தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் நாளை மார்ச் 10ல் உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.
இதில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, வினய், சரண்யா, திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைத்துள்ளார்.
இதனையொட்டி படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் படக்குழு.
இந்த நிலையில் கேரளாவில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
அப்போது பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்தார்.
அவர் பேசியதாவது…
இந்த நவீன உலகத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடப்பது வேதனையளிக்கிறது. இந்த சமூகம் மாறவேண்டும். அதற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்.
அநியாயங்களை பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க கூடாது. மௌனம் கூட வன்முறையாகும். மகாத்மா காந்தியை ரயிலில் இருந்து தள்ளி விட்டபோது தான் அவர் எதிர்த்து பேச ஆரம்பித்தார். அதன்பின்னரே வரலாறு உருவானது.
நான் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. கல்வி குறித்து அறிந்துள்ளேன். அதனால் அது தொடர்பான சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்
மின்னல் முரளி படம் பார்த்தேன். மிகவும் அருமை. சூப்பர் ஹீரோ கதை அனைவருக்கும் பிடித்துள்ளது.”
இவ்வாறு சூர்யா பேசினார்.
EXCLUSIVE – Silence is Violence says Actor Suriya