தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100 படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
இப்படம் சுந்தர்.சி இயக்கத்தில் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் ஒரு சரித்திரப் படமாக உருவாகவுள்ளது.
கமலக்கண்ணன், சாபு சிரில், திரு என முன்னணி கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.
முன்னணி இசையமைப்பாளருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருப்பதால், முன்னணி நடிகர்களை நடித்தால் சரியா இருக்கும் என விரும்புகிறாராம் சுந்தர் சி.
எனவே தமிழ் மற்றும் தெலுங்கில் மார்கெட் உள்ள சூர்யா, மகேஷ்பாபு போன்றவர்கள் நடித்தால் சரியாக இருக்கும் என தயாரிப்பு தரப்பில் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை சூர்யா நடித்தால் இதுதான் அவரது கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்.
ரஜினி, கமல், விஜய் ஆகியோர் இதற்கு முன்பே ரூ. 100 கோடி பட்ஜெட்டில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.