ஏவிஎம் தயாரிப்பில் சிங்கம் சூர்யாவை யானையாக மாற்றும் ஹரி

ஏவிஎம் தயாரிப்பில் சிங்கம் சூர்யாவை யானையாக மாற்றும் ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and director hariசூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘சிங்கம் 3’ என 5 படங்களை இயக்கியவர் ஹரி.

இந்நிலையில், ஆறாவது முறையாக இவர்கள் இணைகின்றனர்.

அப் படத்துக்கு ‘யானை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தை, ஏவி.எம். புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

2014-ம் ஆண்டு ரிலீஸான ‘இதுவும் கடந்து போகும்’ படம்தான் ஏவி.எம். தயாரித்த கடைசிப்படம்.

5 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது ஏவி.எம்.

‘என்.ஜி.கே.’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

அதன்பின்னர் ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

அதன்பிறகே யானை படத்தில் நடிக்கிறார் சூர்யா.

பிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறன் கணவன் மணிமாறன் காலமானார் .நடிகர் சிவகுமார் இரங்கல் !!

பிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறன் கணவன் மணிமாறன் காலமானார் .நடிகர் சிவகுமார் இரங்கல் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakumarபிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறனின் கணவர் மணிமாறன் நேற்று காலமானார் .சுமார் ஓராண்டு காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவர் நேற்று பகல் 12 மணிக்கு மறைந்து விட்டார். இந்த இழப்பு இளம்பிறை ஈடு செய்ய முடியாதது. மதுரையில் நேற்று மாலை 6 மணியளவில் மதுரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மணிமாறன் பற்றி நடிகர் சிவகுமார் கூறியது :-

தூத்துக்குடியில் உள்ள APC மஹாலக்ஷ்மி கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக இருந்து, பிறகு அதே கல்லூரியில் தாளாளராக ஓய்வு பெற்றவர் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.

இவர் தமிழ் இலக்கியங்களில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம், கந்தபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருக்குறள் என்று அனைவற்றையும் கரைத்து குடித்தவர். கிட்டத்தட்ட 5000 மேடைகளில் இலக்கியங்கள் பற்றி உரையாற்றியிருக்கிறார்.

2009-ல் என்னுடைய வீட்டிற்கு வந்தார். நான் முழு கம்பராமாயணத்தையும் 2 மணி நேரம் 10 நிமிடத்தில் கூறினேன். அதைக் கேட்ட அவர் இதைப் பயிற்சி செய்ய எவ்வளவு நாள் ஆனது என்று கேட்டார்கள். ஒரு வருடம் என்றேன். நீங்கள் செய்தது அசுர சாதனை என்று பாராட்டினார். அதேபோல், மஹாபாரதம் பேசும்போதும் மேடையில் அமர்ந்து எனக்கு ஊக்கமளித்தார். அவரின் சாதனைகளுக்கு பின்புலமாகவும், தூணாகவும் இருந்தவர் தான் அவருடைய கணவர் மணிமாறன்.ஈடு செய்யமுடியாத அந்த மாமனிதரை இழந்து வாடும் அவரது மனைவி இளம்பிறை மணிமாறனுக்கும் , அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த வருத்தங்களையும் ஆறுதலையும் கூறிக்கொள்கிறேன் .

2 Attachments

பிரபல அரங்கில் வெளியடப்பட்ட “மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் போஸ்டர்

பிரபல அரங்கில் வெளியடப்பட்ட “மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

may 22 sambavam first lookஅஹிம்சா புரோடக்ஷ்ன்ஸ் தங்களது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படத்திற்கு “மே 22 – ஒரு சம்பவம்” எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

“மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் 24 ஜனவரி அன்று ஸ்விட்சர்லாந்து, டாவோஸ்ஸில் உள்ள புகழ்பெற்ற உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum – WEF) வெளியிடப்பட்டது. உலக பொருளாதார மன்றம் (WEF) உலகளாவிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சுயாதீனமற்ற பொது நல அமைப்பு ஆகும்.

தமிழ்நாட்டில் பல சமுதாய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், “மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது முக்கியதுவம் வாய்ந்தது.

இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபால் மற்றும் தயாரிப்பாளர் நிருபமா சந்தோஷ் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். சந்தோஷ் கோபால் இயக்குனராக அறிமுகமான ஜல்லிகட்டு 5 -23 Jan 2017 விரைவில் வெளியாகவிருப்பது குறிப்படத்தக்கது.

“மே 22 – ஒரு சம்பவம்” சமீப காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.

