வியாழன் சென்டிமெண்டை மாற்றியதா விவேகம் டீம்..?

வியாழன் சென்டிமெண்டை மாற்றியதா விவேகம் டீம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith sivaஅஜித்தின் சமீபகால படங்களை இயக்குனர் சிவாவே இயக்கி வருகிறார்.

வீரம், வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது உருவாகி வரும் விவேகம் படத்திலும் இந்த கூட்டணியே தொடர்கிறது.

அஜித், சிவா இருவரும் ஸ்ரீரடி பாபா பக்தர்கள் என்பதால் வியாழக்கிழமை சென்டிமெண்டாக படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் போஸ்டர்களை வியாழக்கிழமையே வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் முதன்முறையாக அண்மையில் வெளியான சர்வைவா டீசரின் முழுப்பாடலை இன்று (ஜீன் 19, திங்கட்கிழமை) 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான ஹேஷ்டேக் இணையத்தில் #survivasongfrom6pmtoday டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் இந்த பாடலின் ராப் பகுதியின் வரிகளை எழுதி பாடியது குறித்து யோகி பி கூறியதாவது..

‘வாழ்க்கையில் போராடும் ஒரு மனிதர் புத்துயிர் பெற்று எப்படி மீண்டு வருகிறார் என்பது குறித்து இப்பாடல் எழுதப்பட்டுள்ளது. இப்பாடல் அஜித்துக்கு ரொம்ப பொருத்தமான பாடலாக இருக்கும்.” என்றார்.

Surviva song releae Vivegam team changing their Thursday Sentiments

சூர்யா-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி இணைந்த படம்

சூர்யா-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி இணைந்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Sivakarthikeyan Vijay Sethupathi teams up for Kootathil Oruthanட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் “கூட்டத்தில் ஒருத்தன்“.

அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை தா.செ. ஞானவேல் இயக்கியுள்ளார்.

இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குநர் த.செ. ஞானவேல் கூறியதாவது…

இது வரை தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள், கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளது.

இப்படம் கொஞ்சம் வித்யாசமாக மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும். இந்த உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் மிடில் பெஞ்சர்ஸ் தான். அவர்களை கொண்டாடும் படமாக கூட்டத்தில் ஒருத்தன் இருக்கும்.

இப்படத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் அனைத்து பாடல்களும் ஆல்பம் ஹிட்டாக வெற்றி பெற்றுள்ளது. “மாற்றம் ஒன்றே மாறாதது“ Gift Song ஒவ்வொரு பூக்களுமே பாடலைப் போல மோட்டிவேஷனல் பாடலாக இருக்கும்.

கவிஞர் கபிலன் பாடல் வரிகளில் அனைத்து பாடல்களும் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைத்தும் அனைவரையும் ஊக்குவிக்கும் வரிகளாக அமைந்துள்ளது இந்த சிறப்பாகும்.

இப்பாடலில் வரும் வரியான “ உன் கேள்விக்கு விடை நீயடா, மண்பானையாய் உடையாதடா“, தோல்வியெல்லாம் தோல்வியல்ல, வெற்றி என்றும் தூரமல்ல போன்ற வரிகள் அனைவருக்கும் பாஸிட்டிவான ஒரு விஷயத்தை கொடுக்கக்கூடிய வரிகளாக இருக்கும். இப்பாடலை படமாக்கும் போதே எல்லோரும் இப்பாடல் அருமையாக உள்ளது என்று பாராட்டினார்கள்.

அப்போது நாங்கள் யோசித்த விஷயம் தான் இந்த Gift Song. படத்துக்குள்ளே மட்டும் இந்த பாடலை வைக்காமல், இதை ஒரு ப்ரோமோ பாடலாக மாற்றலாம் என்று முடிவு செய்தோம்.

“கொலைவெறி டி“ பாடல் எப்படி ஒரு சூப் சாங்காக இருந்ததோ அதே போல் இது Gift Song என்று எல்லோராலும் கொண்டாடப்படும் பாடலாக இருக்கும். இப்பாடலை நாங்கள் உருவாக்கிய நேரத்தில் தான் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது.

மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு மாற்றத்தை பற்றி சொல்லகூடிய அழகான கிப்ட் ஒன்றை வழங்கினோம்.

அந்த பாடலை வருகிற ஜூன் 2௦ விஷுவலாக வெளியிடுகிறோம். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள விஷுவல்ஸ் படத்தில் இடம்பெறாது. படத்துக்கென்ற தனியாக நாங்கள் விஷுவல்சை எடுத்துள்ளோம்.

இப்பாடலில் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, நாசர், பிரகாஷ்ராஜ், சிவகுமார், விஷ்ணு விஷால், சமுத்திரகனி, ஆர்.ஜே. பாலாஜி, அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நிவாஸ் கே பிரசன்னா, செப் தாமு, ரம்யா நம்பீசன், விஐடி கல்லூரி மாணவர்கள் போன்ற பலர் இப்பாடலில் இடம்பெற்றுள்ளனர்.

இப்பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்றார் இயக்குநர் த.செ. ஞானவேல்.

Suriya Sivakarthikeyan Vijay Sethupathi teams up for Kootathil Oruthan

Kootathil-Oruthan

‘தனுஷ்-விஜய்சேதுபதிதான் ரொம்ப அழகு…’ அசோக் செல்வன்

‘தனுஷ்-விஜய்சேதுபதிதான் ரொம்ப அழகு…’ அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ashok selvanசூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் அசோக் செல்வன்.

