EXCLUSIVE – Silence is Violence… காந்திஜி.. அரசியல்.. சூப்பர் ஹீரோ.. பாலியல் குறித்து சூர்யா ஓபன் டாக்

EXCLUSIVE – Silence is Violence… காந்திஜி.. அரசியல்.. சூப்பர் ஹீரோ.. பாலியல் குறித்து சூர்யா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் நாளை மார்ச் 10ல் உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

இதில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, வினய், சரண்யா, திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைத்துள்ளார்.

இதனையொட்டி படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் படக்குழு.

இந்த நிலையில் கேரளாவில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

அப்போது பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்தார்.

அவர் பேசியதாவது…

இந்த நவீன உலகத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடப்பது வேதனையளிக்கிறது. இந்த சமூகம் மாறவேண்டும். அதற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்.

அநியாயங்களை பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க கூடாது. மௌனம் கூட வன்முறையாகும். மகாத்மா காந்தியை ரயிலில் இருந்து தள்ளி விட்டபோது தான் அவர் எதிர்த்து பேச ஆரம்பித்தார். அதன்பின்னரே வரலாறு உருவானது.

நான் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. கல்வி குறித்து அறிந்துள்ளேன். அதனால் அது தொடர்பான சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்

மின்னல் முரளி படம் பார்த்தேன். மிகவும் அருமை. சூப்பர் ஹீரோ கதை அனைவருக்கும் பிடித்துள்ளது.”

இவ்வாறு சூர்யா பேசினார்.

EXCLUSIVE – Silence is Violence says Actor Suriya

ரஹ்மானின் கோரிக்கையை ஏற்ற இளையராஜா..; துபாயில் நடக்குமா?

ரஹ்மானின் கோரிக்கையை ஏற்ற இளையராஜா..; துபாயில் நடக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துபாய் நாட்டில் நடைபெறும் கண்காட்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடைபெற்றது. அதன்பின்னர் அந்த நாட்டில் உள்ள ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கே சென்று ரஹ்மான் சந்தித்தார் இளையராஜா என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

“எங்கள் ஃபிரதோஸ் ஸ்டுடியோவுக்கு மேஸ்ட்ரோ இளையராஜாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத்தில் எங்கள் ஸ்டுடியோவுக்காக அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்” என பதிவிட்டிருந்தார் ரஹ்மான்.

“ரஹ்மானின் கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பு தொடங்கும்” என இளையராஜாவும் பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து ஃபிரதோஸ் ஸ்டுடியோ ட்விட்டர் பக்கத்தில், “எங்களால் காத்திருக்க முடியவில்லை. இந்த துபாய் கண்காட்சியிலேயே அது நடக்குமா?” என பதிவிட்டுள்ளது.

Ilaiyaraaja Meets AR Rahman – Surprise Visit To Firdaus Studio

தானே இயக்கி தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் செல்வராகவன்

தானே இயக்கி தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படம் ‘நானே வருவேன்’. இதில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

நாயகியாக இந்துஜா நடித்து வருகிறார்.

யுவன் இசையமைத்து வரும் இந்தப்பட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இதில் முக்கிய வேடத்தில் செல்வராகவனும் நடிப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான அவரின் பிறந்தநாள் போஸ்டரில் அவரின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

சாணிக் காயிதம், பீஸ்ட் படங்களில் செல்வராகவன் நடித்து வந்தாலும் தனது இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் ‘நானே வருவேன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Selva Raghavan to act with Dhanush in his new film

‘அரபிக்குத்து’ பாடலுக்கு சிவகார்த்திகேயனிடம் விஜய் சொன்னது இதுதான்..

‘அரபிக்குத்து’ பாடலுக்கு சிவகார்த்திகேயனிடம் விஜய் சொன்னது இதுதான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று மார்ச் 7ஆம் தேதி ஒரு தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அந்த விழாவில் பீஸ்ட் பட “அரபிக்குத்து பாடல் எழுதியதிற்கு விஜய் என்ன சொன்னார்? என கேட்கப்பட்டது.

அதற்கு சிவா கூறியதாவது…

“‘அரபிக்குத்து ப்ரோமோ வீடியோ ஷுட் செய்த சமயத்தில் விஜய் போன் செய்தார். “பாட்டு சூப்பர் பா. ரொம்ப தேங்க்ஸ் பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே” என்றார்.

சார்.. உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லையே சார். அனிருத் பாதி பாடிவிடுவார். அவர் விட்ட இடத்தை நாம சும்மா நிரப்ப வேண்டியது தான் என சொன்னேன்.. ‘அரபிக்குத்து’ பாட்டு அவருக்கு ரொம்ப பிடிச்சிட்டு” என சிவகார்த்திகேயன் மேடையில் தெரிவித்தார்.

Actor Sivakarthikeyan talks about Arabic Kuthu song

இந்த ஊரில் மட்டும் ‘எதற்கும் துணிந்தவன்’ பட ரிலீசுக்கு பாமக எதிர்ப்பு

இந்த ஊரில் மட்டும் ‘எதற்கும் துணிந்தவன்’ பட ரிலீசுக்கு பாமக எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்து தயாரித்த சூரரைப் போற்று 2020 மற்றும் ஜெய்பீம் 2021 ஆகிய படங்கள் பல எதிர்ப்புகளை மீறி தியேட்டர்களில் வெளியாகாமல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் அடுத்த படம் எதற்கும் துணிந்தவன் படம் உலகமெங்கும் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

பாண்டிராஜ் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‛எதற்கும் துணிந்தவன்’ மார்ச் 10ல் வெளியாகவுள்ள நிலையில் பா.ம.கட்சியனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜெய் பீம் படம் பலரின் பாராட்டுக்களை அள்ளினாலும் வன்னியர்களை தவறாக சித்தரித்ததாக எதிர்ப்பு உருவானது. அந்த படம் வெளியானபோதே பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால் சூர்யா விளக்கம் மட்டுமே அளித்து இருந்தார்.

இந்த நிலையில் ஜெயம் பீம் பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவரது படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என பா.ம.கட்சியின் மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் சூர்யா படம் திரையிடுவதில் பிரச்சினை உருவாகி உள்ளது.

Cuddalore PMK party oppose Suriya’s Etharkum Thunindhavan

சிகிச்சையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா.; நாய்களுடன் ஜாலியாக தனுஷ்..; வெறுப்பேத்துறாரோ..?

சிகிச்சையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா.; நாய்களுடன் ஜாலியாக தனுஷ்..; வெறுப்பேத்துறாரோ..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2022 ஜனவரியில் தன் மனைவியும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் நடிகர் தனுஷ். இவர்களின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவானதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன்பிறகு தனுஷ் தன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவும் தன் அப்பா ரஜினியுடன் வசித்து வருகிறார். மேலும் இவர் இயக்கும் முஷாஃபிர் என்ற பாடல் வீடியோ பணியில் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. அவரின் ருத்துவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன் இன்ஸ்டாவில் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில்… அவர் வளர்க்கும் நாய்களான கிங், காங், ஜெங்கிஸ், கேசர் ஆகியவற்றுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் “நீண்ட நாளுக்குப் பிறகு ரியூனியன்.. எனது பாய்ஸ்களுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி,” எனப் பதிவிட்டுள்ளார்.

தனுஷ் தன் மனைவியை பிரிந்து வாழும் நிலையில் நாய்களுடன் ரியூனியன் என பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dhanush social media post creates controversy

More Articles
Follows