மே 22 – ஒரு சம்பவம் திரைப்படம் ஒரு முன்று படங்களின் தொடர்ச்சியாகும். இம்மாதிரி உலகில் இரண்டு இயக்குனர்கள் படங்களை இயக்கியுள்ளனர்.

முதலாவதாக சத்யஜித்ரே உலகின் மிக முக்கிய படமான அபு சன்சார், பதேர் பாஞ்சாலி, அபு டிரியாலஜி என்று முன்று படங்களை இயக்கினார். அடுத்ததாக போலாந்து இயக்குனர் ரெட், புளு, வொய்ட் என்று முன்று படங்களை டிரியாலஜியாக இயக்கினார்.

இந்த முறையில் ஜல்லிகட்டு 5 -23 Jan 2017, பசுமை வழிச்சாலை, மே-22 ஒரு சம்பவம் என முன்றும் மக்கள் போராட்டத்தை மையப்படுத்தி எடுத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் கோபால்

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சஸ்பென்ஸான கேரக்டரில் சமுத்திரக்கனி

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் சஸ்பென்ஸான கேரக்டரில் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samuthirakani in jj biopicமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியில் இயக்குநர் பாரதிராஜா & விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் தனித்தனியாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் Iron Lady என்ற தலைப்புடன் பர்ஷ்ட் லுக்கை வெளியிட்டார் பிரியதர்சினி. ஜெயலலிதா ஆக நித்யா மேனன் நடிக்கிறார்.

தற்போது விஜய் இயக்கவுள்ள ஜெயலலிதா படம் பற்றி தகவல்கள் வந்துள்ளன.

ஜெயலலிதா வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல் வந்தன.

ஆனால் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பும் தெரிவிக்கல்லை.

இந்நிலையில் முக்கியமான வேடத்தில் சமுத்திரக்கனி ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.

ஆனால், அது எந்த மாதிரியான கேரக்டர் என்பது சர்ப்ரைஸ். பட ரிலீசின் போதுதான் இந்த சர்ப்ரைஸ் உடையும் என கூறப்படுகிறது.

விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை என்பதை அழுத்தமாக சொல்ல வரும் ‘வாண்டு’

விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை என்பதை அழுத்தமாக சொல்ல வரும் ‘வாண்டு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaanduஇயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் முதல் திரைப்படம் “வாண்டு”. விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டதில்லை எனப் பெரியோர் சொல்வார்கள் அதை அழுத்தமாக சொல்லியிருக்கும் திரைப்படம் தான் வாண்டு.

இயக்குநர் படம் பற்றி கூறுகையில்

1971 ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதுதான் இந்தப்படம் என்றாலும் தற்கால இளைய தலைமுறைக்கு ஏற்றவாறு தற்காலத்தில் நடக்கும் கதையாகவே இருக்கும். சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும் நீயா நானா போராட்டம் தான் இப்படத்தின் விறு விறு கதை. வடசென்னை குப்பத்து மக்களின் இயல்பான வாழ்வு அவர்களது வீரம், அன்பு, சண்டை, பிரச்சனை என அனைத்தும் எந்த அரிதாரமும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருக்கிறேன். அதே நேரத்தில் ஒரு சினிமாவாக எந்த இடத்திலும் போரடிக்காமல் விறு விறு திரைக்கதையுடன் பரபரப்பான படமாகவும் இருக்கும் என்றார்.

எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாகியிருக்கும், இப்படம் வரும் பிப்ரவரி 8 முதல் ரீது ஷிவானி இன்ஃபோடெயிண்மைண்ட் உலகமெங்கும் 150க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் வெளியிடுகிறது.

பாக்யராஜ் – சிவகுமார் கலந்து கொண்ட ‘மெஹந்தி சர்க்கஸ்’ பட இசை விழா

பாக்யராஜ் – சிவகுமார் கலந்து கொண்ட ‘மெஹந்தி சர்க்கஸ்’ பட இசை விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mehandi Circus audio launch photosகே.இ ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜு முருகன் அவர்களின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜா அவர்களின் தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச். வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல், நடிகர் சன்னி ஜி, ரமேஷ் பாபு மற்றும் இப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

மாரி செல்வராஜ் :

ஜீவா மூலமாக தான் சரவணன் அவர்களை சந்தித்தேன். திறமையான அனுபவமுள்ள மனிதர் அவரின் அறிமுக படமான இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

சுவேதா திறமையான நடிகை நவாசுதீன் சித்திக் படத்தில் ஸ்வேதாவின் நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய இடம் கிடைக்கும் .

ஹிட் கொடுக்கும் பிரபலங்கள் அனைவரும் இந்த படத்தில் உள்ளார்கள். படம் பழைய நினைவுகள் மீண்டும் நம் நினைவிற்கு கொண்டு வரும்.

