தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘காக்க காக்க’, ‘மாயாவி’ உள்ளிட்ட படங்களில் நடித்த போது சூர்யாவும் ஜோதிகாவும் காதலிக்க தொடங்கினர். இதனையடுத்து அவர்கள் காதல் திருமணமும் செய்து கொண்டனர்.
பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
சூர்யா ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக இருந்த போதிலும் தன் மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக தரமான படங்களை தயாரித்து வருகிறார். ஒரு சில படங்களில் சூர்யாவே நாயகனாகவும் நடித்து வருகிறார்.
தற்போது இவர்கள் தயாரிப்பில் அக்சய்குமார் நடிக்க ‘சூரரைப் போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாகி வருகிறது.
எனவே தற்போது சூர்யா குடும்பத்தினர் மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அப்போது தனது குழந்தைகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என இவர்கள் தரப்பில் பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை விடுத்தது வைரலானது.
இந்த நிலையில் மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் சூர்யா – ஜோதிகா சொந்த பங்களா ஒன்றை வாங்கி உள்ளதாகவும் அங்கேயே அவர்கள் வசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் அவர்கள் சொந்த வீடு எதுவும் வாங்கவில்லை என சூர்யா தரப்பில் அவரது பிஆர்ஓ உறுதிப்படுத்தியுள்ளார்.
suriya bought new house in mumbai