தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களே எதையும் வெளிப்படையாக பேசுவார்கள்.
இதனால் சிலர் பொது இடங்களில் பேசுவதையே நிறுத்திவிட்டனர். ஆனால் சிம்பு இன்றுவரை தைரியமாக பேசி வருகிறார்.
இந்நிலையில் இன்று பேஸ்புக் பக்கத்தில் தன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சிம்பு.
அப்போது இனி வரும் படங்களில் அஜித் பெயரை பயன்படுத்தும் காட்சி ஏதாவது உள்ளதா? என்று ஒரு ரசிகர் கேட்டார்.
இனி அவர் பெயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது போல கூறியிருந்தார்.
சிம்பு அளித்த இந்த பதில் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து சிம்பு ஒரு வீடியோ பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
“என்னுடைய ‘மன்மதன், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல படங்களில் அஜித் பெயரை பயன்படுத்தி இருப்பேன்.
அப்போது என்னை யாருமே கேள்விக் கேட்கவில்லை.
இப்போது அஜித் சார் பெரிய இடத்துக்குச் சென்றவுடன், நீங்கள் ஏன் அவருடைய பெயரை உபயோக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.
நான் சொன்னதை தவறாக புரிந்துக் கொண்டீர்கள்.
அவரை ‘தல’ என்று தூக்கி வைத்துக் கொண்டாடாத காலக் கட்டத்திலேயே அவருடைய பெயரை முதலில் நான் சொல்ல வேண்டும் என நினைத்துச் சொன்னவன் நான்.
நான் ரஜினி சாருடைய தீவிர ரசிகன். என்னுடைய தலைமுறையில் அடுத்து அஜித் சாரை ரொம்ப பிடிக்கும்.
அஜித் சாரை தூக்கிவிட நான் யார்? அவருடைய கடின உழைப்பு தான் அவரை இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது.
அது எனக்கு முன்பே தெரிந்திருந்ததால் மட்டுமே, முன்பே எனது படங்களில் அவருடைய கட்-அவுட்டை வைத்து கத்தினேன்.
அவருடைய பெயரை வைத்து நான் இன்று பெரிய ஆளாக நினைப்பதாக சொல்வது காமெடியாக இருக்கிறது.
இன்று பலரும் அவருடைய பெயரை உபயோகிக்கும் அளவுக்கு அவர் வளர்ந்துவிட்டார்.
அதனால் நான் அவருடைய பெயரை உபயோகிக்க மாட்டேன் என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள்.
ஏன் அஜித் சார் பெயரை உபயோக்கிறீர்கள் என்று கேட்ட போது கூட “சார்.. எனக்கு பிடித்த விஷயத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்.
கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்பது போன்று இருக்கிறது” என்று பதிலளித்தேன்.
3 வருடங்களாக எனக்கு படங்கள் வரவில்லை. அனைத்து நாயகர்களை விட கீழே கேவலமான நாயகனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
படங்கள் வராத போது என்னுடன் நின்று என்னை தூக்கிவிட்டவர்கள் என்னுடைய ரசிகர்கள். அதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும். யாருடைய உறுதுணையும் எதிர்பார்த்து நான் திரையுலகுக்கு வரவில்லை.
மற்ற நாயகர்களோடு ஒப்பிடும் போது நான் அந்த இடத்தில் இல்லையென்றால் கூட எனக்கு கவலையில்லை.
மேலே இருக்கும் போது கீழே விழுந்துவிடக்கூடாதே என்று பயப்பட வேண்டும். கீழே இருக்கும் போது வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை”
இவ்வாறு அந்த பதிவில் சிம்பு பேசியுள்ளார்.
Don’t try to spoil my releationship with #Thala ur wasting ur time . #RealThalaFans will never let me down and I will never let him down .
— STR (@iam_str) October 9, 2016