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

லெனின் பாரதி :

படத்தின் பாடல்கள் அனைத்தும் நம்மை நாடோடிகளாகவே மாற்றுகின்றன. இந்த படம் அற்புதமான கதை என பாராட்டினார்.

எச். வினோத் :

புதுமையான கதை இது. படத்தின் ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் சூப்பராக அமைந்துள்ளது. நிச்சயம் வெற்றி படமாக அமையும்.

நலன் குமாரசாமி :

சரவணனின் இயக்கம் நிச்சயம் விதியாசனாக இருக்கும். ஆர்டிஸ்ட்ஸ், டெக்னீசியன் என அனைவர் மத்தியிலும் நல்ல மதிப்பு கொண்டவர் என பேசினார்.

இயக்குனர் எழில் :

ராஜு முருகன் அண்ணனு சொன்னதும் இந்த நிகழ்ச்சிக்கு வரேன்னு சொல்லிட்டேன். சரவணன் லேட்டா வந்தாலும் சிறப்பான கதையோடு வந்திருக்காரு. பாடல், ட்ரைலர் என அனைத்தும் சிறப்பாக ஒரு நேர்த்தியான படமாக அமைந்துள்ளது.

விஜய் இயேசுதாஸ் :

சான் ரோல்டன் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. தற்போதைய தலைமுறைக்கு ஏற்றார் போல இருக்கும். பாடல்கள் உணர்வு பூர்வமாக அமைந்துள்ளன. எனக்கும் முதலில் பாட சிரமமாக இருந்தது. ஆனால் சான் ரோல்டன் ஒத்துழைப்பால் சிறப்பாக அமைந்துள்ளது.

ஞானவேல் ராஜா :

வெற்றிமாறன், பாண்டியராஜ் சார் ஆகியோர் அட்டகத்தி படத்தை ப்ரோமோட் செய்து வெற்றி பெற செய்தார்கள். அந்த படத்தில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது.

அந்த எனர்ஜி தற்போது மீண்டும் இந்த படத்தில் கிடைத்துள்ளது.

சமுதாயத்தில் பேச தயங்கும் பிரச்னைகளை ராஜு முருகன் ஜிப்ஸியில் பேசியுள்ளார். அவரது சேவை தொடர வேண்டும்.

இந்த படத்திற்கு அவரின் பங்கு பெரிது. விழா நாயகன் சான் ரோல்டனின் இசைக்கு நான் அடிமை. இவர்களின் நட்பு தொடர வேண்டும் என கூறினார்.

செல்வா :

இளையராஜாவின் இசை எப்படி தனி விருந்தாக இருக்குமோ லாட்ஜ் போல் சமையல் கிங் ரங்கராஜ்.

முதல் முதலாக நடிக்க வந்துள்ளார். அவரின் உழைப்பு வெற்றியை கொடுக்கும் . எடிட்டர், டெக்னீஷியன் என அனைவரும் அற்புதமாக பணியாற்றி உள்ளனர். விக்னேஷ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

எஸ்.ஆர்.பிரபு :

சர்க்கஸ் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படம் எனக்கு அந்த அனுபவத்தை கொடுக்கும்.

கரு. பழனியப்பன் :

சரவணன், யுகபாரதி, ராஜு முருகன் ஆகியோர் கஷ்டப்பட்டு தான் வளர்ந்தார்கள்.

சரவணன் இயக்குனராக ஆடைப்பட்டு அவரது தம்பி ராஜு முருகனை இயக்குனராக்கினார். தற்போது சரவணனும் இயக்குனராகி விட்டார்.

இருப்பதலிலேயே கஷ்டமான தொழில் சமைப்பது தான். அதில் திறமை வாய்ந்தவர் ஹீரோ ரங்கராஜ். இந்த படத்திலும் அவர் அறுசுவை விருந்தாக படத்தை கொடுப்பார்.

தற்போது விஸ்வாசம் போன்ற குடும்ப படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் இந்த படமும் இருக்கும்.

2D ராஜசேகர் :

ராஜி முருகன் ஜோக்கர் படத்தை போல இந்த படமும் இருக்கும். படத்தின் கதையை கேட்கும் போதே அருமையாக இருந்தது.

படத்தின் விசுவல் சூப்பராக உள்ளது.

சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல் :

ஞானவேல் ராஜா 18 வருடமாக சினிமாவை காதலித்து வருகிறார். இந்த படம் வெற்றிப் படமாக இருக்கும்.

யுகபாரதி :

என்னுடைய கவிதை அரங்கேறும் நாள் இன்று. எனக்கு சினிமாவில் பலரை அறிமுகப்படுத்தியவர் சரவணன். சரியான நண்பர்.

