2016 ஆண்டு… முதல் படத்திலேயே கவர்ந்த சூப்பர் ஹீரோயின்ஸ்

2016 ஆண்டு… முதல் படத்திலேயே கவர்ந்த சூப்பர் ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2016 Debut heroines in Tamil Cinemaபல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பது ஒரு வகை.

ஆனால் தங்கள் முதல் படத்திலேயே முத்திரை பதிப்பது இரண்டாவது வகை.

பராசக்தியில் சிவாஜி, பருத்தி வீரனில் கார்த்தி என்று ஒரு சில நடிகர்கள் மட்டுமே தங்கள் முத்திரையை பதித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தாண்டு 2016ல் நிறைய புதிய முகங்கள் தமிழ் சினிமாவிற்று அறிமுகமாகி உள்ளனர். (சிலர் மற்ற மொழிகளில் நடித்தும் உள்ளனர்)

தமிழ் சினிமா தந்த அந்த திறமையான சூப்பர் ஹீரோயின்ஸ்களை இங்கே பார்ப்போம்…

ரித்திகா சிங் – இறுதிச்சுற்று

அடிப்படையில் பாக்ஸர் ஆன இவர் தன் முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார்.

மாதவன் தயாரித்த இப்படத்தை சுதா கொங்கரா என்ற பெண் இயக்குனர் உருவாக்கியிருந்தார்.

ரித்திகாவின் அடுத்த படமான ஆண்டவன் கட்டளையும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

நிகிலா விமல் – வெற்றிவேல்

வெற்றி வேல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கிடாரி படத்திலும் சசிகுமாருடன் நடித்தார்.

இரண்டிலும் அமைதியான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்தார்.

பூஜா தேவரியா – இறைவி

இறைவி படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை கைப்பற்றியிருந்தார். ஒரு சில காட்சிகளே வந்தாலும், யார்? இந்த பெண்? என்று கேட்கவைத்தார்.

இதனையடுத்து குற்றமே தண்டனையிலும் தனக்கான இடத்தை பிடித்தார்.

நிவேதா பெத்துராஜ் – ஒரு நாள் கூத்து

இவர் தமிழ்ப் பெண் என்றாலும் அயல்நாட்டில் செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகளை பதிவிடுவார்.
ஒருநாள் ஒரு கூத்து படத்தில் இடம்பெற்ற அடியே அழகே பாடலிலும் படத்திலும் தனி கவனம் ஈர்த்தார்.

மஞ்சிமா மோகன் – அச்சம் என்பது மடமையடா

கெளதம் மேனன் படத்தில் மெயின் கேரக்டரா? அல்வா மாதிரி ஆச்சே. என்றுதான் ஹீரோ ஆனாலும் சரி ஹீரோயினாலும் சரி நினைப்பார்கள்.

அதுபோன்ற வாய்ப்பு மஞ்சிமா மோகனுக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பில் பாராட்டை பெற்றார்.

மடோனா செபாஸ்டியன் – காதலும் கடந்து போகும்

மலையாள பிரேமம் படத்தில் அறிமுகமானாலும், தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.

காதலும் கடந்து போகும் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதியுடன் கவண் படத்தில் நடித்து வருகிறார்.

அனுபமா பரமேஸ்வரன் – கொடி

இவரும் மலையாள பிரேமம் படத்தில் அறிமுகமானார்.

தனுஷின் கொடி படம் இவருக்கு முதல் தமிழ் படம். இவர் இதில் சொந்த குரலில் டப்பிங் பேசியது குறிப்பிடத்தக்கது.

ரம்யா பாண்டியன் – ஜோக்கர்

தன் முதல் படமே அருமையான சமூக நோக்கமுள்ள படத்தில் நடித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கூட இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
அந்த அளவு கிராமத்து பெண்ணாக மேக்கப் போட்டு இருந்தார்.

சாட்னா டைடஸ் – பிச்சைக்காரன்

விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேர்ந்திருந்தார். நெகட்டிவ் டைட்டில் என்று கூறப்பட்டாலும் சென்டிமெண்டுகளை உடைத்து வசூலில் பணக்காரன் என நிரூபித்தது.

திடீரென தன் காதலரை திருமணம் செய்துக் கொண்டார்.

அறிமுக நாயகிகள் அனைவரும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்.

சிவாஜி பட டைட்டிலை கைப்பற்றிய சந்தானம்-செல்வராகவன்

சிவாஜி பட டைட்டிலை கைப்பற்றிய சந்தானம்-செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam selvaraghavanசந்தானம் நடிக்கும் புதிய படத்தை செல்வராகவன் இயக்குகிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து சந்தானமும், செல்வராகவனும் சேர்ந்து நின்ற போட்டோக்கள் வெளியானது.

ரொமான்டிக், காமெடி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு மன்னவன் வந்தானடி என்ற படத்லைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதே தலைப்பில் பி. மாதவன் இயக்கிய இப்படத்தில் சிவாஜி, மஞ்சுளா நடித்திருந்தனர். இப்படம் 1975ஆம் ஆண்டில் வெளியானது.

