தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சூர்யா இன்று தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
எனவே இதனை முன்னிட்டு நேற்று தன் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிகழ்வு சென்னையில் உள்ள ஸ்ரீ வாரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இருந்து வந்து சுமார் 10,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் சூர்யா பேசியதாவது..
“என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு வருட இடைவேளைக்கு பின் ரசிகர்களாகிய உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
ரசிகர்கள் சிறப்பான முறையில் நற்பணிகளை செய்து வருவது எனக்கு பெருமையையும், சந்தோஷத்தையும் அளிக்கிறது.
ஆனால் எல்லோரும் முதலில் உங்கள் தாய், தந்தை, குடும்பம் மற்றும் நீங்கள் செய்யும் தொழிலுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அதன் பின்னர் நீங்கள் நற்பணி மன்ற பணிகளில் ஈடுபட்டால் போதும்.
இதுவரை 20,000 பேர் சூர்யா அரசு இரத்ததான வங்கிக்கு இரத்தம் வழங்கி உள்ளீர்கள். இது மிகப்பெரிய சாதனை ஆகும்.
இதனை பாராட்டி சென்னை அரசு மருத்துவமனையில் இருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழை பார்த்தேன்.
நிஜமாகவே இது பெருமைக்குரிய ஒன்றாகும்.
இந்த முறையும் நீங்கள் என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததானம், அன்னதானம் மரக்கன்று நடுதல், கோவிலில் சிறப்பு பூஜை ஆகிய நற்பணிகளில் ஈடுப்பட்டு வருகிறீர்கள். எல்லோருக்கும் நன்றி.
இதே போல் நீங்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும்.
கல்வியால் ஒரு குடும்பம் மட்டும் அல்ல ஒரு நாடே பயனடையும்.” என்றார்.
விழாவிற்கு வந்த ரசிகர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
சூர்யா வந்திருந்த ரசிகர்கள் அனைவரிடமும் புகைப்படம் எடுத்து கொண்டார். விழாவில் ராஜசேகர பாண்டியன் , ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.