‘மன்மதன்’ சிம்பு மீண்டும் வருகிறார்..; டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ்.

‘மன்மதன்’ சிம்பு மீண்டும் வருகிறார்..; டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் டி.ஆர். & ஜோதிகா இணைந்து நடித்து பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று ‘மன்மதன்.’

2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் இன்று முதல் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

படத்தை நந்தினி தேவி ஃபிலிம்ஸ் தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களில் வெளியிடுகிறது!

‘மன்மதன்’ சிலம்பரசன் டி.ஆர் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம், யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அத்தனையும் தாறுமாறான வரவேற்பு பெற்ற படம், சிலம்பரசனின் பரபரப்பான கதைக்காகவும் விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும் ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்ட படம்.

சிலம்பரசன் டி.ஆர் உடன் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் என பலரும் நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்தார்.

மன்மதன் மீண்டும் ரிலீஸாகவிருப்பது சிலம்பரசன் டி.ஆர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைக்கும் என நம்பலாம்..

STR’s Block Buster Hit Manmadhan is back again in theatres

JUST IN புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்; – ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

JUST IN புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்; – ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டில் மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.

மேலும் இந்த கல்வியாண்டில் மாணவர்கள் பள்ளிச் செல்லவில்லை.

9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றன

தமிழகத்தில் 1 முதல் 11 வகுப்பு வரை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து புதுவையில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான ஆணையை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டார்.

அதில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.

10, 11்ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி.

12ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும்.

அது போல் மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் கேரளா & ஆந்திரா விதிகளுக்குட்பட்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1st std to 9th Std Students all pass in Puducherry state

விஜய் ஆண்டனி ரியல் லைப் ஹீரோ..; ‘கோடியில் ஒருவன்’ நாயகி ஆத்மிகா டபுள் ஹாப்பி

விஜய் ஆண்டனி ரியல் லைப் ஹீரோ..; ‘கோடியில் ஒருவன்’ நாயகி ஆத்மிகா டபுள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் ‘கோடியில் ஒருவன்’.

ஆத்மிகா நாயகியாக நடித்துள்ளார்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, ஒளிப்பதிவினை என்.எஸ்.உதயகுமார் கவனித்துள்ளார்.

இந்த படத்தின் எடிட்டிங்கை விஜய் ஆண்டனியே கவனித்துள்ளார்.

இப்படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

விஜய் ஆண்டனி…

”கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார்.

எதிர்காலத்திலும் அவருடன் பணிபுரிவேன்.

ஆத்மிகா திறமையான நடிகை. அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.

நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது.

இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது” என்றார்.

ஆனந்த் கிருஷ்ணன்…

‘மெட்ரோ படத்தை பார்த்து எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார் விஜய் ஆண்டனி.

கோடியில் ஒருவன் படத்தில் ஆண்டனி டியூசன் மாஸ்டராக நடித்துள்ளார்.

இந்த அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினையை மாற்றும் கேரக்டரில் நடித்துள்ளார்.” என்றார்.

ஆத்மிகா…

”கொரோன காலத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த தருணமே படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும், தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க வந்தார்.

அவர் ஒரு ரியல் லைப் ஹீரோ. இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

தனஞ்செயன் கூறுகையில்…

”கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது.

ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குனர். இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்”

இவ்வாறு கலைஞர்கள் (படக்குழுவினர்) பேசினர்.

Actress Aathmika praises vijay antony

‘ஜகா’ வாங்காமல் ஹீரோவாக கமிட்டானார் ‘ஆடுகளம்’ முருகதாஸ்

‘ஜகா’ வாங்காமல் ஹீரோவாக கமிட்டானார் ‘ஆடுகளம்’ முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி நடிகர்களை ஒரு கட்டத்தில் சினிமாவில் ஹீரோவாக்கி அழகு பார்ப்பது கோலிவுட் இயக்குனர்களின் பழக்கம்.

இந்த கட்டத்திற்குள் பெரும்பாலும் எல்லாம் காமெடியன்களும் வந்து விடுவார்கள்.

ஒரு சில காமெடியன்கள் ஜகா வாங்கி விடுவார்கள்.

தற்போது ஆடுகளம் முருகதாசும் ஹீரோவாகிவிட்டார்.

‘ஆடுகளம்’ படத்தில் தனுஷின் நண்பராக நடித்து பிரபலமானவர் முருகதாஸ். அதன்பிறகு இவரை ஆடுகளம் முருகதாஸ் என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இவரின் புதிய பட தகவல்கள் இதோ..

