஜோடி புகைப்படங்களைப் இணையங்களை பதிவிட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…, “விரலோடு உயிர் கூட கோர்த்து” என ஒரு வரியைப் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இதில் நயன்தாராவின் கைவிரல்களில் மோதிரத்துடன் இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார் விக்கி.

எங்களின் செய்திகளை உடனுக்குடன் Telegram ஆப்பில் பெற https://t.me/s/filmistreet

Lady Super Star Nayanthara flaunts ring in pic shared by boyfriend Vignesh Shivan.

மறைந்த தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் லாரன்ஸ்

மறைந்த தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தீப்பெட்டி கணேசன்.

இதன் பின்னர் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

சினிமா சான்ஸ் இல்லாத காரணத்தால் தீப்பெட்டி கணேசன் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

எனவே பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி தவித்து வீடியோ வெளியிட்டார்.

சில திரைப்பிரபலங்கள் உதவினர்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடந்த திங்களன்று (மார்ச் 22) உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

தீப்பெட்டி கணேசனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

எங்களின் செய்திகளை உடனுக்குடன் Telegram ஆப்பில் பெற https://t.me/s/filmistreet

Actor Raghava Lawrence promises to take care of late actor Theepetti Ganesan’s children

lawrence theepetti ganesan (1)

‘கேஜிஎப்’ இயக்குனரின் 2 படங்களில் பிரபாஸ்.; மெகா கூட்டணியை இணைக்கும் தயாரிப்பாளர் யார்.?

‘கேஜிஎப்’ இயக்குனரின் 2 படங்களில் பிரபாஸ்.; மெகா கூட்டணியை இணைக்கும் தயாரிப்பாளர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி பட வெற்றி வரை நிதானமாக படங்களை ஒப்புக் கொண்ட பிரபாஸ் தற்போது மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.

‘ராதே ஷ்யாம்’ படத்தில் சமீபத்தில்நடித்து முடித்தார்.

தற்போது ‘ஆதி புருஷ்’ & ‘சலார்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்களை அடுத்து ‘மகாநடி’ இயக்குனர் நாக் அஷ்வின் இயக்க உள்ள படத்தில் நடிக்கிறாராம் பிரபாஸ்.

இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு ‘சலார்’ படத்தை இயக்கி வரும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்தான் ‘கேஜிஎப்’ பட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறாராம்.

ஷங்கர் & ராம் சரண் இணையும் படத்தையும் தில் ராஜு தான் தயாரிக்கிறார்.

KGF director joins Prabhas after Salaar

producer dil raju

அரசியலுக்கு வந்ததால் 300 கோடி நஷ்டம்.. மக்கள் சேவைக்காக கோவணம் கட்டி வருவேன்.. – கமல்

அரசியலுக்கு வந்ததால் 300 கோடி நஷ்டம்.. மக்கள் சேவைக்காக கோவணம் கட்டி வருவேன்.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவில் வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.

அப்போது கமல் பேசியதாவது:-

“50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.

அடுத்த தலைமுறையாவது நன்றாக இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்.

ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு போனாலும் அங்கிருந்து ஷாப்பிங் போகிற அளவிற்கு நமது சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன.

கமலுக்கு இவ்வளவு கோடி சொத்துகளா? என கேட்கிறார்கள். ஆம்… நீங்கள் கொடுத்ததுதான்.

நடிகராக இருந்தபோது மக்கள் அளித்த சம்பளம். ஆண்டுதோறும் எனக்கு சம்பள உயர்வு கிடைத்தது.

நான் அரசியலுக்கு வந்ததால் எனக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்வரை நஷ்டம். ஆனால், அதை நான் பொருட்படுத்தவில்லை. மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன்

நான் காசுக்கு ஆசைப்பட மாட்டேன். காந்தியை போல எளிமையாக வாழனும்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக கோவணம் கட்டிக்கொண்டு வருவேன்.

டாஸ்மாக் வருமானத்தை வைத்து இலவசங்கள் வழங்குகின்றனர்.

மக்கள் கேள்வி கேட்டால் பொறுப்பில் இருப்பவர்கள் அஞ்சுவார்கள்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

300 crore loss for me says Kamal Haasan

More Articles
Follows