தெலுங்கிலும் டப்பிங் பேசும் சூர்யா..; ‘எதற்கும் துணிந்தவன்’ தான்

தெலுங்கிலும் டப்பிங் பேசும் சூர்யா..; ‘எதற்கும் துணிந்தவன்’ தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இதில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், திவ்யா துரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தைத் மார்ச் 10ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தற்போது தெலுங்கு டப்பிங் பணிகள் நடந்து வருகிற நிலையில் தமிழைப் போலவே தெலுங்கிலும் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார் சூர்யா.

தெலுங்கிலும் நல்ல மார்கெட் உள்ள நடிகர்களில் சூர்யா முக்கியமானவர்.

இதுநாள் வரை சூர்யா படத்திற்கு பிரபலமான ஒருவர்தான் தெலுங்கு டப்பிங் பேசி வந்தார்.

தற்போது சூர்யாவே சொந்தக் குரலில் தெலுங்கு டப்பிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

Suriya dubbed his telugu portions for Etharkkum Thunindhavan

சூட்டிங்கில் மீண்டும் காயம்.; சிகிச்சைக்காக கேரளா செல்லும் விஷால்

சூட்டிங்கில் மீண்டும் காயம்.; சிகிச்சைக்காக கேரளா செல்லும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் ஆக்சன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுப்பவர் நடிகர் விஷால்.

டூப் போட்டு செய்ய வேண்டிய காட்சிகளையும் இவரே செய்துவிடுவார். இதனால் ஏதாவது ஒரு காயம் அல்லது விபத்து ஏற்பட்டுவிடும்.

அண்மையில் வெளியான ‘வீரமே வாகை சூடும்’ பட சூட்டிங்கில் சமயத்திலும் விஷால் காயப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அடிப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தற்போது லத்தி படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களும் நடிகர்களுமான ரமணா மற்றும் நந்தா என இருவரும் தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பட கிளைமாக்ஸ் சண்டை காட்சியை ஐதராபாத்தில் படமாக்கிவருகின்றனர்.

பைஃட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சியை இயக்கியுள்ளார்.

விஷால் கையில் ஒரு குழந்தையுடன் ஓடி செல்ல அவரை வில்லன்கள் துரத்தி வருவதாக காட்சி.

ஒரு கட்டிடத்தில் விஷால் குதிக்கும்போது சுவரில் மோதி கையில் காயம் ஏற்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை எடுத்தும் சில நேரங்களில் வலி அதிகமாக அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

விஷாலுக்கு உள்காயம் பெரியளவில் ஏற்பட்டுள்ளதால் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளது படக்குழு.

இந்த நிலையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள விஷால் கேரளா செல்வதாக அறிவித்துள்ளனர்.

விஷால் முழுவதுமாக குணமாகி வந்த பின்னரே ‘லத்தி’ படப்பிடிப்பை படக்குழு மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal went to Kerala for his treatment

அகிலனாக மாறிய ஜெயம்ரவி..; பிரியா & தன்யா ஆகியோருடன் கூட்டணி

அகிலனாக மாறிய ஜெயம்ரவி..; பிரியா & தன்யா ஆகியோருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிர்ச்சி சிவா நடிக்கும் ‛இடியட், மற்றும் செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் ‘சாணிக்காயிதம்’ படங்களை தயாரித்து வருகிறது ஸ்கிரீன் சீன் நிறுவனம்.

இந்த படங்கள் வெளியீட்டுக்கு ரெடியாகவுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம்.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகவுள்ள 3 திரைப்படங்களை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அதில் முதல் படத்திற்கு ‘அகிலன்’ என தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணனே இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படம் ஜெயம் ரவியின் 28வது படமாக உருவாகிறது.

பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர்.

சாம் சி எஸ் இசையமைக்க விவேக் ஒளிப்பதிவு செய்கிறார்.

துறைமுகத்தை மையமாகக் கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது.