ரஜினியுடன் நடித்த ‘கொசு’வையும் விடாத ‘மெட்ரோ’ சிரிஷ்

ரஜினியுடன் நடித்த ‘கொசு’வையும் விடாத ‘மெட்ரோ’ சிரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Metro fame Shirish next titled Raja Ranguskiமெட்ரோ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் ஹீரோ சிரிஷ்.

இவர் அடுத்து நடிக்க உள்ள படத்தை ஜாக்சன் துரை, பர்மா படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கவிருக்கிறார்.

இதில் ‘இறைவி’ படப்புகழ் பூஜா தேவ்ரியா நாயகியாக நடித்துள்ளார்.

யுவன் இசையமைக்க உள்ள இப்படத்தின் சூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

வாசன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பர்மா டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

‘ராஜா ரங்குஸ்கி’ என்று பெயரிடப்பட்டுள்ள இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார்.

‘எந்திரன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயை கடித்த கொசுவை தேடி ரோபோ ரஜினி செல்வார்.

அந்த கொசுவின் பெயர் ரங்குஸ்கி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Metro fame Shirish next titled Raja Ranguski

raja ranguski

இயக்குநர் ராம்-யுவன் கூட்டணிக்கு கைகொடுக்கும் ரஜினி

இயக்குநர் ராம்-யுவன் கூட்டணிக்கு கைகொடுக்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Taramani movie posterகற்றது தமிழ் மற்றும் தங்கமீன்கள் ஆகிய படங்களை தொடர்ந்து ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தரமணி.

இதில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அழகம் பெருமாள் மற்றும் கௌரவ தோற்றத்தில் அஞ்சலி நடிக்கின்றனர்.

ஜே. சதீஷ்குமார் தயாரித்துள்ளார்.

நா. முத்துக்குமாரின் வரிகளுக்கு யுவன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் நாளை டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட இருக்கிறாராம்.

விஜய்-சூர்யாவுடன் மோதலை தவிர்க்க ஜெயம் ரவி திட்டம்

விஜய்-சூர்யாவுடன் மோதலை தவிர்க்க ஜெயம் ரவி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam raviவிஜய் நடித்துள்ள பைரவா படம் 2017 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இத்துடன் விஜய்சேதுபதி, பார்த்திபன், அருண் விஜய் ஆகியோரின் படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

இதனையடுத்து இரண்டு வார இடைவெளியில் ஜனவரி 26ஆம் தேதி சிங்கம் 3 ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் போகன் படத்தை பைரவா மற்றும் சிங்கம் 3 படத்தின் நடுவே அதாவது ஜனவரி 19ஆம் தேதி வெளியிடலாம் என தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய், சூர்யா படங்களுடன் ஜெயம் ரவிக்கு ஏற்படும் மோதல் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மக்கள் விரும்புவரே அதிமுக பொதுச் செயலாளர்…’ – லதா

‘மக்கள் விரும்புவரே அதிமுக பொதுச் செயலாளர்…’ – லதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lathaஜெயலலிதா மறைந்த பிறகு புதிய அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ள லதா அவர்கள் அஇஅதிமுக பொதுச்செயலாளரை மக்களே தேர்ந்தெடுக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

அதில்…

என் குரு, என் ஆசான் புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய மாபெரும் மக்கள் சக்தி இயக்கமான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், நான் ஏற்கனவே அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று இதுவரையில் யாரும் முக்கிய முடிவினை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

மொத்தத்தில் பெரிய குழப்பங்கள் ஆட்சியில் இன்னும் நீடிப்பதாகவே நான் உணருகிறேன். இது கட்சிக்கும், ஆட்சிக்கும் உகந்தது அல்ல.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தோற்றுவித்து அதனை வெற்றிகரமாக நடத்தியபோது அவருக்கு அடிப்படையாக அமைந்தது ‘மக்கள் செல்வாக்கு’. அவர்வழி வந்த புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும் மக்கள் தங்களது வரவேற்பினை தந்தனர்.

தமிழக வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி பொறுப்பினை ஏற்ற இரண்டு முதலமைச்சர்களை பெற்ற கட்சி நம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சாதனையை நாம் பெற வைத்ததும் அந்த மக்கள் சக்திதான் என்பதை நாம் மறந்துவிட கூடாது.

எனவே, என்னுடைய அபிப்பிராயம், என் குரு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கூறியது போல, ‘மக்கள் தீர்ப்பே- மகேசன் தீர்ப்பு’ என்பதன் அடிப்படையில் முக்கிய முடிவினை எடுக்கும் காலகட்டம் இது.

இனியும் காலதாமதம் செய்யாமல் அடிமட்ட தொண்டர்களில் இருந்து பொதுமக்கள் வரை ஏற்கும் விதமாக கழக பொதுச்செயலாளரை முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிக்க வேண்டுமென்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் தேர்ந்தெடுக்கப்படும் நபர், எம்.ஜி.ஆர் அவர்கள் வழிகாட்டிய மக்கள் சேவையையும், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் செயலாற்றிய ஆட்சி முறையும் சேர்ந்து ஒருங்கே அமையும்படி, மக்களுக்கு பணியாற்றுவேன் என உறுதிமொழி தந்து பொதுச்செயலாளர் பதவியை பொது அறிக்கையின் வாயிலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

என்று தெரிவித்துள்ளார் லதா.

More Articles
Follows