ஓம் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ‘ஜகா’.

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட யோகிபாபு நடித்த காக்டெய்ல் படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இப்படத்தை இயக்குகிறார்.

ஆடுகளம் முருகதாஸ் மைம் கோபி இவர்கள் இருவரும் இதுவரை பன்னாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ஹரி யோகி வலினாபிரின்ஸ் தயாரிப்பாளரும் நடிகருமான M.S குமார் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்…

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது…

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மனநல காப்பகம் நடத்தி வருகிறார் மைம் கோபி
அந்த இடத்தை அடைய ஒரு கும்பல் பல வழிகளில் முயற்சி செய்கிறது
ஆனால் அவ்விடத்தை கொடுக்க மறுக்கிறார் மைம் கோபி

காப்பகம் காப்பாற்றப்பட்டதா? கைப்பற்றப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறோம்.
.
மேலும் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து பின்னப்பட்ட முருகதாஸ் கதாபாத்திரம் புதுமையாக இருக்கும் என்றார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பாபநாசத்தில் தொடங்கி கொடைக்கானலில் மிகுந்த பனிப்பொழிவுக்கு நடுவே அண்மையில் நடந்து முடிந்தது.

விரைவில் அடுத்த கட்ட பணிகள் தொடங்குகிறது.

தேனி ஈஸ்வரின் சீடரான V.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார்.

இசை சாய் பாஸ்கர்
படத்தொகுப்பு ராம் செழியன்
பாடல் சதிஷ்
தயாரிப்பு மேற்பார்வை ஆத்தூர் ஆறுமுகம்
மக்கள் தொடர்பு A. ஜான்

Comedy actor Aadukalam Murugadoss turns hero

மேற்கு வங்க முதல்வர் மீது தாக்குதல்..: வீல் சேரில் வந்து பிரசாரம் செய்வேன்.. – மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மீது தாக்குதல்..: வீல் சேரில் வந்து பிரசாரம் செய்வேன்.. – மம்தா பானர்ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் & புதுச்சேரியை போல மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

வருகிற மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது.

திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதகாரி போட்டியிடுகிறார்.

அதன்படி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு , மாலையில் ரியாபாரா என்ற பகுதியில் பிரசாரம் செய்ய வந்துள்ளார் மம்தா.

அதற்கு முன்பு அங்குள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு வந்த மம்தா தன்னை சிலர் (4-5 பேர்) தாக்கியதாக கூறினார்.

இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கி கொண்டு காரில் ஏற்றினர்.

கொல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மம்தா மீது ஏற்பட்ட தாக்குதல் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை கண்டித்து, திரிணமுல் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தே மம்தா வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் … “என் காரின் அருகே செல்லும்போது மர்ம நபர்களால் தள்ளப்பட்டேன்.

அதில், கை, கால் உள்ளிட்ட உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஓரிரு நாள்களில் மீண்டும் பணிக்கு திரும்புவேன்.

என் காயத்தால் பிரசாரம் பாதிப்படைய கூடாது. சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம் செய்வேன்.

அனைத்து தொண்டர்களும் அமைதி காக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது”.

இவ்வாறு வீடியோவில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

West Bengal CM Mamata Banerjee ‘attacked’ in Nandigram

சுசீந்திரன் இயக்கும் படத்தில் 3வது முறையாக இணையும் ஆதி & நிக்கி

சுசீந்திரன் இயக்கும் படத்தில் 3வது முறையாக இணையும் ஆதி & நிக்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதி மற்றும் நிக்கி கல்ரானி மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கும் ‘சிவுடு’

யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களுக்கு பிறகு நடிகை நிக்கி கல்ரானி & ஆதி இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் சிவுடு . (தெலுங்கு திரைப்படம் ).

இயக்குனர் சுசீந்திரன் இயக்க Aadarsha Chitralaya நிறுவனம் சார்பில் சத்யா பிரபாஸ் தயாரிக்கிறார்.

இசை – ஜெய்
ஒளிப்பதிவு – R வேல்ராஜ்
எடிட்டர் – மு .காசி விஸ்வநாதன்
கலை இயக்கம் – சேகர் B
நடனம் – ஷோபி
சண்டை பயிற்சி – தினேஷ் காசி
பாடல்கள் – சந்திரபோஸ்
இணை இயக்கம் – திருப்பதி ராஜா, T இளங்கோ

Aaadhi and Nikki galrani joins for 3rd time

More Articles
Follows