தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்ரம் பிரபு மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள ‘நெருப்புடா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையிலுள்ள சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்ட திரையுலக பிரபலங்கள் ஒரு படம் வெளியானால், 3 நாட்கள் கழித்து, 4வது நாள் விமர்சனம் செய்ய கேட்டுக் கொண்டனர்.
இதே கருத்தை ரஜினியும் கூறினார். அதை அவர் குட்டிக் கதை சொல்லி, அதன் மூலம் உணர்த்தினார்.
ஒரு சினிமா எடுப்பது எங்கள் கடமை என்பதுபோல, அதை விமர்சனம் செய்வது பத்திரிகையாளர்களின் கடமை.
ஆனால் அதை விமர்சனம் செய்யும்போது, யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டும். என்றார்.
அப்போது கூறிய ஒரு குட்டிக்கதையும் கூறினார்.
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பிறக்கவில்லை.
பல கோயில்கள் படி ஏறி, இறங்கிய பின்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் ஜாதகத்தை தெரிந்து கொள்ள ஒரு ஜோசியரை அழைத்தார். அவர் அந்த குழந்தையை பார்த்துவிட்டு, இந்த குழந்தையால் உங்களுக்கு ஒரு மரணம் ஏற்படும் என்றார்.
அதிர்ச்சி அடைந்த ராஜா, அந்த ஜோசியரை ஜெயிலில் போட்டுவிட்டார்.
பின்னர் வேறொரு ஜோசியரை அழைத்து அவரிடம் குழந்தையின் ஜாதகத்தை கணிக்க சொன்னார்.
அவர் குழந்தையின் ஜாதகத்தில் முன்னர் கூறிய ஜோசியர் கூறியது உண்மை என்பதை கண்டறிந்தாலும் அதை கூறாமல், அந்த குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருப்பதை அறிந்து அவர் ராஜாவிடம் இந்த குழந்தை உங்களை விட நூறு மடங்கும் புகழ் பெறுவார் என்று கூறினார்.
இதனால் மன்னர் மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அவர் அதற்கு ஜெயிலில் உள்ள ஜோசியரை விடுதலை செய்யுங்கள், அதுபோதும் என்று கூறினார்.
எனவே ஒருவரிடத்தில் என்ன சொல்ல வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்பதை அறிந்து விமர்சனம் செய்யுங்கள்’ என்றார் ரஜினிகாந்த்.
Super star Rajini speech about cinema reviewers