கூட்டத்தில் ஒருத்தன் இவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஒரு சமீபத்திய பேட்டியில் இவரின் நிறம் குறித்தும் அழகு குறித்தும் கேட்கப்பட்டது.

அதற்கு சற்றே ஆவேசமான அவர் கூறியதாவது…

“எதை வச்சி அழகை முடிவு பண்றீங்க. சிவப்பா இருந்தா அது அழகா.? கறுப்பா இருந்தா அழகு இல்லையா?

இங்கிலீஷ் பேசினா புத்திசாலியா? அது ஒரு மொழி அவ்வளவுதான்.

என்னை பொறுத்தவரை தனுஷ்-விஜய்சேபதி அழகுதான்.

இங்கே நிறத்தை வைத்து அழகை எடை போடுவது தவறான கண்ணோட்டம்” என்று தொகுப்பானியே திகைக்கும் அளவுக்கு பேசினார் அசோக் செல்வன்.

Dhanush and Vijay sethupathi looks handsome says Ashok Selvan

நதிகள் இணைப்புக்கு 1 கோடி நிதி; அய்யாக்கண்ணுவிடம் ரஜினி உறுதி

நதிகள் இணைப்புக்கு 1 கோடி நிதி; அய்யாக்கண்ணுவிடம் ரஜினி உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ayyakannu met Rajini and remind him Rs 1 crore promise for river interlinkingசூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் இன்று பி.அய்யாக்கண்ணு தலைமையிலான 16 பேர் கொண்ட விவசாயிகள் குழுவைச் சந்தித்தனர்.

ரஜினியை சந்தித்த பிறகு அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசியதாவது…

”நதிகள் இணைப்பு என்னும் திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ரஜினி. அதற்கு அவர் ஒரு கோடி ரூபாய் தருவதாக பத்து வருடங்களுக்கு முன்பே அறிவித்து இருந்தார்.

இது தொடர்பாக அவரிடம் பேசினோம்.

நதிகளை இணைக்க உடனடியாக எங்களிடம் ரூ.1 கோடி வழங்க உள்ளதாகவும் கூறினார்.

ஆனால், அதை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குங்கள் என நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

முதலில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, மற்றும் காவேரி போன்ற நதிகளை இணைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளிலும் ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

விரைவில் பிரதமரை சந்தித்து நதிகள் இணைப்பு பற்றி ரஜினி பேசுவார்.” என்றார் அய்யாக்கண்ணு.

Ayyakannu met Rajini and remind him Rs 1 crore promise for river interlinking

rajini ayyakannu meeting

லிப்ரா புரொடக்சன்ஸ் நடத்தும் பிரமாண்ட குறும்பட போட்டி

லிப்ரா புரொடக்சன்ஸ் நடத்தும் பிரமாண்ட குறும்பட போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra Short Film awardsதமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றுதான் லிப்ரா புரடக்சன்ஸ்.

நளனும் நந்தினியும், சுட்ட கதை உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காவும் அவர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாகவும் குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது.

மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குனர், நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என திரைப்படங்ளை போன்றே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வரும் ஜூலை-15 தான் போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்பவதற்கான கடைசி நாளாகும். ஒவ்வொரு குறும்படமும் 17 நிமிடங்களுக்கு அதிகமான கால அளவில் இருக்க கூடாது என்பதும் ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பது போட்டியின் முக்கிய விதிகள்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் இந்த குறும்படங்களை பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களை தேர்ந்தெடுப்பார்கள்.

அந்த பத்து படங்களும் விழா நடைபெற இருக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் மொத்தமாக திரையிடப்பட்டு அதில் அனைத்து பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. அன்று மாலையே பரிசளிப்பு விழா மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.

முதல் பரிசாக 10 லட்சம், 2ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3ஆம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

உங்கள் குறும்பட சிடிகளை No.14, 1st Cross Street, Lambert Nagar, AlwarThirunagar, Chennai – 87 எனும் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது [email protected] எனும் ஈமெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு Mobile: 97899 16561, Office: 044 – 4208 9658 இந்த எண்களை தொடர்புகொள்ளலாம்.

இந்த போட்டி குறித்த அடுத்தகட்ட விபரங்களை லிப்ரா புரடக்சன்ஸ் பேஸ்புக் பக்கத்தின் மூலம் அவ்வப்போது போட்டியாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.

https://www.facebook.com/LIBRAShortFilmAwards/

libra short film awards

உடல் தானம் செய்த ‘கயல்’ தேவராஜை பாராட்டிய கமல்

உடல் தானம் செய்த ‘கயல்’ தேவராஜை பாராட்டிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan praises Kayal Devaraj for donating his eyes and bodyநடிகரும் பத்திரிகையாளருமான ‘கயல்’ தேவராஜ் தனது 50 வது பிறந்த நாளையொட்டி உடல் தானம் செய்துள்ளார். அவருக்கு நடிகர் கமல்ஹாஸன் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக உடல் தானம் செய்தவர் நடிகர் கமல்ஹாசன். தன்னைப் போலவே கண் தானம் மற்றும் உடல் தானம் செய்பவர்களை வாழ்த்தியும், ஊக்குவித்தும் வருகிறார்.

நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான ‘கயல்’ தேவராஜ் தனது 50 வது பிறந்தநாளை முன்னிட்டு உடல் தானம் செய்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 18) தனது 50 வது பிறந்தநாள் கொண்டாடும் தேவராஜ், தனது உடல் மற்றும் கண்களை தானம் செய்துள்ளார்.

Kamalhassan praises Kayal Devaraj for donating his eyes and body

Kayal Devaraj Stills 006

More Articles
Follows