தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யாவை வைத்து ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘சிங்கம் 3’ என 5 படங்களை இயக்கியவர் ஹரி.
இந்நிலையில், ஆறாவது முறையாக இவர்கள் இணைகின்றனர்.
அப் படத்துக்கு ‘யானை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படத்தை, ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
2014-ம் ஆண்டு ரிலீஸான ‘இதுவும் கடந்து போகும்’ படம்தான் ஏவி.எம். தயாரித்த கடைசிப்படம்.
5 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது ஏவி.எம்.
‘என்.ஜி.கே.’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
அதன்பின்னர் ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.
அதன்பிறகே யானை படத்தில் நடிக்கிறார் சூர்யா.