தூத்துக்குடி மற்றும் சென்னை காசிமேட்டில் இதன் பெரும்பாலானா காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

குஜராத்தில் உள்ள மிகப்பெரிய கண்டெய்னர் தளத்தில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

மே மாதம் இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

#Jayamravi’s #JR28 titled as #Agilan

‘காமன்மேன்’ டைட்டிலை சுசீந்திரன் உதவியாளருக்கு வழங்கியது சென்சார்

‘காமன்மேன்’ டைட்டிலை சுசீந்திரன் உதவியாளருக்கு வழங்கியது சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமன்மேன் (Common Man) என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு Teaser சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது.

ஆனால் இந்த தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று AGR RIGHT FILMS என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது.

டைரக்டர் சுசீந்திரன் இணை இயக்குனரான அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே “COMMON MAN” என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக AGR RIGHT FILMS தெரிவித்துள்ளது.

தற்போது CHENDUR FILMS INTERNATIONAL “COMMON MAN” என்கிற தலைப்பில் படம் அறிவிக்கவே, அதில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகர் சசிகுமாரிடம்.. AGR RIGHT FILMS தலைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து சொல்லவே, சசிகுமார் எதுவானாலும் FILM CHAMBER வழியாக நீங்கள் தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பின்னர் இது தொடர்பாக AGR RIGHT FILMS.. FILM CHAMBER-ஐ அணுகவே, சேம்பரோ தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து இந்த தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது. பதில் வர தாமதமான நிலையில்,

CHENDUR FILMS INTERNATIONAL நிறுவனம் “COMMON MAN” என்கிற தலைப்பில் பட டீசர் வெளியிட்டுவிட்டது.

இதன் பிறகு AGR RIGHT FILMS.. சேம்பரை மீண்டும் அணுகவே, சேம்பருக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான முறையான பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேவையான சட்ட நடவடிக்கைகளை AGR RIGHT FILMS எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு சேம்பரும் உறுதுணையாக இருக்கும் என Film Chamber அறிவித்துள்ளது.

AGR RIGHT FILMS “COMMON MAN” என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் எனவும், இந்த தலைப்பில் தங்களை தவிர வேற எந்த நிறுவனத்தின் படத்திற்கும் அனுமதிசான்று வழங்கக் கூடாது என்று Censor Board-இடம் சட்ட ரீதியான notice ஒன்றை அனுப்பியது.

அதற்கு சென்சார் போர்ட் இப்பொழுது, ‘காமன்மேன்’ டைட்டிலை AGR RIGHT FILMS நிறுவனத்திற்கு முறையாக சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் motion poster விரைவில் வெளிவரும். இதனால், அறிவிப்பு வெளியான சசிகுமார் பட டைட்டிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Common Man movie title goes to Suseenthiran assistant

காதலர்களை காந்தமாக கவரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட டீசர்

காதலர்களை காந்தமாக கவரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டில் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்றான “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் அழகான டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.

‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிர்களிடம் எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் அனைத்து தரப்பினரிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பம்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காதல் காமெடி படங்கள் இல்லையெனும் ஏக்கத்தை போக்கும் படி, நீண்ட இடைவேளைக்கு பிறகு, பெரும் நட்சத்திர கூட்டணியில், அழகான காதல் கவிதையாக, மனம் விட்டு சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Massive response for #KaathuVaakulaRenduKaadhal Teaser

சசிகுமார் – ஹரிப்ரியா ஜோடிக்கு சாத்தானாக மாறிய விக்ராந்த்

சசிகுமார் – ஹரிப்ரியா ஜோடிக்கு சாத்தானாக மாறிய விக்ராந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் அடுத்ததாக சசிகுமார் மற்றும் ஹரிப்ரியா நடிக்கும் படம் “காமன் மேன்”.

ஒவ்வொரு கதைக்கும் ஒரு வில்லன் உண்டு. ஆனால் இந்தபடித்தில் ஒரு சாத்தன் போன்ற குணம் படைத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ராந்த்.

இன்று படத்திலிருந்து விக்ராந்தின் சிறு வீடியோ காட்சி வெளியிடப்பட்டது .அவரது தோற்றம் ஒரு சாதாரணமாக இருந்தாலும், அவரது அனைத்து முயற்சிகளும் சாத்தானை (நரகத்தின் ராஜா) நினைவூட்டும்.

இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் .செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

Director Sathyasiva’s next is “Common Man” Starring SASIKUMAR and Haripriya in the lead.

More Articles
Follows