ராஜு முருகன் தேசிய விருது வாங்கிய போது எனக்கு சரவணன் தான் நினைவிற்கு வந்தார்.

50, 60 ஆண்டுகளுக்கு பெயர் சொல்லும் இயக்குனராக சரவணன் இருப்பார்.

எனக்கு நல்ல சினிமா, அரசியல், கவிதை என அனைத்தையும் கொடுத்தது சரவணன் தான்.

திறமைகளை அறிந்து பராட்டுபவர் சிவகுமார். மாபெரும் திறமையும் கொண்டவர்.

இயக்குனர் பாக்யராஜின் உதவி இயக்குனராக வேண்டும் என்பது சரவணனின் ஆசை. அது நடக்கவில்லை. ஆனால் அவரது வாழ்த்து சரவணன் படத்திற்கு கிடைத்துள்ளது.

ராஜு முருகன் :

இது எனக்கு நெகிழ்ச்சியான மேடை. என்னை உருவாக்கியவர்கள் யுகபாரதியும் சரவணனும் தான் .

சரவணினின் கிரியேட்டிவிட்டி அளப்பரியது. ஜோக்கர், ஜிப்ஸி என என் அணைத்து படத்திற்கும் இவர்களின் பங்கு உண்டு.

கதை, வசனம் என என் பெயர் இருந்தாலும் இது சரவணனின் படம்.

DOB செல்வா மிகவும் திறமையானவர். அதனால் தான் ஜிப்ஸி படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தேன்.

மெஹந்தி சர்க்கஸ் படம் உருவாக முக்கிய காரணம் ஈஸ்வரன் மற்றும் ஞானவேல் ராஜா தான்.

இப்படம் எண்களின் தம்பி ஸ்டாலினுக்கு சமர்ப்பணம். அவர் தற்போது எங்களுடன் இல்லை.

சான் ரோல்டன் இசை தான் இப்படத்திற்கு முக்கியமான ஒன்று.

ஸ்வேதா :

இந்த படத்தில் நடிக்க வாய்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவர்க்கும் நன்றி.

ரங்கராஜ் :

இது எனக்கு முதல் மேடை. சரவணன் படத்தில் ஹீரோவானது மகிழ்ச்சி. இது கடவுள் கொடுத்த வரம். மீண்டும் அவருடன் இணைய ஆசைப்படுகிறேன்.

இயக்குனர் சரவணன் :

யுகபாரதி, கரு பழனியப்பன், ராஜு முருகனிடம் பேச கற்று கொள்ள வேண்டும். நலன் குமாரசாமிக்கு உறுதுணையாக இருக்க ஆசைப்படுகிறேன்.

ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் சிறப்பாக பணியாற்றினார்கள். சான் ரோல்டன் இசை படத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஸ்வேதா இந்த படத்தில் கேரக்டராகவே வாழ்ந்துள்ளார்.

சான் ரோல்டன் :

சரவணன் சிறந்த படைப்பாளி. படத்தை அறிமுகப்படுத்த தலைப்பே போதும் அது இந்த படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.

மக்களுக்கான தரமான படமாக மெஹந்தி சர்க்கஸ் இருக்கும்.

பாக்யராஜ் :

கரு. பழனியப்பன் சரவணினின் வாழ்க்கை வரலாற்றையே கூறி விட்டார். சினிமாவில் சாதித்த அனைவருடனும் சரவணன் பழகியுள்ளார்.

சரவணன் நிறைய விருதுகள் வாங்க வேண்டும். படத்தின் வெற்றி விழா கண்டிப்பாக நடக்கும். படம் உருவாக காரணமாக இருந்த ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

ராஜு முருகன் குக்கூ படம் பார்த்தேன். கதை, வசனம் அருமை. பார்வை இல்லாதவர்களையும் திறமையாக நடிக்க வைத்துள்ளார்.

இந்த படத்தில் யுக பாரதி வரிகள் பிரமாதம். சான் ரோல்டன் இசை அற்புதம்.

இளையாராவிற்கு இளையராஜா 75 விழா மட்டும் போதாது. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றார்.

சிவகுமார் :

ஈஸ்வரன் பெற்ற மகன், நான் பெறாத மகன் ஞானவேல் ராஜா. சூரியா, கார்த்தி மற்றும் பல நடிகர்களை வைத்து வித்தியாசமான படங்களை கொடுத்தவர் ஞானவேல் ராஜா. அந்த படங்களின் வரிசையில் மெஹந்தி சர்க்கஸ் படமும் இருக்கும் என்றார்.

More Articles
Follows