காதலுக்காக வாழ்க்கையை இழக்காதீர்.; ‘குக் வித் கோமாளி’ புகழ் சொல்லும் கருத்து

காதலுக்காக வாழ்க்கையை இழக்காதீர்.; ‘குக் வித் கோமாளி’ புகழ் சொல்லும் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ்.

இதைத்தொடர்ந்து, ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘டி.எஸ்.பி’, ‘யானை’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், புகழ் தற்போது ‘துடிக்கிறது மீசை’ என்ற படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார்.

இப்படத்தில் வர்ஷினி, அக்ஷதா ஆகியோர் நாயகிகளாக நடிக்க, முருகதாஸ், மாறன், யோகிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை எம்.ஜே.இளன் டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, “காதல் தவறில்லை. ஆனால் காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை வீணடிப்பது தவறு என்று சொல்கிற கதை இது. காதலில் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களைப் பற்றி படம் பேசுகிறது. மதுரையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கும் கதையை காதல், நகைச்சுவை கலந்து கூற இருக்கிறோம்” என்றார்.

pugazh acting as hero role in ‘thudikkiradhu meesai’ movie

அன்று சாதி இல்லை.. இன்று மனிதநேயமே இல்லை.; எங்கே போகிறது என் நாடு.; MS பாஸ்கர் வேதனை

அன்று சாதி இல்லை.. இன்று மனிதநேயமே இல்லை.; எங்கே போகிறது என் நாடு.; MS பாஸ்கர் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் சாதி கொடுமையால் பள்ளி மாணவர் அவரது தங்கை இருவரும் தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் சக மாணவர்களிடையே தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

‘சாதிகள் இல்லையடி பாப்பா..’ என்று பாடம் படிக்கும் மாணவர்களே இப்படி சாதி என்னும் தீயில் சாதி வெறியில் திரிவதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திரைப்பட நடிகர் எம் எஸ் பாஸ்கர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த கவிதை அறிக்கையில்…

“வேற்றுமை கூடாது என்பதற்காகத்தானே மாணவ மாணவியர்க்கு சீருடை….

மாணவனை மாணவர்களே கொடுமையாக தாக்குவது எவ்வகையில் நியாயம்…

சின்னதுரை படிக்கக்கூடாதா…
சிறந்து விளங்கக்கூடாதா…

பிஞ்சு மனங்களில் நஞ்சா….
சிரத்தில் அறிவை இழந்து கரத்தில் அரிவாளை ஏந்துவதா….

சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஔவை மூதாட்டி எழுதியது பொய்யா….

கற்காலத்தில் சாதி இல்லை…
தற்காலத்தில் மனிதநேயமே இல்லை….
எங்கே போகிறது என் நாடு…..
என்ன சொல்வது என்றே புரியவில்லை..

நாங்குநேரி மாணவன் மீதும் அவரது சகோதரி மீதும் நடந்த தாக்குதலை கனத்த இதயத்தோடு வன்மையாக கண்டிக்கிறேன்….
இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உயிரிழந்தவருக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

தவறு செய்தவர்கள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!

இனி வரும் காலத்தில் இவ்வாறு நிகழா வண்ணம் சட்டம் தன் கடமையை கடுமையாக செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்….

சின்னதுரையும் அவரது சகோதரியும் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

– வேதனையுடன் எம்.எஸ்.பாஸ்கர்.

MS Baskar emotional statement about Students caste issue

சத்யராஜ் தாயார் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

சத்யராஜ் தாயார் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94).

இவர் கோவையில் வசித்து வந்தார்.

நாதாம்பாள் வயது மூப்பின் காரணமாக நேற்று (அக்டோபர் 11) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார்.

நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

நாதாம்பாளுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “நண்பர் சத்யராஜ் அவர்களின் தாயாரும், இளவல் சிபி சத்யராஜ் அவர்களின் பாட்டியுமான திருமதி. நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Sathyaraj’s mother dies Kamal Haasanexpress their condolences

ஒரே நாளில் ‘சந்திரமுகி 2’ பட ‘ஸ்வாகதாஞ்சலி’ பாடல் படைத்த சாதனை

ஒரே நாளில் ‘சந்திரமுகி 2’ பட ‘ஸ்வாகதாஞ்சலி’ பாடல் படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சந்திரமுகி 2’.

இப்படத்தில் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

இதையடுத்து ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடலான ‘ஸ்வாகதாஞ்சலி’ பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது.

இந்நிலையில், எம் எம் கீரவாணியின் இசையில் வெளியான இந்த பாடல் ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.

சந்திரமுகி 2

‘Chandramukhi 2’ movie SWAGATHAANJALI song Crosses 3 Million Views just 1 day

தமிழ்நாட்டில் மட்டும் JAILER ஐந்து கோடி நஷ்டம்.; அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்

தமிழ்நாட்டில் மட்டும் JAILER ஐந்து கோடி நஷ்டம்.; அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் உலகமெங்கும் வெளியானது.

ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்த படம் வெளியானது.

அனிருத் இசை அமைத்திருந்த இந்த படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரப், சுனில் உள்ளிட்ட இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்ததால் இந்தியா முழுவதும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

அதற்கு ஏற்ப வசூல் வேட்டையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஜெயிலருக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துள்ளதால் ரூ. 100 கோடியை தாண்டி வசூல் வேட்டை செய்து வருகிறது.

ஆகஸ்டு 10 வியாழக்கிழமை எந்த ஒரு பண்டிகை தினமும் விடுமுறை தினமும் இல்லை. ஆனாலும் படத்திற்கு டிக்கெட் எங்குமே கிடைக்கவில்லை என்பது ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

நமது அண்டை மாநிலங்களான கேரளா ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் அனுமதி இல்லை என்பதால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்பட்டது .

முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 25 கோடியை படம் வசூலித்துள்ளது. ஒருவேளை தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தால் ரூ 30 கோடியை இந்த படம் எட்டி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே முதல் நாளில் சிறப்பு காட்சி இல்லாததால் 5 கோடி நஷ்டத்தை ஜெயிலர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எங்கும் இல்லாத அளவிற்கு ஜெயிலர் படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை செய்து வருவதால் ரஜினி ரசிகர்களும் தியேட்டர் அதிபர்களும் படக்குழுவினரும் விநியோகஸ்தர்களும் என திரையுலகமே மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

Rajinis Jailer lost 5 crores in TN Box office

ரிஷிகேஷில் ரஜினி ரிலாக்ஸ்.; தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் ஆஜர்.!

ரிஷிகேஷில் ரஜினி ரிலாக்ஸ்.; தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் ஆஜர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் முன்னணி நடிகராகவும், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் ரஜினிகாந்த்.

ரஜினி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம்.

 உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார்.

இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டில் ‘காலா’, ‘2.0’ படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார்.

ரஜினிகாந்த்

அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்தார்.

தற்போது ‘ஜெயிலர்’, ‘லால் சலாம்’ என இருப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த ரஜினி புதன்கிழமை தனது இமயமலை பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரகாண்டின் ரிஷிகேஷியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் உள்ள சாமிகளை சந்தித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த்

rajini visit swamy dayananda saraswathi ashram during himalayas trip

More Articles
Follows